மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


கடந்த பல தினங்களாக அனைத்து ஊடகங்களும் சனிப்பெயர்ச்சியை பற்றி பக்கம் பக்கமாக அடித்து துவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திருநள்ளாருக்கு சிறப்பு பேருந்துகளை அம்மையார் அரசு முடுக்கி விட்டுள்ளது. கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு சனி மாறுவதால் ஏற்படும் நன்மைதீமைகள் பற்றி தொலைக்காட்சிகளில் பல அக்கப்போர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. நமது பங்குக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டாமா? 

சனியின் நன்மை தீமைகள் குறித்து குத்துமதிப்பாக ஜோதிட வள்ளுனர்கள் எழுதியதை கேள்விகேட்டாள் என்னவாகும்? அவர்களுக்கு நம்மீது கொலவெறி உண்டாகுமா இல்லையா? இவிங்க அக்கிரும்பு ஜோதிடத்தை கேள்வி கேட்டது மட்டுமே நாம்.

துலாம் ராசிக்காரர்களே! 

இதுகாறும், குடும்பத்திற்காகவும், தன்னை அண்டியிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகளுக்காகவும், மாமன், சொந்த அத்தை அத்தை, எதிர்த்த வீட்டு ஆண்டி, பக்கத்து வீட்டு பாட்டி. தாத்தா, அம்மம்மா, பெரியம்மா, இவர்களுக்காகவும் ஏதோ ஒரு வகையில் விரயம் செய்து, கடன் காட்சி என்று அவஸ்தையுற்றிருந்தால், இவற்றுக்கு ஒரு விமோசன காலம் பிறந்துவிட்டது. 

*நீங்கள் வெளிநாடு போகப்போறீங்களாண்ணா?

சனி பகவான் ஜென்ம சனியாகச் சஞ்சரிக்கும்போது உங்களுடைய உடம்பைத்தான் அதிகமாக பாதிப்படையச் செய்வார். (அதனால?)

1. உங்கள் உடம்பின் நிறம் மங்கும்

* கருப்பா இருக்கறவா கண்டுகாதீங்கோ. 

2. ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும்

* ஏற்கனவே சீக்காளியா இருந்தா அபீட்டு! 

3. உடம்பில் ஒரு சோம்பேறித்தனம் குடிகொள்வதால் வேலை நடக்காது.

* எப்பவுமே நாம இப்பிடிதானுங்க! 

4. எந்த வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்கமாட்டீர்கள் 

* அப்புறம் வேற வேலை வேண்டாமா?  

5. உங்களை ஒப்பனை செய்துகொள்வதைக்கூட வெறுப்பாக உணர்வீர்கள் 



*என்னா மேக்கப் பன்னாலும் ம்ஹ¨ம் நம்ப மூஞ்சி தேறாது! 

6. ஜென்ம சனி என்பது திரேக பாதிப்புகளை ஏற்படுத்தத் தயங்காது. முறையான வைத்தியம் செய்துகொள்வதின் மூலம், ஆரோக்கியத்தைப் பெற முடியும்

* வைத்தியம் பார்த்தா சரியா பூடும்னு எங்களுக்கு தெரியாதாடா டுபுக்கு? 

7. இக்காலக்கட்டம் அறுவை சிகிச்சைக்கான அவசியத்தைக்கூட  ஏற்படுத்தலாம் ஏற்படுத்தாமலும் போகலாம். 

*கரக்கிட்டா சொல்லிட்டா அப்புறம் என்ன ஜோசியம்? 

8. ஆனாலும் நிவாரணம் கிடைக்கும். சனீஸ்வரருக்குரிய ஆயுஷ் ஹோமம், ஷேத்ராடனம் முதலியவை பெரிய பாதிப்புகள் ஏற்படாவண்ணம் உங்களைக் காப்பாற்றும். சனியால் நோய் வாட்டமும், மனவேதனையும் ஏற்படும், என்றாலும் உரிய பரிகாரங்களை மேற்கொண்டால், நன்மை கிடைக்கலாம்.

*அதுசரி மத்த ராசிகாரவங்களுக்கு இதெல்லாம் நடகாதாடா அப்பாடக்கருங்களா?

9. பொதுவாக சூழ்நிலைகள் உங்களுக்கு அநேகமாக சாதகமாக இருக்காது. *எலேய் இத சொல்றத்துக்கு எதுக்குடா நீங்க

10. பணவரவு சீராக இருக்கும்

*அப்பா... டேய்...  நீ சொன்னதுல இதுதான் கொஞ்சம் உருப்படியானதுடா?

இனி சனி பகவானின் பார்வை பலன்களைப் பற்றி பார்க்கலாம்.

 (மக்களே இனிவருவது பலன்களாம்!  படிங்கோ)

 சனி பகவான் தனது பார்வைகளான அ3,7,10-ம் இடத்து பார்வைகளின் மூலம் உங்களது தைரிய-பராக்கிரம-ஜெய ஸ்தானம், களத்திரஸ்தானம்;  ஜீவன காரியஸ்தானம் ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இதனால் மனைவி/கணவனின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கணவன்-மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை தலை தூக்கும். அடிக்கடி வாக்குவாதங்கள் சண்டை சச்சரவுகள் என்று இருந்துகொண்டே இருக்கும்.  கணவன்- மனைவிக்கிடையே ஒரு மகிழ்ச்சியான சூழலைப் பார்க்க முடியாது.

 *இந்த பலன்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையினால் உங்களுடைய ஜீவன -காரிய ஸ்தானத்தைப் பார்ப்பதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு எளிதில் வேலை கிட்டாது. ஏதாவதொரு காரணத்தால் தள்ளிக்கொண்டே போகும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஏதாவதொரு காரணத்தால், மேலதிகாரிகளிடமிருந்து மெமோ வரும். வேலை நீக்கம் செய்யப்படுதல், விருப்பமில்லாத பணியிட மாற்றம்  தற்காலிக -பணிநீக்கம் முதலியவை ஏற்படும். புதிதாக தொழில் ஏதாவது தொடங்கலாம் என்றாலும் அதற்கான சமய சந்தர்ப்பங்கள் சரியாக அமையாமல், முகாந்திர வேலைகளிலேயே நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். 

ஆக ஒன்னும் உருப்படாது என முடிக்கலாம்? 

அது சரி ஜோசிய சிகாமணிகளே! இந்த பால் விலையேற்றம், பஸ் கட்டண உயர்வு, 15 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ், அண்ணா நூலக இடமாற்றம், பரமகுடி துப்பாக்கிச்சூடு, முல்லைபெரியாறு, கூடங்குளம் போன்ற பாதிப்புகள் எந்த ராசிகாரர்களை பாதிக்காது என சொல்லுவீர்களா? சனியாவது வந்துதான் பிடிக்கும்.. நாம போயி பிடிச்ச சனிக்கு என்ன பரிகாரம்??    

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark