மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


21 . 02 . 11 அன்று நமது நாட்டின் முதல் குடிமக்களான பிரதிபா பாட்டில் பாராளுமன்ற இரு அவைகள் இணைந்த கூட்டத்தில் ஐம்பது நிமிடங்கள் அவர் பேசியதின் சாரம்சம் இதுதான்.

- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை.
- விலை உயர்வால் பாதிக்காத வகையில் ஏழை மக்களுக்குப் பாதுகாப்பு.
- பொது வாழ்க்கையில் ஊழலைத் தடுக்க உரிய நடவடிக்கை.
- பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஏழை மக்களைச் சென்றடைய நடவடிக்கை. 
- உள்கட்டமைப்பு துறையில் ரூ. 20 லட்சம் கோடி முதலீடு.
- உள்நாட்டு, வெளிநாட்டு தீய சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்படா வண்ணம் நாட்டின் பாதுகாப்புக்கு உறுதி.
- இந்தியாவின் நலனைக் காக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கை வடிவமைப்பு. 
- விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்க உரிய நடவடிக்கை. விரைவில் உணவு பாதுகாப்புச் சட்டம்.
- ஊழலைத் தடுக்க புதிய வழிமுறைகளை உருவாக்கவும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை நிலைநிறுத்தவும் அமைச்சர் குழு அமைப்பு.
- அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார் விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை.
- தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்த குழு அமைப்பு.
- மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா விரைவில் நிறைவேற நடவடிக்
- பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த நிபந்தனை.

மிகவும் நகைச்சுவை உணர்வுடன் அவர் கிழ்வருமாறு கூறினார் : "வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் விவகாரம் அரசுக்கு கவலையளிக்கிறது. இந்தப் பணம் ஊழல் மூலமாகவோ, வரி ஏய்ப்பு மூலமாகவோ பெறப்பட்டதாக இருக்கலாம். இந்தப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்தப் பிரச்னை தொடர்பாக வலுவான சட்ட நெறிமுறையை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்திருக்கிறது." இதை அவர் கொள்ளும் பொது பிரதமர் உள்ளிட்ட ஆளும்கட்சியினர் பக்கம் மறந்தும் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரையில் மக்களுக்கு இருக்கும் ஆப்பு என்னவெனில் காங்கிரஸ் அரசு பொருளாதார சிர்த்திருத்தத்தை தொடர்ந்து அமலாக்கம் செய்யும் என்பதுதான். இதன் விளைவு என்னவெனில் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்ட ஒன்னரை லட்சம் விவசாயிகளுடன் இன்னும் இரண்டு லட்சம் சடலங்கள் சேரும் என்பதுதான். கிராமப்புற வேலைவாய்ப்பு குறித்தோ, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தோ மறந்தும் வாயை திறக்கவில்லை என்பதையும் அறிக. 

வழக்கம் போல உப்பில்லாமல் உணவருந்த சொல்லும் ஒரு உரை.

1 Responses to ஊழலை ஒழிப்போம் ! நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஜோக்கு??

  1. Unknown Says:
  2. விரைவில் மாற்றம் வரும் தோழா!!

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark