மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


தேர்தலில் பணம் விளையாடுவதைத் தடுக்க, பீகாரில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அந்த விதிமுறைகள் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநில தேர்தல் களிலும் பின்பற்றப்படும். தேர்தலில் வேட்பாளர்களுக்கான செலவு உச்சவரம்பை 60 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். எம்.பி., தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை, 25 லட்ச ரூபாயிலிருந்து 40 லட்சமாகவும், எம்.எல்.ஏ., தேர்தலில் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை 10 லட்ச ரூபாயிலிருந்து 16 லட்சமாகவும் உயர்த்த, சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் இதற்கான உத்தரவு வரும் என எதிர்பார்க்கிறோம். என  சென்னையில்  13 .02 .11 அன்று தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி தெரிவித்தார். 

இந்த செய்தியை படித்ததும் அவருடைய நகைச்சுவை உணர்வு எவ்வுளவு மகத்தானது என தெரிந்தது. வடிவேலு பாணியில்  வெளயாட்டு புள்ள சார்  நீங்க! என்று  சொல்லத்தான் தோன்றுகிறது. தேர்தல் கமிஷன் எத்தகைய உச்ச வரம்பை சொன்னாலும் தமிழ்நாட்டில் அதை அமல்படுத்த முடியாது என்பதை அவர் அறிவாரா மாட்டாரா நமக்கு தெரியவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் கமிஷன் கடுமையான கட்டுபாடுகளை விதித்தும் தமிழகத்தின் ஒரே "அஞ்சா நெஞ்சன்" அழகிரி  நடத்திய திருவிளையாடல்கள் தமிழாக்கம் அறியாதது அல்ல. இரவில் ஆட்டோக்களில் சென்று புடவை பார்சலில் பணம் வைத்து எறிந்ததையும், காலையில் அதை நினைவு படுத்தி வாக்கு கேட்டதையும் , அரிவாளுடன் அஞ்சா நெஞ்சனின் அடிபொடிகள் எதிர் கட்சிகளை மிரட்டியதையும் இன்னும் மதுரை மக்கள் மறக்கவில்லை. அந்த சமயத்தில் பலமுறை  புகார் கொடுத்தும் தேர்தல் கமிஷன்  ஒரு ம .......... சரி வேணாம் விடுங்க.

நமது தேர்தல் கமிஷனரின் ஆசை நியாயமானதுதான். ஆனால் ஸ்பெக்ட்ரம், கலைஞர் காப்பிடு திட்டம், கலைஞர் கான்கிரிட் வீடுகட்டும்  திட்டம், 100 நாள் வேளை உறுதி  சட்டம் , அண்ணா மறுமலர்ச்சி திட்டம் , இலவச வண்ண தொலைகாட்சி திட்டம், தமிழகம் முழுவதும் நடந்த வளர்ச்சி பணிகள் போன்றவற்றில் கிடைத்த பணத்தை என்னதான் செய்வதாம். அதற்காவது அவர் ஒரு வழி சொல்ல  வேண்டாமா?  அரசாங்கம் என்னதான் வேட்பாளரின் செலவு உச்சவரம்பை நிர்ணயம் செய்தாலும் ஆளும் கட்சி செய்யும் அத்துமீரல்களை தேர்தல் கமிஷனால் எதுவும் செய்யமுடியாது என்பதுதான் நமது நாட்டின் வரலாறு. இருப்பினும் நமது கமிஷனர் ஆசை படுகிறார்.

2 comments

  1. Unknown Says:
  2. sir yetho muyarchi panranga vidungalen pavam podi payaluga

     
  3. தேர்தல் கமிஷனர் விளையாட்டு பிள்ளையாய் இருப்பது
    மக்கள் விளையாட்டு பொம்மைகளாய் இருக்கும் வரைதான்.
    விளையாட்டு பொம்மைகள் அரசியல் கலை்ஞ்சர்களால் உற்பத்தி செய்யப்பட்டு
    தேர்தல் காலங்களில் மட்டுமே விற்பனை செய்யபடுகிறார்கள் ....

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark