செங்கொடி என்ற பெயர் கொண்ட
தாயே..
தங்கையே ..
என் செல்ல மகளே!
ஏன் செய்தாயடி...
உனது பிஞ்சு மொழியால்
குரல் உயர்த்தி இருக்கலாம்.
உனது கோபத்தால்
இன்னும் அதிர்ந்திருக்கலாம்..
மரணம்தான் உனது
குரலா
அல்லது
தீர்வா.?
தற்கொலைகள் இதுவரை
தீர்வானதில்லையடி
என் சோதரி..
மக்களை திரட்டி
நடத்திய
போராட்டம்தான்
இதுவரை வென்றிருக்கிறது..
எழுந்துவா என்
தங்கையே..
மகளே..
இணைந்து
போராடுவோம்!

