WHY THIS கொலவெறி டீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
WHY THIS கொலவெறி டீ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 டிசம்பர், 2011

சனிப்பெயர்ச்சி ராசி பலன்கள் (அல்லது) Why This கொலவெறி பார்ட் - 2


கடந்த பல தினங்களாக அனைத்து ஊடகங்களும் சனிப்பெயர்ச்சியை பற்றி பக்கம் பக்கமாக அடித்து துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திருநள்ளாருக்கு சிறப்பு பேருந்துகளை அம்மையார் அரசு முடுக்கி விட்டுள்ளது. கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனி மாறுவதால் ஏற்படும் நன்மைதீமைகள் பற்றி தொலைக்காட்சிகளில் பல அக்கப்போர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. நமது பங்குக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டாமா? 

சனியின் நன்மை தீமைகள் குறித்து குத்துமதிப்பாக ஜோதிட வள்ளுனர்கள் எழுதியதை கேள்விகேட்டாள் என்னவாகும்? அவர்களுக்கு நம்மீது கொலவெறி உண்டாகுமா இல்லையா? இவிங்க அக்கிரும்பு ஜோதிடத்தை கேள்வி கேட்டது மட்டுமே நாம்.

துலாம் ராசிக்காரர்களே! 

இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், சொந்த அத்தை அத்தை, எதிர்த்த வீட்டு ஆண்டி, பக்கத்து வீட்டு பாட்டி. தாத்தா, அம்மம்மா, பெரியம்மா, இவர்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து, கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால், இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. 

*நீங்கள் வெளிநாடு போகப்போறீங்களாண்ணா?

சனி பகவான் ஜென்ம சனியாகச் சஞ்சரிக்கும்போது உங்களுடைய உடம்பைத்தான் அதிகமாக பாதிப்படையச் செய்வார். (அதனால?)

1. உங்கள் உடம்பின் நிறம் மங்கும்

* கருப்பா இருக்கறவா கண்டுகாதீங்கோ. 

2. ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்

* ஏற்கனவே சீக்காளியா இருந்தா அபீட்டு! 

3. உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் குடிகொள்வதால் வேலை நடக்காது.

* எப்பவுமே நாம இப்பிடிதானுங்க! 

4. எந்த வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்கமாட்டீர்கள் 

* அப்புறம் வேற வேலை வேண்டாமா?  

5. உங்களை ஒப்பனை செய்துகொள்வதைக்கூட வெறுப்பாக உணர்வீர்கள் 



*என்னா மேக்கப் பன்னாலும் ம்ஹ¨ம் நம்ப மூஞ்சி தேறாது! 

6. ஜென்ம சனி என்பது திரேக பாதிப்புகளை ஏற்படுத்தத் தயங்காது. முறையான வைத்தியம் செய்துகொள்வதின் மூலம், ஆரோக்கியத்தைப் பெற முடியும்

* வைத்தியம் பார்த்தா சரியா பூடும்னு எங்களுக்கு தெரியாதாடா டுபுக்கு? 

7. இக்காலக்கட்டம் அறுவை சிகிச்சைக்கான அவசியத்தைக்கூட  ஏற்படுத்தலாம் ஏற்படுத்தாமலும் போகலாம். 

*கரக்கிட்டா சொல்லிட்டா அப்புறம் என்ன ஜோசியம்? 

8. ஆனாலும் நிவாரணம் கிடைக்கும். சனீஸ்வரருக்குரிய ஆயுஷ் ஹோமம், ஷேத்ராடனம் முதலியவை பெரிய பாதிப்புகள் ஏற்படாவண்ணம் உங்களைக் காப்பாற்றும். சனியால் நோய் வாட்டமும், மனவேதனையும் ஏற்படும், என்றாலும் உரிய பரிகாரங்களை மேற்கொண்டால், நன்மை கிடைக்கலாம்.

*அதுசரி மத்த ராசிகாரவங்களுக்கு இதெல்லாம் நடகாதாடா அப்பாடக்கருங்களா?

9. பொதுவாக சூழ்நிலைகள் உங்களுக்கு அநேகமாக சாதகமாக இருக்காது. *எலேய் இத சொல்றத்துக்கு எதுக்குடா நீங்க

10. பணவரவு சீராக இருக்கும்

*அப்பா... டேய்...  நீ சொன்னதுல இதுதான் கொஞ்சம் உருப்படியானதுடா?

இனி சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றி பார்க்கலாம்.

 (மக்களே இனிவருவது பலன்களாம்!  படிங்கோ)

 சனி பகவான் தனது பார்வைகளான அ3,7,10-ம் இடத்து பார்வைகளின் மூலம் உங்களது தைரிய-பராக்கிரம-ஜெய ஸ்தானம், களத்திரஸ்தானம்;  ஜீவன காரியஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இதனால் மனைவி/கணவனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கணவன்-மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை தலை தூக்கும். அடிக்கடி வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள் என்று இருந்துகொண்டே இருக்கும்.  கணவன்- மனைவிக்கிடையே ஒரு மகிழ்ச்சியான சூழலைப் பார்க்க முடியாது.

 *இந்த பலன்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையினால் உங்களுடைய ஜீவன -காரிய ஸ்தானத்தைப் பார்ப்பதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு எளிதில் வேலை கிட்டாது. ஏதாவதொரு காரணத்தால் தள்ளிக்கொண்டே போகும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஏதாவதொரு காரணத்தால், மேலதிகாரிகளிடமிருந்து மெமோ வரும். வேலை நீக்கம் செய்யப்படுதல், விருப்பமில்லாத பணியிட மாற்றம்  தற்காலிக -பணிநீக்கம் முதலியவை ஏற்படும். புதிதாக தொழில் ஏதாவது தொடங்கலாம் என்றாலும் அதற்கான சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமையாமல், முகாந்திர வேலைகளிலேயே நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். 

ஆக ஒன்னும் உருப்படாது என முடிக்கலாம்? 

அது சரி ஜோசிய சிகாமணிகளே! இந்த பால் விலையேற்றம், பஸ் கட்டண உயர்வு, 15 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ், அண்ணா நூலக இடமாற்றம், பரமகுடி துப்பாக்கிச்சூடு, முல்லைபெரியாறு, கூடங்குளம் போன்ற பாதிப்புகள் எந்த ராசிகாரர்களை பாதிக்காது என சொல்லுவீர்களா? சனியாவது வந்துதான் பிடிக்கும்.. நாம போயி பிடிச்ச சனிக்கு என்ன பரிகாரம்??    

திங்கள், 28 நவம்பர், 2011

"WHY THIS கொலவெறி டீ" பாடல் எழுத காரணம் என்ன? - புலனாய்வு (ஹும் ..ரொம்ப முக்கியம்)




நடிகர் தனுஷ் எழுதி அவரது சொந்த குரலில் பாடிய இந்த பாடல் இப்போது மிகவும் பிரபலமாக பேசபடுகிறது அல்லது பேசவைக்கப்படுகிறது. இந்த பாடல் எப்படிபட்டது? ஏன் எழுதப்பட்டது? என்ற ஆராய்ச்சிகள் நடக்கத்துவங்கியுள்ளது. நல்ல வேலை கலைஞர் ஆட்சி இப்போது இல்லை, இருந்திருந்தால் இநத் ஆண்டின் சிறந்த பாடல் ஆசிரியராகவும் சிறந்த பின்னணி பாடகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார் தனுஷ். ஏனெனில் அவர் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற கூடுதல் தகுதி கொண்டவராயிற்றே..

 இன்று இந்த பதிவு எழுதும் நேரம் வரை இணையத்தின் வழியாக இந்த பாடலை 55 லட்சம் பேர் பார்த்திருப்பதாக புள்ளிவிபர புலிகள் அறிவித்து உள்ளனர். இந்த இம்சைகள் ஒருபக்கம் இருக்க இந்த பாடல் பின் நவீநத்துவ பாடலாக இருக்கலாம் என பின் நவீநத்துவ வாதிகள் கட்டுரை எழுத கொலைவெறி எடுத்து அலையும் தகவலும் வெளியாவது பீதியை கிளப்புகிறது. நமது பிளாக்கர்களுக்கு (அதாங்க வலைப்பூ மன்னர்களுக்கு) அடிச்சு துவைச்சு காயப்போட ஒரு சூப்பர் மேட்டர் கிடைத்த சந்தோஷத்தில் இருப்பது மட்டும் ஒரு ஆறுதலான நிகழ்வு.

 இது ஒருபுறம் இருக்க இந்த பாடலை அவர் எழுத கீழ்கண்ட காரணங்களும் இருக்கலாமா என "அரசியல் நோக்கர்கள்" கருதுகிறார்கள். இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். (யார்ரா இவனுவ அரசியல் நோக்கர்கள் என தாங்கள் குழம்புவது புரிகிறது! எல்லா பத்திரிக்கைகளும் தங்கள் சொந்த கருத்துக்களை இப்படிதானே எழுதுகிறார்கள். நாமும் எழுதுவோம்!?)

 "WHY THIS கொலவெறி டீ"
 உழைப்பாளி மக்கள் பைகளிலிருந்து அதிகார பூர்வமாக பகல் கொள்ளையடிக்க தமிழக அரசு அநியாயமாக உயர்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வை மனதில் வைத்து இவர் எழுதினார் என ஒரு பகுதியினரும்.. இல்லை இல்லை அவர் பேருந்தில் பயணம் செய்பவர் அல்ல அதனால் அது குறித்து இல்லவே இல்லை என ஒரு பகுதியினரும் வாதிடுகின்றனர்.

 ஏழைக் குழுந்தைகளின் உணவாக பசியாற்றிய பால் விலையை ஏற்றி அக்குழந்தைகளுக்கு இலவசமாக "பால்தெளி சடங்கை" நடத்தியுள்ள கொடுமையை கண்டு சகிக்காமல் "பொல்லாதவன்" தனுஷ் பொங்கி எழுந்து எழுதியிருக்கலாம் என பலரும் வாதிடுகின்றனர்.

 அதுக்கூட இல்லை.. 400 யூனிட் வரை மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் உயர்வதற்கு முன்பாக ரூ.670ஐ கட்டணமாக செலுத்தினார்கள். இவர்கள் உயர்வுக்கு பின்னர் ரூ.1,300ஐ இரட்டிப்பான நிலையில் செலுத்த வேண்டி யுள்ளது. 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை நுகர்ந்தவர்கள் கட்டண உயர்வுக்கு முன்னால் ரூ.1,100ம். கட்டண உயர்வுக்கு பின்னர் அவர்களே ரூ.2,375ஐ மின் கட்டணமாக செலுத்த வேண்டிய அதிரடி உயர்வை அம்மா அரசு தமிழக மக்கள் மீது திணித்துள்ளதை கண்டித்துதான் இந்த பாடல் எழுதப்பட்டதோ எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

 அல்லது.. பரமக்குடி துப்பாக்கிச்சூடு, அண்ணா நூலக இடமாற்றம், சமச்சீர் கல்விக்கு ஆப்பு, மக்கள் நல பணியாளர்கள் குடும்பங்களி நடுரோட்டில் நிற்க வைத்தது போன்ற சம்பவங்களை வைத்து அவர் எழுதி இருக்கலாம் என சொல்கிறார்கள். அதில் வரும் வாழ்க்கையே டார்க்கு, பிளாக்கு போன்ற வார்த்தைகள் சூட்சுமமாக இவைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள். அதிமுக அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்திய தனுஷ் இன்னும் பல பாடல்களை எழுத வேண்டும் என்றும் "அரசியல் நோக்கர்கள்" கூறுகிறார்கள்.

 ஆகவே நண்பர்களே.. இந்த பதிவின் நோக்கம் கீழ்காணும் ஒரே ஒரு "நல்ல" நோக்கத்திற்காக எழுதப்பட்டுள்ளது என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 அதிமுக நண்பர்கள் இதை "கவனித்து"  படித்து அதன் "விளைவாக" இனிமேல் தனுஷ் பாடல் எழுதுவதை நிறுத்தலாம் என்ற ஆசையின் விளைவே இந்த பதிவு.