வியாழன், 18 டிசம்பர், 2025

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி

நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத என்எல்சி

நிலம் வழங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 17.12.2025 புதன் கிழமை அன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன் உள்ளிட்ட  10 பிரதிநிதிகளை என்எல்சி அதிகாரிகள் இருக்கையில் அமரச் சொல்லாமல் அவமதித்தனர். இதனால்  கொதிப்படைந்த தலைவர்கள் முற்றுகையைப் தொடரப் போவதாக அறிவிக்கவே, பணிந்த அதி காரிகள் மீண்டும் அழைத்து மரியாதையுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முத்தரப்புக் கூட்டம் நடத்திப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்.எல்.. வலியுறுத்தினார். அதற்கு ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஆர். ரவிச் சந்திரன், விதொச மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.  

மாவட்டச் செயலாளர்கள் ஆர்.கே. சரவணன் (விவசாயிகள் சங்கம்), எஸ். பிர காஷ் (விதொச) மற்றும்நிர்வாகிகள் ஆர். ராமச்சந்திரன், பி.கர்ப்பினைசெல்வம், டி.கிருஷ்ணன், பி.வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாதிக்கப்பட்ட கிராமங்களின் சார்பில் த. சண்முகம், ஆர். ரவிச்சந்திரன், . சன்னியாசி, சூ.  ராமச்சந்திரன், செல்லதுரை உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் நெய்வேலி ஆர்ச் கேட் பகுதி யில் பெரும் பரபரப்பு நிலவியது.



சரி கோரிக்கைகள்தான் என்ன

எதறக்கு இந்த போராட்டம் ?

1956-ஆம் ஆண்டில் ஒரு பொதுத்துறை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிய அரசின் ‘நவரத்தின’ பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்எல்சி இந்தியா லிமிடெட் (NLCIL), இந்தியாவின் மின் உற்பத்தித் துறையின் மிக முக்கியத் தூணாக  விளங்குகிறது. இந்த மகத்தான நிறுவனத்தையும் மோடி அரசு தனியாரிடம் விற்பனை செய்ய துடிப்பது கொடுமை. தொழிலாளி வர்க்கத்தின் தொடர்சியான போராட்டத்தின் விளைவாக இந்த நிறுவனம் பாதுகாக்கப்படுகிறது.

2024-2025 நிதியாண்டிற்கான மொத்த லாபம் ₹10,861.41 கோடி ; மற்றும் நிகர லாபம் ₹2,713.61 கோடி ஆகும். இந்த நிதி வலிமையின் காரணமாக, நிறுவனம் தனது முந்தைய மூன்று ஆண்டுகளின் சராசரி நிகர லாபத்தில் 2% என்ற சட்டப்பூர்வக் கடமையின் அடிப் படையில், ₹48.63 கோடியை கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் கிராம மேம்பாட்டிற்கான கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நடவடிக்கை களுக்காக ஒதுக்கி செலவிடுகிறது.

ஆனால் இந்த மாவட்டத்திற்கும், பாதுக்கப்பட்ட கிராமங்களுக்கு இந்த தொகை எவ்வுளவு உதவுகிறது என்பது மிகப் பெரிய கேள்வி.

பல பத்தாண்டுகளாக என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம், வீடு, மனை கொடுத்த விவசாயிகள், விவசாய தொழிலாளர் தங்களது வாழ்வாதார பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து போராடி வருகின்றனர். எளிமையக தீர்க்கப்பட வேண்டிய பல கோரிக்கைகள் இன்னும் தீரக்கபடாமல் உள்ளது.

1956 முதல் சுமார் 37,256 ஏக்கர் நிலத்தை 25,000 குடும்பங்களிடமிருந்து கையகப்படுத்தியுள்ளது. ஆனால், வெறும் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிலம் வழங்கிய கிராம  மக்கள் நியாயமான இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு நிரந்தர வேலை மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் (Rehabilitation and Resettlement – R & R) கொள்கையை முழுமையாக அமல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளுக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கீழ்க்காணும் 12 அம்ச கோரிக்கைகள் தற்போது முன்னுக்கு உள்ளது :

1. 2000 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சுரங்க இயக்குனர் மற்றும் தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஆகியோர் நீர் வெளியேறும் வாய்க்கால் வெட்டிய பகுதி உட்பட அனைத்து கிராமங்களுக்கும் கருணைத்தொகை கொடுத்து விடுங்கள் என்று கூறியும் ஒரு சில கிராமங்களுக்கு கொடுத்துவிட்டு மற்ற கிராமங்களுக்கு கொடுக்காமல் இருப்பதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2. 2013 நில எடுப்பு சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும். ஆனால் நிலம் கையகப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக வேலை வழங்கக்கவில்லை.

1999-2006 வரை நிலம் எடுத்தவர்களுக்கு 25% வேலை வாய்ப்பு, 2007-2013 வரை நிலம் எடுத்தவர்களுக்கு 25% வேலை வாய்ப்பு, 2014 முதல் நிலம் எடுத்தவர்களுக்கு 50% வேலைவாய்ப்பு என்று பிரிக்கின்றார்கள் ஆனால் 90% நிலங்கள் 2013க்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் அவர்களுக்கு 25% என்பது நியாயமல்ல. ஆகவே நிலம் கொடுத்தவர்களுக்கு ஒரே சீனியாரிட்டி கடைபிடித்து வேலை வழங்க வேண்டும்.

3. என்.எல்.சியால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு தமிழக விவசாயத்துறை அமைச்சர் மற்றும் சுரங்க இயக்குனர் இழப்பீடு கொடுத்து விடுங்கள் என்று கூறியதின் பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அவர்கள் இழப்பீடு வழங்க உத்தரவு போட்டும் என்எல்சி நிர்வாகம் வழங்க மறுக்கிறது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த அனைத்து ஆழ்துளை கிணற்றுக்கும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் மின் இணைப்பை அவர்கள் கேட்ட இடத்திற்கு உடனடியாக மாற்றி தர வேண்டும்.

4. நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ல் வாழ்வாதார தொகை உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்று சொன்ன பிறகும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 2017 முதல் வெறும் ரூபாய் 1,09,500/- மட்டுமே வாழ்வாதார தொகையாக கொடுத்து மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆகவே இன்றைய மதிப்பீட்டில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் ரூபாய் 40,00,000/- லட்சததை வாழ்வாதார நிதியாக அனைவருக்கும் வழங்க வேண்டும்.

5. என்எல்சியால் நிலம் கையகப்படுத்தப்பட்ட கிராமங்களில் உள்ள குத்தகை பயிர் செய்தவர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் R&R சட்டம் 30/2013-ல் sec- 3 (1) வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

6. .ஆதனூர், கத்தாழை, மேல் வளையமாதேவி கிராமங்களில் அரசால் கொடுக்கப்பட்ட அனைத்து பட்டாக்களுக்கும் இழப்பீடு மற்றும் மாற்றுமனை உடனடியாக வழங்க வேண்டும் பிள்ளையார் குளத் தெருவில் வீடு கட்டி இருக்கும் அனைவருக்கும் மாற்றுமனை கொடுக்கப்பட வேண்டும்.

7. .ஆதனூரில் ஊராட்சி நிதியால் கட்டப்பட்ட 5 வீடுகளை என்எல்சி நிறுவனம் இடித்து விட்டது. அந்த வீடுகளுக்கான இழப்பீட்டை வழங்கிட வேண்டும்.

8. மும்முடிச் சோழகன் கிராமத்தில் 170 குடும்பங்கள் 2003 மற்றும் 2007 இல் எடுக்கப்பட்டு ஒரு தவணைத் தொகை வெறும் ரூபாய் 2000 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை கொடுக்காத காரணத்தால் தற்பொழுது புதிய சட்டத்தின் படி அனைத்து சலுகைகளும் கிடைக்க வேண்டும்.

9. கீழ் வளையமாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீடு, மனை மற்றும் நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களில் 30 குடும்பங்களுக்கு மாற்றுமனை வழங்கப்படவில்லை, கருணைத்தொகை, வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை. முத்துக்கிருஷ்ணாபுரத்தில் ஏழு குடும்பங்களுக்கு இன்றைக்கு கொடுக்கக்கூடிய வீட்டுமனை, வாழ்வாதாரம், வீடு கட்டும் பணம் கொடுத்துள்ளார்கள் அதேபோல் முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வீட்டு மனை 2022-ல் தான் எடுத்துள்ளார்கள். ஆகவே முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்த அனைத்து மக்களுக்கும் வீடு கட்டுவதற்கான தொகை கொடுக்கப்பட வேண்டும் மனைக்கு இன்றைக்கு கொடுக்கக்கூடிய நஷ்ட ஈட்டு தொகை கொடுக்கப்பட வேண்டும்.

10. என்.எல்.சியால் பாதிக்கப்பட்ட கம்மாபுரம், விருதாசலம் புவனகிரி, குறிஞ்சிபாடி பகுதியில் அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும். இப்பகுதிகளை இணைக்கும் மையத்தில் அரசு கல்லூரி மற்று ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும்.

11. தீர்ப்பு (Award) கொடுப்பதில் பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில் வழிகாட்டு மதிப்பு (Guideline Value) மட்டுமே நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்படுகிறது. வழக்கு முடிந்தவுடன் வட்டியுடன் வைப்பீடு செய்த தொகை மட்டுமே கிடைக்கிறது. இழப்பீட்டுத் தொகையில் வழிகாட்டு மதிப்பு போக பாக்கியுள்ள ஆனால் சந்தை மதிப்பீடு தொகையான அதிக இழப்பீடுத் தொகையை என்எல்சி நிர்வாகமே வைத்துக் கொள்கிறது வழக்கு முடிந்தவுடன் அத்தகைக்கு வட்டி ஏதும் கொடுப்பதில்லை. ஆகவே இழப்பீட்டின் மொத்த தொகையும் நீதிமன்றத்தில் வைப்பீடு செய்யப்பட வேண்டும். இதுவரை என்எல்சி நிர்வாகம் வைத்துள்ள தொகைக்கு தீர்ப்பு (Award) தேதியிலிருந்து வட்டியுடன் கொடுக்கப்பட வேண்டும்.

12. நிலம் தொழிற்துறை நோக்கங்களுக்கான சட்டத்தில் கையகப்படுத்தப்படுகிறது. கனிமவள சட்டத்தில் கையகப்படுத்தப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ராயல்டி கிடைக்க வாய்ப்புள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக தொடந்த போராட்டம் நடந்துக்கொண்டு இருக்கிறது.

சனி, 29 நவம்பர், 2025

SIR குறித்து கேள்வி கேட்போரை எதிர்த்து...

SIR குறித்து கேள்வி கேட்போரை எதிர்த்து சங்கிகள் கதறி அல்லது குதறி வருகின்றனர்.

இந்த தேர்தல் சீர்திருத்தம் அடிப்படை மக்கள் குடியுரிமையை கேள்வி கேட்கிறது என்றுதான் பலமுறை சொல்லி இருக்கிறோம். அதை யாரும் நம்ப தயாரில்லை.   

ஏனெனில் உங்களது 

1.  தேர்தல் ஆணையம் கொடுத்த  வாக்காளர் அடையாள அட்டை 

2. தமிழக அரசு கொடுத்த  ரேஷன் கார்டு அட்டை 

3. மத்திய மாநில அரசுகள் கொடுத்த பான் கார்டு 

4.  தமிழக அரசு கொடுத்த ஓட்டுனர் உரிமை அட்டை 

5. எல்லாவறிற்கும் மாற்று என்று சொன்ன ஆதார்  அடையாள அட்டை    

 இவை எதையும்  நம்பாமல் நவ பாசிச பாஜக புதிய ஆவனங்ககளை கேட்கிறது   

ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக வளர்ந்து வரும் இரண்டு தலைமுறைக்கு குடியுரிமை பறிப்பும் அதற்காக சங்கீ தலைமை செய்யும் தொடர் பிரச்சாரமும் தெரியாது.

மோடியின் ஆலகால விஷக் கூட்டம் ஆயிரம் பொய்களை 20 ஆண்டுகளாக இணையதளத்தில் பதிவேற்றிய வருகின்றன..

இவர்கள் அனைத்தும் பொய்யின்றே தெரியாமல் இரண்டு பத்தாண்டு தலைமுறை அதை நம்பிய வளர்ந்து வருகிறது.. வாட்ஸ் ஆப் தமைமுறை அறிய வேண்டிய உண்மைகள் நிறைய உள்ளது

தொடர்ந்து சொல்கிறேன் ..... 

அவர்களுக்கான ஒரு சிறு உதாரணத்தை கீழே பதிவிட்டு இருக்கிறேன்.   

இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் பதினோரு கோடி ரோஹிங்க்யா முஸ்லிம்களும், எட்டு கோடி வங்காளதேச முஸ்லிம்களும்

தலைப்பு  இதுதான் ..  

இந்தியாவில் அகதிகள் குறித்த தவறான தகவல்களும் சமூக ஊடகங்களின் வதந்திகளில் முக்கியப் பங்காற்றுகின்றன. அகதிகளின் எண்ணிக்கையை ஊதிப்பெரியதாகக் காட்டி மக்களிடையே அச்சத்தை உருவாக்கிவிடுகின்றன அத்தகைய வதந்திகள்.

மியான்மரில் ரோஹிங்க்யா மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியினால் அகதிகளாக வெளியேறுவதை, இந்தியாவை ஆக்கிரமிக்கவே அவர்கள் வருவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வதைப் பார்க்கமுடிகிறது

அதுமட்டுமில்லாமல், 'வங்காளதேச அகதிகள்'' என்கிற வார்த்தைப் பிரயோகமே இந்திய அரசியலில் எப்போதும் ஒரு பிரபலமான விவாதக் கருப்பொருள்தான்.

அதனைப் பயன்படுத்தி, ஒவ்வொருமுறையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அகதிகளின் எண்ணிக்கையை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்த்திக்காட்டுவதை, வெறுப்பரசியலை விதைப்போரும் வதந்திகளைப் பரப்புவோரும் வழக்கமாகவே செய்து வருகின்றனர

பரப்பப்பட்ட செய்தி:

இந்தியாவில் ரோஹிங்க்யா முஸ்லிம்களின் மக்கள்தொகை பதினோரு கோடியாக அதிகரித்துவிட்டது: அதேபோல எட்டு கோடி வங்காளதேச முஸ்லிம்களும் சட்டவிரோதமாக இந்தியாவில் வாழ்கின்றனர்.

உதாரணமாக:

"
டீசல் மற்றும் பெட்ரோலின் விலை 5 ரூபாய் உயர்ந்தாலே பாரத் பந்த் அறிவித்துப் போராடுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஆதரிக்கும் எட்டு கோடி வங்காளதேசத்து முஸ்லிம்களும் ரோஹிங்க்யா முஸ்லிம்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களா என்ன? இரட்டைவேடம் போடும் காங்கிரஸ் கட்சி."

உண்மை என்ன?

அந்த எண்ணிக்கை முற்றிலும் தவறானது. பதினோரு கோடியென்பது, மியான்மர் தேசத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை விடவும் இரண்டு மடங்கு ஆகும்.

இந்தியாவில் வாழும் ரோஹிங்க்யா மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே 40000 தான் என்று மத்திய உள்துறை விவகார இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்தார். அந்த 40000 த்திலும், 16000 பேர் ஐநா சபையால் பதிவு செய்யப்பட்ட சட்டப்பூர்வமான அகதிகள் ஆவர்.

2017 ஆம் ஆண்டு ஐநா சபை வெளியிட்ட சர்வதேச புலம்பெயர்ந்தோர் குறித்த அறிக்கையில், இந்தியாவில் வாழும் வங்காளதேச அகதிகளின் எண்ணிக்கை 31 இலட்சம் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

------------------------------------------------------------------------ 

 மேலும் சங்ககிகளின் பொய்களை அறிய ...

ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் திட்டமிட்டுப் பரப்பப்படுகிற பொய்செய்திகளாலும் கட்டுக்கதைகளாலும் இந்தியாவின் சமூகச்சூழலே ஆட்டங்கண்டிருக்கிறது.

கும்பல்படுகொலைகள், கும்பல் வன்முறைகள், அவதூறுகள், கலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் அவை இட்டுச்சென்றிருக்கின்றன.

இந்தியாவின் ஜனநாயகத்தன்மைக்கும் அச்சுறுத்தலாகவே அவை தொடர்ந்து இருக்கின்றன. “


இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்னும் இந்நூல், ஆல்ட் நியூஸ் என்கிற இணையதளக் குழுவினால் எழுதப்பட்டு, பிரதீக் சின்ஹா, மருத்துவர் சுமையா ஷேக் மற்றும் அர்ஜுன் சித்தார்த் ஆகியோரால் தொகுக்கப்பட்டிருக்கிறது.

தந்திகளைப் பரப்புவோரை அடையாளங்காட்டி, அவற்றை மிகத்தெளிவாகத் திட்டமிட்டே உருவாக்கும் பிரச்சார எந்திரங்களை அம்பலப்படுத்தி, அச்சுறுத்தும் வகையிலான கட்டுக்கதைகளைக் கண்டறிவதற்கான உத்திகளை வாசகர்களுக்கு விளக்கிச்சொல்லும் பணியினையும் இந்நூல் சிறப்பாக செய்கிறது.    


திங்கள், 27 அக்டோபர், 2025

ஒரு பாலஸ்தீன அகதியின் அறிவியல் பயணம்


ஓமர் யாஹி

சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், இஸ்ரேல் நடத்தி வரும் காசா இனப் படுகொலைக்கு எதிராகவும், இனவெறி இஸ்ரேல் அரசுடனான இந்திய அரசின் அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்யவும் வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில்  அக்டோபர் 8 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை கொடைக்கானலிலிருந்து நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தேன்.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்கு தலைக் கண்டித்தும், அங்கு உடனடி யாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்; அதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும்  தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது என அலைபேசிக்கு ஒரு செய்தி வரும் ஓசை கேட்டது.

நானோமெக்கானிக்ஸ், நானோமெனுபாக்சரிங், ஒப்டோ எலக்ட்ரானிக்ஸ், எரிசக்தி சேமிப்பு, எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் இந்திய இளம் ஆராய்ச்சியாளர், ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மண்டி (IIT Mandi) இயற்பியல் பேராசிரியர், முனைவர் விஸ்வநாதன் பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து ஒரு செய்தி குறிப்பு வந்திருந்தது.

இருட்டில் பிறந்த ஒளி

அந்த குறிப்பில் 2025-ஆம் ஆண்டு இரசாயனவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற ஓமர் யாஹி குறித்து அவரது மகிழ்ச்சி இருந்தது. அதில் முக்கியமாக கீழ்க்காணும் வரிகள் இருந்தது.

"ஓமர் யாஹி என்ற பெயர் இன்று உலகம் முழுவதும் அறிவியல் உலகில் ஒலிக்கிறது. ஆனால், இந்த வெற்றி ஒரு தங்கக் கோப்பையில் வந்தது அல்ல. அது தண்ணீர் இல்லாத சிறிய அறையில் பிறந்த ஒரு சிறுவனின் கனவில் இருந்து தொடங்கியது.”

“1965-ஆம் ஆண்டு, ஜோர்டானின் அம்மானில் ஓமரின் பெற்றோர் பாலஸ்தீன அகதிகள். பத்து பேர் கொண்ட குடும்பம் ஒரு சிறிய அறையில் வாழ்ந்தது. தண்ணீர் அரிது, மின்சாரம் அடிக்கடி போய்விடும். ஆனால் அந்த இருட்டில் கூட ஒரு ஒளி இருந்தது - கல்விக்கான ஆசை. அவரின் தாய் எழுத்தறிவு இல்லாதவராக இருந்தாலும், "புத்தகங்கள் உன்னை ஒருபோதும் வஞ்சிக்காது" என்று சொல்லி அவரை ஊக்குவித்தார்.”

பாலஸ்தீனத்தின் மீது அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திவரும் கொடூர தக்குதல் அங்கி கொத்து கொத்தாக இறந்து மடியும் குழந்தைகளில் எத்தனை அறிஞர்களை உலகம் இழக்கிறதோ. ஓமர் யாஹி கண்டுபிடிப்பு குறித்து படிக்க, படிக்க வியப்பின் எல்லைக்குச் செல்வீர்கள் நீங்கள்?

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் சென்னையில் போராட்டம் நடந்துகொண்டிருந்த போதுதான் ஓமர் யாஹி அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. என்ன ஒரு ஆச்சரியமான ஒற்றுமை!

2025 ஆம் ஆண்டிற்கான ‘வேதியியல் நோபல் பரிசு’ ஜப்பானைச் சேர்ந்த கியோட்டோ பல்கலைக்கழக பேராசிரியர் சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெல்பேர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ஓமர் எம்.யாகி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. "உலோக - கரிம கட்டமைப்புகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கான" பரிசு இது.

பாலைவன காற்றிலும் தண்ணீர்?

சுட்டெரிக்கும் சூரியன் வாட்டியெடுக்கும் வறண்டப் பாலைவன காற்றிலிருந்து தண்ணீர் எடுக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? சிரித்துவிட்டு கடந்து செல்வீர்கள். ஆனால் அறிவியல் அதை மெய்ப்பித்துள்ளது. ஆம் ஓமர் யாஹியின் கண்டு பிடிப்பு அதுதான். கலிபோர்னியா பல்கலைக் கழக பேராசிரியராக பணியாற்றி வரும் ஓமர் யாகியின் மிகச் சிறந்த மற்றும் நோபல் பரிசை பெற்ற கண்டுபிடிப்பு Metal-Organic Frameworks (MOFs) ஆகும். அதாவது உலோக – கரிம கட்டமைப்புகள் ஆகும். உலகின் எதிர்கால தேவைகளைத் தீர்க்கும் வகையில் உருவான இவரது கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பல துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 

.MOFs என்னவென்றால்? 

உலோக அணுக்கள் (metal ions) மற்றும் கரிம மூலக்கூறுகள் (organic linkers) இணைந்து உருவாகும் முப்பரிமாண (3D) கட்டமைப்புகள். இதில் இடைவெளிகள் (pores) மிக அதிகமாக உள்ளன, அதாவது “துளைகள் நிறைந்த கட்டமைப்புகள்”. ஒரு கிராம் MOF என்பது, ஒரு கால்பந்து மைதானத்தைவிட அதிக பரப்பளவைக் கொண்டிருக்கும் அளவுக்குத் துளைகள் கொண்டிருக்க முடியும்! உதாரணமாக ஒரு தேன்கூட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் ஒரு தேன் கூட்டை நூலாக மாற்றினால் அது ஒரு கால் பந்து மைதானத்தின் எல்லை கோடாக மாறும் அவ்வுளவு அடர்த்தி அது. 

MOFs எப்படி பயனளிக்கின்றன? 

புவியின் வெப்பமயமாதல் காரணமான CO₂ வாயுவை கைப்பற்றி, பாதுகாப்பான முறையில் சேமிக்க உதவுகிறது. பனிக்கட்டிகளோ, மின் சக்தியோ இல்லாமல், வளையில்லா பகுதிகளில் காற்றிலிருந்து குடிநீரை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு வாய்ப்பு. சுத்தமான எரிசக்தியாக ஹைட்ரஜனை சேமிக்க மிகச் சிறந்த வழி. நோய்வாய்ப்பட்ட உறுப்புகளில் மருந்துகளை நேரடியாகச் செலுத்த உதவுகிறது. கழிவுகளை சுத்தப்படுத்துதல், பசுமை தொழில்நுட்பங்களை உருவாக்குதல் போன்ற பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.இது வெறும் ஒரு அறிவியல் வெற்றியாக அல்ல, உலகத்தின் எதிர்கால சக்தி, சுற்றுச்சூழல் மற்றும் மருத்துவத் துறையில் ஒரு புதிய வழியைத் திறந்த சாதனையாகும். 

ஹைர்டஜன் புகும் போது :

 ஹைட்ரஜன் மிக மெதுவாகச் சூழலில் பறக்கும் மிகச் சிறிய அணுக்கள் கொண்ட வாயு. இதை சுருக்கி பாதுகாப்பாகச் சேமிப்பது மிகக் கடினம். உயர் அழுத்தத் தொட்டிகளில் (high-pressure tanks) வைத்தால், அதிர்ச்சி, வெடிப்பு அபாயம் ஏற்படும். ஆகவே, அதனை பாதுகாப்பாக, திறனாக சேமிக்க புதிய வழிகள் தேவைப்படுகின்றன. அந்த புதிய வழியைத் திறந்தவர் ஓமர் யாஹி.

 ஹைட்ரஜன் அணுக்கள் MOF கட்டமைப்பின் உள்ளே புகும். அந்த இடைவெளிகள் (pores) ஹைட்ரஜனை ஊக்கமுடன் தக்க வைத்துக்கொள்கின்றன. தேவைப்படும் நேரத்தில், அந்த ஹைட்ரஜன் வெளியேற்றப்படும். உதாரணமாக, ஒரு ஹைட்ரஜன் இஞ்சின் அல்லது fuel cell க்கு செல்லும். இதனால் குறைந்த வெப்பநிலையில் கூட அதிக அளவு ஹைட்ரஜனை சேமிக்க முடிகிறது. அழுத்தம் இல்லாமலே சேமிக்க முடிகிறது. இது மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த அற்புத கண்டுபிடிப்பைத்தான் ஓமர் யாஹி செய்துள்ளார் 

ஓமர் யாஹியின் சொற்கள்: 

"நாம் உருவாக்கும் ஒவ்வொரு பொருளும் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்க வேண்டும்." இதுதான் இந்த கண்டுபிடிப்புக்கு பின்னால் அவர் சொன்ன சொற்கள். ஓமர் யாகி போன்றவர்கள் தான் அறிவியல் உலகின் உண்மையான கதாநாயகர்கள். இவர் உருவாக்கிய MOFs போன்ற தொழில்நுட்பங்கள், உலகின் சக்தி சிக்கல்கள், நீர் தட்டுப்பாடு, வாயுக் களைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதிய வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. இளைய தலைமுறையின் அறிவியலாளர்களுக்கு இவர் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். அறிவியலை ஆர்வத்துடன் கற்கவும், உலக நன்மைக்காக பயன்படுத்தவும் அவரின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறது.

 ஒன்றை மறந்த்விடாதீர்கள்! இந்த பாலஸ்தீனியனின் கண்டுபிடிப்பை இனவெறி இஸ்ரேல் கண்டிப்பாக பயன்படுத்தும். தங்களால் அகதியாக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்த ஒருவன் கண்டுபிடிப்பு இதுவென அலட்சியம் செய்யாது.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

----------------------------------------------------

எஸ் .ஜி .ரமேஷ்பாபு 

____________________________________

பின் குறிப்பு : நான் அறிவியல் முற்றிலும் புரிந்த விற்பன்னன் இல்லை.  எனக்கு புரிந்ததை எழுதி உள்ளேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் . நன்றி!