மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!

கடந்த வாரம் நான் ரசித்த கவிதை என்ற பகுதியை பல தோழர்கள் பாராட்டி இருந்தனர். பின்னுட்டம் இல்லாமலும் எனது மின்னஞ்சலில் செய்தி அனுப்பி இருந்தனர். அனைத்து தோழர்களுக்கும் நன்றி. இது இந்த வாரம்  நான் ரசித்த கவிதை. நிலாச்சாரல் என்ற வலைத்தளத்தில் படித்தது. தமிழகத்தில் உள்ள  ஆற்றல் மிகு கவிதை படைப்பாளிகளில்  ஒருவர்  கவிஞர் ஈரோடு தமிழன்பன்.   அவரது கவிதைகளில் எனக்கு பிடித்தவை பல ...  அவற்றில் இப்போது ஒரு  கவிதையை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.    






இன்னொரு சுதந்திரம் வேண்டும்?



இரவில்
எதைக் கொடுத்தான்?
எதை வாங்கினோம்?
எவர் வாங்கினோம்?
ஏதும் தெரியவில்லை.

ஒரு பகற் பொழுதில்
உச்சி வெயிலில்
ஒரு சுதந்திரம் வேண்டும்.

வேதித்தும்
சோதித்தும் அதை
உண்மைச் சுதந்திரம் என்று
வயல்வெளிகள் வனாந்திரங்கள்
சொல்ல வேண்டும்;

குடிசைகள் கிராமங்கள்
சொல்ல வேண்டும்.
வேர்வையும் கண்ணீரும்
நம்ப வேண்டும்.

'ஆகஸ்டு 15'...
மாஜி மனிதர்களின்
அந்தப்புரங்கள் சொல்லும்
சுலோகமா?

இந்தியனிடமிருந்து
இந்தியாவை விடுதலை செய்ய எழட்டும்
இன்னொரு சுதந்திரப் போர்!

கட்சிகளின்
படுக்கை அறைகளில்
கசக்கி எறியப்பட்டது இந்த
ஜன நாயகம்!
எந்தத்
தீக்குளிப்பாலும் தீராது சந்தேகம்!

ஆட்சிக்கட்டிலின்
ஐந்தாண்டுப் புருஷர்கள்
பசிக்கப் பசிக்கப் புசிப்பது
இந்தியாவின் ஈரல்.

ஊழல்
நாட்டின் சுவாசப் பையில்
ஓட்டைகள் போட்டது!
கங்கைக் கரை முதல்
காவேரிக் கரை வரை
எங்கும்
அடையாளம் தெரியா அபலைப்
பிணங்களாய்ச்
சட்டமும் ஒழுங்கும்!

இங்கே,
கடத்தல்காரனிடம்
தேசபக்தி, தங்க பிஸ்கட்!
கலப்படக்காரன் கையில்
தேசபக்தி, கறுப்புப்பணம்!

அரசை
ஆட்டி வைப்போனிடம்
தேசபக்தி, கள்ளச் சாராயம்!

அறிவாளியிடம்
தேசபக்தி, சபலங்கள்!
நியாயவான் வாசலில்
தேசபக்தி, தண்டனை!

இன்னொரு சுதந்திரம்
வேண்டும் ...
இப்போதிருப்பது சுதந்திரம் அல்ல
என்பதை இடிகளில் சொல்ல
மின்னல்களில் எழுது! 

5 comments

  1. நல்ல கவிதை..பகிர்ந்ததற்கு நன்றிகள்..

     
  2. பதிவு அருமை.

     
  3. Anonymous Says:
  4. "ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

    அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

     
  5. Anonymous Says:
  6. innomoru puratchi nadanthal namukku neengal koorya sudandiram kidaikkalam. oru nalla kavidai padikka thantamaiku nandri.

     
  7. hariharan Says:
  8. //இன்னொரு சுதந்திரம்
    வேண்டும் ...
    இப்போதிருப்பது சுதந்திரம் அல்ல//

    அருமையான வரிகள்

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark