மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

ஜாதவ்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ர, மம்தாவை பற்றிய ஒரு கார்ட்டூனை மெயில் மூலம் 65 பேருக்கு  அனுப்பினார். முன்னாள் ரயில்வேதுறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை எப்படி கட்சியைவிட்டு வெளியேற்றுவது என்று மம்தாவும், முகுல்ராயும் ஆலோசனை செய்வதாக அக் கார்ட்டூனின் கருத்து இருந்தது. கார்ட்டூனில் மம்தாவின் தலையில்லாத உருவம் வரையப்பட்டிருந்தது. கார்ட்டூனின்  தலைப்பாக " Our CM Has Lost Her Head   " என குறிப்பிடப்பட்டிருந்தது. 

விமர்சனம் என்பது மம்தாவுக்கு எப்போதும் பிடிக்காது ஆதலால்... அம்பிகேஷ் கைது செய்யப்பட்டார். அதோடு மட்டுமில்லாமல் திரிணாமுல் கட்சி தொண்டர்களால் கொலை மிரட்டலுக்கு ஆளானார்.  15 க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார். தான் ஒரு CPM கட்சி   தொண்டர் என எழுதித்தரும்படி திரிணாமுல் தொண்டர்களால் மிரட்டப்பட்டார். தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென்று காவல் துறையில்  புகார் செய்யுமளவுக்கு அம்பிகேஷ் திரிணாமுல் தொண்டர்களின் கொலை மிரட்டலுக்கு ஆளானார். மேலும்  அம்பிகேஷ்,  சென்குப்தா என்பவருடைய மெயில்   IDயை பயன்படுத்தி கார்ட்டூனை அனைவருக்கும் அனுப்பி யிருந்ததால் சென்குப்தாவும் கைது செய்யப்பட்டார். மேற்குவங்க  போலீஸ்,   சமூக வலைத்தளங்களில் மம்தாவின் நன்மதிப்பை குறைக்கும் வகையில்  வேண்டுமென்றே எழுதப்பட்டு வரும்   கருத்துக்களை நீக்கும்படி Face Book  போன்ற வலைத்தளங்களுக்கு கடிதம் எழுதப்போவதாக அறிவித்துள்ளது.

இப்படியான காலகட்டத்தில் அக்கா மம்தா குறித்த சில கார்டுன்களை இப்போது நாம் பார்க்கலாம்.. இவையெல்லாம் இணையதளங்களிலுருந்து எடுக்கப்பட்டவைதான்.. அம்மையாருக்கு தெரியவில்லை உண்மை எவ்வுளவு அடக்குமுறைகளையும் மீறி வெளியே வரும் என்பது.
































0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark