மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


இருட்டு என்பது!?

வெட்க்கப்பட்டு மறைந்து
மெல்ல எழுந்து
சமவெளிகளில் நடந்து
குடில்களில் தவழ்ந்து
மஞ்சங்களில் படர்ந்து
தெருக்களில் மிதந்து
வெளிச்சத்தில் நழுவி
மரங்களை தழுவி
சட்டென நின்று
படீரென விலகி
சூட்சுமங்களை வைத்து
ரகசியங்கள் பேசி
ஒரு நதியை போல திமிரிச் செல்கிறது இருள்.

இது குறித்து ஒவ்வொரு மனித மனதிற்குள் ஒரு வடிவம் அல்லது ஒரு கற்பனை இருக்கும். இருள் குகைகளில் இருக்கும் சிற்பங்களைப்போல தன்னை மறைத்து காட்சிப்படுத்துகிறது. காவி இருள் தேசத்தை தின்பது போல கருப்பு நிழல் மனிதர்களை உட்கொள்கிறது. கருத்த நிழலில் ஒவ்வொரு மனித உயிரும் செரிக்கப்படுகிறது. சூரியனின் பணி முடித்து விலகும் போது இருள் தன்னை மண்ணில் நிறுவுகிறது. உங்கள் இல்லங்களில் விளக்குகள் ஏற்றப்படும் போது தன்னை மறைத்தாலும் அது தன் இயல்பை இழப்பதில்லை மனித ஆழ்மனதை போல.

நண்பனை, தோழனை, மனைவியை, சகோதரனை, சகோதரியை, தாயை, தந்தையை போன்ற வாழ்வின் சொந்தங்களையும், இவற்றிக்கும் மேலாக தங்களை நம்பும் தேச மக்களை துரோகிக்கும் எவரையும் இதுவே தின்று எச்சமாய் உமிழ்கிறது.

அகவே இருட்டு என்பது புழல், திகார் என்ற பெயரிலும் இருக்கலாம். அதனால்தான் திருட்டுக்கும் இடுட்டென பெயர் வந்தது.

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark