புதன், 30 டிசம்பர், 2009
வன்னி முகாம் ஓரத்தில ... சாவு பிச்ச கேட்குறோமே ....
வன்னி முகாம் ஓரத்தில
முள்ளுக் கம்பி கக்கத்துல
ஏங்கி நிக்கும் பிஞ்சு முகம்
உங்க மனசாட்சிய கொல்லலையா?
ரெண்டு பக்கம் துப்பாக்கி
நடுத் தெருவுல நிப்பாட்டி
வெந்த சோறு திங்கச் சொன்னா
நெஞ்சுக் கூடு தாங்கிடுமா?
முள்ளுக் கம்பி நடுவினிலே
கொஞ்சம் நாள் வாழ்ந்திடுங்க
அவங்க வெச்ச கன்னி வெடி
சாகாம நிக்குதுன்னு சொன்னிகளே
கன்னி வெடி வாழுமிடம்
நஞ்சு குஞ்சும் அறிஞ்சிடுமே
இருபத் தஞ்சு வருச கால
வாழ்க்கை யெல்லாம் இங்கேதான்!
துள்ளி வரும் ஆட்டுக்குட்டி
ஊஞ்சல் கட்டி ஆடுமிடம்
ஊருணிக்கர மீன் குஞ்சு எல்லமே
நாங்க இல்லாம தேடிடுமே!
வயது வந்த செல்லமக
அவசரமா ஒதுங்கி நிக்க
இருட்டும் வரை காத்திருந்தா - அவ
அடி வயிறு தாங்கிடுமா?
மாற்றம் வரும் என்று
வட்ட முரசறைந்து சொன்னிங்களே
மாற்றம் ஏதும் இங்க இல்ல
மக்க மனசொடஞ்சு போனோமே?
நேற்று தடுத்தாண்டு கொண்டிகளே
கையில் தட்டேந்த வச்சிகளே
தம்பி தங்கை தொலைத்த நாங்கள்
சொந்த வீடு போவதெப்போ?
அழிஞ்ச சனம் மீதம்போக
மிஞ்சி வாழும் எங்கசனம்
சொந்த மண்ணில் உயிர் போக
சாவு பிச்ச கேட்குறோமே?!!
- எஸ்.ஜி.ரமேஷ்பாபு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
நேற்று நடந்த போராட்டம் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள கொடுக்கன் பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி ...
-
ஆர்ப்பாட்டத்தை மறியலாக மாற்றிய காவல்துறை ஒரு தொழிற்சாலையில் சங்கம் வைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் நிகழ்வுக்கு எதிராக ...
-
நீதி மன்றம் எழுப்பிய கேள்விகள் * நகை காணாமல் போன வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது ஏன்? * சிறப்புப் படை எந்த அடிப்படை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக