மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விடுதலைப்போரில் பெண்கள் - 22


இந்த தேசத்திற்காக உழைத்தவர்கள் எப்போதுமே தாமதமாதான் கவுரவம் செய்யப்படிருக்கின்றனர். இந்த உதாரணத்தின் ஒரு எடுத்துகாட்டு அருணா. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட பெருமைமிகு இப்போராளி 87 ஆண்டுகள் இந்த மண்ணின் மக்களை நேசித்த ஒரு உன்னதம் அவர். அவர் இறந்த அடுத்த ஆண்டாண 1997 -ல் தான் அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்திய அரசு அவரை மிக தாமதமாக பாரத்த ரத்தினமாய் ஏற்றுக்கொண்டாலும் அவர் உண்மையில் இந்தியாவின் நவரத்தினாமக தனது வாழ்க்கை மூலமாக ஜொலித்தார்.

1909 ஆம் ஆண்டு இன்று அரியானா மாநிலத்தில் உள்ள கல்காவில் பிறந்தார். வங்க குடும்பத்தில் பிறந்த அவரது தந்தையின் பூர்வீகம் கிழக்கு வங்காளம் ஆகும். அவர்கள் கொல்கத்தாவில் அவரது பணி நிமித்தமாக நிறந்தரமாக தங்கினர். அவரது தந்தை  உபேந்திரநாத் கங்குலி சிறந்த பத்திரிக்கையாளராக திகழ்ந்தார். அருணா லாகூரில் கத்தோலிக்க கிருத்துவ பள்ளியில் கல்வி கற்றார். அவருக்கு கிருத்துவ மதத்தின் மீது அளவிடமுடியாத பற்றுதல் ஏற்பட்டது. படிப்பில் சிறந்த மாணவியாக திகழ்ந்த அவர் ஒரு சமயத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இறை சேவையிலேயே வாழவை கழிக்க எண்ணினார். ஆனால் அவரது அடுத்த கல்வி நிலையமான நைனீடாவில் உள்ள பிராட்டஸ்டன்ட் அக்கருத்தை மாற்றி அமைத்தது.

அச்சமயம் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை குடும்பத்தில் துவக்கினர் ஆனால் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. மேலும் உயர் கல்விக்கான படிப்பு செலவை தானே சமாளித்து நிற்பதற்காக ஒரு பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அருணாவின் சகோதரி பூர்ணிமா தனது கனவருடன் அலகாபாத்தில் வசித்துவந்தார். கோடை விடுமுறை காலத்தில் அலகாபாத் சென்று சிலகாலம் அருணா தங்கி இருந்தார். அங்குதான் அவர் இலக்கிய ஆர்வமும், அரசியல் வேட்கையும் நிறைந்த போராளியான ஆசாப் அலியை சந்தித்தார். 

இலக்கியம், அரசியல் என துவங்கிய இவர்கள் விவாதம் காதல் என்ற புள்ளியில் சந்தித்தது. இருவரும் மனதார விரும்பினர். ஆனால் குடும்பத்தில் பிரச்சனை மாற்று மதங்களை சார்ந்தவர்கள் என்பதால் மட்டும் வரவில்லை, இருவருக்குமான வயது வித்தியாசம் ஒரு தடையாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆம் அப்போது ஆசாப் அலிக்கு 41 வயது, அருணாவுக்கு 18 வயது. இருப்பினும் இருவரும் மணம் புரிந்துக்கொண்டனர். லாலா லஜபதிராயை தடியால் அடித்து கொலை செய்த சாண்ட்ரஸை பக்தசிங்க் சுட்டு கொன்ற அதே 1928 ஆம் ஆண்டுதான் அருணா - ஆசாப் அலி இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் ஏன் இங்கு சுட்டிக்காட்ட படுகிறது எனில், ஆசாப் அலி இந்திய தீவிரவாத இயங்களின் நியாயத்தை தொடர்ந்து கவனித்து வந்தார். கவனித்து வந்தது மட்டுமல்ல பகத்சிங், பி.கே.தத் ஆகியோருக்காக பின்னாளில் வாதடிய வழக்கறிஞரும் இவர்தான்.

இதற்கிடையில் இளம் பெண்ணான அருணாவுக்கு இந்திய அரசியல் செல்லும் பாதை வேதனையை கொடுத்தது. விடுதலை போரில் தானும் முழுமையாக ஈடுபட விரும்பினார். இதற்கு அசாப் அலி மிகவும் உற்சாகம் கொடுத்தார். தன்னுடைய முழு திறமையையும், வாய்புகளையும் பயன்படுத்திக்கொண்டார். ஆசாப் அலி முலீம் லீக்கில் பணியாற்றினாலும் அருணா காங்கிரஸில் பற்று கொண்டு உழைத்தார். கணவரிடமிருந்து உருது மொழி கற்றுக்கொண்டு வங்க மொழிக்கு நிகராக அம்மொழியிலும் மேடையில் சிறப்பாக பேசினார். காங்கிரஸ் சோசலிஸ்டாக அவர் அறியப்பட்டார்.   

காந்தியடிகள், மொளலானா ஆசாத் போன்ற தலைவர்களின் கூட்டங்களில் உத்வேகம் அடைந்த அவர், ஜெயபிரகாஷ் நாராயணன், அச்சுத்பட்டவர்தன், ராம் மனோகர் லோகிய போன்ற சோசலிஸ்ட்  அரசியல் தலைவர்களுடன்தான் போர் கொடி ஏந்தி களம் கண்டார். எதையும் வைராக்கியத்துடன் செய்யும் ஆற்றல் கொண்ட அருணா விடுதலை போரில் தீவிரமாக இறங்கினார். 1930 களில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் ஈடுபட்டு சிறக்கு சென்றார். அவரது கணவரும் கைது செய்யப்படார். பெரும் பேரணிக்கு தலைமையேற்றுச் சென்றதால் அருணா கைது செய்யப்பட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தபடி அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யபடாலும்ம் அருணாவை மட்டும் பிரிடிஷ் அரசாங்கம் விடுதலை செய்யவில்லையெனில் அதிலிருந்து அவரது தீவிரத்தை புரிந்துக்கொள்ளலாம். அவரது விடுதலைக்காக கடுமையான போராட்டங்கள் நடந்த பிறகுதான் அவர் விடுதலை செய்யபடார்.

மீண்டும் 1932 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டதில் பங்கு கொண்டு சிறைக்குச் சென்றார். நீதிமன்றம் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தது. அவர் அதை கட்ட மறுத்ததால் சிறை இருப்பது தொடர்ந்தது. இவர் அபாயமானவர் என அறிவித்து அவரை மட்டும் அரசாங்கம் அம்பாலா சிறைக்கு மாற்றியது. 1940ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்க போராட்டத்திற்கு தேர்ந்தெடுத்த தலைவர்களில் அருணாவும் ஒருவர். இதிலேயும் சிறைக்கு சென்றார். அச்சமயம் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1942 ஆம் ஆண்டு பம்பாயில் துவங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்றார். அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரலாற்று முக்கியதுவம் வாந்த வெள்ளையனே வெளியேறு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது. இரவோடு இரவாக அனைத்து தலைவர்களும் கைதுசெய்யப்பட்டனர். அடுத்த நாள் பம்பாயின் புகழ் பெற்ற கோவாலி டேங்க் மைதானத்தில் வெளையனே வெளியேறு இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி இருந்தது. எங்கும் பரபரப்பாக இருந்தது, காவல்துறையும், ராணுவம் ஆயுதங்களுடன் சுற்றிலும் நின்றது. இந்த இயக்கத்தை தேசிய கொடியை ஏற்றி வைத்து மொளலானா ஆசாத் துவக்குவதாத அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் முந்நாள் இரவே கைது செய்யப்பட்டிருந்தார். மைதானத்தில் குழப்பம், எபடியும் தேசிய கொடியை ஏற்றுவது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவக்குவது என்பது நடக்கத்தான் போகிறது. ஆனால் முதல் அடியை யார் எடுத்து வைப்பது? கவல்துறையும் இராணுவமும் உயர்த்திய தடிகளும், துப்பாகிகளையும் வைத்து குறிபார்த்துக்கொண்டிருந்தது. 

திடீரென வந்தே மாதரம் என்ற முழக்கமும், இன்குலாம் ஜிந்தாபாத் என்ற முழக்கமும் வின்னை முட்டும்மளவு உயர்ந்தது. காரணம் அருணா என்ற வீரமங்கை எதற்கும் அஞ்சாமல் தேசிய கொடியை கம்பீரமாக ஏற்றிக்கொண்டிருந்தார். இதை சற்றும் எதிர்பார்காக காவல்துறையும், இராணுவமும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், கூட்டம் அசராமல் முழக்கமிட்டது. திடீரென தோட்டாக்கள் சீறிபாய்ந்தது. பலர் சுருண்டு விழுந்து இறந்தனர். அருணாவை அங்கிருந்து தேசபக்தர்கள் தப்பவைத்தனர். அருணாவின் தலைக்கு ஆங்கிலேய அரசு ஐந்தாயிரம் விலைவைத்தது. அன்று தலைமறைவான அந்த வீராங்கனை 1946 ஆம் ஆண்டுதான் வெளியில் வந்தார்.

இந்த தலைமறைவு காலத்தில் அவரது தாயார் மரணமடைந்தார், கணவர் உடல் நலம் குன்றி மருத்துவமணையில் அனுமதிக்கப்படார். அருணாவின் சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்றியது, கொடுமையான வாழ்க்கை இருப்பினும் மணம் தளராமல் போராட்டங்களில் ஈடுபட்டுக்கோண்டே இருந்தார். சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை அவர் உள்வாங்கி பணியாற்றியது பின்னாளில் நடந்தது.

இந்தியா விடுதலை பெற்றதும் அவர் டெல்லியின் முதல் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைதிக்கான லெனின் விருதை 1975 ஆம் ஆண்டும், சர்வதேச புரிதலுக்கான நேரு விருதை 1991 ஆண்டும் அவர் பெற்றார். 1996 ஆம் ஆண்டு அவர் மரணம் அடையும் வரை மக்களை நேசித்து வந்தார். எல்லா வளங்களும் கொண்ட குடும்பத்தில் பிறந்து, போராட்ட களத்தையே தனது வாழ்க்கையாக மெற்கொண்டு, தனது சொந்த இழப்புகளை பொருட்படுத்தாமல் வாழ்ந்து மறைந்த போராளி அவர். விடுதலைப் போராட்டத்தில் அருணாவை போல மகத்தானவர்கள் நம்முடைய ஈர்ப்பு சக்தியாக விளங்குகின்றனர்.   
(தொடரும்)
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark