மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!




சென்னை கோட்டைக்கு
செல்லும் பாதை
தருமபுரி துவங்கி
பாச்சாரபாளையம் புகுந்து
மரக்காணம் என
மருத்துவருக்கு யார் சொன்னது?

அவர்கள் சொன்ன பாதை
திருச்சிக்கு சென்றதும்தான்
தெரிந்தது.. சரியில்லா பாதையென..
மீண்டுவர திட்டமில்லாமல்
தொடர்ந்து வார்த்தைகளை
வீசிக்கொண்டிருக்கிறார்...


தொடர்கிறது கலவரங்கள்...
வாகனங்களும்
மனிதர்களும்
கால்நடைகளும்
தாவரங்களும்
தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்.

வீராதி வீரர்கள்
இருளில்
மறைந்திருந்து கற்களை
வீசி எரிகின்றனர்..
இலக்கு தெரியாமல்
அலையும் கற்கள்
எல்லோரையும் தாக்குகின்றன...

லாரி ஓட்டியான
அப்பா வாங்கி வரும்
மிட்டாய்க்காக காத்திருக்கும்
அந்த குழந்தைக்கு தெரியாது
அவர்கள் விட்ட கற்களில் ஒன்று
தந்தையின் உயிர் குடித்த கதை!

விழுந்ததை சரிசெய்ய
மீண்டும் கீழே விழும்
அறிவு படைத்தவர்கள் நாட்டில்
இன்னும் நிறைய
குழந்தைகளுக்கு இது
நிகழலாம். ............
மனிதர்கள் ஜாக்கிரதை



0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark