மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


(தினமணியில் வந்த கருத்து படத்திற்கும் இந்த பாடலுக்கும் எவ்வித சம்மதமும் இல்லை.. இல்லை இல்லவே இல்லை என்பதையறிக ..). 

நடிப்பு சுதேசிகள் 

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, 
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! 
வாய்ச் சொல்லில் வீரரடி. 

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, 
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! 
நாளில் மறப்பா ரடீ 

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும் 
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே! 
அகலிகளுக் கின்ப முண்டோ ? 

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார், 
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே! 
மாங்கனி வீழ்வ துண்டோ ! 

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் 
செப்பித் திரிவா ரடீ! - கிளியே! 
செய்வ தறியா ரடீ! 

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும் 
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே 
ஊமைச் சனங்க ளடீ! 

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா 
மாக்களுக் கோர் கணமும் - கிளியே 
வாழத் தகுதி யுண்டோ ? 

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும் 
ஈனர்க் குலகந் தனில் - கிளியே! 
இருக்க நிலைமை யுண்டோ ? 

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல் 
வந்தே மாதர மென்பார்! - கிளியே! 
மனத்தி லதனைக் கொள்ளார் 

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத் 
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே! 
சிறுமை யடைவா ரடீ! 

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் 
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே! 
செம்மை மறந்தா ரடீ! 

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல் 
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே! 
சோம்பிக் கிடப்பா ரடீ! 

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார் 
வாயைத் திறந்து சும்மா - கிளியே! 
வந்தே மாதர மென்பார்!

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark