Friday, October 11, 2024

மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 2

மஞ்சள் நதி வரைபடம்

 

லான்சுவில் உள்ள(Lanzhou)ஆற்றத் தாய் நினைவிடம்


 

மஞ்சள் ஆற்றை கடந்து செல்வோம்:

    'மஞ்சள் ஆறு' என்ற வார்த்தை சில தமிழக வாசகர்களுக்கு சாண்டில்யன் எழுதிய  மேவார் மன்னன் ராணா சங்கனுடைய  வரலாற்று நாவலை நினைவூட்டலாம். ஆனால் 60 லட்சம் மக்கள் உயிரை தன்னுள் செரித்த மஞ்சள் ஆறு சீன தேசத்தி சோகம். சீன வரலாற்றில் பல வம்ச ஆட்சிகளை அழித்தும், பல வம்ச ஆட்சிகளில் பாதுகாப்பு அரணாகவும் இருந்த ஆறு இது. தனது பள்ளதாக்கு பகுதிகளில் பல போர்களங்களை கண்ட வரலாற்று சாட்சி மஞ்சள் நதி. சீன நாகரிகம் மஞ்சள் ஆற்றும் படுகையிலேயே தோன்றியதாக நம்பப்படுகிறது. இது 'தாய் ஆறு' எனவும் 'சீன நாகரிகத்தின் தொட்டில்' எனவும் சீனர்களால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு சேற்று நீரோட்டம் எனவும் பெயர் உண்டு. 'மஞ்சள் ஆறு தெளிவாக ஒடும் போது' என்று சீனத்தில் சொலவடை உண்டு. அதாவது என்பது போல நடக்க இயலாத செயல்கள் குறித்து சொல்லப்படுவதுண்டு.

     சீனாவின் 2-வது நீண்ட நதி மஞ்சள் ஆறு (ஹுவாங் ஹெ) ஆகும். அதுமட்டுமல்ல, உலகின் 6-வது நீளமான ஆறும் இதுதான்.  மேற்கு சீனாவின் சிங்ஹாய் (Qinghai) மாகாணத்தில் உள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி, 9  மாகாணங்கள் வழியாக 5,464 கி.மீ  தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது. மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கி.மீ  மற்றும் வடக்கு தெற்காக 1100 கி.மீ  வரை பரவியுள்ளது. இதன் படுகையின் மொத்தப்பரப்பு 7,42,443 சதுரகிமீ  என்பதிலிருந்து இதன் பிருமாண்டத்தை புரிந்துக் கொள்ளலாம்.  

    மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது. பழங்கால சீன இலக்கியங்களில் மஞ்சள் ஆறானது ஹெ  என்று குறிக்கப்படுகிறது. அதற்கு தற்போதைய சீன மொழியில் ஆறு என்று பொருள். மஞ்சள் ஆறு என்ற பதம் முதலில் மேற்கு ஹான் வம்சத்தில் (கி.மு 206 - கி.பி 9) உருவானது.

            மஞ்சள் ஆறு அடிக்கடி முரண்டு பிடித்து ஓடும் ஜல்லிக்கட்டு காலையென, நினைத்த திசையெல்லாம் பாய்ந்திருக்கிறது.  தனது பாதைய நினைத்த பக்கமெல்லாம் திருப்பி இருக்கிறது. தனது பயணத்தில் கடந்த 3,000–4,000 ஆண்டுகளில் 1,593 முறை வெள்ள பெருக்காய் கரைகளை கடந்து மோதி உடைத்துள்ளது. குறிப்பாக கி.பி 1332-33 யுவான் வம்சத்தின் ஆட்சியின் போது 9 லட்சம் மக்களை காவு கொண்ட மஞ்சள் ஆறு, 1887 ஆண்டு குயிங் வம்ச ஆட்சியின் போதும்  லட்சம் மக்களை விழுங்கி சென்றது, 1931 சீனக் குடியரசு காலத்தில் சுமார்  லட்சம் மக்களை பலி வாங்கியது. இத்தனை துயரத்தை விளைவித்த மஞ்சள் ஆற்றுக்கு எப்படி மக்கள் சீன குடியரசு கடிவாளமிட்டது, எப்படி ஆற்றை கட்டுப்படுத்தி சோகத்தை மகிழ்ச்சியாய் மாற்றியது என இறுதியில் பார்போம்.

வம்சத்தை அழித்தா மஞ்சள் ஆறு:

     (Qin) வம்சத்து (221 - 206 கிமு) காலத்தை சார்ந்த வரை படங்கள் மஞ்சள் ஆறு தற்போது செல்லும் பாதையிலிருந்து வடக்கே ஓடியதாக தெரிவிக்கின்றன. அந்த வரைபடத்திலிருந்து லுயாங் மாகாணத்தை தாண்டியதும் இது சாங்சி (Shanxi) மற்றும் ஹெனான் (Henan) மாகாணங்களின் எல்லையிலும் பின்பு ஹெபெய் மற்றும் சாங்டங் (Shandong) மாகாணங்களின் எல்லையில் பாய்ந்து டியன்ஜிங் (Tianjin) அருகே பொகாய் குடாவில் (Bohai Bay) கலக்கிறது.  கிபி 11ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளமே ஜிங் வம்சம் வீழ்வதற்கு காரணமாகும். அப்போது ஆறு மீண்டும் தன் பாதையை வடக்கே டியன்ஜினிலிருந்து (Tianjin) தெற்கே சாங்டங் (Shandong) தீபகற்பத்துக்கு மாறியது.

    1194ம் ஆண்டு இதன் பாதையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கிட்டதட்ட 700 ஆண்டுகளுக்கு இது குஆய்(Huai) ஆற்றின் வடிகால் பகுதியை ஆக்கரமித்திருந்தது. மஞ்சள் ஆற்றின் சேறு மற்றும் சகதி குஆய் (Huai) ஆற்றின் கழிமுகத்தை தடுத்ததால் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்தனர். மஞ்சள் ஆற்றின் தற்போதைய பாதை 1897லிருந்து மாறாமல் இருக்கிறது.

    கடந்த 700 ஆண்டுகளில் குஆய் (Huai) ஆற்றின் பாதைக்கும் இதன் மூல பாதைக்கும் பல முறை மாறி மாறி மஞ்சள் ஆற்றின் போக்கு இருந்துள்ளது. இதன் காரணமாக உருவான வண்டல் படிமங்கள் அதிகளவில் இருந்ததால் மஞ்சள் ஆறு தன் போக்கை வடக்கே மாற்றிக்கொண்டதும் குஆய் (Huai) ஆற்றினால் தன் மூல பாதையில் செல்லமுடியவில்லை. அதற்கு பதிலாக இதன் நீர் ஹோன்ச் (Hongze) ஏரியில் தேங்கி பின் தெற்கு நோக்கி ஓடி  யாங்சே  ஆற்றில் கலக்கிறது.

மனித ஆசையினால் உடைக்கப்பட்ட கரைகள்:

     சீன வரலாற்றின் போர்களில் இந்த மஞ்சள் ஆற்றுக்கு முக்கிய பங்குண்டு.  தனது எதிர் படையை அழிப்பதற்காக தூண்டப்பட்ட இயற்கை பேரழிவை உருவாக்கி, வீரர்களுக்கு மாற்றாக தண்ணீரைப் பயன்படுத்தும் கலையை சீனர்கள் உருவாக்கினார்கள்.  1938 இல் நடந்த இரண்டாவது சீன - ஜப்பானிய போரின்போது, சியாங் கை - ஷேக்கின் படைகள்  ஹெனானில் உள்ள  ஹுவாயுவான்கோவ் கிராமத்திற்கு அருகே ஆற்றின் தடுப்பணைகளை உடைத்தன. தங்களை நோக்கி முன்னேறும் ஜப்பானியப் படைகளை நிறுத்த முயற்சி செய்வதே இந்த நடவடிக்கையின் குறிக்கோளாக இருந்தது.  ஆனால் மஞ்சள் நதி வேறொன்றை நிகழ்த்தியது.  

    54,000 கிமீ பரப்பளவில் ஏற்பட்ட வெள்ளம் சுமார் 5 லட்சம் முதல் 9 லட்சம் சீன உயிர்களையும், கணக்கிட முடியாத எண்ணிக்கையிலான ஜப்பானிய வீரர்களின் உயிர்களையும்  பறித்தது. இதனால் ஜப்பான் இராணுவம் மஞ்சள் ஆற்றின் தென் கரையில் உள்ள ஸெங் - சவ் பகுதியை எடுத்துக்கொள்வதை வெள்ளம் தடுத்தது, ஆனால் சீன அரசாங்கத்தின் தற்காலிக இடமாகவும் யாங்சே ஆற்றின் குறுக்கே இருக்கும் வுஹானைக் கைப்பற்றும் ஜப்பானிய படைகளின்  இலக்கை தடுக்கமுடியவில்லை.

  மகத்தான சீனப் புரட்சியின் விளைவு:

    மகத்தான சீன புரட்சி முடிந்த துவக்க காலமான 1950ம் ஆண்டில் எடுக்கப்பட்டதை விட தற்போது ஐந்து மடங்கு நீர் அதிகமாக எடுக்கப்படுகிறது. 1999ம் ஆண்டு கணக்கின் படி இதன் நீரை ஆதாரமாக கொண்டு 140 மில்லியன் மக்களும் 74,000 சதுர கி.மீ நிலமும் பயன்பெறுகின்றன. மஞ்சள் ஆற்றின் கழிமுக பரப்பு 8,000 சதுர கி.மீ ஆகும், எனினும் 1996ம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இது குறைந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு மண் அரிப்பே முதன்மையான காரணமாக கூறப்பட்டுள்ளது.

     இந்த மஞ்சள் நதியில் மாபெரும் பாசனத் திட்டத்தை சீன அரசு உருவாக்கியது. 1960-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டுக்குள் 12 பெரிய அணைகள் கட்டப்பட்டன. மேலும் சில அணைகளைக் கட்டி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் 7 நீா் மின் சக்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் திட்டங்களால் சுமார் 5,620 மெகா வாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. வெள்ளம் முழுமையாகத் தடுக்கப்பட்டது. பல ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்றன. பல கோடி மக்கள் வேளாண்மையில் தன்னிறைவு நிலையை அடைந்தனா். மஞ்சள் நதியால் சீனாவின் துயரம் என்று கதை பேசிய வரலாறு, சீனாவின் மகிழ்ச்சி என்று தற்போது பெருமை பேசுகிறது.

அடுத்து வரும் ஆபத்து: 

     கடுமையான மாசுபாடு சீனாவின் மஞ்சள் நதியில் மூன்றில் ஒரு பகுதியை பயன்படுத்த முடியாததாக ஆக்கியுள்ளது என்று புதிய ஆராய்ச்சிகள் கூறுகிறது. நாட்டின் "தாய் நதி" என்று அழைக்கப்படும் இது சீனாவின் வடக்கில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு தண்ணீர் வழங்குகிறது. ஆனால் சமீப ஆண்டுகளில் தொழிற்சாலை வெளியேற்றம் மற்றும் வேகமாக விரிவடைந்து வரும் நகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் காரணமாக அதன் தரம் மோசமடைந்துள்ளது. 

    நதியின் பல பகுதிகள் இப்போது விவசாயம் அல்லது தொழில்துறை பயன்பாட்டிற்கு கூட தகுதியற்றவையாக மாறி உள்ளது என ஆய்வு சுட்டிக்காட்டுகின்றன. 2009ல்  எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில்  உலகின் மிக நீளமான நீர்வழிகளில் ஒன்றான ஆற்றின் 8,384 மைல்கள் மற்றும் அதன் துணை நதிகளை உள்ளடக்கி உள்ளது. நீர்வள அமைச்சகத்துடன் இணைந்த மஞ்சள் நதி பாதுகாப்புக் குழு, 2007 ஆம் ஆண்டில் 33.8% நதி அமைப்பின் நீர் மாதிரிகள் மோசமாக உள்ளதாக பதிவு செய்துள்ளது. அதாவது, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தால் பயன்படுத்தப்படும் அளவுகோல்களின்படி, இது குடி நீர், மீன்வளர்ப்பு, தொழில்துறை பயன்பாடு மற்றும் விவசாயத்திற்கு கூட தகுதியற்றது. காரணம்  மஞ்சள் ஆற்றின் மேல் மற்றும் நடுப்பகுதிகளில் உள்ள பல மாசுபடுத்தும் நிறுவனங்கள்தான்.

    ஆனாலும் சீனாவின் ஸ்டேட் கவுன்சில் கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆற்றலைச் சேமிக்கவும், மாசுகளை வெளியேற்றுவதைக் குறைக்கவும் தொழில்துறை நிறுவனங்களிடையே நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கியது. தொழிற்சாலைகள் அதிக செறிவு கொண்ட பகுதிகள் வழியாக ஆறு கடப்பதால் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசு தயாராகி உள்ளது.

     தி,கார்டியன் இதழ் இது குறித்து ஒரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டு கணினியில் வெளியேற்றப்பட்ட கழிவு மற்றும் கழிவுநீர் மொத்தம் 4.29 பில்லியன் டன்கள் என்று அறிக்கை கூறியது. தொழிற்சாலை மற்றும் உற்பத்தி ஆற்றில் 70% வெளியேற்றப்படுகிறது, குடும்பங்கள் 23% மற்றும் பிற மூலங்களிலிருந்து 6% க்கும் அதிகமானவை.” என குறிப்பிட்டுள்ளது.

    சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் இந்த கோடையில் சீனாவின் நீர்வழிகளின் மாசுபாடு "கடுமையானது" என்று எச்சரித்தது. ஏறக்குறைய 200 ஆறுகளில் சோதனை செய்யப்பட்ட 20% க்கும் அதிகமான நீர் பயன்படுத்த பாதுகாப்பானது அல்ல என்று அது மேலும் கூறியது. இந்த சூழலில் புதிய காலகட்ட சவால்களை எதிர்கொண்டு மஞ்சள் ஆற்றை பாதுகாக்க சீன மக்கள் குடியரசு போராடிக்கொண்டிருக்கிறது.

               சீன தேசத்தின் 5000 ஆண்டுகால மாற்றத்தினை கண்கண்ட சாட்சி எனப் போற்றப்படும் மஞ்சள் நதி கடந்து பயணிப்போம் வாருங்கள்

 

 மக்கள் சீன புரட்சி அறிமுகம் - 1

No comments:

Post a Comment