மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


விடுதலை போரில் பெண்கள் - 21 

1927-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் சென்னையில் ஏறாளமான பெண்கள் அடங்கிய குழு   சைமன்   கமிஷன்   எதிர்ப்பு   நடவடிக்கைகளை   துவக்கியது.   அவற்றில்   யாமினி   பூர்ணதிலகம்மா,   திருமதி.   மாசிலாமணி,   திருமதி.   ருக்மணி   லட்சுமிபதி   மற்றும்   பலரும்முனைப்புடன்   ஈடுபட்டனர்.   அதே   நேரம்   சென்னையைச்   சேர்ந்த   இந்தியப்   பெண்கள் அமைப்பும் சைமன் குழுவை இரண்டு காரணங்களுக்காக எதிர்த்தது. ஒன்று அக்குழுவில் இந்தியர்கள்   இடம்பெறாதது.   மற்றொன்று   பெண்கள்   இடம்   பெறாதது.   இது   தேசியதலைவர்கள் பலர் கவனிக்காத பார்வையாகும். 

இந்த பார்வையினுடாக பல பெண்கள்இப்போராட்டத்தில்  கலந்துக்கொண்டது சிறப்பு  அம்சமாகும். இந்த  போராட்டமே பின்பு வந்த சட்ட மறுப்பு இயக்கத்தில் நிறைய பெண்களை ஈர்த்தது. அதேபோல் டிசம்பர் 31, 1929 நள்ளிரவில், இந்திய தேசிய காங்கிரஸ் லாகூரின் ராவி நதிக்கரையில் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றியது. ஜனவரி 26,1930   இல்   வெளிப்படையாக   விடுதலைப்   பிரகடனம்   அல்லது   முழு   விடுதலையைவெளியிட்டது. இவ்விடுதலைப் பிரகடனமானது மக்களின் மீதான வரிகளைத் தடுத்து நிறுத்தத்தயாராவதை உள்ளடக்கியிருந்தது, இது குறித்த அறிக்கை இப்படி கூறியது:

""இது இந்திய மக்களின் பிரிக்க இயலாத, பிற மக்களைப் போல, விடுதலைப்பெறவும் அவர்களது உழைப்பின் பலனை அனுபவிக்கவும், வாழ்க்கையின் தேவைகளைப்பெறவும்,   அதனால்   வளர்ச்சியின்   முழு வாய்ப்புக்களைக்   கொள்ளவுமான உரிமையுடையது என நாங்கள் நம்புகிறோம். நாங்கள் மேலும் நம்புவது எந்தவொரு அரசும்   இந்த உரிமைகளை   மக்களுக்கு   மறுக்கிறது   மற்றும்   அவர்களை   ஒடுக்குகிறது எனில்   மக்களுக்கு   இதற்கு   மேலும்   அவ்வரசினை   மாற்ற   அல்லது ஒழிக்கும் உரிமையுள்ளது.   இந்தியாவின்   ஆங்கிலேய   அரசு   இந்திய மக்களின்   சுதந்திரத்தை மறுப்பதோடு   அல்லாமல்,   மக்களின்   மீதான சுரண்டலில்   தனது   அடித்தளத்தை அமைத்துக்   கொண்டுள்ளது,   மேலும் இந்தியாவை   பொருளாதார,   அரசியல்,பண்பாட்டு மற்றும் ஆன்மீக ரீதியில் சீரழித்துள்ளது. ஆதலால் நாம் நம்புவது, இந்தியாஆங்கிலேயர் தொடர்பைத் துண்டித்துப் பூர்ண ஸ்வராஜ் அல்லது முழு விடுதலையை அடையவேண்டும்"". 

இதுதான் அந்த அறிக்கையின் சாரம்.காங்கிரஸ்   செயற்குழு   காந்திக்கு   சட்ட   மறுப்பு   நடவடிக்கையை   முன்னெடுக்கும்பொறுப்பினைக் கொடுத்தது, அத்தோடு காந்தியின்   கைதினைத் தொடர்ந்து தானேபொறுப்பினை எடுத்துக் கொள்ளத் தயாராகவும் இருந்தது. 1882 உப்புச் சட்டம்ஆங்கிலேயருக்கு உப்பின் சேகரிப்பிற்கும் உற்பத்திக்கும் ஒட்டுமொத்த உரிமையைக் கொடுத்தது,   அதன் கையாளுகையை   அரசு   உப்புக்   கிடங்குகளிலும்   உப்பு   வரி விதிப்பதிலும் வரையறுத்தது.   உப்புச்   சட்டத்தை   மீறுவது   ஒரு   குற்றச்   செயலாக கருதப்பட்டது. உப்பானது கடற்கரையில் வாழ்பவர்களுக்கு இலவசமாகக் கிடைத்து வந்தாலும் கூட, இந்தியர்கள் அதனை காலனிய அரசிடமிருந்து நுகர வற்புறுத்தப்பட்டனர். 

இவைகள் பெரும் வீச்சாக நாடெங்கும் பரவியது.1929 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாடு சட்டமறுப்பு   போராட்டம் தொடங்க   தீர்மானித்தது.   காந்தியடிகளிடம்   சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்தது.   சபர்மதி   ஆசிரமத்திலிருந்து   சுமார்   150 தொண்டர்களுடன் பம்பாய்க் கடற்கரையிலுள்ள தண்டி என்ற இடத்திற்கு உப்பெடுப்பதற்காக பாதயாத்திரை தொடங்கினார் தடுத்து நிறுத்தபட்ட காந்தியடிகளுக்கு ஆறு வருடம் தண்டனை கொடுக்கப்பட்டது. அதே சமயம் தமிழ்நாட்டிலும் இப்போராட்டம் தொடங்கியது. வேதாரண்யம் கடற்கரையில்   ராஜாஜி   கைது செய்யப்பட்டார்.   அடுத்து   கே.சந்தானம் அவர்களுடன் "சென்னை இளைஞர் சங்கம்" என்ற அமைப்பை தொடங்கி இளைஞர்களிடமும், மகளிரிடமும் போராட்ட   விதைகளை   விதைத்த     ருக்மணி   லட்சுமிபதி   அம்மையாரும் சத்தியாகிரகத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

இருநூறு ஆண் சத்தியாகிரகிகள் மத்தியில் ஒரே பெண், முகாமில் ஆண்களுடனேயே தங்குவார். இவர் போராட்டத்தின் காரணமாக   கைது செய்யப்பட்டு ஒருவருடம் தஞ்சாவூர்   சிறையில்   வைக்கப்பட்டார். சென்னை நகரிலும்  தி.   பிரகாசம்   அவர்கள் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடந்தது. துர்காபாய் அம்மாள் தலைமை ஏற்று உதயவரம்   என்ற   இடத்தில் கிருஷ்ணம்மா   மற்றும்   சில   பெண்களுடன்   உப்புச்   சட்டத்தை மீறினார்கள். தடையுத்தரவையும்   மீறி   சென்னை   சாந்தோம்   கடற்கரையில் உப்புக் காய்ச்சத்   தொடங்கினர்.   போலீஸார்   கடுமையான   அடக்குமுறை செய்து கூட்டத்தையும் கலைத்தனர். துர்காபாய்   அம்மையார்   அத்தோடு சோர்ந்துவிடவில்லை   வடஆற்காட்டிற்குச் சென்று ஏராளமான பெண்களை திரட்டினார். பின்னர் மே மாதம் 25-ஆம் தேதி உப்புச் சட்டத்தை மீறி உப்புக் காய்ச்சினார். நூற்றுகணக்கான பெண்கள் தமிழ்நாடு முழுவதும் கல்லூரி, கல்விக் கூடங்கள், அந்நியத் துணிக்கடைகள், மதுபான கடைகள் இவற்றை மறியல்   செய்யும்   போராட்டத்திலும்,   கதர்   உற்பத்தியிலும்   பெண்கள் ஈடுபட்டனர். இவர்கள்   வியாபாரிகளிடம்   அவ்வியாபாரத்தை விட்டு விடுமாறும், வாடிக்கையாளர்களிடம் அப்பொருட்கள் வாங்க வேண்டாம் என்றும் வேண்டுவார்கள்.இவை பயன் தரவில்லையென்றால் கடைகளுக்கு முன்னால் படுத்து விற்பனையை தடைசெய்வார்கள்.

இவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் லத்தியாலும்,சிறை தண்டனையினாலும் ஒடுக்கியது. இந்த தண்டனைகளையெல்லாம் பொருட்படுத்தாதுமேலும் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டதுதான் சட்டமறுப்பு இயக்கத்தின் வெற்றிக்குஒரு பொது தன்மையை கொடுத்தது.இவையெல்லாம்   சேர்ந்துதான்   அதனை   தொடர்ந்து   நடந்த சட்டமறுப்புஇயக்கத்தில்  பெண்களை  அதிக   அளவு  ஈர்த்தது.   தடியடி, அடக்குமுறை,  வழக்குகள்,சிறைச்சாலை என எத்தகய அடக்கு முறைக்கும் பெண்கள் அஞ்சாமல் போராடினர்.கீழ்வரும் சில விபரங்கள் அந்த தீவிர தன்மையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

சட்ட   மறுப்பு   இயக்கத்தில் சென்னை   மாகாணத்தில்   தண்டிக்கப்பட்டவர்கள் :சாதாரண   சட்டம்   :   450   (பெண்கள்   33),   தொல்லை   மற்றும்   புறக்கணிப்பு தடுப்புஅவசரச் சட்டம், 1932 பிரிவு-5, :290 (பெண்கள்29), சட்டவிரோதமாக துண்டுதல் அவசரச்சட்டம்   1932   பிரிவு-3:   14   (பெண்கள்   3)   ஆதாரம்:   அரசு   ஆணை எண்.386 அ இ பொது துறை இ 7-03-1932. சிறையிலடைக்கப்பட்ட பெண்கள் மிகவும் கொடுமைபடுத்தப்பட்டனர். மூடநம்பிக்கை சார்ந்தது எனிநும்ம் பெண்கள் புனிதமாக கருதிய குங்குமமும்   அவர்கள் கையிலணிந்திருந்த   வளையல்களும்   பலாத்காரமாகப் வேலூர் மத்தியச் சிறையில் பறிக்கப்பட்டன.

கேவலமாந படுக்கைகள் மிகவும் அசுத்தமாக அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஒருவாரத்திற்கு  குளிக்கக் கொடுக்கும்   எண்ணெய் ஒருநாளைக்குக்  கூடபோதுமானதாக   இல்லை. சாப்பிடக்   கொடுக்கும்   சாதத்திலும்,   மாவிலும்   பூச்சிகள்நிரம்பி   இருக்கும். இதைவிட   கொடுமையின்   உச்சமாக   நூறு   பெண்கள்   வரை   ஒரு கழிப்பிடத்தைத்தான்   பயன்படுத்த   நிர்பந்திக்கப்பட்டனர்.   கல்   உடைத்தல், கம்பளி நெய்தல்   போன்ற   வேலைகள்   செய்யவேண்டும்.   சென்னை குற்றவாளிகள்   திருந்துவதற்கான   சிறையில்   அரசியல்   கைதிகளும்   மற்ற குற்றவாளிகளும்   சேர்ந்துஒரே   பிரிவில்   பன்னிரெண்டு   பேர்   தூங்க வேண்டும்.   இச் சத்தியாக்கிரகத்தில்   சென்னை ராஜதானியில் மட்டும் பிப்ரவரி மாதம் 1933 வரை கைதாகி சிறை சென்றவர்கள் எண்ணிக்கை   13674. அவர்களில்   633   பேர்   பெண்கள்   என்பது   குறிப்பிடத்தக்கது. பெண்கள் அதிக அளவு சிறைக்குச்சென்ற   போராட்டம் இதுவேயாகும். இப்படியான போராளிகள் வரலாற்றில் ஓரிரு வரிகளில் நம்மை கடந்து செல்வதுதான் நமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் சோகமாகும். முறையான ஆவணங்களில் கிடைக்கும்பெண் போராளிகள் மிகவும் குறைவே.. இருப்பினும் அவர்களை தேடிச்செல்வோம்.

(இன்னும் போராளிகளை சந்திக்கலாம்) 

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark