செவ்வாய், 1 அக்டோபர், 2024
மீண்டும் வலைப்பூ பக்கம்..
அன்புள்ள நண்பர்களே! தோழர்களே! வணக்கம்.
2007 ஆம் ஆண்டு நான் எனது வலைப்பூ பக்கத்தை துவங்கினேன். 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதில் எழுதி வந்தேன். ஆனால் அதன் பிறகு பல்வேறு பணிச்சுமை காரணமாக வலைப்பூவை தொடர்ந்து கண்காணித்து எழுத இயலவில்லை.
அதுமட்டுமல்ல காலப்போக்கில் அந்த வலைப்பூ சரியாக இயங்கவும் இல்லை. அதை சரிசெய்யவும் முடியவில்லை. இதற்கிடையில் நான் எழுதிய பல்வேறு கட்டுரைகளை வலைப்பூவில் பதிய முடியாமல் போனது. அதுமட்டுமல்ல இது நமது எழுத்துக்களை சேகரிக்கும் வங்கியாகவும் இருப்பதால் பல ஆண்டுகளாக நமது எழுத்தின் தன்மை மாறுவதையும் நம்மால் அவதானிக்க முடியும்.
தற்சமயம் பாண்டிச்சேரியை சேர்ந்த நண்பர் ரமேஷ் முருகேசன் என் வலைப்பூவை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து உதவி செய்துள்ளார். 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என் வலைப்பூவில் உள்ளது. இடைபட்ட ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளையும் இனி இணைக்க உள்ளேன்.
என்னதான் டிஜிட்டல் யுகம் எனினும் எழுத்துக்களை வாசிப்பது ஒரு சுகம்தான்.
தொடர்ந்து வலைப்பூவில் சந்திக்கலாம்.
தோழமையுடன்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை–கிள்ளை கடற்பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எச்ஓஇசி (Hindustan Oil Exploration Com...
-
உயிரற்றுக் கிடந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கன்னத்தைத் தடவிக்கொண்டிருந்தார் அந்தத் தாய் . குழந்தையின் உதட்டையும் தனது கன்னத்தையும் மா...
-
நடந்து முடிந்துள்ள தமிழகச் சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தடம் பதித்துள்ளது . 1967 முதல் தமிழகத்தை ஆண்டு வந்த திர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக