மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


தமிழகம் மற்றும் புதுவையில் 12 .01 .12  அன்று வழக்கறிஞர்கள் வேலை நிறுத்ததம் செய்தனர். அதுவும் மார்க்சிஸ்ட் கட்சியை கண்டித்து என்றதும் பலருக்கும் ஆச்சரியம்தான்.    வழக்கறிஞர்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு அரசியல் இயக்கத்தை எதிர்த்து எதற்கு இந்த போராட்டம். அப்படி என்ன அந்த கட்சி தவறு செய்தது ? 

அந்த இயக்கம் செய்த தவறு இதுதான் ...

தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம் என்ற கிராமத்தில் அம்மக்களிடம் நீண்ட காலமாக 915 ஏக்கர் நிலம் அங்குள்ள 213 விவசாய குடும்பங்கள் பயன்பாட்டிலும் அனுபவத்திலும் இருந்து வந்தது.

சாதரண உழைப்பாளி மக்களின், விவசாயிகளின் நிலத்தை திருநெல்வேலியைச் சார்ந்த மேடைத் தளவாய் திருமலையப்பன் என்பவர் தூத்துக்குடி வழக்கறிஞர் பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) அவர்களின் சகோதரர்களான 1. பி.சண்முகவேல், 2.பி.சங்கரன் மற்றும் இவர்களது பினாமிகளான 3.ஜெயக்குமார், 4. சொர்ணம், 5.சின்னமுத்து, 6.ஆறுமுகம், 7.பேச்சிமுத்து ஆகியோருக்கு மேற்கண்ட விவசாயிகளின் நிலத்தில் 542 ஏக்கரை 2008-ல் மோசடியாக கிரயம் செய்து கொடுத்தார்.

இதுமட்டும் அல்லாமல் மிச்சமுள்ள 373 ஏக்கர் நிலம் பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) மூலமாக மற்றவர்களுக்கு மோசடியாக கிரையம் செய்யப்பட்டது. இந்த மோசடிக்கு எதிராக 3-8-2009 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளும் கலந்து கொண்ட முற்றுகைப் போராட்டம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஆர்.டி.ஓ. போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களையும், விவசாயிகளையும் சந்தித்து நிலத்தை மீட்டுக் கொடுப்பதாக கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், மோசடிக் கிரயப்பத்திரத்தை வைத்து பி. செல்வத்தின் (ஃபிராடு நம்பர் 1) சகோதர்களும், மற்றவர்களும் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்து கொண்டார்கள். கிராமத்து மக்கள் ஆட்சேபித்தவுடன் தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி அளிக்கப்பட்ட பட்டாவை ரத்து செய்தார்கள்.

தற்பொழுதும் அந்த 915 ஏக்கர் நிலத்தில் மேற்கண்ட 213 விவசாயிகள்தான் சாகுபடி செய்து வருகிறார்கள். நிலம் விவசாயிகளுக்கு சொந்தமென்றும், நடைபெற்றது மோசடிக் கிரயம் என்றும் அறிவித்த அதிகாரிகள் இது குறித்து மோசடியாக கிரயம் பெற்றவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிரச்சனையை தீர்த்துக் கொள்ளட்டும் என்று அறிவித்து விட்டார்கள்.

கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தெய்வச்செயல்புரம் கிராமத்து மக்களுடைய பயிர் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தங்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு மனு செய்திருந்தார்கள். மேற்கண்ட பி.செல்வத்திடம் (ஃபிராடு நம்பர் 1 னிடம்) மோசடிக்கிரயம் பெற்றவர்கள் சார்பாக பயிருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லையென்று முதலமைச்சர் உள்ளிட்டு வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

ஆனால் அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட நிலங்களைப் பார்வையிட்டு நட்டஈட்டுக்கு உத்தரவிட்டனர். வெள்ளத்தால் பயிருக்கு எந்த பாதிப்புமில்லை என முதல்வருக்கு கடிதமெழுதிய பி. செல்வத்தின் (ஃபிராடு நம்பர் 1) மற்றும் அவரது சகோதரர்கள் இருவர் உள்ளிட்டவர்கள் விவசாயிகளுக்கு சேர வேண்டிய 9 லட்ச ரூபாய் நட்டஈட்டுத் தொகையை 26-2-2011ல் போலி ஆவணங்களைக் காட்டி முறைகேடாக பெற்றுச் சென்று விட்டனர்.
இந்த மோசடியை ஆட்சேபித்து உரியவர்களுக்கு நட்டஈட்டுத்தொகையை பட்டுவாடா செய்ய வேண்டு மென்று அதிகாரிகளைச் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இதன்மீது விசாரணை நடத்திய ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் திருமதி பி.வசந்தா அவர்கள் பட்டா எண் 31-ல் கண்ட புல எண்களில் சாகுபடி செய்துள்ளதாக போலி ஆவணங்களைக் காட்டி மேற்படி வங்கியிலிருந்து நிவாரணத்தொகையை கீழ்க்கண்ட 6 பேர்கள் முறைகேடாகப் பெற்றுச் சென்றுள்ளார்கள். 1. த.பி.சங்கரன் வ(ஃபிராடு நம்பர் 2), 2. பி.சண்முகவேல் (ஃபிராடு நம்பர் 3), 3. சொர்ணம், 4.சின்னமுத்து, 5.ஆறுமுகம், 6.ஜெயக்குமார் மேற்படி 6 நபர்களின் வங்கிக் கணக்கினை முடக்கம் செய்திட வேண்டும் - என உத்தரவிட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சியினால் அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலச் சொந்தக்காரர்களான விவசாயிகளுக்கு நட்டஈட்டை வழங்கினார்கள். போலி ஆவணங்கள் மீது தவறான முறையில் நட்டஈட்டுத் தொகையை பட்டுவாடா செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெய்வச்செயல்புரத்தில் பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) மற்றும் அவர்களது சகோதரர்களும் மற்றும் அவர்களது கூட்டாளிகளும் சேர்ந்து செய்த மிகப்பெரிய நிலமோசடிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2008-ம் ஆண் டிலிருந்து தொடர்ந்து போராடி வருகிறது.

தெய்வச்செயல்புரத்தில் வெள்ளத்தால் பயிர்ச்சேதம் ஏற்படவில்லையென முதல்வருக்கு மனு செய்துவிட்டு, பயிர் பாதிப்பிற்கு அரசு நட்டஈடு வழங்கிய போது போலி ஆவணங்களைக்காட்டி நட்ட ஈட்டுத் தொகையை அபகரிப்பதற்கு துணையாக நின்ற பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) அவர்கள் தெய்வச்செயல்புரத்தின் கிராமத்து விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக தீங்கிழைத்து வருகிறார்.

விவசாயிகளின் மரங்களை வெட்டிச்சென்றது, கல்தூண் வேலியை உடைத்து கம்பிகளை நாசப்படுத்தியது, அடியாட்களுடன் விவசாயிகளை தாக்குவது, கம்பி வேலிகளை திருடிச் சென்றது போன்ற செயல்களுக்காக விவசாயிகள் கொடுத்த மனுவின் பேரில் வழக்கறிஞர் பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) மற்றும் அவரது கூட்டாளிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பி.செல்வத்தின் செயல் ஒரு சமூக விரோத செயல். இவன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டு மென்றுதான் 2012 ஜனவரி 5,6 தேதிகளில் தூத்துக்குடியில் நீதி மன்ற புறக்கணிப்பு நடந்தது.

தெய்வச்செயல்புரம் கிராமத்து விவசாயிகளின் நிலத்தை அபகரித்த, நில மோசடி செய்த பி.செல்வத்தின் (ஃபிராடு நம்பர் 1) மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கக்கோருவதை மறு பரிசீலனை செய்ய வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர்கள் வழக்கறிஞர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள். அப்பொழுது பி.செல்வம் (ஃபிராடு நம்பர் 1) மற்றும் அவரது நண்பர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தாக்கப்பட்டார்கள்.

இதில் காயம்பட்ட கட்சித் தோழர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பி.செல்வமும் (ஃபிராடு நம்பர் 1) அவரது நண்பர்களும் மருத்துவமனைக்குள் சென்று நகரச்செயலாளர் அர்ச்சுணன் உள்ளிட்ட தோழர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மருத்துவ மனைக்குள் சென்று கட்சித் தலைவர்களை தாக்கிய செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அன்று இரவு (6-1-2012) கட்சியின் மாவட்டச்செயலாளர் தோழர். கனகராஜ் வீட்டிற்குள் பெட்ரோல்குண்டு வீசப்பட்டுள்ளது. இதில், வீட்டில் தனியாக இருந்த கனகராஜின் மனைவி விஜயா காயமடைந்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

இவைதான் தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள். கிராமத்து விவசாயிகளே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ வழக்கறிஞர் என்ற அடிப்படையில் பி. செல்வத்தின் (ஃபிராடு நம்பர் 1) மீது புகார் கொடுக்கவில்லை. காவல்துறையும் அந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்யவில்லை. தெய்வச்செயல்புரத்தில் அவர் செய்த நிலமோசடி மற்றும் சமூக விரோதச்செயல்கள் மீதுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் எங்கு வழக்கறிஞர்கள் மீது குற்றச்சாட்டு வந்தது?

ஏமாற்றுபவர் வழக்கறிஞர் என்பதால் அவரை ஆதரிக்கலாமா? 

இதற்க்காக ஏன் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இது சரியானதுதானா ?

வழக்கறிஞர்கள் நேர்மையானவர்கள் எனில் யார் பக்கம் நிற்பார்கள்?

உழைப்பாளி மக்கள் நிலங்களை சுருடிய ஃபிராடுக்கு நீங்களும் ஆதரவா என்ற கேள்வி உண்மையானவர்களில் மனசாட்சியை  சுடாதா?

நிலம் திருடிய திருடனுக்கு நீங்கள் ஆதவாய் நிற்பீர்களா என்ற கேள்வியை ஒதுக்கிவைக்க முடியுமா ?

கேள்விகளை வைத்துவிட்டோம் பதிலை நீங்கள் சொல்லுங்கள் நேசத்திற்குரிய வழக்கறிஞர்களே ...!

(சி.பி,.ஐ.எம் மாநில செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் கடித்ததிலிருந்து எழுதப்பட்டது)

2 comments

  1. Anonymous Says:
  2. i do not find any merit on your views bcoz.. how did you get right to say a person as fraud.... did any court declared so..? u must state your story .. the learners will decide ... what a person mr. selvam is? ok leave it there are so many legal methods to take appropriate action. cheep techniques exhibits your vengeance and immaturity .. then try to ... say the truth as it is...

     
  3. கம்யூனிஸ்ட் கட்சியில் வழக்கறிஞர்கள் நேர்மையானவர்கள் இருப்பார்கள் அல்லவா!
    அவர்களை வைத்து வழக்கு போட்டு விவசாயிகளின் நிலத்தை திரும்ப பெற்று தரலாமே !
    தோழரே !!!

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark