மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வை வழி நடத்துகிறது என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நிலை இருந்தால், பா.ஜ.க. சுயமாக எந்த தீர்மானமும் செய்ய முடியாமல் திணறும். நிலைமை அப்படி இல்லை. பா.ஜ.க., வீட்டுப் பெரியவர் ஆர். எஸ்.எஸ். அவருடைய மனம் கோணாமல் நடந்து கொள்ள பா.ஜ.க., முயற்சிக்கும். சில சமயங்களில் உரசல் வருவதால் உறவு விட்டுப் போகாது.
இது சோ ராமசாமி கூறியது. ஆதாவது பிஜேபி ஆட்சிக்கு வருவதற்கு 15 மாதங்களுக்கு முன்னர்.
கேள்வி: பா.ஜ.க.வை ஆர்.எஸ்.எஸ். தான் வழி நடத்துகிறது. என்பது உண்மையா?
பதில்: மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பின்னணியில் இருந்து இயக்குவதாக கூறப்படுவது தவறு.. அந்த குற்றச்சாட்டில் உண்மை எதுவும் இல்லை. நானும் பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். அதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. டெல்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றது பதவி ஏற்பின் போது எடுத்துக் கொண்ட ரகசியகாப்பு பிரமாணத்தை மீறிய செயலில்லை.
இது உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கூறியது. அதாவது அவர்கள் ஆட்சிக்கு வந்த 15 மாதங்களுக்கு பின்னர். “இருக்கு ஆனா இல்ல” என்ற பாணியிலான இந்த பேட்டியிகளின் பின்னணி என்ன?
டவுசர் பாண்டிகள் மாநாட்டில். . .
                கடந்த 15 மாதங்களாக ஆட்சியில் இருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ.க, அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூன்று நாள் கூட்டம் கடந்த செப்டம்பர் 2,3,4 ஆகிய தேதிகள் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில், முன்னாள் ராணுவத்தினரின், ‘ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்’ கோரிக்கை; மறைமுகமாக இடஒத்துக்கீட்டை ஒழிக்கும் வகையில் நடந்த படேல் சாதியினரின் ஓ.பி.சி., ஒதுக்கீடு கோரிக்கை; எதிர்க்கட்சிகளின் குரலால், மக்களின் போராட்டங்களால் முடக்கப்பட்ட நில மசோதா, தொழிலாளர்களை முடமாக்கும் தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கைகள், காவிமயமாக்க முயற்ச்சிக்கும் கல்வித் துறை சீர்திருத்தங்கள் போன்றவை குறித்து விவாதிக இருப்பதாக செய்திகள் திட்டமிடப்பட்டு கசியவிடப்பட்டது. இருப்பினும் உள்நாட்டுப் பாதுகாப்பு, காஷ்மீர் பிரச்சனை ஆகியவைகள் குறித்து இக்கூட்டத்தில் அவர்கள் விவாதிப்பதை திட்டமிட்டு மறைத்தனர்.
                ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களான “டவுசர் பாண்டிகள்” 95 பேர் கலந்துக்கொண்ட, இந்த ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் “அடால்ப்” மோடியும், “என்கவுண்டர்” அமித்ஷாவும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனர். மேலும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிகர், போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சர் ஆனந்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களில் தேர்ந்தெடுத்த சிலரும் கலந்துக்கொண்டனர்.
                இடதுசாரி கட்சிகள் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த அபாயகரமான போக்கை மிகுந்த கவலையுடன் சுட்டிக்காட்டியது. மாயாவதி “ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை மோடி அன்மையில் சந்தித்துப் பேசியிருப்பதன் மூலம், மத்திய அரசை இயக்குவது அந்த வகுப்புவாத – பாசிச அமைப்புதான் என்பது தெளிவாகிறது. மத்திய அமைச்சர்கள் பலர் தங்களது செயல்பாடுகள் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமானது சட்டத்துக்கும், மக்களின் உணர்வுகளுக்கும்தான் அடிபனிய வேண்டுமே தவிர, வகுப்புவாத சிந்தனையுடைய ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு அடிபனியக் கூடாது.” என விமர்சனம் செய்தார்.
கோரிக்கையோடு சென்று…
                இவைகளைதான்டி இந்த கூட்டத்தில் எழும் கேள்விகள் பல உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் அமைச்சர்கள் மதவாத அமைப்பின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தங்கள் துறையின் நடவடிக்கைகளை விவரிப்பதும், அந்த அமைப்பின் ஆலோசனைகளை கேட்பதும் மிகவும் ஆபத்தானது. இது ஏதோ கற்பனையின் விளைவாகவோ அல்லது பாஜக மீதான எரிச்சலாலோ சொல்லப்படும் குற்றச்சாட்டு அல்ல. ஒரு உதாரணம் போதும் இதை தெரிந்துக்கொள்ள.
                சிந்து சமவெளி நாகரிகம் சரசுவதி நாகரிகம் என்று இல்லாத நதியின் பேரால் நாகரீகத்தை உருவாக்குவதும், உலக புகழ்பெற்ற தாஜ்மகால் இராஜபுத்திர அரண்மனை என்று கட்டுக் கதைகளாகப்புகுத்துவதும், மொகலாயர் ஆட்சி எல்லாம் இந்துக்களுக்கு எதிரானது என்றும் கதையளக்கும் வரலாற்றாசிரியர்களை நிறைய தயாரித்து வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம். இதில் கைதேர்ந்த கிருஷ்ணா கோபால், சோனி, தத்தாத்ரேய ஆகிய மூவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய அரசின் கல்வி அமைச்சர் சுமதி இராணியை சந்தித்து மூன்று கோரிக்கைகள் வைத்துள்ளனர்.
                தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்விக்கட்டணங்கள் உயர்வாக இருக்கிறது. பள்ளிகளிலும் ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடத்தைச் சேர்க்க வேண்டும். வரலாற்றுப் பாடத்தில் பல தவறுகள் சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்பதாகும் அந்த கோரிக்கைகள். உலகம் அறிந்த இந்தியாவின் புகழ்பெற்ற இர்பான்ஃ ஹபீப், தொமிலாதாப்பர், கே.எம்.பணிக்கர் போன்ற கல்வியாளர்கள் இல்லை மேற்கண்ட மூவரும். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் விஷ சிந்தனையாளர்கள். இவர்கள் வைத்த கோரிக்கைகளில் மிக ஆபத்தானது பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்கும் பாடத்தை சேர்க்கவேண்டும் என்பதாகும். இதன் பொருள் ஏ :பார் அர்ஜூன், பி பார் பிரம்மா, சி பார் கவ், டி பார் துருவா, ஜி பார் கணேஷ் எனத் துவங்கி இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகள் முக்கிய பாடங்களாகும். சமஸ்கிருதம் வேதமொழி, வேதமே இந்நாட்டின் அடிப்படை எனவே சமஸ்கிருதம் படி என்பார்கள். இவர்களது ஆலொசனைகளை பரிசிலிப்பதாக சொன்ன மத்திய அமைச்சர் கடந்த கூட்டத்தில் இதைதான் விவாதித்திருப்பார் என்பதை தனியே சொல்லத்தேவையில்லை.
இப்போது மட்டுமல்ல…
அதே போல பிஜேபி ஆட்சியின் பரம இரகசியம்கூட ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தெரியாமல் நடக்க இயலாது என்பதற்கு உலகறிந்த உதாரணம் எற்கனவே உள்ளது.1999 மே 11,13 ஆகிய இரு நாள்களில் வாஜ்பாய் தலைமையிலான அப்போதை பா.ஜ.க. கூட்டணி அரசு இராஜஸ் தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில் அணு குண்டுகளை வெடித்துச் சோதனை செய்தது. மத்திய அரசாங்கத்தின் மிக முக்கியமான இரகசியம் இது. குடியரசுத் தலைவருக்குக்கூட முதல் நாள் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதே நாளில் ஆர்.எஸ்.எஸின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசர் “அணு ஆயுத இந்தியா” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு இதழ் வெளியிட்டது. அணுகுண்டு வெடிப்புத் தகவல் முன் கூட்டியே ஆர்.எஸ்.எஸங்க்குத் தெரிந்திருந்தாலொழிய இந்தச் சிறப்பிதழைக் கொண்டு வந்திருக்க முடியாது எனது குழந்தைகள்கூட சொல்லிவிடமுடியும்.
இதுதான் அவர்களின் பாசிச செயலபாடு. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தெரியாமல் ஒரு அணுவைக்கூட அவர்களால் அசைக்க முடியாது. ஏனெனில் ஆட்சியாளர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களாக இருக்கும் போது “அவர்களுக்கு தெரியாது” என்பது பைத்தியகார மனிதனின் சித்தம் கலங்கிய வார்த்தையாகதான் இருக்க முடியும். ஆக இந்து அடிப்படிவாத அமைப்புகுத்தான் விபரம் புரியாமல் மக்கள் வாக்களித்து அமரவைத்துள்ளனர். அதற்கன அறுவடையை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவிக்க துவங்கியுள்ளனனர். விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்க்கு ஆதவாக நின்ற அமைப்பான ஆர்.எஸ் எஸ், சிறையிலிருந்து தாப்பிக்க மண்ணிப்பு கடிதம் எழுதிக்கொடுத்த வாஜ்பாயை முன்பு பிரதமராக முன்நிறுத்தியது. அப்போது அதற்கு வாய்பாய் போல ஒரு சாந்தமான முகம் தேவைப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அடுக்கடுகாக தவறுகளால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றது. காங்கிரஸ் மீது இருந்த கோபத்தை தனது மூலதனமாக பயன்படுத்தியது. எதையும் செய்யமுடியும் என்பதுபோல ஆக்ரோஷ்மாக நடிக்கும் மோடியை முன்நிறுத்தியது.
மோடியும் தனது வெளிநாட்டு பயணங்களுக்கிடையில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாராளுமன்றத்திற்கு வந்து இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக நில கையகபடுத்தும் சட்டம், தொழிலாளர் உரிமைகளை மொத்தமாய் சீரழிக்கும் தொழிலாளர் சீரமைப்பு நடவடிக்கைகள், பொத்துறையை விற்பத்தற்கும் தரகு வேலைகளை, நாளைய பொது சமூகத்தில் ஆழமான பிளவை உருவாக்கும் கல்வித் துறையை காவிமயமாக்க சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அழுத்தமாக செய்து வருகிறார். ஆனால் இந்த வேகம் போதது என ஆர்.எஸ்.எஸ் நினைக்கிறது. அதனால்தான் அதன் மூன்றுநாள் கூட்டத்திற்கு பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை அழைத்து வேப்பில்லை அடித்து அனுப்பி உள்ளது. இந்தியாவின் வரலற்றின் அபாய கட்டம் வேகமாக நெருங்குவதை உணர முடிகிறது. எதின்விணையின் வேகம் இன்னும் விசையோடு புறப்படவேண்டியிருக்கிறது.
அக்டோபர் மாத இளைஞர் முழக்கத்தில் வெளியான எனது கட்டுரை

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark