மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!



யாரு என்ன சொன்னாலும் உண்ணா விரதம் இருந்தே தீருவேன்னு பாபா ராம்தேவ் தலைகீழ நிக்குறாராமே?
அவரு எவ்வளவு பெரிய (அப்பாடக்கர்) யோகி தலைகீழ நிக்குறதெல்லாம் அவருக்கு பெரிய விஷயமா என்ன?
--------------
ஜெயலலிதா அண்ணா ஹசாரேவை ஆதரிக்கறாங்கன்னு எப்படி ஆணித்தரமா சொல்ற?

ஆமா எல்லா பேச்சு முடிவுலயும் அண்ணா நாமம் வாழ்கன்னு சொல்றாங்களே?
--------------------
வர வர எதுக்கு பெட்டு கட்டுறதுன்னே ஒரு விவஸ்தை இல்லாம போச்சு
ஏன்?

யோகி ராம்தேவ் உண்ணாவிரதம் அண்ணா ஹசாரே உண்ணா விரதத்தை விட டி.ஆர்.பி ரேட்டிங்க் ஜாஸ்தி போகுமான்னு பெட்டு கட்டுறாங்க !
-------------------------------
ஆனாலும் மன்னருக்கு குசும்பு ஜாஸ்தி ஆட்சியில ஊழல் மலிஞ்சுசுடிச்சின்னு உண்ணா விரதம் இருக்குற அந்த யோகி கிட்ட போய் வெறும் வயத்துல யோகா பண்ணலாமா பண்ணக்கூடாதான்னு டவுட்டு  கேக்குறாரு!
--------------------------------
அவரு வித்தியாசமான சமுதாய நோக்கமுள்ள டாக்டரு!
எப்படி சொல்ற?

யாராவது பேஷண்ட் டயட்டுல இருக்கணும்னா நீங்க ஏன் ஊழலை எதிர்த்து ஒரு உண்ணா விரதம் இருக்கக் கூடாதுன்னு அட்வைஸ்  பண்ணுவாரு!
----------------------------------------
ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு கீழ பிரதம மந்திரியை சேக்கலாமா வேணாமான்னு பாபா ராம் தேவ் சர்ர்சை கிளப்பி இருக்குறாரா அதப்பத்தி மன்மோகன் என்ன சொல்றாரு?

ஆட்சி ஆட்டத்துலயே தன்ன ராகுலும் சோனியாவும் சேத்துக்க மாட்டேங்குறாங்க இதுல சேர்த்தா என்ன சேர்க்கலன்னா என்னன்னு சொல்றாரோ!
------------------------------------------
இப்படி எல்லாம் நகைச்சுவை காட்சிகளை அரங்கேற்றும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் எதற்க்காக?
அவரின் கோரிக்கைகள் தான் என்ன?

1. கடுமையான லோக்பால் மசோதா  அதில் ஊழல் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை தர அதிகாரம்.

2. வெளிநாட்டில் இருக்கும் அனைத்து கறுப்பு பணமும் உடனே இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

3. சட்டத்துக்கு புறம்பாக இந்தியர்கள் வெளிநாட்டில் வைத்துள்ள சொத்துக்களை நாடுடமையாக்க வேண்டும்.

4. ஆயிரம் ரூபாய் மற்றும் ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

5. ஐ நா சபை ஊழலுக்கு எதிராக தயாரித்திருக்கும் மசோதாவில் இந்தியாகையெழுத்திட வேண்டும்.

6. ஸ்விட்சர்லேண்ட் போன்ற டேக்ஸ் ஹேவன் உள்ள நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் இந்தியாவில் இயங்க தடை செய்ய வேண்டும்.

7. ப்ரிட்டிஷ் வகையிலான கல்விமுறை, அரசுமுறை, வரி, சட்டம் ஆகியவற்றை இந்திய ஸ்வட்ஹேஷி கல்வி, சட்டம், அரசுமுறை, வரியால் மாற்ற வேண்டும்.

8. பிரதமர் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

9. எல்லா குடிமக்களும் தங்கள் ஆண்டு வருமானத்தை வெளியிட வேண்டும்.

10. வருமான வரி விவரத்தை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

11. விவசாய உற்பத்திக்கு அரசு தரும் குறைந்த பட்ச விலையை ஏற்ற வேண்டும்.

12. பல வகையான தொழில்கள் செய்யும் தொழிலாளிகளின் சம்பளங்கள் சரிசமமாக்கப்பட வேண்டும்.

13. ஹிந்தி ஆங்கிலத்தை விட முன்னுரிமை கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

14. உழவர்களின் நிலங்களை அரசாங்கம் தொழிற்சாலை தொடங்க, சட்டம் போட்டு எடுத்துக் கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும் 

இந்த கோரிக்கைகளை நன்றாக கவனியுங்கள்... இவைகளில் பல இன்றைய அரசின் சட்டங்களால் நடக்காது என தெரிந்தே வைத்த கோரிக்கைகள். இந்த  கோரிக்கைகளில் பலவற்றை பாபா ராம்தேவ்தான் வைத்தாரா அல்லது பல கோரிக்கைகளை முதலாளித்துவ ஊடகங்கள் சேர்த்துக்கொண்டனவா யாருக்கும் தெரியாது?

அதைவிட கொடுமை இந்த "அப்பாடக்கர்" போலி சாமியார் பாபா ராம்தேவ் இத்துனை நாள் எங்கிருந்தார்? யாருக்கும் தெரியாது. மாட்டு எலும்புகளை பயன்படுத்தி இவர் தயாரித்த லேகியம் சில ஆண்டுகளுக்கு முன்பு அம்பலப்பட்டது. அப்போது சாமியார் என்ற போர்வையில் இந்து மதவெறியை கிளப்பி தப்பித்ததை இப்போது நினைவு கூறுவது பலருக்கு பிடிக்காது. 

இந்த சாமியார் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தால் அவருடன் நரேந்திர மோடியின் ஆத்ம நண்பர் அண்ணா ஹசாரேவும் இணைவது தவிர்க்க முடியாதது உண்மைதான். இந்த இணைப்பு ஏன்? விமாண நிலையத்தில் இந்திய நாட்டின் மத்திய மந்திரிகள் பதறிபோய் பேசுவது ஏன்? 

"வெளிநாட்டில் இருக்கும் அனைத்து கறுப்பு பணமும் உடனே இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும், விவசாய உற்பத்திக்கு அரசு தரும் குறைந்த பட்ச விலையை ஏற்ற வேண்டும், தொழிலாளிகளின் சம்பளங்கள் சரிசமமாக்கப்பட வேண்டும். உழவர்களின் நிலங்களை அரசாங்கம் தொழிற்சாலை தொடங்க, சட்டம் போட்டு எடுத்துக் கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அமுலாக்க கோரி இடதுசாரிகள் பல்லாண்டு காலம் போராடிய போதும், கடந்த 10 ஆண்டுகளில் வாழ்வியல் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் விவசாயிகளை கவனிக்காத மந்திரிகள், பிரதமர், மற்றும் ஊடகங்கள் இந்த சாமியாரின் உண்ணாவிரத்திற்கு உலக அளவு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?   

இவர்களுக்குத் தேவை உண்மையான மாற்று அல்ல, மாற்றை முன்வைக்கும் மக்கள் இயக்கங்களை  ஒழிக்கும் ஒரு மாய தோற்றம்தான். நேற்று அண்ணா ஹசாரே.. இன்று பாபா ராம்தேவ்.. நாளை சுவாமி நிதியானந்தா வரலாம்? 

கொஞ்சம் யோசிக்கலாம்! உண்மையன மாற்றை தேடலாம்.
------------------------------------------------------------------------------------------------------
(இந்த பதிவு மூன்றாம் கோணம் வலைப்பூவின் உதவியுடன் எழுதப்பட்டது)

2 comments

  1. Anonymous Says:
  2. All for our country only....who will take care of this... Anna and baba all doing for us only.....

     
  3. Anas Says:
  4. தோழ‌ர், மாவோஸ்ட்டுக‌ளும் ஆத‌ர‌வு தராங்க‌லாமே..அப்பாடக்கரும் டுபாக்கூரும் ஒன்ன‌ சேர போராங்க‌போல‌..... என்ன‌ கொடும‌

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark