முழுமையாக படிக்கவும் / நேரம் ஒதுக்கி படிக்கவும்
தடித்த வார்த்தைகளால் தரம் தாழ்ந்து மேடைகளில் பேசும் கட்சி தலைவர்கள் குறித்துக் குறிப்பிடும்போது "அரசியல் நாகரீகமற்ற" என்றுதான் விளிப்பது நமது பழக்கம். ஆனால் முதன்முறையாக அதையும் கடந்து "மனித நாகரீகமற்ற? என்று ஒரு கட்சி ?? தலைவரை அழைக்கும் அளவுக்குத் தமிழகம் சென்றுள்ளது.
பாலியல் குற்றவாளி என்பது பெருமைக்குரிய பட்டம் என்ற நினைப்பில் பெண்கள் குறித்த மிக மட்ட ரகமான வார்த்தைகளில் செல்லும் இடங்களில் எல்லாம் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பது என அந்த தரம் தாழ்ந்த மனிதன் நிலை தடுமாறி சென்றுகொண்டிருக்கிறார். அவரது பெயரை தனியாகக் குறிப்பிட வேண்டுமா என்ன?
நமது கவலை எல்லாம் அவரது கட்சியை நம்பி செல்லும் தம்பி - தங்கைகள் குறித்துத்தான். வாயால் வடை சுடுவது, ஈழம் குறித்த பொய்க் கதைகளை அள்ளி விடுவது, முன்னுக்கு பின் முரணாகப் பேசுவதை ஒரு கலையாக வளர்த்தெடுப்பது. கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் உண்மையற்ற தகவல்களைப் பரப்புவது. இதையெல்லாம் உண்மையெனப் பேச சில அடியாட்களையும் பல யூ டியூப் சேனல்களையும் நடத்துவது. முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பணம் கொடுத்து தனது முகத்தை தொடர்ந்து புரமோட் செய்வது என இளம் தலைமுறையினரை ஏமாற்றும் வித்தையை கற்றவனாய் அந்த தலைவர் இருக்கிறார்.
பெரியார் பேசியதை ஒட்டி வெட்டி திரித்து கூறிய அவரது வாய் இப்போது கம்யூனிஸ்ட்டுகள் எங்கே என கேட்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. கண்களை மூட்டிக்கொண்ட பூனைக்கு உலகே இருளாய் தெரிவது போல விடிந்ததும் ஊடகத்தின் முன்னாள் நின்று உளறுவதற்கே நேரமில்லாத மனிதனுக்கு மக்கள் போராட்டங்கள் கண்ணில் தெரிய வாய்ப்பில்லைதான்.
இந்த பதிவு அந்த மனநோயாளிக்கு அல்ல. அவரை உண்மை என நம்பி செல்லும் தம்பி - தங்கைகளுக்கு. மாவட்டம் வாரியாக நடந்த களப் போராட்டங்களில் சுருக்கமான பட்டியல் கீழே உள்ளது. 2021 டிசம்பர் துவங்கி 2024 டிசம்பர் வரை அதாவது தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த போராட்டங்கள்
அதாவது திமுக ஆட்சியில் நீங்கள் போராட்டமே நடத்தவில்லை என பரிதாபமாக பேசும் நண்பர்களுக்கும் சேர்த்தே இந்த பதிவு.
ஆயிரக்கணக்கான போராட்டங்கள், எண்ணற்ற வழக்குகள், சமூக விரோதிகளின் தாக்குதல்கள், காவல் துறையின் அடக்குமுறைகள், அதிகார வர்க்கத்தின் திமிர் தனங்கக்கள் எல்லாவற்றையும் எதிர்த்து எமது தோழர்கள் தமிழகம் முழுவதும் வீதிகளில் செங்கொடியுடன் போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
-------------
இந்த போராட்டங்களின் தொகுப்பு கடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாட்டு அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.
தோழமையுடன்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
------------------
1. வடசென்னை மாவட்டம்:
# வடசென்னை மாவட்டத்தின் உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக தொடர்ந்து நடத்திய இயகங்கள் எண்ணற்றவை, வடசென்னை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 1000 கோடி வளர்ச்சி நிதி அறிவிக்கப்பட்டதும், தற்போது 6000 கோடி அறிவிக்கப்பட்டதும் மக்கள் போராட்டங்களின் விளைவு. அதன் கிரியா ஊக்கியாக மார்க்சிஸ்ட் கட்சி முன்நின்றுள்ளது.
# தண்டையார்பேட்டை மார்க்கமாக பெட்ரோல் ரயில் செல்லும் வழித்தடம் 3 கேட்டு போராடியது.
# ராயபுரம் ராம்தாஸ் நகர் குடிசைப்பகுதி மக்களுக்கு வீடுகள் கேட்டு போராடியது.
# ரயில்வே காலி நிலங்களி குடியிருப்புகள் கட்டி வாழ்ந்த எளிய மக்களை அகற்ற ரயில்வே நிர்வாகம் முயன்ற போது மார்க்சிஸ்ட் கட்சி போராடி அந்த முயற்சியை முறியடித்து, அகற்றத்தை தடுத்து நிறுத்தி அம்மக்களை பாதுகாத்துள்ளது.
# 2023 பெருவெள்ள பாதிப்பும் அதனால் மழை நீரில் ஆயில் கலந்து வீடுகள் பாதிக்கப்பட்டது, மீனவர்கள் படகு சேதமடைந்தது இதற்கான தீர்வுகளை கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்துள்ளது.
# மிக்ஜம் புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்துள்ளது.
# எண்ணூர் கோரமண்டல் உரத்தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு பிரச்சினைக்காக தொடர் போராட்டங்கள் நடந்துள்ளது.
# திருவொற்றியூர் பகுதியில் மின்வெட்டு, கால்வாய் பணி, தெருவிளக்கு, சாலை வசதி கோரியும் தொடர் போராட்டங்கள் நடந்துள்ளது.
# பெரம்பூர் பகுதியில் குடிசை மாற்று வீடுகளுக்கு விற்பனை சான்றிதழ், பேருந்துவசதி முதியோர் பென்சன் கோரியும்
# ஆர்கே.நகர் பகுதியில் மேம்பால பணியை விரைந்து முடித்திடவும், குடிநீர், கழிவுநீர் குழாய், சாலைகளை சீரமைக்க கோரிய போராட்டங்களும்
# ராயபுரம் பகுதியில் வாழ்விட குடியிருப்பு பகுதிகள் கேட்டும், சுரங்கப்பாதை பிரச்சினைகக்காகவும், குடிமனைப் பட்டா கோரிய போராட்டங்களும்
# திரு.வி.க நகர் பகுதியில் அடிபடை உரிமைகளை கோரி போராட்டங்களும்
# மாதவரம் பகுதியில் வீட்டுமனை பட்டா, சாலைகள் சீரமைப்பு கோரிய போராட்டங்களும்
# மணலியில் வீட்டுமனைப் பட்டா கோரிய போராட்டங்களும்
# கொளத்தூர் பகுதியில் ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்களையும், அவ்வை நகர் மக்களையும் வெளியேற்றும் நடவடிக்காயை தடுத்து நிறுத்தியுள்ளோம்
# அம்பத்தூர் பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், குப்பை அகற்றம், விளையாட்டு மைதானம் கோரியும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது
# ஆவடி பகுதியில் நீர்நிலை பகுதிகளில் குடியிருக்கும் மக்களை அகற்றுவதை கண்டித்தும் பல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளது
2. தென்சென்னை மாவட்டம்:
# சிட்லபாக்கம் 413 வீடுகள் இடிப்பு தடுத்து நிறுத்தப்பாட்டு அம்மக்களை பாதுகாத்துள்ளோம்.
# கடப்பேரி மாநகராட்சி இடத்தில் நீதிபதி பங்களா கட்ட முயற்சியை தடுத்து நிறுத்தி அவ்விடத்தில் அரசு பள்ளி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
# தாம்பரம் காப்புக்காடு 102 கல் உடைக்கும் தொழிலாளர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எதிர்த்து போராடி அவ்விதம் அளக்கப்பட்டு, வருவாய் துறையிடம் ஒப்படைக்கும் பணி நடந்துக்கொண்டிருக்கிறது.
# 61 வது வட்டம் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
# சேலையூர் பாரத் நகர் பகுதி மக்களின் கிரைய பத்திர பிரச்சனையில் தலையீடு..
# அனகாபுத்தூர், குரோம்பேட்டை வீர ராகவன் ஏரி, நெமிலிச்சேரி ஏரி மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை எனக்களின் போராட்டங்களில் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
# சுக்லாம்சாவடி சாக்கடை பிரச்சனை, பல்லாவரம் அனகை சாலை விரிவாக்கம், பல்லாவரம் ஜிஎஸ்டி மேம்பால இருவழிப்பாதை, குரோம்பேட்டை சிக்னல் தடுப்புகள், கேகே நகர் பொது இடம் ஆக்கிரமிப்பு, மணப்பாக்கம் மழை நீர் வடிகால், பல்லாவரம் - மீனம்பாக்கம் பேருந்து, நங்கநல்லூர் சித்த மருத்துவமனை மருத்துவர் நியமனம் உள்ளிட்ட பிரச்சினைகளில் போராட்டங்கள் பல வெற்றிகளும்..
# மீனம்பாக்கம் நடைமேடையில் டிக்கெட் கவுண்டர், சுடுகாடு நவீனம், பெருங்குடி குப்பை கிடங்கில் கழிவு கொட்டுதல் - குப்பை எரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் போராட்டங்கள் பல வெற்றிகளும்..
# பெருங்குடி டிபி ஜெயின் கல்லூரி தனியார் மய எதிர்ப்பு போராட்டம் எங்கள் தலையீடு காரணமாக வழக்கில் உள்ளது.
# பெத்தேல் நகர் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை, பர்மா காலனி குடியிருப்பு அகற்றம், தரமணி மாநகராட்சி பள்ளி விரிவாக்கம், தரமணி தண்ணீர் பற்றாக்குறை, வேளச்சேரி ஏரியக்களுக்கு பட்டா, கானகம் சாலையோர கடைகள் அகற்றம், திருவான்மியூர் பேருந்து நிலைய கழிப்பிடம், பெரியார் நகர் ரேஷன் கடை திறப்பு, மூச்சுக்குப்பம் மீன் கடை அகற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் போராட்டங்கள் பல வெற்றிகளும்..
# 171 வது வட்டம் குடியிருப்பு அகற்றம், மல்லீஸ்வரன் புதிய குடியிருப்பு கட்டுமானத்தை விரைவுப்படுத்துதல், ஆழ்வார்பேட்டை டாஸ்மாக் கடையை அகற்றம், மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனம் மோசடி, சைதாப்பேட்டை ஸ்தல பிரச்சனைகள், சென்னை மாநகராட்சி கால்பந்து மைதான தனியார் மயம், 131 வது வட்டம் சமூக நலக் கூட கோரிக்கை, 130 ஆவது வட்டம் பொதுக் கழிப்பறை, 133 வது வட்டம் மின் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் போராட்டங்கள் பல வெற்றிகளும்..
# எம்ஜிஆர் நகர் கால்வாய் சீரமைப்பு, அடையாறு கரையோர 400 குடியிருப்பு அகற்றம், எம்ஜிஆர் நகர் ரேஷன் கடை கள்ள மார்க்கெட் பிரச்சனை, ராமாபுரம் திருமலை நகர் குடியிருப்பு அகற்றம், மதுரவாயல் பகுதி குழுவுக்கு உட்பட்ட பகுதிகளில் கையெழுத்து இயக்கங்கள் என பல்வேறு பிரச்சனைகள் இக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
3. மத்திய சென்னை மாவட்டம்:
# மத்திய சென்னையில் நகர்ப்புற ஏழைகளின் வாழ்விட உரிமைகளுக்கான இயக்கங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் குடியேற ரூ 1.50 லட்சம் கேட்கும் அரசாணையை ரத்து செய்ய பிரச்சார இயக்கம் எழும்பூர், ஆயிரம் விளக்கு. வில்லிவாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, அண்ணா நகர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது. அதன் விளைவாக பணம் கொடுக்காமல் மக்கள் ஆனக்கு குடியேறினர்.
# கேபி பார்க் பிரச்சனையில் நாம் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் 864 குடியிருப்புகளுக்கு தீர்வுகளை தந்தது. அதற்கான 2021 டிசம்பர் வெற்றிவிழா
# துறைமுகம் காந்திநகர் சத்தியவாணி முத்து நகரில் வீடு இழந்த 178 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்க வலியுறுத்தி நடத்திய போராட்டத்தின் விளைவாக கே.பி.பார்க் திட்ட பகுதி 2ல் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன.
# அண்ணா நகர் எம்.எம்.காலனி பாலம்அமைப்பதற்காக அப்பகுதி மக்களையும், சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை வரை குடியிருக்கும் மக்களையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து போராடி தடுத்து நிறுத்தப்பட்டது.
# எழும்பூர் ரயில் நிலைய சாலையோரத்தில் வசிக்கும் 64 குடும்ப வெளியேற்றுவது எதிர்த்த மார்க்சிஸ்ட் கட்சி போராட்டத்தின் காரணமாக அவர்களுக்கு கேபி பார்க் அடுக்கு குடியிருப்பில் வீடுகளை ஒதுக்க மாநகராட்சி ஒப்புக்கொண்டது.
# கண்ணப்பர் திடல் மக்களும் குடியிருப்புகள் வழங்க கோரி 22 ஆண்டுகளாக தொடர் இயக்கங்களை, போராடங்களை மேற்கொண்டதன் விளையாக அம்மக்களுக்கு மூலக்கொத்தளம் பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. புதிய குடியிருப்புகளுக்கு ரூபாய் 4.50 இலட்சம் செலுத்த வேண்டுமென மாநகராட்சி நடவடிக்கையை கண்டித்து மீண்டும் போராட்டம் - காவல்துறையின் கடுமையானா அடக்குமுறைகளையும் எதிர்ப்பையும் மீறி நடந்தது. இந்த கடுமையான போராட்டத்தில் விளைவாக 114 குடும்பங்களுக்கு இலவசமாக வீடுகள் பெற்றுத்தந்துள்ளோம்.
# எழும்பூர் திடீர் நகர் மக்களின் வாழ்விடத்திற்காக மார்க்சிஸ்ட் கட்சி நடத்தி போராட்டத்தின் அடிப்படையில் அவர்கள் வெளியேற்றப்படாமல் அவ்விடத்திலே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு வழி பிறந்துள்ளது.
# எழும்பூர், கோடம்பாக்கம், துறைமுகம் பகுதிகளில் தெருவோர வியாபாரிகளின் நலன்களுக்காக போராட்டங்கள் நடத்தப்பட்டது மட்டுமல்ல அவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடும் நடத்தப்பட்டது.
# ஆயிரம் விளக்கு மெட்ரோ நிலையம், டி நகர் ஏ.ஜி.எஸ் திரையரங்கம் அருகில் கட்டுமான பணிகள், புளியந்தோப்பு மாநகராட்சி மருத்துவமனையில் உரிய சிகிச்சையின்மை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே மழை நீர் கால்வாய் பணியில் ஒப்பந்த பணியாளர் மரணம் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
4. திருவள்ளூர் மாவட்டம் :
# ஊத்துக்கோட்டை லட்சுவாக்கம் பகுதியில் குடிமனை பட்டா கேட்ட போராட்டம் நடத்தி 44 குடும்பங்ககளுக்கு பட்டா பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
# திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்பட்டது மக்கள் கோரிக்கைகளுக்காக - 35 ஊராட்சி 4 நகராட்சி உள்ளிட்ட 39 மையங்களில் - 1796 பெண்கள் உட்பட 3000 பேர் பங்கேற்ற போராட்டம்
# பு, வழுதலம்பேட் எட்டியம்மன் கோயிலுக்குள் பல ஆண்டுகளாக தலித் மக்கள் அனுமதிக்கப்படாத சூழலில் மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்ட அறிவிப்பின் காரணமாக அரசு தலையீடு செய்து தலித் மக்களை ஆலய பிரவேசம் செய்ய வைத்தது.
# முழமையாக சாலை பணிகளை முடிக்காமல் சட்ட விரோத டோல்கேட் வசூலை எதிர்த்த போராட்டம், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டிறக்கான இயக்கம், ஆர்கே பேட்டை ராஜா நகர் ஆகிய பகுதிகளில் பட்டா பிரச்சனை ஆகிய இயக்கங்கள் நடைபெற்றுள்ளன.
5. காஞ்சிபுரம் மாவட்டம்:
# மேகவதி ஆற்றங்கரை ஓரமாக பாலாண்டுகளாள குடியிருந்த மக்களின் சில வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்கள் தகவல் அறிந்து களத்திற்கு சென்று தடுத்து நிறுத்தினர். அம்மக்களின் வீடுகள் பாதுகாக்கப்பட்டது.
# நிறைய பாக்கம் வீடு இடிப்புகக்கு எதிரான தீவிரமான போராட்டங்கள்.
#
காஞ்சிபுரம்
அப்துல்கலாம் தெரு-பல்லவன்
நகர் தெரு மழை நீர் வடிகால்
ஆகிய பிரச்சினைகள் உள்ளிட்ட
எண்ணற்ற களப் போராட்டங்கள்
நடைபெற்றுள்ளன.
6.
செங்கல்பட்டு
மாவட்டம்:
#
திருப்போரூரில்
போக்குவரத்து வருவாய் கோட்ட
ஆட்சியர் அலுவலகம்
கோரி
போராட்டம்.
# மதுராந்தகம் மதூர் கிராம பழங்குடி மக்களுக்கு மனைபட்டா கேட்ட போராட்டம்.
# பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட கடத்தப்பட்ட இருளர் இருளர் பெண்களுக்கு பாதுகாப்பு - நீதி கோரி போராட்டம்.
# செங்கல்பட்டு ரயில்வே சுரங்கப்பாதை சீரமைப்பு- செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் கொளலாய் ஏரிக்கு அருகில் உயர் அடுக்கு இரு சக்கர வாகன நிறுத்தம் - டிக்கெட் கவுண்டர் அமைத்தல் ஆகியவற்றிற்கான கையெழுத்து இயக்கம்.
# வையாகூர் ஊராட்சி ஊழியர் சம்பள பாக்கி பெற்று கொடுத்தது.
# செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வாகன நிறுத்த பிரச்சனைகள்.
# எச்.பி.எல் மருந்து தொழிற்சாலை அரசுடமையாக்க போராட்டம்.
# மேய்சல் உள்ளிட்டு புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா கேட்ட போராட்டம்.
# மதுராந்தகம் வைப்பணை புதூர்-எல். எண்டத்தூர் - தின்னலூர் - பெரும்பாக்கம் கிராமங்களில் விவசாயிகள் வெளியேற்றத்திற்கு எதிரான போராட்டம்.
# தொடர் இணைந்த போராட்டத்தால் பொரங்காவணி கல்குவாரி மூடல்.
# திருப்போரூர் கந்தசாமி கோயில் இட விவசாயிகள் குடியிருப்போர் நில உரிமை மீட்பு.
# மதுராந்தகம் சேஷமா நகர் பட்டியலில் நாமக்கல் பட்டா ரத்து வாபஸ் - நடுவக்கரை பட்டியலின மக்களின் 22 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு - சிறுதாவூர் தலித் மக்கள் நிலம் பதிப்புகக்கு எதிரான போராட்டம் - மதுராந்தகம் வள்ளுவப்பாக்கம் ஆதி திராவிட மக்கள் பட்டா அடங்கலில் ஏற்றப்படல் - வண்டலூர் ராஜீவ் காந்தி நகர் குடிமனை பட்டா - சித்தாமூர் ஊராட்சி 100 நாள் வேலை உள்ளிட்ட ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
7. திருவண்ணாமலை மாவட்டம்:
# செங்கம் வட்டம் அரியாகுஞ்சூர் கிராம தார் சாலை போராட்டத்தின் மூலம் போடப்பட்டது.
# மேல்சோழங்குப்பம் பட்டியந்தல் கிராமங்களில் வீடு இடிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி புது வீட்டு மனைகள் பெற்று தரப்பட்டது.
# பாண்டிச்சேரி-ஹௌரா விரைவு ரயில் இன்று திருவண்ணாமலையில் நிநிறு செல்வதற்கான போராட்டம் மார்க்சிஸ்ட் கட்சியும் முன்னெடுத்த போராட்டம்.
# தண்டராம்பட்டு வாணாபுரம் கிராம பழங்குடி மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு போராட்டம் நடந்துள்ளது.
# போளூர் கீழ்ப்பட்டு ஊராட்சி சாலை வசதி - கடுகாட்டு பாதை கேட்டு போராட்டம்.
# பெரணமநல்லூர் தாடி நொளம்பை கோழிப் புலியூர் நகரப் பேருந்து இயக்கம் நடத்தப்பட்டுள்ளது.
# துரிஞ்சாபுரம் நவம்பட்டு ஊராட்சி இருதயபுரம் கிராம மக்கள் பட்டாவுக்கான போராட்டம்.
# ஆரணி ஆதனூர் சாலை செப்பனிடல் - கூடுதல் ரேஷன் கடை கேட்டு போராட்டம்.
# வந்தவாசி பட்ட பழங்குடி மக்களுக்கு ஆதார் - வாக்காளர் அட்டை - சாதிச்சான்று போராட்டத்தின் மூலம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
# செய்யார் வடுகப்பட்டு சாலை செப்பனிடல் - உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கேட்ட போராட்டங்கள்.
# சேத்துப்பட்டு இடையன்குளத்தூர் நடுநிலைப்பள்ளி சுற்றுச்சுவர் - கீழ்பெண்ணாத்தூர் ஓலைப்பாடி கிராமம் ரேஷன் கடை சீர்கேடு ஆகிய பிரச்சினைகளுக்காக ஸ்தல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன.
8.வேலூர்
- திருப்பத்தூர்
மாவட்டம்:
# வேலூர் சத்துவாச்சாரி குடியிருப்பு பகுதியில் மதுக்கடை எதிர்ப்பு போராட்டம்.
# வாணியம்பாடி நேதாஜி நகர் கள்ளச்சாராய விற்பனை எதிர்ப்பு போராட்டம்.
# குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை ரேஷன் கடை கேட்ட போராட்டம்.
# திருப்பத்தூர் நகராட்சி அடிப்படை பிரச்சினைகளுகக்கான போராட்டம்.
# வேலூர் தெற்கு பல்லவன் சாத்தூர் குப்பம் நீர் பிடிப்பு பகுதி குடியிருப்பு அகற்றம் எதிர்ப்பு போராட்டம்.
# திருப்பத்தூர் நகராட்சி தூய்மை பணியாளர் குடியிருப்பு காலி செய்யும் பிரச்சனை எதிர்ப்பு போராட்டம்.
# காட்பாடி எம்பளூர் குடிமனை பிரச்சனைகக்கானஇயக்கம்.
# ஒட்டனேரி மலைவாழ் மக்கள் குடிசை அகற்றம் எதிர்ப்பு போராட்டம்.
# காட்பாடி ரயில்வே மேம்பால பணியை விரைவாக்குதல் குறித்த ஆர்ப்பாட்டம்.
# கொண்ட சமுத்திரம் காத்தாடி குப்பம் சமுதாயக்கூடங்கள் திறப்பு வெற்றி!
# நூறு நாள் வேலை கூலி பாக்கி கேட்டு பல ஒன்றியங்களில் போராட்டம்.
# பேரணாம்பட்டு வீடற்ற மக்களுக்கு பட்டா கேட்ட போராட்டம்.
# ஸ்மார்ட் சிட்டி குளறுபடிகள் எதிர்ப்பு போராட்டம்.
# தெற்கு நாயக்கனேரி குடிநீர் வசதி - குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகத்சிங் சமுதாய கூட பயன்பாடு - செதுக்கரை பட்டா பிரச்சினை - சின்ன சிட்டி குப்பம் மின் டிரான்ஸ்பார்மர் - தட்டப்பாறை அக்ராவரம் சைனகுண்டா பகுதிகளின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டன.
இவற்றில் பெரும்பாலான பிரச்சினைகளில் தீர்வுகள் காணப்பட்டன. சமூக விரோதிகளின் தாக்குதலுக்கு, மிரட்டலுக்கு எமது தோழர்கள் உள்ளானார்கள்.
9. இராணிப் பேட்டை மாவட்டம்:
#
ராணிப்பேட்டை
மாவட்ட மக்கள் நல கோரிக்கைகளை
முன்வைத்து பல்வேறு போராட்டங்கள்,
அவைகளில்
ஆற்காடு சக்கரமல்லூர் பாலாறு
மணல் குவாரி அமைப்பு எதிர்ப்பு
போராட்டம், திமிரி
பேரூராட்சி ஆதிதிராவிட பள்ளி
மாணவ மாணவியருக்கு சாதி
சான்றிதழ் கேட்ட போராட்டம்,
கலவை மேலப்பழந்தை
ஆதிதிராவிடர் புதிய காலனி
சுடுகாட்டு பாதைகக்கான
போராட்டம் ஆகிய பிரச்சினைகளுக்காக
ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
10.
கடலூர்
மாவட்டம்:
# திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலைய பெயர் மாற்றம், கடலூர் துறைமுக சந்திப்பு வரை ரயில்கள் நீட்டிப்பு, சென்னை கடலூர் ரயில் சேவை பணிகளை விரைவு படுத்தல், பண்ருட்டியில் ரயில் நிறுத்தம் ஆகிய ரயில்வே சார்ந்த பிரச்சினைகளில் பொது நல இயக்கங்கள், அனைத்து காட்சிகளை திரட்டி தொடர் இயக்கம் நடத்தி பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது.
# கடலூர் புதிய பேருந்து நிலையத்தை மையப் பகுதியில் அமைக்க கிரியா ஊக்கியாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சி,
# விக்கிரவாண்டி கும்பகோணம்- தஞ்சாவூர் நெடுஞ்சாலை பணிகளை விரைவு படுத்தல் ஆகிய பிரச்சினைகளில் இயக்கம் நடத்தப்பட்டன. இம்மூன்று பிரச்சனைகளிலும் பெறப்பட்ட வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை.
# மடப்படுட்டு சாலை விரிவாக்க பணிகளில் திட்டத்திற்கு புறம்பான செயல்பாடு ஆக்கிரமிப்புகள் எதிர்ப்பு போராட்டம்.
# பண்ருட்டி அம்பேத்கர் நகர் - இந்திரா நகர் ரயில்வே தடுப்புச் சுவர்கள் எதிர்ப்பு போராட்டம்.
# குமராட்சி ஒன்றியம் 15 கிராமங்களை இணைக் கும் கொள்ளிடக்கரை சாலை பராமரிப்புக்கான பெருந்திரள் போராட்டம்.
# கடலூர் பண்ருட்டி சேமகோட்டை பயணியர் நிழற்குடை இயக்கம்.
# என்.எல்.சி நிலம் கொடுத்தோர் பிரச்சினையில் தொடர் போராட்டம்.
# பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மனை பிரிவுக்கு பணம் வாங்கி ஏமாற்றியவர்களை எதிர்த்த மனை அல்லது பணம் இயக்கம்.
# பண்ருட்டி மருங்கூர் செந்தமிழ் நகர் ரியல் எஸ்டேட் அராஜக எதிர்ப்பு போராட்டம்.
# பரங்கிப்பேட்டை இருளர் மக்கள் வாழ்விடமான பாரதி நகர் பகுதிக்கு அனல் மின் நிலையத்தை எதிர்த்த போராட்டம் நடத்தி 23,00,000 லட்சம் மதிப்பீட்டில் 100 குடும்பங்ககளுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்த சாதனை.
# பண்ருட்டி களத்து மேடு பகுதி வீடு இடிப்பு எதிர்ப்பு போராட்டம்.
# குறிஞ்சிப்பாடி அண்ணா நகர் - கடலூர் வண்டி பாளையம் குடியிருப்பு அகற்றம் எதிர்ப்பு போராட்டம்.
# திருமுட்டம் அரசு நடுநிலைப் பள்ளி ஆக்கிரமிப்பு எதிர்ப்பு போராட்டம்.
# காட்டுமன்னார்குடி விழாத்தூர் ரேஷன் கடை இட ஆக்ரமிப்பு எதிர்ப்பு போராட்டம்.
# திட்டக்குடி - புவனகிரி - சிதம்பரம் குறிஞ்சிப்பாடி, நெய்வேலி ஆர்ச் கேட் அடிப்படை பிரச்சனை போராட்டங்கள்.
# புர்கீஸ் பேட்டை வீடு இடிப்பு எதிர்ப்பு போராட்டம்.
# சிதம்பரம் பேருந்து நிலைய டாஸ்மாக் கடை அகற்ற முயற்சி, தொடர் போராட்டம்.
# சின்ன வடவாடி, இருளக்குறிச்சி, ஊமங்கலம், முகுந்தநல்லூர், புலியூர், கோ.ஆதனூர், பெருந்துறை கிராமங்களில் பட்டா கேட்ட தொடர் போராட்டம்.
# குறிஞ்சிப்பாடி இடம் கொண்டான் பட்டு - சங்கிலி குப்பம் கிராமங்களுக்கு மனை பட்டா தொடர் போராட்டம்.
# 40 வருடங்ககளாக பரங்கிப்பேட்டை சந்தை தோப்பு மின் இணைப்பு இல்லாத சூழலில் 3 குடும்பங்ககளுக்கு மின் இணைப்பு பெற்று கொடுத்தது, மேலும் 40 குடும்பங்கக்கு பெற தொடர் முயற்சி எடுப்பது.
# ஆதிக்க வர்க்கத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடி இருளர் மக்கள் நிலத்தை மீட்டு செங்கொடி நகர் உருவாக்கியது.
# புதுச்சத்திரம் அரசு மருத்துவமனை குழந்தைகள் இறப்பு கண்டித்த போராட்டம்.
# பரங்கிப்பேட்டை எரிவாயு தகனமேடை இயக்கம் - கடலூர் ரெட்டியார்பேட்டை மின் பிரச்சனை - காட்டுமன்னார்குடி கருணாகர நல்லூர் பட்டா முறைகேடு தொடர் போராட்டம் மற்றும் வெலந்தூர் - சோழத்தரம் ரேஷன் கடை இயக்கம் - பூந்தலை மேடு குடிநீர் மேல்நிலைத் தொட்டி கேட்ட போராட்டம்.
# கொண்டாய் இருப்பு கிராம வறுமைக் கோடு பட்டியல் பிரச்சனை - ஆயிகுளம் தடுப்புச் சுவர் - திட்டக்குடி காந்தி நகர் கொத்தடிமை மீட்பு - தீவளூர் ஆலைக்கு நிலம் கொடுத்தோர் பிரச்சினை - பெண்ணாடம் ரயில்வே மேம்பாலம்.
# திருத்துறையூர் சுடுகாட்டு பிரச்சனை, காமாட்சி பேட்டை சாலை, புவனகிரி மழை நிவாரணம், பேரூராட்சி குடிநீர் பிரச்சனை, கீரப்பாளையம் 100 நாள் வேலை, அய்யனார் கிராமம் மயான பாதை போன்றவைகளில் தொடர் போராட்டங்கள்.
# ஆயிப்பேட்டை பட்டா, கொங்க ராயன் பாளையம் சாலை, நெல்லிக்குப்பம் அண்ணா நகர் பாதை, அண்ணா நகர் குளம் தூர்வாரல், சித்தரசூர் மாளிகை மேடு அடிப்படை பிரச்சனை, பாலூர் 100 நாள் வேலை, பி.என்.பாளையம் ஊராட்சி நிர்வாக முறைகேடு எதிர்த்த போராட்டங்கள்.
# அதுவல்லாமல் வேப்பூர் கிராம கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இது தவிர பாதாள சாக்கடை மரணம், தூய்மை பணியாளர் பிரச்சினை ஆகியவற்றிற்காகவும் இயக்கங்கள் நடந்துள்ளன.
11. விழுப்புரம் மாவட்டம்:
# கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் - தொடர் போராட்டம் - வழக்கில் தலையீடு - இன்று வரை தொடர் கண்காணிப்பு.
# குண்டலப்புலியூர் அன்பு ஜோதி காப்பக பாலியல் வன்கொடுமைகள் எதிர்த்த போராட்டங்கள்.
# விழுப்புரம் வட்டம் ராம்பாக்கம் கிராமம் நிழல் குடை அமைப்பதில் தீண்டாமை அணுகுமுறையை எதிர்த்த இயக்கம்.
# மேல்பாதி கிராமம் திரௌபதி அம்மன் கோயில் வழிபாட்டு உரிமை மறுப்பு எதிர்த்த போராட்டம்.
# கூட்டேரிப்பட்டு மற்றும் சாலை கிராமத்தில் அனுமதி இன்றி மண் அபகரிப்பு எதிர்ப்பு போராட்டம் நடத்தியதான் விளைவாக தடுத்து நிறத்தப்பட்டது.
# மேல்மலையனூர் செவலப்புறை கிராம குடியிருப்புகள் இடிப்பு எதிர்ப்பு போராட்டம். மாற்று இடம் பெற்று தரப்பட்டது.
# மேல்மலையனூர் தேவனூர் கிராம விவசாயி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தலையீடு - போராட்டம்.
# வணக்கம்பாடி இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்ட போராட்டம்.
# கெங்கபுரம் ஊராட்சி முறைகேடுகள், வீரபாண்டி ஓட்டம்பட்டு சாலை வசதி, சென்னா குளம் ஊராட்சி நீர்நிலை ஆக்கிரமிப்பு ஆகியவற்றை எதிர்த்த போராட்டங்கள் .
# வரகனூர் இடைச்சேரி கிராமத்து குடிநீர் பிரச்சினையில் தலையிட்டு போராடி வெற்றி அடைந்தோம்.
# தைலாபுரம் கிராம அடிப்படை பிரச்சனைகளுகக்கான தலையீடுகள் - தொடர் போராட்டங்கள்.
# முண்டியம்பாக்கம் ஒரத்தூர் சந்திப்பில் மேம்பாலம் கேட்ட இயக்கம்.
# செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நீர்நிலை புறம்போக்கு மக்களின் குடியிருப்பு உரிமை காக்கும் போராட்டம்.
# திருவெண்ணை நல்லூர் மலையம்பட்டி கிராம மேல்நிலை நீர் தேக்க தொட்டி கேட்ட இயக்கம்.
# திண்டிவளம் நகர தனியார் நிறுவன குடிநீர் அபகரிப்பு எதிர்ப்பு போராட்டம்.
# செஞ்சி ஏரிக்கரை குடியிருப்பு அகற்றம் எதிர்ப்பு போராட்டம்.
# கோலியனூர் அடிப்படை பிரச்சுனைகள், கடையம் - தெளி கிராமம் குடிநீர், அரகண்டநல்லூர் பட்டா - குடிநீர் ஆகிய பிரச்சனைகள் மீது ஸ்தல இயக்கங்கள் நடைபெற்றுள்ளன.
பல பிரச்சனைகளில் தீர்வுகள் எட்டப்பட்டன.
12. கள்ளக்குறிச்சி மாவட்டம்:
# கள்ளக்குறிச்சி நகராட்சி - குடிநீர், சுகாதார சீர்கேடுகள் கண்டித்து போராட்டங்கள்.
# திருக்கோயிலூர் சந்தைப்பேட்டை இலவச மனைப் பட்டாவுகக்கான இயக்கம்.
# உளுந்தூர்பேட்டை நகரத்தில் ஒரு குறிப்பிட்ட தெருவில் நடைபெற்ற தொடர் பகல் திருட்டு எதிர்த்த போராட்டம்
# உளுந்தூர்பேட்டை பகுதியில் கரும்பு பாக்கி மனை பட்டா, ரேஷன் முறைகேடு, பழங்குடி சான்றிதழ் கேட்ட போராட்டங்கள்.
# தாசர்புரம் - கிராம அடிப்படைப் பிரச்சனைகள் - வடக்க நந்தல் - 100 நாள் வேலை திட்ட அமலாக்கம் குறித்த போராட்டங்கள்.
# சங்கராபுரம் அரசு நில ஆக்கிரமிப்பு மீட்பு போராட்டங்கள்.
# தியாகதுருகம் - நில அபகரிப்பு, கள்ளக்குறிச்சி சோமநாதபுரம் - குடிநீர், பேருந்து வசதி கேட்ட போராட்டங்கள்.
# கோவிந்தசாமிபுர - இ பட்டா, சாலை வசதி கேட்ட போராட்டங்கள்.
# சின்னசேலம் பாக்கம் பாடி 100 நாள் வேலை கேட்ட போராட்டங்கள்.
# கல்வராயமலை - மயான ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கான தொடர் போராட்டங்கள்.
# சங்கராபுரம் - ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றம், ரிஷிலந்தியம் வாணாபுரம் - கட்டமைப்பு வசதிகள், திருநாவலூர் சேந்தமங்கலம் - மனைப்பட்டா, சுடுகாட்டு பாதை குடிநீர் கேட்ட போராட்டங்கள்.
# பு. மாம்பாக்கம் - ரயில்வே தரைப்பாலம், மதியனூர் - ஏரி சீரமைப்பு, உநெமிலி - சமையல் கூடம் ஆகிய உள்ளூர் இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
@ கல்வராயன் மலையில் மயான ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அனைத்து கிராம மக்களின் மக்களின் வரவேற்பை பெற்றது.
@ சங்கராபுரத்தில் 525 குடும்பங்களுக்கு, உளுந்தூர்பேட்டை எம் குன்னத்தூர் கிராமத்தில் 126 குடும்பங்களுக்கு, ஏ புத்தாரில் 13 குடும்பங்களுக்கு, உளுந்தூர்பேட்டை மேற்கு பகுதியில் 62 குடும்பங்களுக்கும் மனைப்பட்டா வழங்கப்பட்டது.
@ கள்ளச்சாராயம் சாவுக்கு எதிராக அன்றைய மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் 1000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
13. மயிலாடுதுறை மாவட்டம்:
# தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக குத்தாலம் ஒன்றியம் பருத்திக்குடி-சேத்தூர், பெரம்பூர், கொள்ளிடம் ஒன்றியம் தாண்டவன் குளம் - தாழ்ந்தொண்டி, மயிலாடுதுறை ஒன்றியம் பட்டவர்த்தி ஆகிய கிராமங்களில் தலையீடு செய்யப்பட்டுள்ளது.
# காவல்துறையின் அத்துமீறல்களை பாரபட்சங்களை எதிர்த்து மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஒன்றியம் வதிஷ்ட்டாச்சேரி, ஆலங்குடி, வேலம் புதுக்குடி, பெரம்பூர், மாப்படுகை, தருமபுரம் ஆதீன பிரச்சனை, டிவிஎஸ் கம்பெனி ஏஜென்ட் ஆகிய பிரச்சனைகளில் தலையீடு செய்யப்பட்டது. பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. பல போராட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறைகளை எகிறத்தே நடந்துள்ளது.
# குடிமனை பட்டாவுக்கான இயக்கங்கள் பல கட்டமாக நடந்துள்ளது.
# விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழி சாலை வில்ஸ்பன் நிறுவன அடாவடியை எதிர்த்து அப்பராசபுத்தூர், திருக்கடையூர் வெள்ளகுளம், செம்பனார்கோயில் தளச்சங்காடு, கொள்ளிடம் ஆலங்காடு ஏகோஜி மகாராஜபுரம், குத்தாலம் ஒன்றியம் கடலங்குடி, நான் படுகை நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் இயக்கங்கள் நடத்தப்பட்டன.
# மணல் கொள்ளையை எதிர்த்து கொள்ளிடம் ஒன்றியம் கொண்டத்தூர் கிராமத்தில் நடந்த வீரம் மிக்க போராட்டங்கள்.
# விபத்து நிவாரண பிரச்சனைகளில் கொள்ளிடம் ஒன்றியம் திருக்கருகாவூர், மயிலாடுதுறை நகரம், தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி, முத்தாலம் ஒன்றியம் கடலங்குடி ஆகிய இடங்களில் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளது செங்ககோடி இயக்கம்.
# அரசு மதுபான கடைக்கு எதிரான போராட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் பகுதியில் நடந்துள்ளது
# மருத்துவமனை சீர்கேடுகளுக்கு எதிராக ஆக்கூர் கிராமத்திலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
# மாவட்டத்தின் அடிப்படை கோரிக்கைகளுக்காக டிசம்பர் 2022 இல் ஏழு நாள் பல்வேறு கிராமங்களை கடந்து நடை பயணம் நடத்தப்பட்டது.
# கொள்ளிடம் ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமங்களில் குடிசைகளைப் பிரித்துப் போட்டு அரசு நிர்வாகமும் காவல்துறையும் மக்களின் வாழ்விட உரிமை மறுத்த பிரச்சனையில் 45 நாட்கள் தொடர்ந்து அந்த மக்களோடு தங்கி இருந்து அவர்களின் உரிமையை காக்க நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்கது.
14.
திருவாரூர்
மாவட்டம் :
# திருத்துறைப்பூண்டி தெற்கு, திருவாரூர் ஒன்றியம், முத்துப்பேட்டை ஒன்றியம். திருத்துறைப்பூண்டி வடக்கு, முத்துப்பேட்டை நகரம், நன்னிலம் ஒன்றியம், வலங்கைமான் ஒன்றியம், கொரடாச்சேரி ஒன்றியம், நீடாமங்கலம் ஒன்றியம், குடவாசல் நகரம், குடவாசல் ஒன்றியம், திருவாரூர் நகரம், மன்னார்குடி நகரம், கோட்டூர், மன்னார்குடி ஒன்றியம், பேரளம், திருத்துறைப்பூண்டி நகரம், குடவாசல் வடக்கு ஆகிய கமிட்டிகள் அடிப்படை பிறக்கினைகளுக்காக பல போராட்டங்களை நடத்தி உள்ளன.
# விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பது எதிர்த்து 13 மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
# கோயில் மனையில் குடியிருப்போர் பிரச்சினைகளில் தலையீடு தொடர் போராட்டங்கள்.
#
100 நாள் வேலை
திட்ட பிரச்சனைகளில் 76
மையங்களில்
ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை
மறியல் போராட்டம் உள்ளிட்ட
பிரச்சனைகள் வெகுஜன அமைப்புகளால்
நடத்தப்பட்டுள்ளன. 20
கிராமங்களில்
கள ஆய்வு நடத்தப்பட்டது.
15.
நாகப்பட்டினம்
மாவட்டம்:
# 2021 டிசம்பரில் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பயிர்களுக்கும், வேலை இழப்பு ஏற்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
# நீர்நிலை புறம்போக்கு கரையோர குடியிருப்புகளை அகற்றுவதை எதிர்த்தும்,
கோயில் நிலங்களில் குடியிருப்பவருக்கு பட்டா வழங்கிடவும் கோரி 5000 பேர் பங்கேற்ற இயக்கம் நடத்தப்பட்டது.
# குறுவை சாகுபடிக்கு கூடுதல் தண்ணீர் விடக் கோரியும், கர்நாடகாவில் இருந்து ஜூன் ஜூலை மாதங்களுக்கு கிடைக்க வேண்டிய நீரை வலியுறுத்தி பெற கோரியும் 2022 ஜூலையில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
# 2024 ஜூலையில் காவேரி ஒழுங்காற்று ஆணைய வழிகாட்டுதலின்படி தினசரி ஒரு டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று இரயில் மறியல் போராட்டம் சிபிஜ ராட்டம் சிபிஐ உடன் இணைந்து நடத்தப்பட்டது.
# நாகை மருத்துவமனை அவசர சிகிச்சை, உள்நோயாளி, வெளி நோயாளி பிரிவுகள் தடையின்றி தொடர்ந்து இயங்க பல கட்ட போராட்டங்கள்.
# தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் ஊராட்சி கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பணம் கையாடல் எதிர்த்த போராட்டங்கள்.
# கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில் நின்று செல்ல போராட்டங்கள்.
# கீழையூர் மேற்கு ஒன்றியத்தில் குருவை சாகுபடிக்கு முறை வைக்காமல் தண்ணீர், தலைஞாயிறு பொது மயான பிரச்சனை ஆகிய பிரச்சினைகளுக்காக பல கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
16. தஞ்சாவூர் மாவட்டம்:
# களிமேடு கிராம தேர் திருவிழா மீன் கம்பி தீ விபத்து நிவாரணம் கேட்ட இயக்கம்.
# சாஸ்திரா பல்கலைக்கழக அரசு நில 31 ஏக்கர் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு தொடர் போராட்டங்கள், ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற வெற்றியை அடைந்தது.
# பூம்புகார் கல்லணை சாலை குறுக்கே இருவழிச் சாலை கேட்ட போராட்டம்.
# தஞ்சை மற்றும் கும்பகோணதிதில் நடந்த பாதாள சாக்கடை மரணங்களுக்கு எதிரான போராட்டங்கள்.
# கிளாமங்கலம் ரெட்டை குவளை ஆலய வழிபாடு மறுப்பு ஆகிய போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.
2022 ஆகஸ்ட் 1 2 3 தேதிகளில் ஸ்தல இயக்கங்களை நடத்துவது என்ற மாவட்டக் குழுவின் அறைகூவலுக்கு ஏற்ப 41இடங்களில் ஸ்தல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
# தஞ்சை மாநகர அடிப்படை வசதிகள், தஞ்சை குடந்தை நெடுஞ்சாலை செப்பனிடல், மாட்டு மேஸ்திரி செந்தில் டாஸ்மாக் கடை அகற்றம்.
# மாத்தூர் பட்டியலின மக்கள் சுடுகாடு பிரச்சனை, ஆலங்குடி குடிநீர், திட்டை ஊராட்சி 100 நாள் வேலை அட்டை, பாரதி நகர் மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்ட போராட்டங்கள்.
# பூதலூர் தெற்கு சானூரப்பட்டியில் பட்டியலின மக்களின் சுடுகாடு பிரச்சனை, செங்கிப்பட்டி சாலை சீரமைப்பு, உசிலம்பட்டி பள்ளி குடிநீர் பிரச்சினைகாண இயக்கங்கள்.
# பூதலூர் கங்கை சமுத்திர கால்வாய் தூர்வாருதல், செங்கிப்பட்டியில் குடிமனை பட்டா, மேம்பாலம் சரிவு அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டும் இயக்கங்கள்.
# கட்டளை மேட்டு வாய்க்கால் பாசனம், 100 நாள் வேலைக்கான கஞ்சி காய்ச்சும் போராட்டம், பூதலூர் வடக்கு கல்லணை செங்கிப்பட்டி வழித்தடத்தில் பேருந்து இயக்கத்திற்காக போராட்டங்கள்.
# மைக்கேல் பட்டி வாய்க்கால் தூர்வாருதல், ஆபத்தான மின் கம்பங்களை மாற்றுதல், திருக்காட்டுப்பள்ளி மணல் லாரிகள் மீது கட்டுப்பாடு கோருதல் போன்றவைக்கான போராட்டங்கள்.
# திருவையாறு பேரூராட்சி ரேஷன் விநியோகம், லாரி இயக்கத்தை முறைப்படுத்தல், வரகூர் அம்மையகரம் ரேஷன் கடை கேட்ட போராட்டங்கள்.
# திருச்சோற்றுத்துறை வீரசிங்கம்பேட்டை பேருந்து வசதி, அம்மாபேட்டை கோவிலூர் மற்றும் களக்குடி வழியாக ஆலங்குடி பேருந்து வசதி கேட்ட போராட்டங்கள்.
# உடையார் கோயில் சேர்மாநல்லூர் கிராம அடிப்படை வசதிகள், கோவிலூர் தார் சாலை, பாபநாசம் பேரூராட்சி குப்பைமேடு பட்டா ரத்து, ராஜகிரி நத்தம் புறம்போக்கில் குடிமனை பட்டா கேட்ட போராட்டங்கள்.
# அண்டக்குடி சாலையோர மக்கள் வாழ்விட உரிமை. கும்பகோணம் நீர் நிலை பகுதி வீடுகள் அகற்றம், தேவனாஞ்சேரியில் மணல் லாரி ஒழுங்குபடுத்தல் ஆகியவற்றிற்கான இயக்கங்கள்.
# செம்மங்குடி சேத்து குளம் மக்கள் வழிபாட்டு உரிமை, மாத்தூர் பிரப்படி சாலை, நாச்சியார் கோயில் சாலை செப்பனிடல் இயக்கங்கள்.
# திருவிடைமருதூர் பேரூராட்சி அடிப்படை வசதி, மருத்துவமனை மேம்பாடு, தருமபுரம் ஆதீனமடம் பள்ளி கட்டிட கோரிக்கை, திருலொகி குடிமனை பட்டா ஆகியாயற்றவற்காக இயக்கங்கள்.
# பந்தநல்லூர் கோயில் படம் சாகுபடி விவசாயி சான்றிதழ், ஓரத்தநாடு தெற்கு நத்தம் 100 நாள் வேலை, கடைவீதி டாஸ்மாக் கடை அகற்றம், பாப்பா நாட்டில் ஊராட்சி முறைகேடு - காவல் நிலைய மீறல்கள் இவற்றிற்கான இயக்கங்கள்.
# 100 நாள் வேலை, திருவோணம் கொள்ளுக்காடு கோட்டைக்காடு இடையாத்தி கிராமங்களின் அடிப்படை வசதிகள் கேட்ட போராட்டங்கள்.
# பாதரங்கோட்டை ஊராட்சி குடிநீர் - 100 நாள் வேலை, வெட்டுவாக் கோட்டை சாலை, பட்டுக்கோட்டை ரேஷன் - 100 நாள் வேலை - குடிமனை பட்டா கேட்ட போராட்டங்கள்.
# மதுக்கூர் ஒன்றிய சாலை வசதி, ஆலம்பள்ளம் தலித் மக்கள் வழிபாட்டு உரிமை, மூத்தா குறிச்சி கிராம சாலை வசதி, பேராவூரணி 100 நாள் வேலை, சேது பாவர் சத்திரம் முகத்துவாரங்கள் தூர் வாருதல் போன்ற இயக்கங்கள்.
# பேருந்து நிலைய கழிப்பிட வசதி, சுப்பம்மாள் சத்திரம் நிளவர் கூட்டுறவு சங்கம், கலுமங்குடா, ஐஸ்வாடி, மரக்காவலசை கிராமங்களின் மின் வசதிகள் கேட்ட போராட்டங்கள்.
# மல்லிப்பட்டினம் ஊராட்சி சாலை வசதி குடிமனை பட்டா சுகாதார வசதி, மறவன் வயல் குடிமனை சாலை வசதி ஆகிய போராட்டங்கள் - பல வெற்றிகள்.
17. பெரம்பலூர் மாவட்டம்:
# பெரம்பலூர் ஒன்றியம் கவுல் பாளையம் - அடிப்படை வசதி, ஏரிக்கரை - பாதை வசதி கேட்ட போராட்டங்கள்.
# அம்மாபாளையம் - குடிநீர், குன்னம் வட்டம் நமையூர் - மனைப் பட்டா கேட்ட போராட்டங்கள்.
# வேப்பூர் - பாதை, லப்பை குடிகாடு - கொசு ஒழிப்பு தொழிலாளருக்கு வேலை கேட்ட இயக்கங்கள்.
# பெருமத்தூர் வேப்பூர் அத்தியூர் - மனைப் பட்டா கேட்ட போராட்டங்கள்.
# வேப்பந்தட்டை ஒன்றியம் வெள்ளுவாடி நெய்க்குப்பை - அடிப்படை வசதிகள் கேட்ட போராட்டங்கள்.
# ஆலத்தூர் -ஒன்றியம் தெரணி புதுக் குறிச்சி பாடலூர் - அடிப்படை வசதிகள் ஆகிய கோரிக்கைகளுக்காக ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
# இதில் முக்கியமானது அத்தியூர் மக்களுக்கு பட்டா பெற்று தரப்பட்டது.
18. அரியலூர் மாவட்டம்:
# ஜெயங்கொண்டம் இடைக்கட்டு கூட்டுறவு கடன் சங்க முறைகேடுகள் எதிர்த்த போராட்டங்கள்.
# காவிரி நீர் பிரச்சனை, திருமானூர் ஏலாக்குறிச்சியில் பாசன வசதி, உர கட்டுப்பாடு ஆகிய பிரச்சனைகளில் போராட்டங்கள்.
# 12 ஊராட்சிகளில் கள ஆய்வு செய்து ஆயிரம் பேர் பங்கேற்ற குடிமனை பட்ட இயக்கம்.
#
இலவச வீட்டு
மனை போராட்டம் உள்ளிட்ட
இயக்கங்களில் உள்ளூர் மக்கள்
திரட்டப்பட்டுள்ளனர்.
இது தவிர
மாதர் மாணவர் வாலிபர் தொழிற்சங்கம்
விவசாயிகள் சங்கம் சார்பாகவும்
உள்ளூர் மட்ட பிரச்சனைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
19.
தர்மபுரி
மாவட்டம்:
# காவிரியில் உபரியாக செல்லும் தண்ணீரை மாவட்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாநில செயலாளர் தலைமையில் 1500 பேர் பங்கேற்ற போராட்ட ஆயத்த மாநாடு தர்மபுரியில் நடத்தப்பட்டது.
# மாநாட்டு முடிவின்படி ஒகேனக்கல் முதல் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி 1500 தோழர்கள் பங்கேற்புடன் மூன்று நாள் நடைபயணம் எழுச்சியாக நடைபெற்றது.
# பென்னாகரம் பகுதியில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கிடவும், அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தவும் போராட்டங்கள் நடந்துள்ளது.
# ஏமனூர் மக்களுக்கு பட்டா வழங்கிடவும், எர்ரப்பட்டி கிராம மக்களை வனச் மக்களை வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கையை கண்டித்தும் இயக்கங்கள் நடந்துள்ளது.
# நரசிபுரம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிடவும் இயக்கங்கள் நடத்தப்பட்டது.
# தருமபுரி ஒன்றியத்தில் வி.ஜெட்டிஅள்ளி மக்களுக்கு நிலம் மீட்பு போரட்டம், ஏரியூர் ஒன்றியத்தில் குடிநீர் வசதி, வனத்துறை அத்துமீறலை கண்டித்தும் தொடர் போராட்டங்கள் நடந்துள்ளது.
# இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்ககிடவும், பாலக்கோடு பகுதியில் பேருந்து நிலையம் கேட்ட போராட்டங்கள்.
# காவல்துறை அத்துமீறல், பாலக்கோடு - ஒசூர் நெடுஞ்சாலையை சீரமைக்க கோரியும், மொரப்பூரில் வழிப்பிரச்சனைகக்கான இயக்கங்கள்.
# தொப்பூரில் தலித் - அருந்ததியர் இளைஞர்களை சாதி ஆதிக்க சக்திகள் வெட்டியதை கண்டித்து நடத்திய தொடர் போராட்டங்கள்.
# அரூர் பகுதியில் அடிப்படை வசதிகள், சங்கிலிவாடி கிராமத்தில் குடிநீர் அடிப்படை பிரச்சனைகளுக்காவும், பாப்பிரெட்டிப்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரியும் ஸ்தல இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு பல அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
20.கிருஷ்ணகிரி
மாவட்டம்:
# கெலமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கம்.
# தேன்கனிக்கோட்டை கொரட்டை கிராம மக்களின் கல்குவாரி எதிர்ப்பு தன்னெழுச்சி போராட்டம் - அதன் உந்து சக்தியாக கம்யூனிஸ்டுகள்.
# ஓசூர் மனைப் பட்டா வழங்கல் ரத்து அரசாணை எதிப்பு போராட்டம்.
# ஊத்தங்கரை நாகனூர் கிராம மயான பிரச்சனைகக்கான இயக்கம்.
# அரசம்பட்டி ஆதிதிராவிடர் பள்ளி மைதான தனியார் ஆக்கிரமிப்புகக்கு எதிரான போராட்டம்.
# ஆவத்துப்பட்டி கிராம அரசு உயர்நிலைப்பள்ளி பராமரிப்பு, போச்சம்பள்ளி தாலுக்கா இலவச வீட்டு மனை ஆகிய போராட்டங்கள்.
# பருகூர் வட்டம் சுந்திகுப்பம் தனியார் பள்ளி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் கடுமையான போராட்டம்.
# ஒசூர் ஒன்றியம் வெயில் எரிவாயு குழாய் பதிப்பு பாதிப்பு எதிர்ப்பு போராட்டம்.
# பர்கூர் சூலாமலை கிராம இருளர் பழங்குடி மக்கள் பிரச்சனையில் தலையீடு.
# ஊத்தங்கரை சிங்காரப்பேட்டை வீட்டு மனை பட்டா, சப்ளமா கோயில் நிலம்மற்றும் வீட்டு மனை - நிலப் பட்டா ஆகிய பிரச்சனைகளுக்காக கட்சிக் கிளைகள், பகுதி குழுக் சார்பாகப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
# இவை தவிர தமிழ்நாடு விவசாயிகள் சங்கம். இந்தி ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பாகவும் ஸ்தல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
21. ஈரோடு மாவட்டம்:
# நசியனூர் பள்ளி பாளையத்தில் சாலை புறம்போக்கு வீடுகள் அகற்றத்தை எதிர்த்த போராட்டம்.
# பாரது பாளையம் ஜீவா நகர், அண்ணா நகர், சடையம்பாளையம் தலித் மக்கள் சுடுகாட்டை தக்க போராட்டம்.
# கிராம ஊராட்சிகளை மாநகராட்சி இடம் இணைக்க எதிர்ப்பு போராட்டம்.
# கோபி அழுக்குளி 100 நாள் வேலை திட்ட கூலி பாக்கி, சத்தியமங்கலம் பெரியகுளம் கசிவு நீர் குட்டை ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கான இயக்கங்கள்.
# திம்பம் மலைப்பாதையில் வாகனங்களுக்கு இரவுநேர போக்குவரத்து தடைக்கு எதிரான போராட்டம்.
# பட்டர மங்கலம் பட்டியல் சாதி மக்கள் சமூக கூட பிரச்சனைக்கான இயக்கம்.
# சிக்கரசம்பாளையம் மேல்நிலைத் தொட்டி, புன்னம் ஏடி காலனி குடிநீர், பவானி & இடங்களில் ஸ்தல பிரச்சனைகள் இவைகளுக்கான இயக்கம்.
# வாய்க்கால் பாளையம் ஜம்பை புதூர் பிரச்சனைகள், அந்தியூர் நந்தை மாரியம்மன் கோயில் தெரு மக்கள் வீட்டு மனை பட்டா கேட்ட போராட்டங்கள்.
# அந்தியூர் மீனவர் கூட்டுறவு சங்க பிரசினைகளில் தலையீடுகள்.
# பொய்யேரிக்கரை ஆக்கிரமிப்பு, கடம்பூர் மலை வட்டார பழங்குடி சான்று, கொடுமுடி பேருந்து நிலைய டாஸ்மாக் கடை அகற்றம் போன்ற போராட்டங்கள்.
# பவானிசாகர் அணை கழிவுநீர் கலப்புகக்கு எதிராக போராட்டம்.
# பகுத்தம்பாளையம் பள்ளி பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகளில் ஸ்தல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
#
நசியனூர்,
அந்தியூர்
பட்டா பிரச்சனையில் தொடர்
தலையீட்டின் காரணமாக வெற்றி
கிடைத்தது. தலித்
மக்கள் சுடுகாடு, சமூக
கூட பிரச்சினைகளில் தீர்வுகள்
எட்டப்பட்டன. புன்னம்
குடிநீர் பிரச்சினையிலும்
தீர்வு கிடைத்தது.
22.
நாமக்கல்
மாவட்டம்:
# கந்து வட்டி கொடுமைக்கு எதிராக போராடிய காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி தோழர் வேலுசாமி வாழ்ந்த மண்ணில், கந்து வட்டி கொடுமைக்கு எதிராக பள்ளிபாளையம் சிறப்பு மாநாடு நடத்தப்பட்டது, கந்து வட்டி கொடுமை குறித்து 50 சுய உதவி குழுக்கள் இடம் ஆய்வு ஆகிய நடத்தப்பட்டுள்ளன.
# மார்க்சிஸ்ட் கட்சி போராட்டங்களுக்குப் பிறகு நுண் நிதி நிறுவனங்களின் அடாவடிகள் மீது அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும், கிராம அளவில் காவல்துறை பிரச்சாரமும் நடந்தேறி வருகின்றன.
23. சேலம் மாவட்டம்:
# சேலம் கிழக்கு தாதம்பட்டி பஞ்சமி நில மீட்பு போராட்டம்.
# களரம்பட்டி காந்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் தரமாக இருக்க வேண்டும் என்ற இயக்கம்.
# சீலநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அப்புறப்படுத்துதல் தடுத்து நிறுத்தம்.
# சேலம் மாநகர மேற்கு பிள்ளையார் நகர் பகுதி பிரச்சனைகள், கோனேரி கரை பகுதி வீடு அகற்றம், வெள்ளி தொழில் பூங்கா அமைப்பு, பழனிச்சாமி நகர் குப்பைமேடு ஆகிய பிரச்சினைகளில் போராட்டங்கள்.
# சேலம் மாநகர வடக்கு புதிய பஸ் நிலையம் சுகாதார பிரச்சனை மற்றும் இட்டேசரி சாலை டாஸ்மாக் கடை எதிர்ப்பு போராட்டம்.
# மாநகர ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிரான போராட்டம்.
# சேலம் தாலுகா சேலத்தாம்பட்டி அடிப்படைப் பிரச்சனைகள், புது ரோடு டாஸ்மாக் கடையை அகற்றம், ஓமலூர் தும்பி பாடி சாலை ஆக்கிரமிப்பு, பெத்தேல் பகுதி ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்கள்.
# ஒமலூர் காடையாம்பட்டி தாலுகாக்களில் தனி வட்டாட்சியர் அலுவலகம் - கல்லூரிகள் அமைத்திடல் கோரிய போராட்டங்கள்.
# மேச்சேரி மேட்டூர் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு, மல்லியகுந்தம் காலனி சாக்கடை நீர், குஞ்சாண்டியூர் சக்தி நிறுவனம் அடாவடிக்கு எதிரான போராட்டங்கள்.
# கோவிந்த பாடி கர்நாடக வனத்துறை அராஜகம், நங்கவள்ளி அம்பேத்கார் நகர தீண்டாமை சுவர் அகற்றிய போராட்டம்.
# ஜலகண்டபுரம் ஜவுளி தொழில்நுட்ப பூங்கா, பாச குட்டை சுடுகாடு, ஆவடத்தூர் ஊராட்சி குடிநீர், குப்பம்பட்டி நடுநிலைப்பள்ளி பிரச்சனை, மத்த முனியப்பன் தெரு சமத்துவபுரம் நடைபாலம் கேட்ட போராட்டங்கள்.
# எடப்பாடி ஸ்ரீரங்கன் வளவு மைக்ரோ பைனான்ஸ் எதிர்ப்பு, இருப்பாளி கிராமம் பட்டா, கொங்கணாபுரம் எட்டிக் குட்டை மேடு குடிநீர், மேட்டுப்பாளையம் ரேஷன் கடை பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# சங்ககிரி மகுடஞ்சாவடி எர்ணாகுளம் வீட்டு மனை பட்டா, மகுடஞ்சாவடி கேகே நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, பனமரத்துப்பட்டி ஆட்டையாம்பட்டி மக்கள் அடிப்படை பிரச்சனை. வாழப்பாடி கொண்டப்ப நாயக்கன்பட்டி ஆக்கிரமிப்பு போன்ற பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வரியம் நகர்சுகாதார பிரச்சனை, ஆத்தூர் கீழ்த்தொம்பை - கல்லுக்கட்டு - குடிமனைப்பட்டா, முல்லை வாடி துறை அத்துமீறல், அம்பாசமுத்திரம் சாலை, கெங்கவல்லி குடிமனை பட்டா ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# ஆத்தூர் வனத்துறை ஏற்காடு அரசு மருத்துவமனை சீர்கேடு, ஏற்காடு கொடிக்காடு கிராம பாதை ஆக்கிரமிப்பு, ஏற்காடு கிராமங்களுக்கு பட்டா, மின்வெட்டு எதிர்ப்பு இயக்கங்கள்.
# கல்வராயன் மலை கருமந்துறை வனத்துறை அராஜகத்தை எதிர்த்த போராட்டம்.
# தனியன் வளவு கிராமம் கழிவறை அகற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளில் ஸ்தல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
24. கோயம்புத்தூர் மாவட்டம்
#
மதுக்கரை
ஒன்றியம் மலுமிச்சம்பட்டி
நான்கு வழிசாலை
சாக்கடை,
சிங்கை
ஒண்டிப்புதூர் பகுதியில்
சாலை குடிநீர் கேட்ட போராட்டம்.
# சித்தாபுதூர் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டணம் - பணிகள் விரைவுபடுத்தப்படல் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# நஞ்சே கவுண்டன் புதூர் முதல் உடையாம்பாளையம் வரை சாலை செப்பனிடல், சிவானந்தபுரம் டாஸ்மாக் கடை திறப்பு எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# சிங்கை நகர 56 - 57 வட்டங்களில் மயான பராமரிப்பு , சிங்காநல்லூரில் திருப்பூர் பயணிகள் ரயில் நிறுத்தம், திருவள்ளுவர் நகர் ஒண்டிப்புதூர் பகுதியை சுடுகாடு பராமரிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# சிங்கை நகர குழு மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் ரயில்வே கதவு எண் 3 இல் மேம்பாலம் கேட்ட இயக்கம்.
# பீளமேடு ஆவாரம்பாளையம் 28வது வட்ட அடிப்படை பிரச்சனைகள், புலிய குளம் ரெட் பீல்ட் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பாடு, புலியகுளம் மசால் லே-அவுட் 64, 66 வட்ட சாக்கடைகள் தூர்வாருதல், கோவை வடக்கு செக்கான் தோட்டம் ரயில்வே துணை பாதை பிரச்சனை, தொப்பம்பட்டி குருடம் பாளையம் தல கோரிக்கைகள் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# சோமியம்பாளையம் ஊராட்சி 100 நாள் வேலை, அன்னூர் பேரூராட்சி செயல் அலுவலர் நியமனம், அத்திக்கடவு குடிநீர் வினியோகம் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# சிவானந்தபுரம் மதுக்கடை அகற்றம், கோவிட் காலத்தில் நிறுத்தப்பட்ட நக புதூர் பேருந்துகள் இயக்கப்படல், கைகோலப்பாளையம் பகுதி நேர ரேஷன் கடை, இருகூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தம் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# கல்லார்குடி பழங்குடி மக்களுக்கு இடம் மீட்பு, டாப்ஸ்லிப் மின்சார அடிப்படை வசதி, வெள்ளலூர் பேருந்து தேவை ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# இந்து மத வெறியர்களால் சேதமடைந்த காரமடை பெரியார் உணவகம் ஆகிய பிரச்சனைகளில் மக்களை திரட்டி ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
# சிங்கை நகரம் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்க சங்கங்களில் ரயில்வே மேம்பால கோரிக்கை போராட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்று அமைச்சர் உறுதிமொழியோடு முடிக்கப்பட்டது.
# கல்லார்குடி பழங்குடி மக்களின் இடம் மீட்கப்பட்டது. கைக்கோள பாளையம் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கப்பட்டது.
அடிப்படைப்
பிரச்சனைகள் சார்ந்த சில
இயக்கங்களுக்கு வெற்றி
கிடைத்தது.
25.
நீலகிரி
மாவட்டம்:
# கூடலூர் தொகுதிக்குள் நிலப்பட்டா மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு மக்கள் சந்திப்பு நடைபயணம் - கருத்தரங்கங்கள் - மாநாடு என தொடர் இயக்கங்கள்.
# யானை வழித்தடவிரிவாக்க எதிர்ப்பு, வனவிலங்கு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் ஆகிய பிரச்சினைகளுக்காக ஸ்தல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
# வனவிலங்கு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு 4 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டது.
26. திருப்பூர் மாவட்டம்:
# தொழில் தொழிலாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு மாநாடு 850 பேர் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.
# ஜவுளி தொழில் தொழிலாளர் நலன் பாதுகாக்க 3 ஆண்டுகள் தொடர் இயக்கம் (ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பிரச்சார இயக்கங்கள், சிறப்பு மாநாடு) ஆகியன நடைபெற்றுள்ளன.
# இக்காலத்தில் வடக்கு ஒன்றியம் (80), வேலம்பாளையம் (48), தெற்கு நகரம் (43), தெற்கு ஒன்றியம் (28), வடக்கு மாநகரம் (15), அவிநாசி (27), ஊத்துக்குளி (26), பல்லடம் (17), உடுமலை ஒன்றியம் (86), உடுமலை நகரம் (8), காங்கேயம் (5), பொங்கலூர் (2), தாராபுரம் (8), குடிமங்கலம் (4), மடத்துக்குளம் (11), மலைக்கமிட்டி (8) என மொத்தத்தில் 416 ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
# இவற்றில் பட்டா கோரிக்கைகள் அதிகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிறைய பிரச்சனைகளில் தீர்வுகள் காணப்பட்டுள்ளன.
# மலைவாழ் மக்களுக்கு மலைவாழ் மக்கள் சங்கத்துடன் இணைந்து நடத்திய போராட்டங்களில் 2400 ஏக்கர் நிலம் 816 மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது.
# தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த நிகழ்வாகும். பழங்குடி மக்களுக்கு சாலை அமைக்கும் போராட்டத்திலும் தீர்வு பெறப்பட்டது.
27. புதுக்கோட்டை மாவட்டம்:
# கறம்பக்குடியில் அரசு மருத்துவமனை கூடுதல் மருத்துவர் செவிலியர் மருத்துக்கள், உபகரணங்கக்கள் கேட்டு இயக்கங்கள்.
# குழந்திரான் பட்டு கிராமத்தில் மண் கொள்ளை, கரம்பக்குடி தெற்கு தெரு அடிப்படை வசதிகள் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# கந்தர்வகோட்டை தஞ்சாவூர் சாலையில் சுகாதாரம், பழைய கந்தர்வகோட்டிட பேருந்து நிறுத்தம், மஞ்ச பேட்டை ஆதிதிராவிடர் பகுதி அங்காடி கடை கேட்ட போராட்டங்கள்.
# கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியம் அடிப்படை பிரச்சனைகள், கந்தர்வகோட்டை பகுதி குடிமனை பட்டா பிரச்சனைகள்
# ஒன்றிய சாலை மேம்பாடு - வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1150 மனுக்கள் வழங்ககியது.
# குன்றாண்டார் கோயில் ஒன்றிய சாலை மேம்பாடு, வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் பட்டியல் எடுப்பு, வத்தனா குறிச்சி வெவ்வயல் பட்டி கிராமம் கல்குவாரி பிரச்சனை தலையீடு
# அன்னவாசல் நகர்ப்புறு வேலை திட்ட அமலாக்கம் - ஒன்றிய கிராமங்களில் குடிநீர், முத்தரையான் பட்டி கூத்தினி பட்டி சாலை மேம்பாடு, பொன்னமராவதி கட்டையாண்டிபட்டி சமூகப் புறக்கணிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# திருவரங்குளம் தோப்புக் கொல்லை கிராமம் பட்டியல் இன மக்கள் பட்டா, குப்பகுடி வட்டம் மங்களாபுரம் சுடுகாடு -அம்புலி ஆற்றங்கரை பனை மரங்கள் ஆக்கிரமிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# வேங்கிடகுளம் கனரா வங்கி விவசாய கடன் மற்றும் கல்விக் கடன் பிரச்சனை தலையீடு.
# கீரமங்கலம் பேரூராட்சி குப்பை கிடங்கு, சிக்கப்பட்டி வெள்ளாகுளம் சாலை வசதி, கீழாத்தூர் நிலத்தடி நீர் பாதுகாப்பு, அறந்தாங்கி அரசர்குளம் கரும்பு விவசாயிகள் பிரச்சனை இயக்கங்கள்.
# துரையரசபுரம் நூற்பாலை தனியார்மயம், மீமிசல் இஸ்லாமிய பகுதி குப்பைமேடு பிரச்சனை, மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கழிப்பறை ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# ஜெகதா பட்டினம் மீனவர் மானிய டீசல் கேட்ட இயக்கம்.
# புதுக்கோட்டை உடைய நேரி காலனி மக்களுக்கு குடிநீர் தெரு விளக்கு, ஆதனக்கோட்டை பேருந்து வசதி, இச்சடி அடிப்படை வசதி, கல்லுகாரன் பட்டி வீடு இடிப்பு புதுக்கோட்டை ராணி மகப்பேறு மருத்துவமனை டாஸ்மாக் கடை அகற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின் சிலை நிறுவ கையெழுத்து இயக்கம்.
# விராலிமலை ஒன்றிய குடிநீர் சாலை வசதி, தெரு விளக்கு பிரச்சனை இயக்கம்.
# தென்னை திரையான் பட்டி கிராம விவசாயி வெளி மாநிலத்தில் மரணம் உடல் கொண்டுவர உதவி.
# விராலிமலை ஒன்றியம் மலம்பட்டி ஆம்பூர் பட்டி நால்ரோடு மக்களுக்கு குடிமனை பட்டா, அரிமளம் பகுதி செங்கீரை காடுகள் 20, 000 ஹெக்டேர் தைல மரங்கள் அகற்றம் உள்ளிட்ட ஸ்தல பிரச்சனைகளுக்கான இயக்கங்களை நடத்தியுள்ளது.
# டாஸ்மாக் கடை மூடல், வாழ்விட அகற்றம் தடுப்பு, குப்பை கிடங்கு அகற்றம், அடிப்படை வசதிகளுக்கான போராட்டம், வங்கி கடன், பட்டா ஆகியவற்றில் வெற்றிகள் கிடைத்துள்ளன.
28. கரூர் மாவட்டம்:
# குளித்தலை மாவட்ட தலைமை மருத்துவமனை அறிவிப்பு ரத்து கண்டித்து இயக்கம்.
# சுப்பன் ஆசாரி களம் சாலை, பேருந்து நிலைய காந்தி சிலை இடமாற்றம், இனுங்கூர் அடிப்படை வசதி, பாம்பன் பட்டி தலித் மக்களுக்கு குடிநீர் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# சிவாயம், திம்மம்பட்டி, கணக்குப் பிள்ளையூர் ஊராட்சிகளில் 100 நாள் வேலை கேட்ட போராட்டங்கள்.
# கோட்டைமேடு அரசு ஆதிதிராவிட பள்ளி விரிவாக்கம், கரூர் ஒன்றியம் புகலூர் பாரி சர்க்கரை ஆலை கரித்தூள் வெளியேற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# மறவாபாளையம் 100 நாள் வேலை, கரூர் மாநகரம் கோயில் நீர் நிலை வாழ் மக்கள் வகை மாற்றம், ராயனூரில் - வெள்ளியணை கடைவீதியில் அடிப்படை பிரச்சனைகள், பழைய ஜெயங்கொண்டான் டாஸ்மாக் கடை அகற்றம் என தொடர் போராட்டங்கள்.
# மணி நகர் சாலை, தோகமலை காவல்காரன்பட்டி 100 நாள் வேலை, தெலுங்கு பட்டி மயான பாதை, கல்லடை அடிப்படை பிரச்சினைகள்.
# நாகனூர் ரேஷன் கடை, கடவூர் மண் கடத்தல், கரூர் திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தம் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# மூன்று ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட ஸ்தன இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலான பிரச்சினைகளுக்கான இயக்கங்களில் தீர்வுகள் கிடைத்துள்ளன.
29. திருச்சி மாநகர் மாவட்டம்:
# மலைக்கோட்டை பகுதி தாராநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பு, பாலக்கரை பகுதி உக்கடை அரியமங்கலம் சாலை சீரமைப்பு, பொன்மலை முடுக்குப்பட்டி ரயில்வே நிலைய வீடு இடிப்பு ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# காட்டூர் பாப்பா குறிச்சி சாலை, புறநகர் பேருந்து நிற்க கோருதல், பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை கேட்ட போராட்டங்கள்.
# ஸ்ரீரங்கம் திருவானைக்கோயில் நான்கு வார்டுகளிலும் வீடு -கடைகள் நிறுவனங்கள் உடமை பிரச்சனை தலையீடு.
# சீரங்கம் மருத்துவமனை சீர்கேடு, அந்தநல்லூர் கூடலூர் பட்டா, முக்கொம்பு காவல் நிலைய பாலியல் தொந்தரவு ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# பலூர் கிராம காவல் நிலையம் மரணம், மணிகண்டன் இனாம்குளத்தூர் குடிநீர், சாலை, அரசு மருத்துவமனை செயல்பாடு, மின்சார பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# அபிஷேகபுரம் பஞ்சப்பூர் மக்கள் பட்டா, 1000 பேர் பங்கேற்ற எபுதூர் மக்கள் குடியிருப்பு கோரிக்கை இயக்கம்.
# தென்னூர் கிளை குடிநீர் பிரச்சினை ஆகிய ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. தாராநல்லூர் அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சனையில் 103 பேருக்கு மார்க்சிஸ்ட் கட்சி முயற்சியால் வீடுகள் பெறப்பட்டன.
30. திருச்சி புறநகர் மாவட்டம்:
# திருச்சி புறநகரில் 38 ஊரக கிராமங்களை மாநகர் விரிவாக்கத்திற்கு இணைப்பதற்கு எதிர்ப்பு இயக்கம் நடத்தினோம். மாடக்குடி ஊராட்சியை இணைப்பதில்லை என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
# ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஸ்தல இயக்கங்கள் நடத்துவது இம்மாவட்டத்தில் வழக்கமாக உள்ளது. 2022 இல் 156 இடங்கள், 2023 இல் 217 இடங்கள், 2024 இல் 170 இடங்களில் ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த இயக்கங்களின் விளைவாக 110 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
# திருவரம்பூர் ஒன்றியத்தில் திருநங்கைகளுக்கு 87 பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 30 பட்டாக்கள், தினக் கூலிகளுக்கு 245 பட்டாக்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளன.
31
மதுரை
மாநகர் மாவட்டம்:
# எங்கள் எய்ம்ஸ் எங்கே தொடர் முழக்கப் போராட்டம் தொழில் வர்த்தக சங்கம், மதுரை சிறு தொழில்கள் சங்கம், இந்திய உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் போன்ற அமைப்புகளின் விரிந்த கை கோர்ப்போடும் 3688 பேர் பங்கேற்போடும் நடத்தப்பட்டது.
# அரசரடி ரயில்வே மைதானம் மற்றும் நிலப் பாதுகாப்பு இயக்கம் கையெழுத்து இயக்கம், மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட வடிவங்களில் நடத்தப்பட்டது. 40,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
# 1200 கோடி சந்தை மதிப்பு கொண்ட 40 ஏக்கர் நிலம் தனியாருக்கு தாரை வார்க்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது.
#
மதுரை
மாநகராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் உள்ள மக்களுக்கு
பட்டா வழங்கப்படாத நிலையில்,
அரசு புறம்போக்கு
நத்தம் புறம்போக்கு பட்டாக்களை
வழங்குமாறும், குடிசை
மாற்று வாரியம் மற்றும் வீட்டு
வசதி வாரிய குடியிருப்பில்
வசித்து வரும் மக்களுக்கு
பத்திரம் மற்றும் பட்டா
வழங்கிட கோரியும், வீடற்ற
எளிய மக்களுக்கு மனைபட்டா
வழங்கிட கோரியும் 70-க்கும்
மேற்பட்ட மையங்களில் மக்கள்
சந்திப்பு கூட்டங்கள்,
பேரணி
நடத்தப்பட்டன. 8910 மனுக்கள்
மாவட்ட ஆட்சியரிடம்
ஒப்படைக்கப்பட்டது.
32. மதுரை
புறநகர் மாவட்டம்
# 2022 மே மாதம் குடிமனை பட்டா, நீர்நிலை மற்றும் புறம்போக்கு குடியிருப்போர் வீடுகளுக்கு பட்டா, கோவிலிடங்களில் குடியிருப்போருக்கு பட்டா ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி 3680 மனுக்கள், பெறப்பட்டு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன.
# 2022 டிசம்பரில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவு படுத்தல், நெய்பர் ஆராய்ச்சி நிறுவனத்தை , துவக்குதல், 100 நாள் வேலை திட்டம் ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி மாவட்டத்தின் நான்கு முனைகளில் இருந்து நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.
# 2024 அக்டோபரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பட்டா கேட்டு 3440 மனுக்கள் 2506 பொதுமக்கள் பங்கேற்போடு வழங்கப்பட்டது.
# பறவை துவரிமான் இணைப்பு பாலம், எஸ் ஆலங்குளம் சாலை, சமயநல்லூர் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள், வாடிப்பட்டி குருவித்துறை - ஐயப்ப நாயக்கன்பட்டி கிராம அடிப்படை பிரச்சினைகளுக்கான தொடர் இயக்கங்கள்.
# கல்லுப்பட்டி டாஸ்மாக் கடை எதிர்ப்பு, வன்னி வேலம்பட்டி மகளிர் சுய உதவி குழு கடன் பிரச்சினை தலையீடு.
# அலங்காநல்லூர் பாறைப்பட்டி மக்கள் அரசு சலுகை, முடுவார்பட்டி ஊராட்சி மக்கள் பிரச்சனைகள், திருமங்கலம் நகராட்சி அடிப்படை பிரச்சனைகள், உசிலம்பட்டி முண்டிக்கொண்டு கிராமச் சாலை, உ.வாடிப்பட்டி குப்பை மேடு, கள்ளிக்குடி ஒன்றியம் 100 நாள் வேலை ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# சேர்வைக்காரன்பட்டி பஸ் நிறுத்தம், வடக்கம்பட்டி சாலை - டிரான்ஸ்பார்மர், நரியம்பட்டி அடிப்படை பிரச்சனைகள், க.பூசாரிபட்டி பள்ளி கட்டிடம், செல்லம்பட்டி ஆதிதிராவிடர் மக்கள் பிரச்சினைகள், அவனியாபுரம் வள்ளாநந்தபுரம் சாலை சீர்படுத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
#
மீனாட்சி
நகர் சாலை, திருப்பரங்குன்றம்
ரயில்வே சுரங்க நடைபாதை
அமைத்தல், புதுக்குளம்
நீர் பிடிப்பு வீடுகள் இடிப்பு,
மதுரை கணக்கு
எம்ஜிஆர் நகர் வீடுகள் இடிப்பு
ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து
ஸ்தல இயக்கங்கள் நடைபெற்றுள்ளன.
33.
தேனி
மாவட்டம்:
# தேனி அல்லி நகரம், வடுகபட்டி, பெரியகுளம், மூன்றாந்தல், வைகை அணை சாலை கம்பம் ரோடு மற்றும் சின்னமனூர் நகர டாஸ்மாக் கடைகள் தொடர் பூராட்டத்தின் காரணமாக மூடப்பட்டன.
# பெரியகுளம் - வட புதுப்பட்டி மேல்மங்கலம் கெங்குவார்பட்டி கிராமங்களில் தரிசு நில பட்டா முறைகேடு கண்டித்த இயக்கம். முறைகேடான பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டன.
# தேவதானப்பட்டி கக்கன்ஜி நகர் அடிப்படை வசதிகள், தேனி மாவட்ட பஞ்சமி நில மீட்பு, சின்னமனூர் ஆதிதிராவிடர் நில வகை மாற்ற மோசடி ஆகிய பிரச்சினைகளுக்கான இயக்கங்கள்.
# கோம்பை அருந்ததியர் கருப்பசாமி கோயில் இடிப்பு, கம்பம் அரசு மருத்துவமனை புதிய கட்டுமான விபத்து, கா.புதுப்பட்டி - காமிய கவுண்டன்பட்டி 100 நாள் வேலை ஆகிய பிரச்சனைகளின் மீது ஸ்தல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
# தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. சின்னமனூர் பொன் நகரில் 130 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்லூரியில் அக்கினி பாத் பயிற்சி முகாம் நமது எதிர்ப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
34. திண்டுக்கல் மாவட்டம்:
# பஞ்சாலைத் தொழில் பாதுகாப்பு குழு என்கிற முன் முயற்சி அடிப்படையில் பஞ்சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் 2022 அக்டோபரில் நடத்தப்பட்டது.
# பஞ்சமி நிலம், உபரி நிலம் விநியோகத்தை வலியுறுத்தி பழனியில் 2022 டிசம்பரில் நில மீட்பு கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
# அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் ஆகியவற்றை வலியுறுத்தி 2022 டிசம்பரில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
# 2022 டிசம்பர் 12ஆம் தேதி உள்ளூர் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்லா கிளைகளையும் ஈடுபடுத்துகிற முடிவோடு 163 கிளைகளின் பங்கேற்போடு ஸ்தல இயக்கங்கள் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டன. 376 பெண்கள் உள்பட 1720 பேர் பங்கேற்றனர்.
35. சிவகங்கை மாவட்டம்:
# காளையார் கோயில் குருந்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி கேட்ட போராட்டம்.
# சிவகங்கை மருத்துவமனை நிர்வாக சீர்கேடுகள் கண்டித்த போராட்டம்.
# மானாமதுரை பத்திரப்பதிவு முறைகேட்டை கண்டித்த போராட்டம்.
# திருப்புவனம் பள்ளிகளுக்கு அருகில் மதுபான கடை அகற்ற போராட்டம்.
# திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் டாஸ்மாக் போராடி அகற்றம்.
# சாலை கிராம டாஸ்மாக் போராட்டத்தின் மூலம் அகற்றம். உள்ளிட்ட ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடை அகற்ற பிரச்சினைகளிலும், கிராமப்புற பேருந்து கோரிக்கைகளிலும் வெற்றிகளை பெற்றோம்.
36. விருதுநகர் மாவட்டம்:
# விருதுநகர் மாவட்டத்தின் தொழில் விவசாயம் மருத்துவம் வீட்டு வசதி ஆகிய மக்களின் அடிப்படையான கோரிக்கையினை முன்வைத்து விருது நகரில் 2023 பிப்ரவரி16ல் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது
# 420 பெண்கள் உட்பட 1305 பேர் பங்கேற்றனர். முன்னதாக 35 குழுக்கள் மூலம் 315 தொழிலாளர்கள் 383 விவசாயிகள் 94 தொழில் முனைவோர் என 792 பேரிடம் ஆய் நடத்தப்பட்டு ஆய்வறிக்கை மாநாட்டில் வெளியிடப்பட்டது
# ஆய்வின் அடிப்படையில் தொழிலாளாக விவசாயிகளின் கோரிக்கைகள் மீது தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. பட்டா முதியோர் பென்சன் கேட்டு 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 1006 பெண்கள் உட்பட 1387 பேர் பங்கேற்றனர்.
# தொடர் தலையீட்டின் மூலம் 4 கிராமங்களில் 120 பேருக்கு பட்டா கிடைத்துள்ளது.
# அரசு மருத்துவமனைகளை பாதுகாக்கவும் பலப்படுத்தவும் வலியுறுத்தி 15 அரசு மருத்துவமனைகளில் நடைபெற்ற இயக்கத்தில் 655 பேர் பங்கேற்றனர்.
#
விவசாயத்தை
பாதிக்கும் கல் குவாரிகளுக்கு
எதிராக பாறைப்பட்டி,
புலியூரான்,
அச்சம்
தவிர்த்தான் தொடர் போராட்டங்கள்.
குவாரி
தடுத்து நிறுத்தப்பட்டது.
37.
இராமநாதபுரம்
மாவட்டம்:
# பரமக்குடி படித்துறை மக்களுக்கு வீட்டு மனை கேட்ட போராட்டம்.
# ஏதாவது நகர், வெற்றி நகர் பகுதி மக்களுக்கு மலைவாழ் மக்கள் “காணிக்கன்" சாதி சான்றிதழ் கேட்ட போராட்டங்கள்.
# ராமேஸ்வரம் தாலுக்கா பள்ளிக் சுட்டிட புனரமைப்பு, ராமேஸ்வரம் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர், உயர் மின்னழுத்த மின்சார மாற்றி ட்ரான்ஸ்பார்மர், பால நகர் மின் கம்ப பழுது போன்ற பிரச்சினைகளில் தொடர் போராட்டங்கள்.
# ரேஷன் கடை குறித்த முறையீடுகள் டாஸ்மாக் கடை மூடல், கிராமப்புற பஸ் வசதி, கடலாடி கிழக்கு ஆண்டிச்சிகுளம் குடிநீர் பிரச்சனை, சிக்கல் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் போன்ற பிரச்சினைகளில் தொடர் போராட்டங்கள்.
# ஏர்வாடி பகுதி அடிப்படை கோரிக்கைகள், ராமநாதபுரம் பாதாள சாக்கடை பிரச்சினை, அரசு மருத்துவமனை கண் மருத்துவர் நியமனம், தேவிபட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாடு போன்றவைகளுக்கான இயக்கங்கள்.
# உச்சிப்புளி அருகமை கிராமங்களில் சாலை வசதி, திருவாடானை என் மங்கலம் தலித் பகுதி குடிநீர் பிரச்சனைகளில் தலையீடு.
# திருவாடானை அரசு மருத்துவமனை மேம்பாட்டுகக்கான இயக்கம், திருவாடானை அரசு பள்ளி விளையாட்டு மைதான தனிநபர் ஆக்கிரமிப்பு எதிர்த்த போராட்டங்கள்.
# கீழக்கரை பனையடியேந்தல் சாலை வசதி, பேருந்து வசதி, கீழக்கரை நகராட்சி சுகாதார சீர்கேடு, கமுதி பேரூராட்சி 100 நாள் வேலை, அபிராமம் பேரூராட்சி சாலை, அபிராமம் கண்மாய் மராமத்து, சந்தை வியாபாரிகளின் தொழில் பாதுகாப்பு போன்றவைகளில் இயக்கங்கள்.
# ராமசாமி பட்டி கிராம மக்களின் அடிப்படை கோரிக்கைகள், கடலாடி மேற்கு வாகைகுளம் பகுதி நேர ரேஷன் கடை, மாரியூர் வெறிநாய்க்கடி தொந்தரவு போன்ற பிரச்சினைகளில் தலையீடு, போராட்டங்கள்.
#
திருவரங்கத்தில்
பயிர்களுக்கு இன்சூரன்ஸ்
இழப்பீடு, முதுகுளத்தூர்
போதிய மருத்துவர் நியமனம்
உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில்
ஸ்தல இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.
பெரும்பாலான
ஸ்தல இயக்கங்களின் கோரிக்கைகள்
நிறைவேற்றப்பட்டது.
பரமக்குடி
படித்துறை மக்கள் 29
பேருக்கு
இலவச வீட்டு மனை பட்டா
பெறப்பட்டது. மலைவாழ்
மக்கள் சாதி சான்றிதழ்
போராட்டத்தில் 77 குடும்பங்கள்
பலன் அடைந்தன. பள்ளி
கட்டிட புனரமைப்பு,
கூடுதல்
மருத்துவர் நியமனங்கள்,
மின் பிரச்சனைகள்,
ரேஷன்,
டாஸ்மாக்
கடை மூடல், பேருந்து
வசதி, குடிநீர்
உள்ளிட்ட பிரச்சனைகளில்
வெற்றிகள் கிட்டின.
38.
தூத்துக்குடி
மாவட்டம்:
# 2022 டிசம்பர் 3, 4 தேதிகளில் மாவட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்கள் கோவில்பட்டி பட்டி திருச்செந்தூர் ஸ்ரீவைகுண்டம் ஆகிய மூன்று மையங்களில் இருந்து நடை பயணங்கள் நடத்தப்பட்டன.
# 2023 நவம்பர் 21 22 23 தேதிகளில் திட்டமிட்ட முறையில் மாவட்டம் முழுமையும் ஸ்தல பிரச்சனைகள் மீதான இயக்கங்கள் நடத்தப்பட்டன. 37 மையங்களில் 106 கிளைகளில் பங்கேற்போடு இயக்கம் நடத்தப்பட்டது. 3080 பேர் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். கயத்தாறு பகுதியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
# தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலை, கோவில் நிலங்கள், புறம்போக்கு, ஐம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க கோரி நான்கு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 1205 மனுக்கள் தரப்பட்டன.
# தெய்வச் செயல்புரம் வருவாய் கிராம பத்திர மோசடியில் தலையிட்டு முறைகேடான பட்டாக்களை ரத்து செய்ய வைத்தோம். சட்டப் போராட்டத்திலும் வெற்றி பெற்றோம். பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வருகிறோம்.
39.திருநெல்வேலி மாவட்டம்:
நெல்லை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க 43 ஸ்தல இயக்கங்கள் நடைபெற்றுள்ளது. நாங்குநேரி கோர்க்கநேரி குளம் வெள்ளப்பெருக்கால் உடைந்த நிலையில் உடனடியாக செப்பனிட இயக்கம்.
# நாங்குநேரி - மூலைகரைபட்டி சாலை செப்பனிடல், பாபநாசம் - நெல்லை சாலை சீர் செய்தல். சேரை பேரூராட்சி குடிநீர் பிரச்சினை போன்றவைகளில் தலையீடு.
# கொழுமடை பேருந்து நிறுத்தம், வெள்ளாங்குழி வீரவநல்லூர் பேரூராட்சியுடன் இணைப்பு எதிர்ப்பு போராட்டங்கள்.
# இருக்கன்துறை துலுக்கர்பட்டி - பனையங்குறிச்சி கல்குவாரிகள் தொடர் போராட்டத்தின் மூலம் மூடல்.
# சுக்கன் காலனி, வார்நார் நகர், அண்ணா நகர் தளவாய்புரம் மக்கள் அடிப்படை பிரச்சனைகள் மீது இயக்கம்.
# நாங்குநேரி கல்குவாரி தீ விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு பெற்று கொடுத்தது, தெற்கு கள்ளிகுளம் நெடுங்குளம் டிரான்ஸ்பார்மர் மாற்றியது, முக்கூடல் வீட்டுமனை | பட்டா - ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாடு ஆகிய தலையீடுகள், போராட்டங்கள்.
# பனையங்குறிச்சி குமாரசாமிபுரம் பள்ளி மாணவி மாணவியர் பேருந்து வசதி, அரியநாயகிபுரம் அடிப்படை வசதிகள், நெல்லை கல்லணை பள்ளி கூடுதல் கட்டிடம் - கழிப்பிடம் போன்றவைகளில் தலையீடு.
# நெல்லை மாநகராட்சி குடிநீர் கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம்.
# மானூர் பாரதி பள்ளி பாலியல் துன்புறுத்தல் - குற்றவாளிக்கு எதிரான போராட்டம்.
# விக்கிரமசிங்கபுரம் மதுபான கடையை அகற்றம், பாபநாசபுரம் அகஸ்தியா அருவி குளியல் கட்டணம் - சொரிமுத்து அய்யனார் கோயில் கட்டுப்பாடுகள் ஆகிய தலையீடுகள், போராட்டங்கள்.
# பாளை பேருந்து நிலையம் வியாபாரிகள் கடை ஒதுக்கீடு, தியாகராஜ நகர் ரயில் மேம்பால வேலை, வி எம் சத்திரம் -என் ஜி ஓ காலனி சாலை வசதி - குடிநீர், மா பி நகர் பட்டா, மேலப்பாளையம் - அழகிரிபுரம் சாலை சீரமைப்பு போன்றவைகளில் தலையீடு, போராட்டங்கள்.
#
நெல்லை
பள்ளியில் மூன்று குழந்தைகள்
மரணம் உள்ளிட்ட பிரச்சனைகளில்
போராட்டம் தலையிடுதல்
செய்யப்பட்டன. வியாபாரிகளுக்கு
கடை ஒதுக்கீடு, சாலை
செப்பனிடல், மதுபான
கடை அகற்றம், பள்ளிக்கூட
கட்டமைப்பு மேம்பாடு ஆகிய
பிரச்சனைகள் தீர்வுகள்
எட்டப்பட்டன.
40.தென்காசி
மாவட்டம் :
# தென்காசி மாவட்ட கனிம வளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம்.
# தென்காசி மற்றும் சங்கரன்கோவில் மையங்களில் வீட்டு மனை பட்டா இயக்கம்.
# வாசுதேவநல்லூர் வீட்டுமனை பட்டா இயக்கம்.
# பழைய குற்றாலம் பாதுகாப்பு , புளியங்குடி காவல்துறை பொய் வழக்குகள் - காவல் நிலைய சித்திரவதைகளுக்கு எதிரான இயக்கங்கள்.
# சங்கரன்கோவில் நகராட்சி சீர்கேடு - சிகையகங்கள் அகற்றம் - சொத்து வரி உயர்வு - ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள்.
# வாசுதேவநல்லூர் 100 நாள் வேலை திட்டம், தாமிரபரணி குடிநீர் கோரிக்கை, அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், தேவிபட்டணம் அடிப்படை பிரச்சனைகள் ஆகியவைகளுக்கு இயக்கங்கள்.
# திருவேங்கடம் கனிமவள கொள்ளைத் திட்டததை எதிர்த்த தலையீடு.
# தென்காசி இடைகால் பொது பாதை ஆக்கிரமிப்பு, கம்பளி சாலை வசதி - ரேசன் கடை, செங்கோட்டை கட்டளை கிராம பிரச்சனைகள் தலையீடு.
# தேன் பொத்தை தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டம்.
# மேக்கரை மழை அடிவார மக்கள் அப்புறப்படுத்தல். ஆலங்குளம் குடிநீர் இணைப்பு, மருதம்பத்தூர் கண்டபட்டி மக்கள் பிரச்சனைகள், குருவன் கோட்டை கழிவு நீர் தொட்டி பிரச்சனைகளில் இயக்கங்கள்.
# கடையம் நுண் நிதி நிறுவன அடாவடி கண்டித்தும் , கீழப்பாகூர் பைனான்ஸ் நிறுவன மோசடிகக்கு எதிராகவும் போராட்டங்கள்.
# மூலக்கரை ரேஷன் கடை ஆகிய பிரச்சனைகள் மீது ஸ்தலப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. பல பிரச்சினைகளில் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.
41.
கன்னியாகுமரி
மாவட்டம் :
# கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்கான கோரிக்கைகளை முன்வைத்து நான்கு முனைகளிலிருந்து 3 நாள் மக்கள் கோரிக்கை நடை பயணம் - மாநாடு நடத்தப்பட்டது. நடை பயணத்தின் வழியெல்லாம் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன.
# குலசேகரத்தில் கனிம வள கொள்ளை எதிர்ப்பு போராட்டங்கள்.
# பாதிரியார் பாலியல் வன்முறை எதிர்ப்பு இயக்கம்.
# மைலோடு கொலையில் உண்மை குற்றவாளியை கைது செய்ய போராட்டம்.
# அகஸ்தீஸ்வரம் சாலை செப்பனிடல் - அதற்கான இயக்கம்.
# தோவாளை மண்பாண்ட தொழில் பிரச்சனைகள் இயக்கம்.
# வடசேரி- தடிக்காரன் கோணம் - கீரிப்பாறை சாலை செப்பனிடல் இயக்கம்.
# ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர் நகர் பட்டியல் சாதியினர் மீது பொய் வழக்கு - எதித்த இயக்கம்.
# தர்மபுரம் ஊராட்சி ஊழல், இரட்டைக் கரை பாசன கால்வாய் தூர்வாருதல், குளச்சல் மருத்துவமனை தரம் உயர்வு, குருந்தன்கோடு பேயன் குழி சாலை செப்பனிடல் போன்றவைகளில் தலையீடு, இயக்கங்கள்.
# பெருஞ்சிலம்பு பேருந்து வசதி, நுள்ளி விளை ஊராட்சி குடிநீர் கேட்ட இயக்கங்கள்.
# பேச்சிப்பாறை கோதை ஆறு - களியல் குலசேகரம் சாலை செப்பனிடல், சிற்றாறு பட்டணம் கால்வாய் தண்ணீர் இயக்கம்.
# முள்ளங்கினா விளை கனிம வள பாதுகாப்பு.
# இடையன் கோட்டை பாலூர் இணைப்பு சாலை, ஆறு தேசம் ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாடு, திருவரம்பு நாகிக்கோடு துண்டிப்பு குழித்துறை ஆலஞ்சோலை சாலை பிரச்சினைகளில் இயக்கங்கள்.
# சித்திரங் கோடு கனிம வள கொள்ளைகக்கு எதிரான போராட்டம்.
-----------------
தொகுப்பு: எஸ்.ஜி.ரமேஷ்பாபு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக