மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


சுற்றி வைத்த நெருப்பின் சுவடு பற்றி எரியும் குடிசையிலிருந்து, கருகும் உயிர்களுக்கு இடையில் கசிந்துருகும் தாய்மையால் தனது கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கிடைத்த இடுக்கின் வழியே தூக்கி எரிந்த தாயின் மீது மீண்டும் அந்த குழந்தை வந்து விழுந்த கொடூரம் நடந்த, அரைப்படி நெல்மணிகளை கூலியாய் கேட்டதற்காக 44 உயிர்கள் பொசுக்கப்பட்ட வெண்மணி தினமான அதே டிசம்பர் 25.
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ? புகழ் மைந்தன் தோன்றினானே! கல்வாரி மலையிலே கல் ஒன்று பூப்பூக்க கருணைமகன் தோன்றினானே! நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாக தோன்றின்னே! முட்காடு எங்குமே பூக்காடு தோன்றவே புவிராஜன் தோன்றினானே (நன்றி: கவிஞர் வைரமுத்து) என கிருத்துவர்கள் வருத்தப்பட்டு பாரம் சுமந்த சிசுபாலன் பிறந்த நாளை கொண்டாடும் அதே டிசம்பர் 25.
இந்த தேசத்தை நேசித்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த, இந்திய வரலாற்றில் கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தையே எழுந்து நிற்கவைத்த, மாமேதை டாக்டர் அம்பேத்கரின் சிலையைப் பாதுகாக்க அதே டிசம்பர் 25 நடந்த சம்பவத்தின் கதை இது.
2009 டிசம்பர் 25 இல் துவங்கி..
கி.பி 2009 ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி முழுமையாக இருள் விலகாத காலைப்பொழுது. பல நூற்றண்டாக சந்திக்காத காட்சியை அந்த முந்திரிக்காடு கண்டது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கையில் தடி அதன் மேல்கட்டப்பட்ட கொடியுடன் தங்களது இளம் பாதங்களைப் பதித்து முந்திரிக்காட்டின் இடையில் கிடைத்த ஒற்றையடி தடத்தைப் பற்றி முன்னேறினர். வெள்ளை நிறம் கொண்ட அந்த கொடியினுள் சிகப்பு நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் மேலிருந்து கீழாக டி.ஒய்.எப்.ஐ என்ற எழுத்து மின்னியது. என்ன ஆனாலும் சரி இலக்கை அடைந்தே தீருவது என்ற வைராக்கியம் அவர்கள் முகங்களில் தெரிந்தது.
பழையப் பட்டினத்தில் அம்பேத்கர் சிலைசரளைக் கட்களும், நெருஞ்சி முட்களும் காலில் குத்தியபோதும் அந்தக் கால்கள் பயணத்தை நிறுத்தவில்லை. அவர்கள் செல்லும் இடத்திற்கு மிக எளிதாக செல்ல சாலைவசதி இருக்கிறது. அந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் இருந்தது. இந்த இளைஞர்களின் வருகையை எதிர்பார்த்து கண்களில் கோபத்தையும், நெஞ்சில் வன்மத்தையும், கையில் தடிகளையும், துப்பாக்கிகளையும் தாங்கி காவல் துறையினர் 400க்கும் மேற்பட்டோர் தயாராக இருந்தனர். உளவுத்துறையினர் தனியாக அலைந்துகொண்டு இருந்தனர். ஆனால் நான்கு கிலோமீட்டர் சுற்றி நடந்து வரும் இந்த ஒற்றையடிப் பாதைவழியாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வருவதை காவல்துறையினர் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த பழைய பட்டிணம் கிராமத்தின் மக்கள் இவர்கள் மீது நம்பிக்கையுடன் “அவர்கள் வருவார்கள்” என எதிர்பார்த்து நின்றனர். அவர்களின் வருகை அந்த கிராமத்து மக்களின் தன்மானத்தை மீட்டெடுக்கும் வருகை.
“அசோகன் தோழர்.. கிராமத்தின் அருகில் வந்துவிட்டோம்” வழிகாட்டிய சிலம்பரசனும், ராமரும் சேர்ந்து சொன்னார்கள். சத்தியராஜ் முந்திரிக்காட்டின் இறுதியிலிருந்து ஊரின் தூரத்தை கண்களால் அளந்து பின்பு சொன்னார் “ தோழர் இன்னும் 500 அடியில் ஊர் வந்துவிடும்." அசோகன் ராஜேஷ்கண்ணாவைப் பார்க்க இருவரும் தலையை அசைத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் திட்டமிட்டனர். எல்லோரும் ராஜேஷ்கண்ணா (வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்) மற்றும் அசோகன் (வாலிபர்சங்க மாவட்ட தலைவர்) என்ற அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இரண்டு இளைஞர்களின் வாயிலிருந்து வரும் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தனர்.
இன்குலாப்! ஜிந்தாபாத்! என்ற முழக்கத்துடன் முன்னோக்கி கையை சுட்டி, இருவரும் ஓடத்துவங்க அனைத்து இளைஞர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஊருக்குள் புகுந்து இலக்கை நோக்கி அவர்கள் ஓடத்துவங்க, இவர்களின் வருகையை எதிர்பார்க்காத காவல்துறையினர் திடீரென முழித்து, பின் விழித்து, சுதாரித்து கையில் ஓங்கிய தடியுடன் இந்த இளைஞர்களை இலக்கை எட்டும் முன்பு தடுத்து நிறுத்தினர். 200 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விருதாச்சலத்தில் சிறைவைக்கப்பட்டனர். அவர்கள் இலக்கு பழையபட்டிணம் கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதுதான். இது என்ன சமூக விரோத செயலா என தாங்கள் கேட்பது புரிகிறது. கொஞ்சம் பின்னோக்கி பயணிக்காமல் இது புரியாது.
என்ன நடந்தது?
அமபேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்கள் கைது செய்யப்பட்ட 2009 டிசம்பர் 25இலிருந்து வருவோம். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்படும்போது அறிவித்தது இதுதான். “நாங்கள் மீண்டும் இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி மாலையிட வருவோம். இன்னும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுடன்.”
கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகில் உள்ள பழையப்பட்டினம் என்ற கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள், 35 இஸ்லாமிய குடும்பங்கள், 40 கோனார் சமூக குடும்பங்கள், 20 ரெட்டியார் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008 ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராமப் பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபா கூட்டம் தலைவர் சி.தர்மலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் பஞ்சாயத்து நூலகம் எதிரில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதெல்லாம் பிரச்சனை இல்லை. அதன் முன்பு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அப்துல் ஹை ஒன்றிய கவுன்சில் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைகிறார். தனது தோல்விக்கு தலித் மக்கள்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்தவர் இந்த சிலை ஊருக்கு மத்தியில் வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரச்சனையை உருவாக்குகிறார்.
இஸ்லாமியர்கள் உருவவழிபாட்டை மேற்கொள்ளாத காரணத்தால் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு முன் அந்த சிலை இருக்கக்கூடாது என பிரச்சனையாகிறது. சிலை இருக்கும் இடத்திற்கும் அவர்களது வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் சிலைக்கு மாலையோ, மரியாதையோ செய்ய தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது; தலித் மக்கள் தவித்துள்ளனர். தலித் தலைவர்களை சந்தித்து முறையிடுகின்றனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் ஏன் தேவையற்ற பிரச்சனை என்று கூறி, அந்த சிலையை அங்கிருந்து அகற்றி தலித் மக்கள் பகுதியிலே வைத்துக்கொள்ள வலியுறுத்துகிறார். அதுமட்டுமல்ல அந்த சிலையை அப்புறப்படுத்துவதாக அவ்வூர் மக்கள் சம்பந்தம் இல்லாமல் சிலையை "அகற்றிக்கொள்கிறோம்" என்று இஸ்லாமிய ஜமாத்துக்கு தன் கைப்பட கடிதமும் கொடுக்கிறார். இந்தப் பின்னணியில் வாலிபர் சங்கம் போராட்டத்தைக் கையில் எடுத்தது. அம்பேத்கர் சிலைக்கு டிசம்பர் 25ம் தேதி மாலை அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்தது. போலீஸ் துணையுடன் போராட்டம் தடுக்கப்பட்டது. களப்போராட்டம் மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் கதவையும் வாலிபர் சங்கம் தட்டியது.
ஜனவரி 26 ஆம் தேதியும் பிரச்சனை உருவாகும் சூழல் இருந்ததால் வழக்கறிஞர் திருமூர்த்தியிடம் தொலைபேசியில் தகவல்களைச் சொல்லி இப்பிரச்சனை குறித்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. வழக்கறிஞர் திருமூர்த்தி, வழக்கறிஞர் தியாகு ஆகியோர் இந்த பிரச்சனையின் தீவிர தன்மையைச் சுட்டிக்காட்டி 19.01.10 அன்று பொதுநலவழக்கு தொடுக்கின்றனர். அன்றே உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுக்க வலியுறுத்துகின்றனர். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
20.01.10 வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒரு தேசத் தலைவரின் சிலைக்கு நடந்த அவமரியாதையை தொடர அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் அன்று காலை 11.30 மணிக்கு உறுத்து கட்டளை (இன்ஜக்ஷன்) பிறப்பித்து கீழ்வருமாறு கூறினர் “மீண்டும் இந்த வழக்கில் மறு உத்திரவு பிறப்பிக்கும் வரை அண்ணல் அம்பேத்கர் சிலையை இருக்கும் இடத்திலிருந்து அகற்றக்கூடாது எனவும், மேலும் எந்த நபராலும் எந்த விதமான சேதமும் சிலைக்கு விளைவிக்கப்பட கூடாது எனவும், மீண்டும் இந்த வழக்கு 08.01.10 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்”.
பழைய பட்டிணம் கிராமத்தில்...
ஆனால் அன்று இரவு (20.01.10) பழைய பட்டிணம் கிராமத்தில், 11.30மணிக்கு 200 போலிசுக்கும் மேல் குவித்து, தலித் மக்களை மிரட்டி அவர்களது அனைத்து வீடுகளையும் பூட்டினர். ஒவ்வொரு வீட்டிற்கும் முன் ஒரு போலிஸ் காவல். காவல் வண்டிகள் குவிக்கப்பட்டது. ஜே.சி.பி எந்திரம், லோடு லாரி என அம்பேத்கர் சிலையை ஊரின் பொதுவிலிருந்து பெயர்த்தெடுக்கத் தயாரானார்கள். பொதுமக்கள் யாரும் சிலைக்கு அருகில் அனுமதிக்கப்படவில்லை. அக்கிராமத்தின் வார்டு உறுப்பினர் ரேனு தகராறு செய்கிறார் அதனால் தாக்கப்படுகிறார், அம்பேத்கர் சிலையை எடுக்கக்கூடாது என்றும், கோர்ட்டில் இன்ஜக்ஷன் பெறப்பட்டுள்ளது என்றும் கூறிய வாலிபர் சங்கக் கிளைச் செயலாளரும், இந்த வழக்கின் மனுதாரருமான அமிர்தலிங்கம் காவல்துறையுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் தாக்கப்பட்டு வீட்டினுள் அடைக்கப்படுகிறார். எதிர்ப்பு தெரிவித்த இன்னும் சில இளைஞர்களும், பொதுமக்களும் தாக்கப்பட்டனர். விடியகாலை 3.30 மணிக்கு அதாவது 4 மணிநேரம் போராடி அந்த பிரம்மாண்டமான சிலை ஊரின் பொதுவிலிருந்து அகற்றப்பட்டது. அந்த மகாமனிதனின் சிலை தலித் மக்கள் பகுதியில் அவர்கள் தண்ணீர் வசதிக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்திய குளத்தை அடைத்து, மண்கொட்டி அந்த இடத்தின் மேல் நிறுவப்பட்டது. என்னதான் மாமேதை அம்பேத்கர் தேசத் தலைவராய் இருப்பினும் அவருக்குரிய இடம் எது என்பதில் அரசு எந்திரம் தெளிவாக இருந்தது. ஆளும் வர்க்க வன்மத்தின் வெளிப்பாடாய் இந்த நிகழ்வு இருந்தது. விருதாசலம் டி.எஸ்.பி ராஜசேகர், ஆய்வாளர் திருமால் தலைமையில் சிலையை அகற்றி எடுக்க ஏற்பாடு நடந்தது.
இதற்கிடையில் அன்று இரவே சென்னையில் தகவல் அறிந்த வழக்கறிஞர் திருமூர்த்தி கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயல்கிறார். டிஎஸ்பி, ஆய்வாளர் ஆகியோர் போன் எடுக்கவிலை. பின் மாவட்ட எஸ்.பி அஸ்வின் கோட்டீஸிடம் “ இன்று காலை சிலையை அகற்ற கூடாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது” என்கிறார்.
அதற்கு “உங்களது வார்த்தை தீர்ப்பல்ல ஏனெனில் எனக்கு உத்தரவு நகல் இல்லை” என்கிறார் எஸ்.பி. “அப்படி எனில் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும்”என்று திருமூர்த்தி சொல்லுகிறார். பின் வழக்கறிஞர் திருமூர்த்தி அதிகாலை இரண்டு மணிக்கு சென்னை அண்ணா சாலை தந்தி அலுவலகத்திலிருந்து தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் உள்துறை செயலாளர் மாலதி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சீதாரமன், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு “காவல்துறையினர் உயர்நீதிமன்ற உததரவை மீறுகிறார்கள். (தீர்ப்பாணை எண் ட்பில்யூ.பி 1012/2010)” என்று தந்தி கொடுக்கிறார்.
மீண்டும் சென்னையில்..
மறுநாள் 21 ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியது குறிப்பிடப்படுகிறது. நீதிமன்றத்தில் இது குறித்துக்கொள்ளப்படுகிறது. மீண்டும் 22 ஆம் தேதி மதியம் வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. (ஆனால் இந்த வழக்கு 08.02.10 அன்றுதான் விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி பல பணிகள் நடந்ததால் வழக்கு உடனே எடுத்துக்கொள்ளப்பட்டது)
22ம் தேதி வழக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் ராஜாகலிபுல்லா “20 ஆம் தேதி காலையிலேயே பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கம் தலைமையில் தலித் மக்களே விருப்பப்பட்டு சிலையை எடுத்து தலித் பகுதியில் வைத்துக்கொண்டதாக” கூறுகிறார். முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கூற்று இது. அப்போது அப்பகுதி தலித் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 5 போலிஸ் மட்டுமே பாதுகாப்புக்கு இருந்ததாக கூறினார். அதற்கு நீதிபதிகள் “ 20ம் தேதி காலையிலேயே சிலை அகற்றப்பட்டது என்றால் நாங்கள் இன்ஜக்ஷன் பிறப்பிக்கும்போது ஏன் இதைக் குறிப்பிடவில்லை, அப்போது நீங்களும் இருந்தீர்களே ஏன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை” என்றனர். அதற்கு அவர் ஏதோ கூறி சமாளித்தார். நமது வழக்கறிஞர்கள் அங்கு நடந்ததைக் கூறினர். ஆதலால்...
ஏற்கனவே நாம் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்ட தமிழக உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, தாசில்தார், ஆர்டிஓ, ஆய்வாளர் ஆகியோருடன் தற்போது சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் டி.எஸ்.பி, பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கம், வார்டு உறுப்பினர் ரேனு, கிராம நிர்வாக அதிகாரி அசோகன் ஆகியோரையும் நீதிமன்றம் எதிர்வாதிகளாக இணைத்து உடனடியாக சிறப்புத் தூதுவர் மூலம் சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், 25 ஆம் தேதி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் ஊர் மக்கள் ஆதரவுடன்தான் சிலை எடுக்கப்பட்டது என்ற அப்பட்டமான பொய்யை நீதிமன்றத்தில் அரசு தரப்பினர் கூறியதால் அதை அம்பலப்படுத்த முடிவு செய்து, தனித்தனியாக 247 ஊர் பொதுமக்களிடம் பிரமாணபத்திரம் விருதாசலத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சந்திரசேகரன் உறுதிச்சான்றுடன் தயாரிக்கப்பட்டது. 25ம் தேதி தாக்கல் செய்வதற்காக 24 ஆம் தேதி இரவு சென்னைக்கு தனி பேருந்து மூலம் கிளம்பிய மக்கள் கூட்டத்தை விருதாசலம் நகரத்தை அடையும்முன்பே காவல் தூறையினர் தடுத்து நிறுத்தினர். சென்னைக்கு அபிடவுட் தாக்கல் செய்யச் சென்றால் உங்கள்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டினர். அந்த மிரட்டல்களை வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகளும் வழக்கறிஞர் சந்திரசேகரனும் முறியடித்து அம்மக்களை சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
25ம் தேதி வழக்கு வருகிறது. 247 பேர் அபிடவுட்டை தாக்கல் செய்த மக்கள் உள்ளூர் மக்கள் இல்லை என அவர்கள் எதிரிலேயே அரசு தரப்பு வழக்கறிஞர் மீண்டும் பொய்யான குற்றத்தை சுமத்தினார். நீதிபதிகள் அந்த சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏற்கனவே நீதிமன்றம் ஆஜராகச் சொன்ன அனைத்து அதிகாரிகளும் அன்று இருந்தனர். தலித் மக்கள் ஆதரவுடன் சிலை அகற்றபட்டது என்பது பொய் என அன்றைய விசாரனையில் தெரிந்தது. காவல் துறையினர் செய்த அத்துமீறல்கள் நிரூபணமானது. அரசின் நிலையை தெரிவிக்க அரசு உள்துறைச் செயலர் சார்பில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனார்.
மீண்டும் 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால் அதற்குள் ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. அதாவது ஊரில் பஞ்சாயத்துக் கூட்டம் நடந்து, தீர்மானம் இயற்றித்தான் சிலை அகற்றப்பட்டதாக பொய்யான சான்று தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல அந்த பஞ்சாயத்து தீர்மான நோட்டுகளை நீதிமன்றம் கைப்பற்றி வைத்துக்கொண்டது. கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ரோந்து குறிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த கிராமத்தின் உண்மை நிலையைக் கண்டறிய நீதிமன்ற நிர்வாக பதிவாளர் விஜயன், வழக்கறிஞர்கள் செங்குட்டுவேல், காசிகுமார், திருமூர்த்தி (நமது வழக்கறிஞர்) ஆகியோர் கொண்ட குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 1 ஆம் தேதி விசாரணைக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டனர். விசாரணைக் குழு விசாரணையை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை சிலை எதிர்ப்பாளர்கள் கூறினர்.
ஆனால் அரசு தரப்பிலும், சிலை எதிர்ப்பாளர்கள் தரப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களது வாதம் பொய் என அம்பலப்பட துவங்கியதும் வேறு வழி இல்லாமல் அரசு இறங்கி வந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி விசாரணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அன்று அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அரசுத் தரப்பில் ஆஜரானார். அவர் “தேசத்தின் சிறந்த தலைவர் சிலையை அவமதித்தது தவறு, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அதை மீறி சிலையை அகற்றியதற்காக தமிழக அரசின் சார்பில் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்” என்றார். நீதிமன்றம் உத்தரவு இட்டால் மீண்டும் சிலையை ஊரின் மத்தியில் அதே இடத்தில் வைக்கிறோம் என்றார். ஆனால் இஸ்லாமியத் தரப்பு சார்பில் பழைய இடத்தில் வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றனர். ஆனால் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மகாராஸ்டிர மாநிலத்தில் மாமேதை அம்பேத்கர் பிறந்த மற்றும் மறைந்த நாள் விழாக்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும்போதே பிரச்சனைகள் வருவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
மீண்டும் பிப்ரவரி 8 ஆம் தேதி வழக்கு வந்தது. அன்று மேலும் ஒரு வழக்கறிஞர் மூலம் இஸ்லாமியத் தரப்பின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையும் நீதிமன்றம் நிராகரித்தது. மீண்டும் மீண்டும் இஸ்லாமிய தரப்பில் அவர்கள் தடுக்கக் காரணம் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி சிலையை ஊரின் பொது பகுதியிலிருந்து தலித் பகுதிக்கே மாற்றிக்கொள்ள தனது கையொப்பமிட்ட கடிதத்தை கொடுத்ததுதான். ஆனால் இதை தலித் மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அம்மக்கள் நடத்திய போரட்டங்களும், நீதிமன்றத்திற்கே வந்து சாட்சி சொன்னதும் நிரூபித்ததால் கடிததத்தை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக பிப்ரவரி 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றனர்.
2010 பிப்ரவரி 11 ஆம் தேதி முடிந்த போது...
ஆடர்... ஆடர்.. ஆடர்.. நீதிபதிகளின் பாரம்பரியமான வார்த்தைகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிரொலித்தபோது தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.கே சசிதரன் ஆகியோர் தங்களது அமர்வின் தீர்ப்பை வாசிக்கத் துவங்கினர். “இனி தமிழ்நாட்டில் தலைவர்கள் சிலைகள், நினைவு சின்னங்கள் போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று சொன்னால் அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சொன்னாலும் அப்படியே. சிலைகளை யார் வைக்கிறார்களோ அவர்களே பொறுப்பாகுவார்கள். இந்த வழக்கின் மனுதாரர் அமிர்தலிங்கத்திற்கு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை செயலாளர்) வழக்கு இழப்பீட்டு தொகை ரூபாய் 20,000ஐ அரசு கொடுக்க வேண்டும். அப்பணத்தை டி.எஸ்.பி. தாசில்தார், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட, அதிகாரிகள் தரப்பில் தவறு செய்தவர்களின் சம்பளத்திலிருந்து அரசு பிடித்தம் செய்து கொள்ளலாம். கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 2010 பிப்ரவரி 28க்குள் எங்கிருந்து அம்பேத்கர் சிலை எடுக்கப்பட்டதோ அங்கேயே நிறுவப்பட வேண்டும்”என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
ஒருவகையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புதான். கடுமையான அடக்குமுறைகளை, மிரட்டல்களை, சட்ட நுணுக்கங்களை, ஏமாற்றுகளை, துரோகங்களை மீறி எளிய கிராமத்து மனிதர்களின் வெற்றியை முறசரைந்த தீர்ப்புதான். இது மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி பெற்ற தீர்ப்பு இது.
எனவே...
இந்த தேசத்தின் மகத்தான தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூட தடை இருந்த ஊரில் அந்த தடை உடைக்கப்பட்டிருக்கிறது. தலித் தலைவர்களாக தங்களை அறிவித்து கொள்பவர்கள் கூட அவரின் இடம் ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பிடமே என சொல்லும் சோகமும் நடக்கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 2009 டிசம்பர் 25 ஆம் தேதி வர்க்கப் போராட்டத்தின் ரத்தசாட்சிகளான வெண்மணி தியாகிகள் தினத்தில் தமிழகம் முழுவதும் தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கைப் போராட்டத்தை நடத்தியது. கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இன்னும் பல்லாயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, அதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைப் போல.
thirumavalavan_letter
(திருமாவளவன் எழுதிய கடிதம்

கிற்று இணையத்தளத்தில் இந்த கட்டுரை வெளியான பொது வந்த எதிர்விணைகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .



  • asokan muthusamy
    a very good article reflecting the complexity of our society/

  • இராசகம்பீரத்தான்- மால்கம் X
    இஸ்லாமியர்கள் அண்ணல் அம்பேத்கரை எதிர்கிறார்கள் என்றால், இந்துதுவாதிகளும் ,சங்கராசாரிகளும் அம்பேத்காரை அனைகிறார்களா?....

    ஓரு சில அரசியல் பேர் வழிகளின் குரூர புத்திக்காக
    ஒரு சம நிலை சமுதாயம் காணும் இஸ்லாத்தை தொடர்பு கொண்டு, அடிப்படைவாதிகள் என்ற அவதூறு பேச்சா?..

    இஸ்லாமொயர்களும், தலித்களும் தொப்புல் கொடி உறவென்பது உலகம் அறியும். திரு ரமேஸ் பாபு அவர்களின் சூட்சம நோக்கத்தையும் உலகம் அறியும்.

    இன்றைய இஸ்லாமியர்கள் எவரும் அரபு நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் குடியமர்ந்தவர்கள் அல்ல,

    நேற்றைய ஆதிதிராவிடர்களும் சாதிய கொடுமைகளால் வாழ்வுரிமை இழந்தவர்களும் தான் இன்றைய இஸ்லாமியர்கள்..

    தயவு செய்து நாரதர் வேலை பார்பதை நிறுத்தி உருப்படியாக நசுக்கப்பட்ட மக்களுக்கானா வாழ்வுரிமை வேலைகளை பாருங்கள்.

  • Anonymous
    கட்டுரை ஆசிரியருக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசத்தலைவர்களை சாதித்தலைவர்களாகப் பார்க்கும் மனப்பான்மையை முகமதியர்களும் ஏற்றுக்கொண்டுள்ளது வேதனையான ஒன்று.
    ஒரு பகுத்தறிவுவாதியை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மடையர்களே.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள்.

    சாதியத்தை வேரறுக்க அண்ணல் அம்பேத்கர் மற்றும் பெரியார் வழியில் களமிறங்குவோம்.

    முனைவர் சே. ராமகிருஷ்ணன்
    புதுவை.

  • இறைகற்பனைஇலான்
    வெண்மணியில் என்று திருமாவளவன படைஎடுத்து
    கமூனிஸ்டுகளின் விழாவை சாதிவிழாவாக மாற்றினாரோ அன்றே அவரின் சுயநலத்தை வெளிச்சம் போட்டுக்காட்டிவிட்டார்.

  • புதூர் சிபி
    நல்ல கட்டுரை.
    வாழ்த்துக்கள் தோழர்.
    தலித்துகளின் மேன்மைக்காக குரல் கொடுக்கிறேன்
    எனக்கிளம்பியவர்கள், இந்து மதத்தை துறப்பது என
    முடிவு செய்து பௌத்தம் தழுவுவதாக முதலில் சொன்னார்கள், பின்பு, தங்களுடைய பெயர்களைத் தமிழில் சூட்டிக்கொண்டால் அத்தனை இழிவுகளிலும் இருந்து விடுதலை பெறலாம் என ஞானஸ்தானம் பெற்றார்கள். ஈரோட்டுப் பகலவனின் பெயர் பாடிக்கொண்டு மஞ்சள் துண்டு சுற்றியவரைச் சுற்றி
    நாடாளுமன்ற பதவிகளைச் சுவைப்பார்கள். தீட்டு என ஒதுக்கி வைக்கப்பட்ட சேரிகளிலேயே அண்ணல் அம்பேத்கரை தள்ளுவார்கள்.
    உரிய நேரத்தில் மக்கள் . மன்றத்தில் மட்டுமின்றி, நீதிமன்றம் மூலமும் அண்ணலை மீட்ட வாலிபர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

  • K.Easwaran
    Dr.Ammbedkar, as a person, a very good man. However, as an architect of the Indian constitution, he miserably failed and he bears the responsibility for the crimes committed by the state apparatus against North East states, massacre of Kashmeer muslims, Indian aided massacre of Eellam Tamils and the sufferings of other aboriginal people(Pazankudi Makkal). His constitution failed to produce a just governanace at the centre and the states. Leadership of M.Karunanithy and Sonia is only possible through his constitution. This is similar to claiming by some Eellam tamils and Tamil Naadu leaders that Pirabhakaran would come out of his hiding to safeguard the Tamils again. He could not prevent the massacre of 40000civilians and about 20000 Poraaligal in one month alone.

    Ambedkar failed the powerless in India and Pirabhakaran failed the Eellam Tamils. We have to accept these and work to put the things right where they failed. It is better to buy a few books for the kids from under priviliged families than spending money on garlanding the statue of Ambedkar. Ambedkar had been a good person but authored a constitution soaked with the blood of hundreds of thousands of people who were killed within the bounds of the Indian constitution. The so called Bharatha Maatha is drenched with unholy blood. Never make any man a demi god. Start from where they left and move forward, if necessary, putting things right where they failed.
    Easwaran

  • பாவண்ணன்
    ராசகம்பீரத்தான் சொல்வதில் ஒருபகுதி ஏற்கத்தக்கது.

    அவர் சொல்வது போல ஒரு சில அரசியல் குரூர புத்திக்காரர்களுக்காக இசுலாம் சமயத்தை தொடர்புபடுத்தி விமர்சிக்க தேவையில்லைதான்.

    மேலும் தமிழகத்தில் தலித்- இசுலாமியர் ஒற்றுமை பாராட்டும்படியாகவும், அந்த ஒற்றுமை ஆர்எஸ்எஸ்- பாஜக மதவெறிக் கும்பலை இறுதிவரை எதிர்க்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகவும் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாதது.

    ரமேஷ்பாபுவும் இதை ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன். இதற்கு இடையில் பகையுணர்வு ஏற்படுவதை அவர் விரும்பமாட்டார் என்றார் நம்புகிறேன்.

    ஏனெனில் அவரது கட்டுரையின் தலைப்புத்தான், ஏற்க முடியாததாக இருக்கிறதே தவிர, மற்றபடி கட்டுரைக்குள் அவர் உள்ளதை உள்ளபடியே சொல்லிச் செல்கிறார். தலைப்பில் வேகமான வார்த்தைகளைப் அவர் போட்டதற்குக் கூட, இசுலாமிய மக்களின் ஜமாத்தே ஒன்றுகூடி, அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறியதும், அதற்கு தாங்கள் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற சம்பந்தமில்லாத ஒரு காரணத்தை வலிய முன்வைத்ததும் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

    இந்த வகையில், தமிழகத்தில் சாதிவெறிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தொடர்ந்து மேற்கொண்டு வரும் பணியை கவனித்து வருபவன் என்ற அடிப்படையில், அவருக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பதோ, அவரை நாதரர் என்று சொல்வதோ பொருத்தமான விமர்சனமாக இல்லை.

  • alagumukilan
    கடுமையான கள போராட்டங்களையும் சட்ட போர்களையும் திறம்பட நடத்திய வாலிபர் சங்க ரமேஷ்கண்ணா, அசோகன்,
    அமிர்தலிங்கம், மற்ற வாலிபர்கள், வழக்கறிங்கற்களுக்கும் பழயபட்டினம் மக்களுக்கும், இந்த மாபெரும் வெற்றி செய்தியை
    பல பத்திரிக்கைகள் பிரசுரிக்க தவறிய போதும் அதை நல்ல வடிவில் எழுதிய ரமேஷ்பாபு அவர்களுக்கும் நீங்கள் இருக்கும் திசை நோக்கி வணக்கங்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். வீரம் செறிந்த இத்தகு போராட்டத்தை நடத்தி பலரின் போலி முகத்திரையை கிழிதமைக்கு மறுபடியும் வாழ்த்துக்கள்

    நண்பர் மல்கம்-க்ஸ்:
    ரமேஷ்பாபு தெளிவாக எழுதிஉள்ளார். அம்பேத்கரை இழிவு படுத்தியவரை தான் அடிப்படைவாதிகள் என குறிப்பிட்டுள்ளார். மற்ற இசுலாமிய சகோதரர்களை அல்ல. ரமேஷ்பாபு செய்வது நாரதர் வேலை எனில், அம்பேத்கரை இழிவு படுத்திய மக்கள், ஏந்த தவறுமே
    செய்யவில்லை என்கிறீர்களா?

    தொப்புள் கொடி உறவுகள் அம்பேத்கருக்கு செய்த மரியாதையை எல்லாம் நீதிமன்றதிலேயே வெளிச்சமாகிவிட்ட பின், வரிந்துகொண்டு எழுதும் தங்கள் சூட்சுமம் என்ன என்பது அனைவருக்கும் புரியக்கூடியதே

    அன்புடன்
    அழகுமுகிலன்

  • chellan
    ரமேஷ்பாபு தெளிவாக எழுதிஉள்ளார். அம்பேத்கரை இழிவு படுத்தியவரை தான் அடிப்படைவாதிகள் என குறிப்பிட்டுள்ளார். ரமேஷ்பாபு செய்வது நாரதர் வேலை எனில், அம்பேத்கரை இழிவு படுத்திய மக்கள், ஏந்த தவறுமே செய்யவில்லை என்கிறீர்களா?

    தொப்புள் கொடி உறவுகள் அம்பேத்கருக்கு செய்த மரியாதையை எல்லாம் நீதிமன்றதிலேயே வெளிச்சமாகிவிட்ட பின், வரிந்துகொண்டு எழுதும் தங்கள் சூட்சுமம் என்ன என்பது அனைவருக்கும் புரியக்கூடியதே கட்டுரைக்குள் அவர் உள்ளதை உள்ளபடியே சொல்லிச் செல்கிறார். தலைப்பில் வேகமான வார்த்தைகளைப் அவர் போட்டதற்குக் கூட, இசுலாமிய மக்களின் ஜமாத்தே ஒன்றுகூடி, அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறியதும், அதற்கு தாங்கள் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற சம்பந்தமில்லாத ஒரு காரணத்தை வலிய முன்வைத்ததகாரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

    இந்த வகையில், தமிழகத்தில் சாதிவெறிக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தொடர்ந்து மேற்கொண்டு வரும் பணியை கவனித்து வருபவன் என்ற அடிப்படையில், அவருக்கு உள்நோக்கம் இருக்கிறது என்பதோ, அவரை நாதரர் என்று சொல்வதோ thavarana விமர்சனமாக இல்லை.

    matham endrume manitham parpathillai enbathaium, thamizhaga arasu dalith-kaluku ethiranathu enbathaium katturai theliuvpaduthi ullathu. nandri.
    munnal buddhist seshachalam a periyardasan a siddarthan a abdullah a.... a ...."inna koovuvaru" (dalith madaikali ippidithan pesuvar)

  • Ragav
    Good article.....Regards to DYFI

  • sureshkumar
    சிறுபான்மையினரை ஆதரிப்பது என்பது பெரும்பான்மை மத சமூகத்தினரின் ஆதிக்கத்திலிருந்து சிறுபான்மையினரின் நலன்களை, உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமே; சிறுபான்மையினரின் மத அடிப்படைவாதங்களை எல்லாம் ஆதரிக்க வேண்டும் என்பது அல்ல. 'மதம் மக்களுக்கு அபின்' என்ற மார்க்ஸின் கருத்துதான் எல்லா முற்போக்காளர்களின் கருத்தும். இஸ்லாம் எத்தகைய சிறந்த மார்க்கமாக இருந்தாலும், அடிப்படையில் அதுவும் கடவுள் என்ற கற்பனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம்தான். மதம், கடவுள், புனிதம் இன்னபிற புண்ணாக்குகளை காரணமாகச் சொல்லி சக மனிதனை அடிமைப்படுத்தும் எதுவொன்றும் அடித்து நொறுக்கப்பட வேண்டியதே! அதைத்தான் வாலிபர் சங்கம் செய்திருக்கிறது.

  • Rajesh
    very Good article

  • முஹம்மது அன‌சு
    தோழ‌ர் ந‌ல்ல‌ ஒரு ப‌டைப்பு :

    இந்த‌ க‌ட்டுரையில் இவ்வளவு விம‌ர்ச‌ன‌ம் வ‌ருவ‌த‌ற்கு கார‌ணம். இந்த‌ க‌ட்டுரையோடைய த‌லைப்பு தான் என்றூ நினைக்கின்றேன்.
    ஏன் என்றால் , அம்பேத்காரையும், த‌லித் ம‌க்க‌ளையும்,தொல் யாமற்றூகின்றார் என்ப‌து அரசிய‌ல் தெரிந்த‌ ப‌ல‌ ந‌ப‌ர்க‌ளுக்கு அது தெரியும் . அதைதாம் நாம் வெண்ம‌ணியில் தொட‌கி கான்கைய‌னுர் வ‌ரையில், த‌லித் ம‌க்க‌ளுக்கு ஒன்னும் செய்ய்வில்லை , எல்லாம் பாவால‌ வேலை என்ப‌துயும் அறிந்தோம் . இஙகு அவ‌ர் ஏன் அப்ப‌டி செய்தார் என்ப‌த‌ற்கு ப‌ல‌ கார‌ணம் இருக்கலாம் . அவ‌ர் தான் ஓட்டு வ‌ங்கியை பாதுகாத்து கொள்ள அப்ப‌டி செய்திருக்க‌லாம். அவ‌ர் எப்ப‌டியாவ‌து போக‌ட்டும் விட்டுவிடுவோம்......
    இந்த‌ க‌ட்டுரைக்கு இவ்வளவு எதிர் விம‌ர்ச‌ன‌ம் வ‌ருவ‌த‌ற்கு கார‌ணம் தோழ‌ர் S.G.R "இசுலாமி அடிப்ப‌டைவாதிக‌ள்" என்ற த‌லைப்பில் சூட்டியுள்ளது தான் என்றூ தெரிக்கின்ற‌து . முத‌லில் தோழ‌ர் ர‌மேஷ் அவ‌ர்க‌ள் இந்த‌ க‌ட்டுரையை இசுல‌மிய‌ எதிர்ப்பு க‌ண்னோட்டத்தில் இருந்து எலுதியுள்ளார் என்ற எண்ண்க்குடாது .அப்ப‌டி இருக்காது என்றூம் ந‌ம்புகின்றோம்.
    இசுலாமிய‌ய‌ர்களுக்கு சிலை வ‌ழிப்பாடு என்ப‌து உண்மை தான் ,ம‌த‌ ந‌ம்பிக்கைக்கு எதிர் ஆனாது என்ப‌தும் உன்மை தான் . ஆனால் அத‌ற்கு த‌லைவ‌ர்க‌ள் சிலை த‌கர்ப்பு என்ப‌து ச‌ரி அல்ல‌. எப்படி அந்த‌ இசுல‌மிய‌ர்க‌ளுக்கு சிலை வழிப்பாடு ம‌த‌ ந‌ம்பிகைக்கு எதிர் ஆன‌தோ! அதே மாறி தான் த‌லித் ம‌க்க‌ளின் விடிவெள்ளியாக இருப்ப‌வ‌ர் மாமேதை அண்ணல் அவ‌ர்க‌ள். ஆத‌லால் அவ‌ர்க‌ளூக்கும் அந்த‌ ஆசை இய‌ல்பாக இருக்க கூடும்......

    நான் ஒரு இசுலாமிய‌னாக‌ தான் இந்த‌ க‌ருத்தை ப‌திவு செய்துகின்றேன் . ஏன் என்று சொன்னால் ஒரு இசுலாமிய‌ன் ந‌டுநிலைவ‌ாதியாக தான் இருக்க‌ வேண்டும் என்று மார்க‌ம் சொல்லுகின்றது .என‌க்கு தெரிந்து , இச்சம்ப‌வ‌ம் ந‌ட‌ப்ப‌த‌ற்கு ஒரு முக்கிய‌ கார‌ன‌ம் உன்டு. முத‌லில் அம்பேத்காரை ஏதோ த‌லித் சாதிக்கு ம‌ட்டும் சொந்த‌ம் என்று இந்திய‌வில் உள்ள அனைத்து த‌லித் ச‌ங்க‌ங்கலும் க‌ட்சிக‌லும் காட்டி கொன்டு இருக்கின்றன‌. அது மாயாவ‌தியில் தொடங்கி தொல் வ‌ரை தொடர்கின்றது.. மேலே இராசகம்பீரத்தான் அண்ணன் சொன்ன‌து உன்மை தான். த‌லித் ம‌க்க‌ளும் இசுல‌மிய‌ர்களும் தொப்புல் கொடி உறவாக இருந்தவ‌ர்க‌ள் தான் . .ஆனால் எப்பொழுது? சுதந்திர‌ம் அடைந்த‌ பிறகு அம்பேத்காரை ச‌ட்ட‌ குழவில் ப‌ங்கு பெற காங்க‌ரசு க‌ட்சி சீட்டு கொடுக‌வில்லை . அப்பொலுது இந்திய‌ன் யீனியன் முசுலீம் லீக் த‌ங்க‌ளுடைய‌ வேட்பாளரை வாப‌சு வாங்க‌ வைத்து அண்ணலுக்கு சீட்டு அளித்தது என்ற வ‌ர‌லாற்றை ம‌றைத்து அண்ணலை த‌லித் கட்சிக்ள் த‌ங்கள் நோக‌த்துக்காக‌ தூக்கி பிடித்த‌து தான் கார‌ண‌ம். ஆதலால் தோழ‌ர் ர‌மேஷ் கூறுவ‌தை ந‌டுனிலையொடு யோசித்த‌ல். இந்த‌ க‌ட்டுரையோட‌ த‌லைப்பு புறியும் என்று ந‌ம்புகின்றோம்.

    குறிப்பு : (ஈராக்கில் கூட சதாம் உசேனுடைய சிலை ப‌ல‌ இட‌த்தில் உள்ளது)

  • எசாலதான்
    எல்லாவித எதிப்புகளையும்,முறியடித்து அம்பேத்கரை நிறுவிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு பெரியாரியவாதி என்கிற முறையில் எனது வாழ்த்துகள். இஸ்லாமியர்களுக்கு வேறு மதத்துக்காரர்களுடைய சிலையை வைத்தால் பிரச்சினை எனலாம். புரட்சியாளருடைய சிலையை வைப்பதில் என்ன பிரச்சினை. இதில் ஹைலைட் என்னவென்றால் எழுச்சி தமிழர் ! ரின் கடிதம்தான் .

  • chellan
    ambedkar ellorullum pothuvanavar endral ethanai muslim veedukali ambedkar padam irukkiruthu? mr.md.ansu veetil kuda irukkathu. ethanai muslim katchi posterkali ambedkar padathai pottu irukkirarkal solla mudiumaa? pazhayapattinam patrithaan rameshbabu solli irukkirar. athai yerkamal , muslimkalai kurai sollakudathu enbathu ??? sappai kattuvathai vittu vitu muthalil thamizh dalit muslimkaluku samathuvam thara parungal

  • madusudan
    fantastic article comrade.truth will allways injures enemys. in 63 years of freedom india till the general mind of people is yet not changed. our struggle only defeat all the variation in the society. red salute for your work.

  • முஹம்மது அன‌சு
    அண்ண‌ன் செல்ல‌ன் அவ‌ர்க‌ளுக்கு,
    த‌ய‌வு செய்து என‌து க‌ருதினை முழுமைய‌க‌ ப‌டிக்க‌ வேண்டும் . அரைகுரைய‌க‌ ப‌டித்துவிட்டு க‌ருது த‌ருவ‌து என்ப‌து ஒரு ந‌ல்ல‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு அழுக‌ல்ல.
    நான் மேலையே குறிப்பிட்டு விட்டேன். இசுல‌மிய‌ர்க‌ளுக்கு உருவ‌ வ‌ழிப்பாடு அவ‌ர்க‌ளின் ம‌த‌ ந‌ம்பிகைக்கு எதிர‌ன‌து என்று. ஆனாலும் அம்பேத்காரின் சிலை உடைப்பு என்ப‌து த‌வ‌ரான‌ செய‌ல்ப்பாடு தான் என்று எழுதினேன்.
    அதை முழுமைய‌க‌ புரிந்துக் கொள்ளாம‌ல். ஏதோ பேச‌ வேண்டும் என்ற கார‌ணத்துக்காக பேச‌ வேன்டாம் ..
    அம்பேத்க‌ரை போஸ்ட‌ரில் போட்ட‌ தான் அண்ணலை ஏற்றதாக அற்தமா.அப்ப‌டி என்றால் அண்ணலை ச‌ட்ட‌குலுவில் ப‌றிந்துரை செய்ய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லையே முசுலிம் லீக்குக்கு..

    ஒரு த‌லித், ம‌த‌ம் மாறுவ‌தற்கு முக்கிய‌ கார‌ணம்,ச‌ம‌த்துவ‌ம் தான். த‌ன‌க்கு அந்த‌ ம‌த‌த்தில் ச‌ம‌த்துவ‌ம் கிடைக்கும் என்ற ந‌ம்பிகை தான் . அது இசுல‌மாக‌ இருந்த‌லும் ச‌ரி கிறிஸ்டியானிட்டியாக‌ இருந்த‌லும் ச‌ரி...
    இதுவ‌ரை இந்திய வ‌ர‌லாற்றில் எங்கையாவ‌து ஒரு த‌லித் முசுலிம் ப‌ள்ளிவாச‌லுக்கு உள்ளே வ‌ர‌ த‌டை செய்ய‌ப்பட்டது என்று கூற‌‌ முடியுமா.
    முத‌லில் செல்ல‌ன் அண்ண‌ன், நான் முசுலிமாக‌ இருப‌தினால் முசுலிமக‌ளுக்கு ஆத‌ர‌வ‌க‌ இருப்பேன் என்ற‌ குறுட்டு ந‌ம்பிக்கையை விட்டுவிடுங்க‌ள்.

    நல்ல ப‌தில்க்கு காத்திருக்கின்றேன்................

  • மால்கம் X இராசகம்பீரத்தான்
    Chellan !


    முதலில் முஸ்லீம் வீடுகளில் அவர்களின் அப்பா அம்மா பாட்டி தாத்தா என ஒருவரின் புகைப்படம் கூட காண முடியாது.

    பிறகு எந்த புகைப்டம் வேண்டும் என எதிர் பார்கிறீர்கள்?.

    இந்தியாவில் மீது பற்று வேண்டும் என்றால் “ பாரத மாத “ புகைபடம் வீடுகளில் மாற்றி கொள்ள வேண்டுமா?.

    வீடுகளில் புகைபடம் இல்லாத தலைவர்களை மதிக்க வில்லை என்று புரிந்து கொள்வீர்களா?..

    காமராசர் படம் இசுலாமியர்கள் வீட்டில் இல்லை என்றால் இசுலாமியர்கள் காமராசருக்கு எதிரானவர்கள்.

    காந்திபடம், நேரு படம் இல்லை என்றால் , தேவர் படம் இல்லை என்றால் ...... தேசிய தலைவர்களை மதிப்பது இல்லை என்பதாகுமா தோழரே?.

    உருவ சிலைகளும் ,சித்திரங்களும் படங்களும் தான் ஒருவனின் நம்பக தன்மையை தீர்மாணிக்கும் என்றால்
    மக்கள் கூட்டம் எல்லாம் சித்திர கலை கூடங்களுக்கும், போட்டோ கடைகளுக்கும் தான் படை எடுப்பார்கள்.

    போஸ்டர்களில் படம் போட்டால் மகிழ்ந்து கரைவதும்,
    வாழ்க வாழ்க கோசம் போட்டால் உச்ச பெருமிதம் அடைவதும், தனக்கு தானே சிலை வைத்து கொண்டால் மோட்சம் போன் பேரு அடைவதும், இன்று நாம் காணும் கலிசடை அரசியல் தலைவர்களும் வருடிகளும் தான்.

    தன்னையே அழித்து சமுக விடுதலைக்கு போராடிய எந்த தலைவனும் அதை விரும்ப மாட்டான்.

    எத்தனை தியாகங்கள் செய்திருந்தாலும்,
    இசுலாமியர்கள் ஒவ்வொரு முறையும் வேல்வி செய்து
    உங்களிடம் நம்பகத்தன்மையை பெற வேண்டுமா?

    ஏன் புகைபடங்களும் ,உருவ சிலைகளும் இஸ்லாமியர்களின் வீடுகளில் இல்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்

    போஸ்டருக்கும், சிலைகளுக்கும் மணிமண்டபம் கட்டுவதிலும் கவணம் செலுத்துவதை விட்டு
    கருத்துகளை வாழவைய்யுங்கள். அவர்கள் காட்டிய நல் வழிகளை உலகம் முழுதும் பரப்புங்கள், அதுதான் நீங்கள் அண்ணலுக்கு காட்டும் உண்மையான மரியாதை.

  • ரஹிம் மரைக்காயர்
    இங்கே தலித்துகளும் அரபியர்களான ராவுத்தர் மரைக்காயர்களும் தொப்புழ்கொடி உறவென்றெல்லாம் பிதற்றியிருக்கிறார்கள். அரசியல் பேச வேண்டுமானல் அது நன்றாக இருக்கலாம். ராவுத்தர்கள் மரைக்காயர்கள் ஆகியோர் இந்த நாட்டின் மக்கள் அல்லர். நாங்கள் அரபுகள். நாங்கள் இங்கே பெண்ணெடுத்திருந்தாலும் அரபுகளே. ஆனால், இங்கே எங்களை ஒழிக்க ஒரு சதி திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியே ஜெயினுலாபுதீன், ஜவஹிருல்லா போன்றோரின் இஸ்லாமிய மத பிரச்சாரம். தலித்துகளை எல்லாம் இஸ்லாமிய மதத்துக்குள் கொண்டு வந்து ஆட்சியை பிடிக்கவேண்டும் என்ற ஆசைக்காக, குலப்பெருமையை நாசம் செய்கிறார்கள்.

    காஃபா என்பது நபிகள் நாயகத்தின் (ஸல்) அவர்களின் சுன்னா ஆகும். அவர் தனது மகள் பாத்திமா(ரலியை) அலி(ரலி)க்கு திருமணம் செய்துவைத்தார். அலி பானு ஹாஷிம் குலத்தை சேர்ந்தவர். பாத்திமாவை தனக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று அபு பக்கர் கேட்டுக்கொண்டதற்கு மறுத்தார். அபு பக்கர் பானு தைம் குலத்தை சேர்ந்தவர். ஆகையால், பானு ஹஷிமுக்கு பின்னால் அது வருகிறது. இதுவே காஃபா. ஆகும். சாதி பிரிவின் வழியே திருமணம் முடித்தலே நபிகள் நாயகத்தின்(ஸல்) வழியாகும். அதனை விட்டு திருமணம் செய்யலாம். ஆனால், சாதி பிரிவின் வழியே திருமணம் செய்வதே விரும்பத்தக்கது என்பதே நபிகள் நாயகத்தின்(ஸல்) அறிவுரையாகும்.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலேயே குறைஷி பிரிவினர் இஸ்லாமை தழுவாதவர்கள் பலராகவும் தழுவியர்கள் பலராகவும் இருந்தார்கள். இஸ்லாத்துக்குள் வந்ததும் இங்கே குறைஷி கிடையாது, அன்சாரி கிடையாது. எல்லோரும் முஸ்லீம்கள் என்று கூறிவிடவில்லை. குறைஷிகள் இன்றும் இருக்கிறார்கள். அன்சாரிகள் இன்றும் இருக்கிறார்கள். இஸ்லாம் அவர்களுடைய ஜாதிகளை அழித்துவிட்டதா? பனு குறைஷி, பானு தைம், பானு ஹனிபா ஆகிய பிரிவுகள் இன்றும் இருக்கின்றன. ஆகவே தலித்துகள் இஸ்லாமுக்குள் வந்தாலும் அவர்கள் பின்னால் அவர்களது ஜாதிப்பெயர் சூட்டி அழைப்பதே இஸ்லாத்துக்கு பொருத்தமானதாகும்.

    இவர்கள் எக்காலத்திலும் மேலான அரபுகளான ராவுத்தர்கள் மரைக்காயர்களுக்கு இணையாக மாட்டார்கள். ஆகவே இந்த தொப்பூழ்கொடி உறவு என்றெல்லாம் பேச வேண்டாம்.

    தலித்துகள் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது. அவர்கள் இஸ்லாத்தை தழுவுவதை வரவேற்கிறோம். ஆனால், அவர்கள் ராவுத்தர் மரைக்காயர்களுக்கு சமமானவர்கள் என்று கருதிக்கொள்ளவேண்டாம் என்பதே நாங்கள் கூறுவது.

  • chellan
    magizhchi. udanukudan pathil kidaipathil. thoppul kodi urauv kurithu thiru.rahim sollittaru. dalith makkal indu, muslim, christian ena yaraga irunthalum matham potrum manitharkal mariyathai kodupathilai. butha mathathilum avargal new buthist. matra mathangalm appidithan enbathrku utharnamthaan eda otukidu ketkum nilaiel dalit makkal iruppathu. silai vaipathu anbin adayalam. avaruku avere silai vaithu kondaal nanbarkal thiru.md ansu, thiru.rasakambirathan vimarsanam sari. matravarkal vaipathu eppadi thavaragum. athuvm dalith makkal pothu idathil puratchiyalarin silai vaipathu viduthalai, urimaien adaiyalam. adimai vazhkkai vazhpavarkaluku purium. athaiyum aethirpavarkalaithan kurai solkirar endral. athai thisai thirupuvathu sariya? dalithkal veetil appa amma padam illavittalum ella thalaivarkalin padangalum irukirathe? athanaalthan engal ethirparpum appadi irukirathu! medaiel dr.ambedkari potri pesuvathu nagarigamagave niraiya peruku iruku. nijathil appadi irupathilai enbathu engalu theriyam. kuraiai kurai endru thane solla vendum.
    (thamizhil type chiya mudinthaal vivatham innum palan ullathaga irukkum ena inaikiren)
    nandri

  • பாவண்ணன்
    மரைக்காயரின் கருத்தைப் பார்க்கும் போது, ரமேஷ்பாபு போட்டிருக்கும் தலைப்பு தவறல்ல என்றே தெரிகிறது.

    இசுலாத்திற்குள்ளும் சாதி உள்ளது என்பதை மரைக்காயர் எவ்வித கூச்சமும் சொல்கிறார். அந்த சாதிகளுக்குள்ளும் தங்களுடைய மரைக்காயர் பிரிவுதான் உயர்வானது; அந்த இடத்திற்கு பிற சாதிகளைச் சேர்ந்த இசுலாமியர்களே வரமுடியாது; தலித்துக்கள் மதம் மாறினாலும் அவரவது சாதி தொடர வேண்டும் என்று அவர் அடுக்கிக் கொண்டே போவதைப் பார்த்தால், வள்ளலார் சொன்னது போல மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும் என்று அந்த அல்லாவிடம் இறைஞ்சத் தோன்றுகிறது.

  • Mohamed
    அன்பு சகோதரர்களுக்கு,

    இந்த கட்டுரைக்கு விமர்சனமாக என் கருத்துக்களை உங்கள் முன் வைக்க இப்போது நான் வரவில்லை. இதிலிலுள்ள ஒரு விமர்சன‌த்திற்கு மட்டும் கருத்து கூறவே வந்துள்ளேன்.

    இதில் இஸ்லாத்தில் இல்லாத‌வ‌ற்றை தன் இஷ்ட‌த்திற்கு திரித்து எழுதியுள்ள 'ரஹிம் மரைக்காயர்' என்ப‌வ‌ர் முதலில் ஒரு இஸ்லாமியரே அல்ல என்பது அவருடைய வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. யாரோ ஒரு இஸ்லாமிய எதிரியின் எழுத்துக்கள்தான், இஸ்லாமிய பெயரில் வெளியாகியுள்ளது. நேரடியான கருத்துப் பரிமாற்றங்க‌ளைத்தவிர, இணையத்தில் வரும் கருத்துக்கள் எல்லாம் ஒரு மதத்தைச் சார்ந்த பெயரில் வெளியாகும்போது, அதை தெளிவு படுத்திக்கொள்ளமல், 'ஓ...அப்படியா?' போடுவது, 'எவ்வித கூச்சமுமின்றி சொல்கிறார்' என்று வாய்மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டு அப்படியே நம்புவதெல்லாம் சிறுபிள்ளைத்தனம் அல்லது அப்பாவித்தனம்!

    //நாங்கள் அரபுகள். நாங்கள் இங்கே பெண்ணெடுத்திருந்தாலும் அரபுகளே// இந்த வார்த்தையை எந்த இந்திய முஸ்லிம்களும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. காரணம் அது உண்மையல்லவே! இதற்கு பதில், சகோதரர் இராசகம்பீரத்தான் அவர்களின் வார்த்தையை வழிமொழிகிறேன். இதோ,

    "இன்றைய இஸ்லாமியர்கள் எவரும் அரபு நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் குடியமர்ந்தவர்கள் அல்ல, நேற்றைய ஆதிதிராவிடர்களும் சாதிய கொடுமைகளால் வாழ்வுரிமை இழந்தவர்களும் தான் இன்றைய இஸ்லாமியர்கள்.." சகோதரர் இராசகம்பீரத்தான் அவர்களுக்கு எனது நன்றி!

    க‌வ‌னிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ (இஸ்லாத்திற்கு எதிரான‌) அந்த‌ விஷ‌க்க‌ருத்துக்க‌ள்:

    1. //சாதி பிரிவின் வழியே திருமணம் செய்வதே விரும்பத்தக்கது என்பதே நபிகள் நாயகத்தின்(ஸல்) அறிவுரையாகும்.//

    2. //ஆகவே தலித்துகள் இஸ்லாமுக்குள் வந்தாலும் அவர்கள் பின்னால் அவர்களது ஜாதிப்பெயர் சூட்டி அழைப்பதே இஸ்லாத்துக்கு பொருத்தமானதாகும்.//

    3.//இவர்கள் எக்காலத்திலும் மேலான அரபுகளான ராவுத்தர்கள் மரைக்காயர்களுக்கு இணையாக மாட்டார்கள். ஆகவே இந்த தொப்பூழ்கொடி உறவு என்றெல்லாம் பேச வேண்டாம். //

    4.//அவர்கள் ராவுத்தர் மரைக்காயர்களுக்கு சமமானவர்கள் என்று கருதிக்கொள்ளவேண்டாம் என்பதே நாங்கள் கூறுவது.//

    அட‌ப்பாவி ம‌னுஷா! இஸ்லாத்தில் இல்லாத இந்த நச்சுக்கருத்துகளைக் கூறி இஸ்லாத்திற்கு எதிரான விஷவித்தை தூவ நினைத்தால், அது விழலுக்கிரைத்த நீராகத்தான் போகும். அதனால் பாதிக்கப்பட போவது இஸ்லாமோ இஸ்லாமியர்களோ அல்ல!

    நபி(ஸல்) அவர்கள் ஜாதிகளை அழித்தார்கள், அடிமைத்தனத்தை ஒழித்தார்க‌ள்! அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமிய மார்க்கம், நிறத்தாலும் பணத்தாலும் சாதிகளாலும் பதவிகளாலும் பிரிந்து வாழ்ந்த இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ச‌ம‌த்துவ‌த்தை நிலைநாட்டிய‌து!! இஸ்லாத்தில் புதிதாக‌ இணைந்த‌வ‌ர்க‌ள், பிற‌ப்பால் இஸ்லாத்தில் இருப்ப‌வ‌ர்க‌ளைக் காட்டிலும் மேன்மையான‌வ‌ர்க‌ள் என்று பரைசாற்றிய, அவர்களோடு தோளோடு தோள் நின்று தொழவேண்டும் என்று பழக்கப்படுத்திய‌ ஒரு உன்ன‌த‌ மார்க்க‌த்தை மாசுப‌டுத்த‌, 'ரஹிம் மரைக்காயர்' என்ற‌ பெய‌ரில் வ‌ந்து தெரிவித்துள்ள‌ க‌ருத்துக்களில் உண்மை உள்ளதா என்று ஆராய்ந்து பதில் சொல்லுங்கள் தோழர்களே! இல்லாவிட்டால் அவரின் கருத்துக்களை, ஒரு இஸ்லாமிய கருத்து என்று நம்பிவிடாமல் அலட்சியமாவது செய்யுங்கள்! இதுவே நடுநிலையான சிந்தனையாக இருக்கமுடியும்.

  • sheikfareeth
    Islamiya margathil jaadhi irukkiradhu endru mudhal mudhalil sollum Nanbar thiru. Maraikayar avargale, neengal maraikayar endra peyaril eludhinaal ellorum nambi viduvaargal endru enninaal adhu thangaladhu thavaru thavira veru edhum illai. ungaladhu indha veen muyarchi thozhiviyaye thazhuvum.

    Raowthar, Maraikayar matrum lebbai endra pirivugal seidha thozhilal erpatta thooya thamizh peyargal thavira veru edhuvum illai. indhu madhathil ulladhu pondra pirivugal kidayadhu. Anaivarum iraivan mun samam adhu yaaraga irundhaalum sari.

    Neengal dalit sagodharargalai eatru kolla mudiyaadhu endru solliyiruppadhu ungal sondha karuthu, islam kidayadhu. ungaladhu pinnootaathai padikkum pozhudhu maraikayar eludhiyadhu pondra thotram illai, edho sangara mada madakkural polulladhu. neengal odukkappattavargalai etrru kollavillai endral, ungalai yaarume eatru kolla maattargal.

    Nanbar Ramesh babu avargalukku, muslim endral thavaru seiya maattan endra artham kidayadhu, engavadhu thavaru seidhal uriya murayil suttikaaatavum adhe samayathil nammai chuttri irukkum oonaigal naammidaya pagaiyai valarka ungal karuthukkal thunai pogamal kavanamaga irukkumaru kettu kolkiren. nandri

  • Anonymous
    அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறியதும், அதற்கு தாங்கள் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற சம்பந்தமில்லாத ஒரு காரணத்தை உண்மையான முஸ்லீம்கள் சொல்லியிருக்கமாட்டார்கள் அது அந்த பகுதி அரசியல் பைத்தியம் அப்துல் ஹை முன்வைத்த காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

    இங்கே இன்னொரு பைத்தியம் ரஹீம் மரைக்காயர் என்ற பெயரில் உளரிக்கொட்டுகிறது. இஸ்லாத்தில் எவ்வித சாதியமும் கிடையாது. முஸ்லீம்களிடையே ஒரு சில கருத்துவேறுபாடு இருக்கலாம். அது சாதி அடிப்படையில் இல்லை. வணக்க முறையில் வேறுபாடுதான்.

    எப்படியோ அண்ணல் அம்பேத்கர் சிலைக்காக போராடிய அந்த மாந்தர்களுக்கு பாராட்டுகள்.

  • முஹம்மது அன‌சு
    உண்மையாக‌வே, ராவுத்த‌ர் ம‌ரைக்காய‌ர் ஒரு ம‌ரையாக‌ தான் இருக்க‌ வேண்டும்..

    க‌ம்யூணிஸ்ட்க்ள் ப‌ய‌ன்ப்ப‌டுத்தும் "தோழ‌ர்" என்ற‌ வார்த்தையை முத‌ல்முத‌லில் ப‌ய‌ன்ப்ப‌டுத்திய‌தே ந‌பி(ஸல்) அவ‌ர்க‌ள் தான். அவ‌ர், அவ‌ர் கூட‌ இருந்த‌ ந‌ன்ப‌ர்க‌ளை அப்ப‌டி தான் அலைத்த‌ர் ...... அவ‌ர் எல்லாரிட‌மும் தோழைமை உணர்வோடு தான் இருந்தார்.... அப்போழுது சாதி எங்க‌ இருந்து வ‌ந்த்து. இத‌னால் ராவுத்த‌ர் ம‌ரைக்காய‌ர் ஒரு இசுல‌மிய‌னாக‌ இருக்க‌ முடியாது என்று தான் நினைக்கிரேன்.......... ஆதலால்‌ ம‌ரைக்காய‌ர், இசுலாம் என்றால் என்ன‌ என்று தெரிந்த்து கொண்டு க‌ருத்து தெரிவித்தால் ந‌ல்லா இருக்கும் என்று நினைக்கிரேன்......

    ந‌ன்றி தோழ‌ரே (முக‌ம்மது), ந‌ல்ல‌ ஒரு ப‌தில் .....

  • பாவண்ணன்
    மரைக்காயரின் கருத்து தொடர்பான எனது விமர்சனத்தில் ஒருபகுதியை எடுத்துக் கொண்டு, அது சிறுபிள்ளைத்தனம் அல்லது அப்பாவித்தனம் என்று முகம்மது எழுதியிருக்கிறார்.

    ஆனால் அவர், ஏற்கெனவே நான் எழுதியிருப்பதை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இருப்பினும் மீண்டும் அதை தருகிறேன்:

    ராசகம்பீரத்தான் சொல்வதில் ஒருபகுதி ஏற்கத்தக்கது.
    அவர் சொல்வது போல ஒரு சில அரசியல் குரூர புத்திக்காரர்களுக்காக இசுலாம் சமயத்தை தொடர்புபடுத்தி விமர்சிக்க தேவையில்லைதான்.
    மேலும் தமிழகத்தில் தலித்- இசுலாமியர் ஒற்றுமை பாராட்டும்படியாகவும், அந்த ஒற்றுமை ஆர்எஸ்எஸ்- பாஜக மதவெறிக் கும்பலை இறுதிவரை எதிர்க்கும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகவும் இருக்கிறது என்பதும் மறுக்க முடியாதது.
    ரமேஷ்பாபுவும் இதை ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறேன். இதற்கு இடையில் பகையுணர்வு ஏற்படுவதை அவர் விரும்பமாட்டார் என்றார் நம்புகிறேன்.
    ஏனெனில் அவரது கட்டுரையின் தலைப்புத்தான், ஏற்க முடியாததாக இருக்கிறதே தவிர, மற்றபடி கட்டுரைக்குள் அவர் உள்ளதை உள்ளபடியே சொல்லிச் செல்கிறார். தலைப்பில் வேகமான வார்த்தைகளைப் அவர் போட்டதற்குக் கூட, இசுலாமிய மக்களின் ஜமாத்தே ஒன்றுகூடி, அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்று கூறியதும், அதற்கு தாங்கள் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்ற சம்பந்தமில்லாத ஒரு காரணத்தை வலிய முன்வைத்ததும் காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.//
    - இவ்வாறு நான் எழுதியிருக்கிறேன்.

    சரி அது போகட்டும்! இஸ்லாம் சமயம் என்ன சொல்கிறது என்பதை ஆராயாமலேயே அப்பாவித்தனமாக நான் கருத்து தெரிவித்து விட்டதாகவே இருக்கட்டும். இந்நிலையில், முகமது அவர்களாவது உள்ளதை ஆராய்ந்து சொன்னால் அவருக்கு என் நன்றிகள்...

    குரைஷி, அன்சாரி, தைம், அனிபா, காபா என்பனவெல்லாம் சாதிப்பிரிவுகள் என்றும், இப்பிரிவுகள் இன்றும் இஸ்லாத்தில் இருக்கின்றன என்றும் மரைக்காயர் சொல்கிறார்... (இவர் முஸ்லிமா அல்லவா என்பதற்குள் நான் செல்லவில்லை)
    மேலும், பானு ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த பாத்திமாவை, பானு தைம் குலத்தைச் சேர்ந்த அபுபக்கர் திருமணம் செய்து கொள்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) மறுத்தார் என்றும் மரைக்காயர் அடுக்கிக் கொண்டு போகிறார்....

    இதில் எந்தளவுக்கு உண்மை அல்லது பொய் இருக்கிறது என்று முகம்மது அவர்கள் விளக்கினால், நான் மட்டுமல்ல பலரும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும். பொத்தாம் பொதுவாக 'இஸ்லாம் சாதிக்கெதிரானது' என்று சொல்வதை விட...!

  • Elango
    We can't wish away what Rahim has said above. It is true that there are castes within Islam. Muslims in South Asian countries like India, Pakistan, Bangladesh have castes and muslims in countries like Saudi Arabia, Syria, Jordan, Iraq have their 'tribes' which are similar to castes in India. Go to Saudi Arabia, first of all they will ask you if you are a muslim or kafir. If you say you are a muslim, they will ask you if you are Sunni or Shia. If you say you are a sunni, then the next question would be if you are an arab or not. If you are not an arab, then you are treated as a low caste muslim. Ask any muslim who has gone to any of the arab countries, they will admit private that this is true.

    Within the Arabs, there are tribes and tribes are arranged in a complex hierarchy. The nomadic tribes are treated as dalits of the arab world. Above these lie the problem of the black muslims in arab world. They are treated worse. Iraq had wiped out its black muslims through systematic pogroms over the past two centuries.

    Indian muslims have their own divisions. There are high caste muslims of arab descent, often called Ashraf muslims. The Sheikhs, Sayeeds, Khans fall in this category. There are 'ajlaf' low caste, converted muslims of Indian ancestry. There are 'arsals. the dalit muslims, whose plight within the Islamic community is worse than the dalits in hindu fold.

    Let the muslims here not fool everyone claiming that Islam has brotherhood. How many low caste muslims have become presidents or primeministers in Pakistan or Bangladesh so far? Jinnah, Mirza Habib, Ayub Khan, Zulfikar, Zia ul hulk, Benazir,Nawas Sharif, Musharraf, Zardari - not one of them belong to ajlaf or arsal castes. They are all high caste ashraf muslims. In fact, the sindh high caste muslims or punjabi high caste muslims have always held power in Pakistan.

    So much so, even the recent war on terror in the pakistani hinterlands is fought on caste lines. With some muslim castes fighting on the side of taliban and some fighting or helping the pak armed forces.

    So much so for the bogus claim of islamic brotherhood!

  • Mohamed
    நண்பர் பாவண்ணன் அவர்களே! ஏற்கெனவே நீங்கள் எழுதியிருந்த‌தை நன்றாகவே படித்தேன், உங்களின் நடுநிலை வார்த்தைகளைக் கண்டு மகிழ்ந்தேன். ஆனால், அவையெல்லாம் மறக்கடிக்கப்படும் விதத்தில் நீங்கள் பதிந்த அடுத்த வார்த்தைகளுக்காகதான் நான் என் கருத்தை பதியும்படி ஆனது. உங்களின் பார்வைக்காக அவற்றை இதோ முன் வைக்கிறேன்.

    //மரைக்காயரின் கருத்தைப் பார்க்கும் போது, ரமேஷ்பாபு போட்டிருக்கும் தலைப்பு தவறல்ல என்றே தெரிகிறது//
    //.....அவர் (மரைக்காயர்)அடுக்கிக் கொண்டே போவதைப் பார்த்தால், வள்ளலார் சொன்னது போல மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும் என்று அந்த அல்லாவிடம் இறைஞ்சத் தோன்றுகிறது// இதில் நீங்க‌ள் அந்த‌ போலி ம‌ரைக்காய‌ரின் பேச்சை ஆமோதித்து எழுதிருக்கிறீர்க‌ள் அல்ல‌வா? உங்க‌ளைப்போல் இன்னும் எத்த‌னை அப்பாவிக‌ள் இப்ப‌டி அந்த‌ போலி ஆசாமி, 'ரஹிம் மரைக்காயர்' ஒரு உண்மையான‌ முஸ்லிம் என்று ந‌ம்புவார்க‌ளோ என்றுதான் அதை எடுத்துக்காட்டினேன். த‌வ‌றாக எதுவும் சொல்ல‌வில்லையே! அப்ப‌டி இத‌னால் நீங்கள் ம‌ன‌ம் வ‌ருந்தியிருந்தால் மன்னிக்கவும்!

    ஆனால், இப்போது அந்த‌ போலி ஆசாமி சொன்ன‌தில் எந்தளவுக்கு உண்மை அல்லது பொய் இருக்கிறது என்று விள‌க்கிக்கேட்டீர்க‌ளே, இது மிக‌வும் ம‌கிழ்ச்சியைத் த‌ருகிற‌து. ந‌ன்றி ந‌ண்ப‌ரே! உங்க‌ளுக்காக‌வும் உங்க‌ளைப் போன்ற‌ ஆர்வ‌முடைய‌வ‌ர்க‌ளுக்காக‌வும் இஸ்லாத்தைப்பற்றிய என்னுடைய‌ சில‌ விள‌க்க‌ங்க‌ள்:

    //குரைஷி, அன்சாரி, தைம், அனிபா, காபா என்பனவெல்லாம் சாதிப்பிரிவுகள் என்றும், இப்பிரிவுகள் இன்றும் இஸ்லாத்தில் இருக்கின்றன என்றும் மரைக்காயர் சொல்கிறார்... //

    "....மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு நம்பிக்கை கொண்டோருக்குத் தன் அருளினால் நேர்வழி காட்டினான். இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்."(அல்குர்ஆன் 2:213)

    மேலும், நபி (ஸல்) அவர்கள் தங்களின் ஹஜ்ஜின்போது ஆற்றிய உரையில் கூறும் போது, "அல்லாஹ்வின் வேதப்படி உங்களை வழி நடத்துகின்ற அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக்கப்பட்டாலும் அவரது சொல்லையேற்று அவருக்குக் கீழ்படியுங்கள்" என்று கூறினார்கள். (முஸ்லிம், 3750) அதன் தொடர்ச்சியில்,

    "கறுப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கறுப்பரோ சிறந்தவரல்லர், அரபியரை விட அரபியல்லாதவரோ, அரபியல்லாதவரை விட அரபியரோ சிறந்தவரல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்!" என்று கூறினார்கள்.

    "தங்கள் மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவுகளை உண்டாக்கிவிட்ட‌, இணை கற்பித்தோரில் நீங்க‌ளும் ஆகிவிடாதீர்க‌ள்."(அல்குர்ஆன் 30: 32)

    "த‌ம‌து மார்க்க‌த்‌தைப் பிரித்து, ப‌ல‌ பிரிவுக‌ளானோரின் எந்த‌க் காரிய‌த்திலும்(ந‌பியே) உம‌க்குச் ச‌ம்ம‌ந்த‌மில்லை.அவ‌ர்க‌ளுடைய‌ விஷ‌ய‌மெல்லாம் அல்லாஹ்விட‌மே உள்ளது.அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி முடிவில் அவ‌னே அவ‌ர்க‌ளுக்கு அறிவிப்பான்."(அல்குர்ஆன் 6:159)

    இங்கு சொல்ல‌ப்ப‌ட்ட‌ குர்ஆன் வ‌ச‌னங்க‌ளையும் ந‌பிமொழிக‌ளையும் க‌வ‌னியுங்க‌ள்!

    நிறம், இனம், மொழி, உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாட்டிற்கு இஸ்லாத்தில் அறவே இடமில்லை! அப்ப‌டி பெருமைப்பாராட்டி திரிப‌வ‌ன், ந‌ண்ப‌ர் இள‌ங்கோ அவ‌ர்க‌ள் மேலே சுட்டிக்காட்டிய‌ அரேபிய‌ர்க‌ளாக‌ இருக்க‌ட்டும், வேறு எந்த‌ முஸ்லிமாக‌ இருக்க‌ட்டும் அவ‌ன் இஸ்லாத்தைவிட்டு வெளியில் நின்று பேசுப‌வ‌னாக‌தான் அவ‌னை இஸ்லாம் ம‌திப்பிடுகிற‌து. ஆக‌, அவ‌ர்க‌ளைப் போன்றோர்க‌ளுக்கு இஸ்லாம் பொறுப்பேற்காது. யார் இஸ்லாத்தை ச‌ரியாக‌ க‌டைபிடித்து வாழவில்லையோ அத‌ற்கு அவ‌ர்க‌ளே பொறுப்பாளிக‌ள்! இஸ்லாம் இப்படியெல்லாம் சொல்லவில்லையே, நீங்கள் இப்படி வாழ்கிறீர்களே என்று அப்படி சாதிப்பெருமை கொண்டு நடப்பவர்களை முகத்தில் அறையும்படி நீங்கள் கேட்கலாம்! ஆனால், அதைவிடுத்து இஸ்லாமிய‌ மார்க்கத்தைத் திரிப்பதிலேயே தங்களை ஈடுபடுத்திக் கொள்ப‌வ‌ர்கள்தான் ஏராள‌ம்! அதில் மேற்ப‌டி போலி ஆசாமியும் (ரஹிம் மரைக்காயர்) ஒருவ‌ர்! இப்படிப்பட்டவர்களைப் பார்ப்பது எங்க‌ளுக்கு புதித‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ளே!

    //மேலும், பானு ஹாஷிம் குலத்தைச் சேர்ந்த பாத்திமாவை, பானு தைம் குலத்தைச் சேர்ந்த அபுபக்கர் திருமணம் செய்து கொள்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) மறுத்தார் என்றும் மரைக்காயர் அடுக்கிக் கொண்டு போகிறார்....//

    பனூ ஹாஷிம் என்ற உயர்குலமாக அன்று கருதப்பட்ட ஒரு குலத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்பது உண்மைதான்! ஆனால், தான் பிறந்த குலத்தை அன்றைய உலகம் உயர்வாக மதிக்கிறதே என்பதால் குலப்பெருமை கொண்டார்களா அண்ணல் நபி? நாம் அனைவரும் ஒரே சமுதாயமே, இறைவன் முன் அனைவரும் சமமே என்றுரைத்து, அதை தன் வாழ்விலும் செய்துக்காட்டி சாதீயத்துக்கு சாவு மணியடித்தார்கள்! தன் ம‌க‌ள் ஃபாத்திமாவை அபூபக்கர்(ரலி)அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மறுத்தார்கள் என்பதெல்லாம் இட்டுக்கட்டிய பொய்! அதே அபூபக்கர்(ரலி)அவர்களின் ம‌க‌ளார் ஆயிஷா(ர‌லி) அவ‌ர்க‌ளைதானே ந‌பி(ஸ‌ல்)அவ‌ர்க‌ள் ம‌ண‌முடித்தார்க‌ள்? மேலும், த‌ன்னுடைய‌ குல‌த்தில் பிற‌க்காத‌ த‌ன் வ‌ள‌ர்ப்பு ம‌க‌னான‌ ஜைத்(ர‌லி)அவ‌ர்க‌ளை, த‌ன் சொந்த‌ மாமி ம‌க‌ளான‌ ஜைன‌ப்(ர‌லி)அவ‌ர்க‌ளுக்கு ம‌ண‌முடித்துவைத்தார்க‌ள். இதுபோன்ற எண்ணற்ற சம்பவ‌ங்கள் நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையில் காட்டமுடியும். 'ரஹிம் மரைக்காயர்' என்ற மேற்படி போலி பெயர் கொண்ட அந்த நபர், பொய்யாக செய்திகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அது அவருக்கு சுலபமாக இருக்கலாம். ஆனால், அதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் காட்டி அவர் நிரூபிக்கமுடியாது!

    'முஹாஜிரீன்கள்' என்போர் மக்காவிலிருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்காக தன் சொந்த ஊரைத் துறந்து வந்தவர்கள். அவர்க‌ளை அரவணைத்தவர்கள்தான் 'அன்சாரிகள்'. இவர்களிலும் உயர்வு தாழ்வு கிடையாது. நண்பர் இளங்கோ சொன்ன ‌ச‌ன்னி, ஷியா என்ற சொல்லப்படும் பிரிவுகளை எடுத்துக்கொண்டாலும், இதுபோன்ற இன்னும் எத்தனை பிரிவுகளானாலும், அவையெல்லாம் வெறும் கொள்கைக‌ளின் அடிப்படையில் தாங்க‌ளாக‌ பிரிந்துக்கொண்ட‌ பிரிவுக‌ளே அன்றி, அவைகள் சாதிகளோ வகுப்புகளோ கிடையாது. இறுதியாக‌ ஒன்றை மேற்கோள் காட்டி என் ப‌திவை நிறைவு செய்கிறேன்.

    //ஒலிம்பிக்கில் த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம் வாங்கிய‌ போது க‌ருப்ப‌ர் என்ற நிற‌வெறியின் கார‌ண‌மாக அமெரிக்க அரசால் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்ட குத்துச்சண்டை வீரர் கேஸிய‌ஸ் கிளே, ஓக்லஹாமா ந‌தியில் த‌ன‌து ப‌த‌க்க‌த்தை தூக்கி வீசிவிட்டு பிற்கால‌த்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு கார‌ண‌ங்க‌ள் இல்லாம‌லில்லை.

    மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைக‌ள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார், தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாம் மார்க்கத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.

    குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்தான் தொழுகை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ற உய‌ர்சாதிய‌ கோட்பாடுக‌ள் இங்கு செல்லாது. ஒரு த‌லித் இனத்தவர் இஸ்லாத்தை ஏற்று கொண்டாலும் கூட‌ (அதன் முறைகளை தெரிந்திருக்கும் ப‌ட்ச‌த்தில்) ம‌றுக‌ணமே அவர் தொழுகை ந‌ட‌த்த‌லாம். ம‌த‌ங்கள் ம‌ட்டுமே பிரிவினையை வ‌ள‌ர்க்கின்ற‌ன என கூக்குர‌லிடும் நாத்திக‌ர்களும் க‌வ‌னிக்க‌ வேண்டிய‌ விஷ‌ய‌ம் ஒன்று மட்டுமே! இஸ்லாம் மார்க்க‌த்தில் சாதிக‌ள் இல்ல‌வே இல்லை!!// (ந‌ன்றி: சமுதாய உரிமை)

  • கோட்டை தமிழன்
    இதில் இஸ்லாத்தில் இல்லாத‌வ‌ற்றை தன் இஷ்ட‌த்திற்கு திரித்து எழுதியுள்ள 'ரஹிம் மரைக்காயர்' என்ப‌வ‌ர் முதலில் ஒரு இஸ்லாமியரே அல்ல என்பது அவருடைய வார்த்தைகளிலிருந்து தெளிவாகிறது. யாரோ ஒரு இஸ்லாமிய எதிரியின் எழுத்துக்கள்தான், இஸ்லாமிய பெயரில் வெளியாகியுள்ளது.

  • ரஹிம் மரைக்காயர்
    இங்கே வஹாபிஸ்டுகள் வழக்கம்போல பாரம்பரிய முஸ்லீம்களையும் நபிகள் நாயகத்தின்(ஸல்) வழிப்படி பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் எங்களை இந்துத்துவா முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள். எங்கள் மீது வன்முறைக்கும் தயாராக இருக்கிறார்கள்.

    காஃபா என்பது சுன்னாஹ் என்றும், அதனை பின்பற்றியே அரபு சமூகமே இருக்கிறது என்பதையும் ஆதாரத்துடன் கூறுகிறேன். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களே எவ்வாறு காஃபாவை பின்பற்றி திருமணம் செய்துவைத்திருக்கிறார் என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன். அதனை மறுத்துக் கூற ஆதாரம் காட்டாமல், என்னை இந்துத்துவா என்று முத்திரை குத்திவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். மார்க்க நெறிகளையும் வரலாற்றையும் கரைத்து குடித்த இந்திய உலேமாக்களையும் இந்துத்துவா என்று இப்போது முத்திரை குத்த இந்த வஹாபிஸ்டுகள் முயற்சி செய்கிறார்கள். இந்த வஹாபிஸ்டுகளுக்கும் இத்துத்டுவார்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

    வடக்கில் முஸ்லீம் குஜ்ஜார்கள் இருக்கிறார்கள். இந்து குஜ்ஜார்கள் இருக்கிறார்கள். முஸ்லீம் ராணாக்கள் இருக்கிறார்கள், இந்து ராணாக்கள் இருக்கிறார்கள். ஆகவே அந்தந்த ஜாதியிலிருந்து இந்து மதத்திலிருந்து பிரிந்து முஸ்லீமாக ஆகியிருக்கிறார்கள். பாகிஸ்தானிலோ இந்தியாவிலோ இருக்கும் தலித் முஸ்லீம்களை குஜ்ஜார்களும், ராணாக்களும் திருமணம் செய்கிறார்களா? காட்டுங்களேன்.

    மரைக்காயர், ராவுத்தர் ஆகியோர் இந்தியர்களா? அப்படியானால், காலம் காலமாக இந்துவாக இருக்கும் ஒரே ஒரு மரைக்காயர் குடும்பத்தை காட்டுங்களேன். ஏதாவது இந்துவாக இருக்கும் ராவுத்தரை காட்டுங்களேன். ஏனில்லை? ஒட்டுமொத்த ஜாதியும் மதம் மாறிவிட்டார்களா? அப்படி ஏதேனும் ஒரு ஜாதி, ஒட்டுமொத்தமாக ஒரு ஆள் விடாமல் இந்துமதத்திலிருந்து முஸ்லீமாக மதம் மாறியிருக்கிறதா? யாரிடம் காது குத்துகிறார்கள்? தலித்துகள் மதம் மாறி ராவுத்தர்களாகவும் மரைக்காயர்களாகவும் ஆனார்களா? என்ன கூத்து இது?

    குரேஷி, அன்சாரி, ஆகிய ஜாதிகள் இந்தியாவின் ஜாதிகளா? சையதுகள் ஷேக்குகள் ஆகியோர் இந்திய ஜாதிகளா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குரேஷி சாதியை சேர்ந்தவர். இஸ்லாம் சாதிக்கு எதிரானது என்று பொய் பேசுபவர்கள் ஏன் அரபியாவில் இந்த ஜாதிகள் இன்னமும் இருக்கின்றன என்று விளக்கலாமே? ஒரு நாட்டில் ஒரே ஒரு குரேய்ஷி இருந்தாலும் அவரே காலீபாவாக வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) ஏன் அறிவுறுத்தியிருக்கிறார் என்பதற்கும் விளக்கம் அளிக்கலாமே? மேல் ஜாதி ஆண்கள் கீழ் ஜாதி பெண்களை திருமணம் செய்வது ஹலாலானது. ஆனால், மேல் ஜாதி பெண்கள் கீழ் ஜாதி ஆண்களை திருமணம் செய்வது ஹராமானது. நபிகள் நாயகம் (ஸல்) தன் மகளான பாத்திமா(ரலி)யை பிலாலுக்கு திருமணம் செய்து தரவில்லை. சமமான அந்தஸ்து உள்ள சாதியிலேயே திருமணம் செய்துதந்துள்ளார். ஆனால், அவர் கீழ்ஜாதி பெண்களான பலரை திருமணம் செய்துள்ளார். ஒரு பெண் மாற்று மதத்திலிருந்து வந்தால் அவளை திருமணம் செய்யமுடியாது. அவளை அடிமையாகத்தான் வைத்திருக்க முடியும். அந்த பெண் இஸ்லாமில் சேர்ந்தால் மட்டுமே அவளை திருமணம் செய்யலாம். இதுதான் ஷரியா சட்டப்படியான விஷயம். ஆனால், இஸ்லாத்தை பரப்பும் உன்னத காரியத்துக்காக பொய்களை சொல்லியும் பரப்பலாம் என்று துணிந்துவிட்டார்கள். இஸ்லாத்துக்கு இப்படிப்பட்ட பொய்கள் தேவையில்லை.

    இன்றும் சவுதி அரேபியாவில் மேல்ஜாதி அரபுப் பெண் ஒருவர் கீழ்ஜாதி அரபு ஆணை திருமணம் செய்யமுடியாது. நிச்சயமாக ஒரு கருப்பின முஸ்லீமை (அப்த்) திருமணம் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. அப்படி செய்தால், அது ஷரியா சட்டப்படி செல்லாது. ஆகவே இது தெரியவந்தால், கட்டாய விவாகரத்தே வழங்கப்படும்.

    ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.அரப்னெந்ச்.சொம்/?பகெ=1&செச்டிஒன்=0&அர்டிச்லெ=120152&ட்=11&ம்=3&ய்=2009

    தெ சொஉப்லெ’ச் ஒர்டெஅல் ச்டர்டெட் இன் 2005 ந்ஹென் ஃபடிம’ச் ஹல்ஃப்-ப்ரொதெர்ச் அச்கெட் அ சொஉர்ட் டொ அன்னுல் தெ மர்ரிஅகெ சிடிங் ஹெர் ஹுச்பன்ட்’ச் லொந் ட்ரிபல் பச்க்க்ரொஉன்ட். தெ ஜுட்கெ அக்ரேட், எவென் தொஉக்ஹ் தெ சொஉப்லெ ஹட் பேன் மர்ரிஎட் ஃபொர் ஒவெர் ட்நொ யெஅர்ச் அன்ட் ஹட் ட்நொ சில்ட்ரென்.

    இந்த அரபு நியூஸ் நடத்துபவர்களும், கீழ் ஜாதி ஆணை திருமணம் செய்ததற்காக விவாகரத்து கொடுத்த அரபு நீதிபதியும் இந்துத்தாக்களா? அவர்களுக்கு தெரியாதது இங்கே இருக்கும் சவஹிருல்லாவுக்கும் ஜெயினுலாபுதீனுக்கும் தெரிந்துவிட்டதா?

    அந்த பெண் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அறிவுரைப்படி சரியாக தனக்கு சமமான அல்லது மேல்ஜாதி அரபு ஆணைதிருமணம் செய்திருந்தால் பிரச்னையே இல்லையே.

    நூறுசதம் முஸ்லீம்களாக இருக்கும் அரபு நாட்டில் ஜாதி போய்விட்டதா? 1000 ஆண்டுகளாக முஸ்லீம்களாக இருக்கும் துருக்கியில் ஜாதி முறை போய்விட்டதா?
    இங்கே தமிழ்நாட்டில் ஜாதிக்கு

    காஃபா'ஆஹ் (ஸூஈடாபீளீட்ய் ஆண்ட் சோம்பாடீபீளீட்ய்) ஈண் ணீகாஹ்

    ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.ஷரிஅஹ்ப்ரொக்ரம்.ச/நொமெநிச்லம்/கஃபாஹ்.ஷ்ட்ம்ல்

    இந்த பக்கம் இந்துத்வாக்கள் நடத்துவது அல்ல. வேண்டுமானால் சுன்னிபத் என்ற இணையப்பக்கத்தையும் பார்க்கலாம்.

    குரேய்ஷி பெண்கள் குரேய்ஷி அல்லாத ஆண்களை மணக்கக்கூடாது. அரபு பெண் அரபு அல்லாத ஆணை மணக்கக்கூடாது.

    செர்டைன் அச்டிஒன்ச் அன்ட் சிடுஅடிஒன்ச் எலிசிட் டிஃப்ஃபெரென்ட் ரெச்பொன்செச் ஃப்ரொம் பெர்சொன்ச் ஒஃப் டிஃப்ஃபெரிங் பச்க்க்ரொஉன்ட்ச் அன்ட் நடுரெ. ஃபொர் திச் ரெஅசொன், தெ ஸ்ஹரி’அஹ் ஹச் சொன்சிடெரெட் கஃபா’அட் (சுஇடபிலிட்ய் அன்ட் சொம்படிபிலிட்ய்) பெட்நேன் ச்பொஉசெச் நெசெச்சர்ய்.

    கஃபா’அட் இன் ளினெஅகெ

    டுஎ டொ தெ அபொவெ, தெ ஃபுஃஅஹா (ஜுரிச்ட்ச்) ஹவெ ச்டடெட் தட் அமொங் ஆரப்ச், அ நொந்ஃஉரைஷி மலெ இச் நொட் அ மட்ச் (குஃப்) ஃபொர் அ ஃஉரைஷி நொமன், நொர் சன் அன்ய் பெர்சொன் ஒஃப் நொநாரப் டெச்சென்ட் பெ அ மட்ச் ஃபொர் அ நொமன் ஒஃப் ஆரப் டெச்சென்ட்.

    சையீதுகள் (சித்திக்கி, பரூக்கி, உத்மானி, அளாவி) ஆகியோர் வெளியில் திருமணம் செய்யலாகாது. சையீதுகள் சையீதுகளுக்குள்ளேதான் திருமணம் முடிக்க வேண்டும்.

    ஃபொர் எ௯அம்ப்லெ, தெ ஸய்யிட்ச், ந்ஹெதெர் ஸிட்டிஃஉஎ ஒர் ஃபரோஃஉஎ, ஊத்மானி ஒர் ஆலநி, ஒர் பெலொஙிங் டொ சொமெ ஒதெர் ப்ரன்ச் சன் நெவெர் பெ மட்செட் ப்ய் அன்ய் பெர்சொன் நொட் ஷரிங் தெஇர் லினெஅகெ, நொ மட்டெர் ஹிச் ப்ரொஃபெச்சிஒன் அன்ட் ஃபமில்ய் ச்டடுச். தெசெ ஃபமிலிஎச் (ஸய்யிட்ச், எட்ச்.) அரெ சுஇடப்லெ மட்செச் ஃபொர் ஒனெ அனொதெர், சின்செ தெய் ஷரெ டெச்சென்ட் ஃப்ரொம் தெ ஃஉரைஷி ட்ரிபெ. துச், மர்ரிஅகெச் பெட்நேன் தெம்செல்வெச் அரெ சொர்ரெச்ட் அன்ட் பெர்மிட்டெட் நிதொஉட் அன்ய் சொன்டிடிஒன் அச் அப்பெஅரிங் இன் டர்ருல் முக்ஹ்டார்:

    அஜ்மி (அரபுகள் அல்லாதோர்) அரபு பெண்களை திருமணம் செய்யலாகாது. அவர் என்னதான் ஆலீமாக இருந்தாலும் சரி சுல்தானாக இருந்தாலும் சரி.

    தெ ருலிங் ரெலெவன்ட் டொ நொநாரப்ச் இச் அச் ஃபொல்லொந்ச்: ‘ஆன் ஆஜ்மி (னொநாரப்) சன்னொட் பெ அ மட்ச் ஃபொர் அ நொமன் ஒஃப் ஆரப் டெச்சென்ட், நொ மட்டெர் தட் ஹெ பெ அன் ஆஅலிம் (ரெலிகிஒஉச் ச்சொலர்) ஒர் எவென் அ ஸுல்டன் (ருலிங் ஔதொரிட்ய்). திச் இச் தெ சொர்ரெச்ட் விஎந்.)

    --
    இங்கே இர்க்கும் ஜெயினுலாபுதீனும் ஜவஹிருல்லாவும் மட்டுமே மார்க்க அறிஞர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது. ஆகவே எங்களை இந்துத்த்வாக்களுக்கு ஆதரவு என்று முத்திரை குத்துபவர்கள் குத்தட்டும். இப்போது இந்திய உலேமாக்கள் மீது சேறடிப்பதற்காக, பல சஹிஹ் ஹதீஸ்களையே இட்டுக்கட்டப்பட்ட பொய் ஹதீஸ்கள் என்று கூற தலைப்பட்டுவிட்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மீதே கை வைக்க துணிந்தவர்கள் எங்களை அவதூறு செய்வதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது. நடத்துங்கள்.

  • asir
    ramesh babu yezhuthiya unmaikal sarithan yendru intha vivatham thelivaga solivittathu. vilakkamaga solli muslim nanbarkali nambigaiyai kurai solla virumabha villai

  • இராசகமிபீரத்தான்
    விவதாம் என்ற பெயரில் தவறுதலாய் மலத்தின் மீது கல்லெரிந்து விட்டார்கள்.

    கடைசியில் ஒன்றும் நடக்க போவதுமில்லை. மக்களை பிழவுபடுத்தி, சேற்றைவாரி பூசி கொண்டு ,சமுகத்திற்கு எந்த நன்மையும் இல்லாத வாழ்ந்து மடியும் பொதி மூட்டைகளிடையே நடக்கும் ஒன்றுமற்ற விவாதம் ஒரளவுக்கு சமுக அக்கரை கொண்டோரயும் செயலிழக்க செய்யும்.

    விலகி நிற்பதே மேல்.

    எது நம்மை ஒன்றாக இனைக்கிறதோ
    அதோடு இனைந்து நிற்போம்
    எது நம்மை பிறிக்கிறதோ அதை விட்டு விலகி நிற்ப்போம்

    தந்தை பெரியார்.

  • Mohamed
    என்ன வேஷம் போட்டாலும் உங்களின் சுய ரூப‌ம் எங்களுக்கு தெரியும் மிஸ்டர் (மேற்படி)போலியே! நீர் வைத்துக்கொண்ட அந்த போலி பெயர்(ரஹிம் மரைக்காயர் என்பதை) சொல்லி உம்மை அழைப்பது கூட அறிவீனமாகதான் போகும். அத‌னால் உங்க‌ளுக்கு தெரிந்த (இஸ்லாமியர்கள் யூஸ் பண்ணும்) சில வார்த்தைக‌ளை உங்க‌ளுடைய‌ எழுத்தில் யூஸ் ப‌ண்ணுவ‌தால் எல்லோரையும் ந‌ம்ப‌ செய்துவிட‌லாம் என்று த‌ப்புக்க‌ண‌க்கு போட்டதெல்லாம் போதும்.மீண்டும் மீண்டும் சொல்வேன், பிறப்பாலோ, வளர்ப்பாலோ நிச்சயமாக நீர் ஒரு இஸ்லாமியரே கிடையாது, இஸ்லாத்தின் எதிரிதான், இந்துத்துவாவை சேர்ந்தவர்தான் என்று! இப்போது விஷ‌ய‌த்திற்கு வ‌ருவோம்.

    //இங்கே வஹாபிஸ்டுகள் வழக்கம்போல பாரம்பரிய முஸ்லீம்களையும் நபிகள் நாயகத்தின்(ஸல்) வழிப்படி பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் எங்களை இந்துத்துவா முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள்//

    //மார்க்க நெறிகளையும் வரலாற்றையும் கரைத்து குடித்த இந்திய உலேமாக்களையும் இந்துத்துவா என்று இப்போது முத்திரை குத்த இந்த வஹாபிஸ்டுகள் முயற்சி செய்கிறார்கள். இந்த வஹாபிஸ்டுகளுக்கும் இத்துத்டுவார்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை//

    //இஸ்லாத்தை பரப்பும் உன்னத காரியத்துக்காக பொய்களை சொல்லியும் பரப்பலாம் என்று துணிந்துவிட்டார்கள். இஸ்லாத்துக்கு இப்படிப்பட்ட பொய்கள் தேவையில்லை//

    //நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மீதே கை வைக்க துணிந்தவர்கள் எங்களை அவதூறு செய்வதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது//

    ச‌பாஷ்! ந‌ல்ல‌ ஆக்டிங்ஸ்! ஹாலிவுட்டில் கால்ஷீட் கிடைக்கும‌ய்யா உம‌க்கு. இஸ்லாத்தின் மீதும் அருமை நபி(ஸல்)அவர்களின் மீதும் இவருக்கு என்ன அக்கறை பாருங்கள் மக்களே!! ஹஹ்ஹஹ்ஹா.....ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்.

    //எங்கள் மீது வன்முறைக்கும் தயாராக இருக்கிறார்கள்.//

    நீங்கள்தான் 'அப்பன் குதிருக்குள்ளே இல்லை'யென்று தன்னை ஒரு இந்துத்துவாவை சேர்ந்த ஆளென்று அடையாளம் காட்டிவிட்டீர்களே! அத‌னால் வ‌ன்முறையெல்லாம் உங்க‌ளுக்குதான் கைவ‌ந்த‌ க‌லையாக‌ இருக்கும். தன்னுள் தோன்றும் எண்ணங்களையெல்லாம் அடுத்தவர் மீது சாட்டாதீர்கள்!

    //அந்தந்த ஜாதியிலிருந்து இந்து மதத்திலிருந்து பிரிந்து முஸ்லீமாக ஆகியிருக்கிறார்கள்//

    இந்து மதத்தை விட்டு இஸ்லாம் மார்க்கத்தை மக்கள் ஏற்றவண்ணம் இருப்பதை உங்களையும் அறியாமல் ஒப்புக்கொண்டதற்கு நன்றி!

    //பாகிஸ்தானிலோ இந்தியாவிலோ இருக்கும் தலித் முஸ்லீம்களை குஜ்ஜார்களும், ராணாக்களும் திருமணம் செய்கிறார்களா? காட்டுங்களேன்//

    //மரைக்காயர், ராவுத்தர் ஆகியோர் இந்தியர்களா? அப்படியானால், காலம் காலமாக இந்துவாக இருக்கும் ஒரே ஒரு மரைக்காயர் குடும்பத்தை காட்டுங்களேன். ஏதாவது இந்துவாக இருக்கும் ராவுத்தரை காட்டுங்களேன். ஏனில்லை? ஒட்டுமொத்த ஜாதியும் மதம் மாறிவிட்டார்களா? அப்படி ஏதேனும் ஒரு ஜாதி, ஒட்டுமொத்தமாக ஒரு ஆள் விடாமல் இந்துமதத்திலிருந்து முஸ்லீமாக மதம் மாறியிருக்கிறதா? யாரிடம் காது குத்துகிறார்கள்? தலித்துகள் மதம் மாறி ராவுத்தர்களாகவும் மரைக்காயர்களாகவும் ஆனார்களா? என்ன கூத்து இது?//

    காதும் குத்த‌வில்லை, மூக்கும் குத்த‌வில்லைய்யா...! அறிவுக்கு பொருந்தாத‌ ஆயிர‌ம் கேள்விக‌ளை நீங்க‌ள் அடுக்கினாலும் நாங்க‌ள் த‌டுமாறிப்போகாத‌ உறுதியான‌, நிலையான‌ மார்க்க‌த்தில் பிற‌ந்து, வ‌ள‌ர்ந்த‌வ‌ர்க‌ள்! இத‌ன் ப‌க்க‌ம் வ‌ருப‌வ‌ர்க‌ளை நிம்ம‌தியாக‌ வாழ‌வைக்கும் ஒரு உன்ன‌த‌ மார்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள்! தெரிந்தே தெரியாத‌ மாதிரி ந‌டிக்காதீர்க‌ள். ஏற்க‌ன‌வே ந‌ண்ப‌ர் ஷேக்ஃப‌ரீத் மேலே தெளிவாக‌ சொல்லியுள்ளார். மரைக்காயர், ராவுத்தர், லெப்பையெல்லாம் அவரவர்கள் செய்த தொழிகளால் ஏற்பட்ட பெயர்களே தவிர, இந்து மதத்தில் உள்ளது போன்ற சாதி சம்பந்தப்பட்ட பிரிவுகள் அல்ல, இஸ்லாம் மார்க்கத்தில் இறைவன் முன் அனைவரும் சமம், அது யாராக இருந்தாலும் சரியென்று! இதை முந்திய என்னுடைய பதிவிலும் விளக்கியுள்ளேன். மேலும், பல இடங்களில் பல இஸ்லாமிய சகோதரர்கள் இதுபற்றி தெளிவுபடுத்திதான் வருகிறார்கள். அதனால் தெளிவுபெற்ற மாற்றுமத சகோதரர்கள்தான் அதிகமே தவிர, இஸ்லாத்தின் வளர்ச்சிகண்டு பொறாமைப்படக்கூடிய உங்களைப்போன்று புரிந்தும் புரியாதபடி நடிக்கும் வரட்டுவாதக்கார எதிரிகள் மிகக்குறைவே! உங்களின் முதல் பதிவிலேயே தெரிந்தது, நீங்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டியவர் என்று. இருந்தாலும் மற்ற நண்ப‌ர்கள் கேட்டுக் கொண்டதால்தான் பதிலளிக்க வேண்டியுள்ளது.

    // நூறுசதம் முஸ்லீம்களாக இருக்கும் அரபு நாட்டில் ஜாதி போய்விட்டதா? 1000 ஆண்டுகளாக முஸ்லீம்களாக இருக்கும் துருக்கியில் ஜாதி முறை போய்விட்டதா?//

    //இந்த பக்கம் இந்துத்வாக்கள் நடத்துவது அல்ல. வேண்டுமானால் சுன்னிபத் என்ற இணையப்பக்கத்தையும் பார்க்கலாம்//

    யார் யாரை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டாலும் அதை இஸ்லாம்தான் கூடாது என்று கூறியிருக்கிறதா என்ற ஆதாரத்தை த‌ருவ‌தை விட்டுவிட்டு இங்கு இவன் செய்கிறான், அங்கு அரேபியன் செய்கிறான், துருக்கியன் செய்கிறான் என்று உளறத்தான் தெரியுமா உங்க‌ளுக்கு? இறைவன் த‌ந்த வேதமான குர்ஆனும், ஹதீஸ் என்று சொல்லப்படும் ந‌பிமொழியும்தான் இஸ்லாம் என்றுகூட தெரிந்துக்கொள்ளாமல் வாய்க்கு வந்ததை நீங்கள் உளறித்தள்ளுவது இஸ்லாத்தைப் பற்றிய உங்களின் அறியாமையை காட்டுகிறது. அந்த குர்ஆனும், ஹதீஸும் மட்டுமே இஸ்லாமிய‌ர்களின் அனைத்து பிர‌ச்ச‌னைக்கும் தீர்வாக, ஆதாரமாக ஆகுமே த‌விர,எந்த நூலாகட்டும்,இணைய பக்கமாகட்டும் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லாத‌ நீங்கள் காட்டும் குப்பைக‌ளெல்லாம் இஸ்லாத்தின் ஆதாரமில்லை. ஆக, நண்பர் முஹ‌ம்ம‌து அனஸ் மேலே சொல்லியுள்ளதுபோல், இஸ்லாம் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு க‌ருத்து தெரிவித்தால் ந‌ன்றாக‌ இருக்கும்.

    //நாயகம்(ஸல்) அவர்களே எவ்வாறு காஃபாவை பின்பற்றி திருமணம் செய்துவைத்திருக்கிறார் என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன். அதனை மறுத்துக் கூற ஆதாரம் காட்டாமல், என்னை இந்துத்துவா என்று முத்திரை குத்திவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். //

    க‌ஃபா என்பது உல‌க‌ இஸ்லாமியர்கள் அனைவரும் முன்னோக்கி தொழுவதற்காக அமைக்கப்பட்ட இறையில்லமாகும். அது என்னய்யா 'கஃபாவை பின்பற்றி திருமணம்'? உளறலே உருவமானவராக இருக்கிறீரே?! இஸ்லாத்தில் சாதிக‌ள் இல்லையென்று (குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து)என்னுடைய‌ முந்திய‌ ப‌திவில் ஆணித்த‌ர‌மான ஆதார‌ங்க‌ளை நான் காட்டியதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு,'காஃபாவை பின்பற்றி திருமணம் செய்துவைத்திருக்கிறார் என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன்' என்று நீங்கள் சொல்லிவிட்டால் அது ஒரு ஆதாரமா? நீங்கள் நினைப்பதுபோல் கஃபா என்ப‌து ஒரு சாதிப் பிரிவென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். இல்லாத‌ ஒன்றை ம‌றுத்துக்கூற ஆதார‌ம் காட்ட‌வேண்டுமென்ப‌து காமெடியாக‌ இல்லையா? உம்மைப்பற்றி, இவர் கொள்ளைய‌ன், கொலைகாரன், குடிகாரன் என்று யாராவது சொன்னால், சொன்னவரிடம் அதற்கான ஆதாரம் கேட்பீரா அல்லது இல்லாத ஒன்றை நிரூபிக்கவேண்டும், இல்லாவிட்டால் நீர் குற்றவாளிதான் என்று ஒப்புக்கொள்வீரா? அதுபோல்தான், சாதியை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டிய நபி(ஸல்)அவர்கள், சாதி பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டும்! பொய்சொல்லும் நீர்தான் குர்ஆன், ஹதீஸிலிருந்து அதற்கான ஆதாரம் காட்டவேண்டும்.

    மீண்டும் மீண்டும் இஸ்லாத்தில் இல்லாதவற்றை இருப்பதாக திரித்துக்கொட்டும் பொய்கள், உளறல்கள்:

    //ஒரு நாட்டில் ஒரே ஒரு குரேய்ஷி இருந்தாலும் அவரே காலீபாவாக வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) ஏன் அறிவுறுத்தியிருக்கிறார்//

    //மேல் ஜாதி ஆண்கள் கீழ் ஜாதி பெண்களை திருமணம் செய்வது ஹலாலானது. ஆனால், மேல் ஜாதி பெண்கள் கீழ் ஜாதி ஆண்களை திருமணம் செய்வது ஹராமானது//

    //ஒரு பெண் மாற்று மதத்திலிருந்து வந்தால் அவளை திருமணம் செய்யமுடியாது. அவளை அடிமையாகத்தான் வைத்திருக்க முடியும். அந்த பெண் இஸ்லாமில் சேர்ந்தால் மட்டுமே அவளை திருமணம் செய்யலாம். இதுதான் ஷரியா சட்டப்படியான விஷயம்//

    //மேல்ஜாதி அரபுப் பெண் ஒருவர் கீழ்ஜாதி அரபு ஆணை திருமணம் செய்யமுடியாது. நிச்சயமாக ஒரு கருப்பின முஸ்லீமை (அப்த்) திருமணம் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. அப்படி செய்தால், அது ஷரியா சட்டப்படி செல்லாது. ஆகவே இது தெரியவந்தால், கட்டாய விவாகரத்தே வழங்கப்படும்//

    //குரேய்ஷி பெண்கள் குரேய்ஷி அல்லாத ஆண்களை மணக்கக்கூடாது. அரபு பெண் அரபு அல்லாத ஆணை மணக்கக்கூடாது//

    //சையீதுகள் (சித்திக்கி, பரூக்கி, உத்மானி, அளாவி) ஆகியோர் வெளியில் திருமணம் செய்யலாகாது. சையீதுகள் சையீதுகளுக்குள்ளேதான் திருமணம் முடிக்க வேண்டும்//

    //அஜ்மி (அரபுகள் அல்லாதோர்) அரபு பெண்களை திருமணம் செய்யலாகாது. அவர் என்னதான் ஆலீமாக இருந்தாலும் சரி சுல்தானாக இருந்தாலும் சரி//

    //இங்கே இர்க்கும் ஜெயினுலாபுதீனும் ஜவஹிருல்லாவும் மட்டுமே மார்க்க அறிஞர்கள் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது//

    உம‌க்கு வேண்டுமானால் அவ‌ர்க‌ள் இருவ‌ர் ம‌ட்டுமே இஸ்லாமிய‌ அறிஞ‌ர்க‌ளாக‌ தெரிய‌லாம். அவ‌ர்க‌ளைப்போன்றோர் எண்ண‌ற்ற‌வ‌ர்க‌ள் இருக்கிறார்கள் என்பது உமக்கு தெரிய வாய்ப்பில்லை. நீர்தான் அரைகுறையாச்சே!

    இன்னொரு முறை சொல்கிறேன். உங்க‌ளுக்கு தெரிந்த (இஸ்லாமியர்கள் யூஸ் பண்ணும்) சில வார்த்தைக‌ளை உங்க‌ளுடைய‌ எழுத்தில் யூஸ் ப‌ண்ணுவ‌தால் எல்லோரையும் ந‌ம்ப‌ செய்துவிட‌லாம் என்று த‌ப்புக்க‌ண‌க்கு போட்டதெல்லாம் போதும், நிறுத்துங்க‌ள்! இல்லையேல் இத‌ற்கு மேலும் உங்க‌ள் உள‌ற‌ல்க‌ளை தொட‌ர்ந்தாலும் எங்க‌ளுக்கு க‌வ‌லையில்லை.நீர் ஒரு வெட்டி ஆஃபிஸராக இருந்தால் தொடரலாம் உங்கள் உளறல்களை!

  • Mohamed Tharik
    Dear All Brothers, Greetinga to all . Now I reed This Your conversation. I am Really Very Shocked by Mr.X ( Rahim ) Asthahfirullah . He Is a Big Lier. Really He don't know about ISLAM. He is a Half ****. Mr. X . U Know what is the Meaning of Rahim ? Please don't do same like this orgument. We must Belive the Judgemetday. My Humble Request please u must know about real ISLAM. U know in our country people ( Indians ) we are all brothers. please dont Do Against of our Unity. We r ( Indians ) knows very well about you. This is the Limit.Pls Dont Cross the Barder. If u r a Muslim or Hindu . U must Pray to god For your this issue.

  • ரஹிம் மரைக்காயர்
    //க‌ஃபா என்பது உல‌க‌ இஸ்லாமியர்கள் அனைவரும் முன்னோக்கி தொழுவதற்காக அமைக்கப்பட்ட இறையில்லமாகும். அது என்னய்யா 'கஃபாவை பின்பற்றி திருமணம்'? உளறலே உருவமானவராக இருக்கிறீரே?! //

    யார் உளறுவது?

    Regarding kafaah
    http://www.shariahprogram.ca/women-islam/kafaah.shtml

    Certain actions and situations elicit different responses from persons of differing backgrounds and nature. For this reason, the Shari’ah has considered Kafaa’at (suitability and compatibility) between spouses necessary.

    Kafaa’at in Lineage
    Due to the above, the Fuqahaa (Jurists) have stated that among Arabs, a non-Quraishi male is not a match (Kuf) for a Quraishi woman, nor can any person of non-Arab descent be a match for a woman of Arab descent.

    For example, the Sayyids, whether Siddique or Farooque, Uthmaani or Alawi, or belonging to some other branch can never be matched by any person not sharing their lineage, no matter his profession and family status. These families (Sayyids, etc.) are suitable matches for one another, since they share descent from the Quraishi tribe. Thus, marriages between themselves are correct and permitted without any condition as appearing in Darrul Mukhtaar:

    The ruling relevant to non-Arabs is as follows: ‘An Ajmi (non-Arab) cannot be a match for a woman of Arab descent, no matter that he be an Aalim (religious scholar) or even a Sultan (ruling authority). This is the correct view.)

    Forcible divorce links
    http://www.arabnews.com/?page=1&section=0&article=120152&d=11&m=3&y=2009
    http://archive.arabnews.com/?page=1&section=0&article=98734&d=20&m=7&y=2007
    http://archive.arabnews.com/?page=1&section=0&article=93023&d=3&m=3&y=2007
    The couple’s ordeal started in 2005 when Fatima’s half-brothers asked a court to annul the marriage citing her husband’s low tribal background. The judge agreed, even though the couple had been married for over two years and had two children.

  • R.Vanitha
    matra mathathai nam kurai sollalam. namma mathathai kurai sollak kudathu. nalla policy. sonnal utharanam kattauvm adutha matham thaan. meeri sonal loosu, marai kazhandravar kudave "niruthungal" endru anbhana(?) echarikai.

  • sheikfareeth
    Dear Mr Maraii-Kayar,

    Say .....Islam is one of the worst religion....
    Say .....There are cast system in Islam....
    Say......The followers are fool........
    Say......Whatever you like to say.....

    Nobody cares..... there is no point to talk to you... you will not understand....

    Dear Friends.,

    If you would like to know about islam...please read Periyar's writings that is more thank enough...... then you will realize the truth.

  • ramachandran
    ரமேஷ்பாபுவுக்கு என்னுடைய பாரட்டுக்கள்.....உங்கள் இந்த சிறந்த பணி தொடர வாழ்துக்கள்

  • paramu
    vivatham nalla irukku

  • ரஹிம் மரைக்காயர்
    எது ஹராம்?

    கடவுளை நம்பும் இந்துக்கள் கிறிஸ்துவர்களுடன் உறவாடுவதா? அல்லது கடவுளை நம்பாத திக கட்சியினருடனும் பெரியாருடனும் உறவாடுவதா?

    தமிழ்நாட்டில் இஸ்லாமிய தலைமை லூசுகளிடம் சென்றுவிட்டது. மார்க்க அறிவோ, அல்லது இறையச்சமோ இல்லாத வெத்துவேட்டு கூட்டம் ஒன்று அரசியல் ஆதாயத்துக்காக மார்க்கத்தை கை கழுவிவிட்டு நாஸ்திக கும்பலுடன் உறவாடுகிறது. இந்த வெத்து வேட்டுக்கூட்டம் இன்று தமிழக முஸ்லீம்கள் இஸ்லாத்தை புரிந்த்கொள்ள பெரியார் எழுதியதை படிக்க வேண்டும் என்று உளறுகிறது.

    கடவுளை நம்பாதவர்களுடன் உறவாடுவதை விட கடவுளை நம்புபவர்கள் ஆனால் இணைவைப்பவர்களுடன் உறவாடுவது பரவாயில்லை என்பதே மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு. இங்கே திமுக, திக கம்யூனிஸ்டு நாஸ்திக கூட்டத்துடன் உறவாடிக்கொண்டிருக்கும் ஜவஹிருல்லா, ஜெயினுலாபுதீன் கூட்டமோ, மார்க்கத்தை விட்டு விட்டு அரசியலை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறது.

    அதனால்தான் மார்க்க அறிவை விட்டுவிட்டு, கடவுளை மறுக்கும் பெரியாரிடம் போய் சென்று இஸ்லாமை அறிந்துகொள்ள எங்களுக்கு அறிவுரை! உங்கள் அரசியலுக்காக என்ன சர்க்கஸ் வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துகொண்டிருக்கிறான். தமிழக முஸ்லீம்கள் அனைவரையும் ஏமாற்றினாலும், அவனை ஏமாற்ற முடியாது.

    http://www.islam-qa.com/en/ref/113901

    Which is a greater sin: Atheism or polytheism?.

    Praise be to Allaah.

    Atheism, in modern terminology, means denying the Creator altogether, denying that He exists and not acknowledging Him, may He be glorified and exalted. The universe and everything in it, according to their claims, came about purely by chance. This is a strange view which is contrary to sound human nature, reason and logic, and is contrary to simple logic and indisputable facts.

    As for shirk (polytheism or associating others with Allah), it implies belief in Allah, may He be glorified and exalted, and affirmation of Him, but it also includes belief in a partner to Allah in His creation, who creates or grants provision or brings benefit or wards off harm. This is shirk al-ruboobiyyah (ascribing partners to Allah in His Lordship). Or it means belief in a partner to whom some kind of worship is devoted as an act of love and veneration, as it is devoted to that person or thing as it should to devoted to Allah, may He be glorified and exalted. This is shirk al-‘ibaadah (associating others with Allah in worship). By studying these two deviations, we may see that each of them involves sin and evil which tells us that they are bad and we see how Allah described them as being like dumb animals.

    Allah says (interpretation of the meaning):

    “Have you (O Muhammad صلى الله عليه وسلم) seen him who has taken as his ilaah (god) his own vain desire? Would you then be a Wakeel (a disposer of his affairs or a watcher) over him?

    44. Or do you think that most of them hear or understand? They are only like cattle nay, they are even farther astray from the Path (i.e. even worse than cattle)”

    [al-Furqaan 25:43-44]

    “And surely, We have created many of the jinn and mankind for Hell. They have hearts wherewith they understand not, and they have eyes wherewith they see not, and they have ears wherewith they hear not (the truth). They are like cattle, nay even more astray; those! They are the heedless ones”

    [al-A’raaf 7:179].

    Nevertheless, the atheist who denies the existence of Allah and rejects His Messengers and disbelieves in the Last Day, is in a greater state of kufr and his beliefs are more reprehensible than the one who believes in Allah and the Hereafter, but he associates something of His creation with Him. The former is stubborn and arrogant to an extent that can not be imagined or accepted by sound human nature. Such a person would transgress every sacred limit and fall into every sin; his worldview would be distorted to an inconceivable level. Yet many scholars who discussed the issue of atheism doubted that this has deep roots in the hearts of the atheists, and they affirmed that the atheist is only professing atheism outwardly; deep down he believes in one God.

    Shaykh al-Islam Ibn Taymiyah said a great deal which indicates that this group of atheists who deny and reject the existence of God are in a worse state of kufr than the mushrikeen who associate partners with Him. We will quote a little of what we have come across:

    He (may Allah have mercy on him) said: Kufr (disbelief) means not believing in Allah and His Messengers, whether it involves rejecting or it consists of doubt and uncertainty about the issue or ignoring the issue altogether, out of envy or arrogance or following whims and desires that divert a person from following the Message. However, the kaafir who rejects and disbelieves is in a state of greater kufr, although the one who rejects and denies out of envy, even though he believes that the Messengers brought the message of truth, is also in a state of kufr. End quote.

    Majmoo’ al-Fataawa, 17/291

    He also said:

    The one who denies the Hereafter but believes that this universe is created is described by Allah as a kaafir. The one who denies it and says that this universe existed from eternity is a worse kaafir in the sight of Allah, may He be exalted. End quote.

    Majmoo’ al-Fataawa, 17/291

    He said (may Allah have mercy on him) refuting those who deny the Divine attributes:

    (Denying the Divine attributes) implies complete denial which reaches the point that says: There is nothing that must exist and cannot have not existed. If he believes that and says: I do not affirm either existence or non-existence, then the answer to that is: Suppose you state that verbally and in your heart you do not believe either of the two; rather you turn away from knowing Allah and worshipping and remembering Him, so you never remember Him, worship Him, call upon Him, put your hope in Him or fear Him; (in that case) your denial of Him is worse than that of Iblees who (at least) acknowledged Him. End quote.

    Majmoo’ al-Fataawa, 5/356.

    And he (may Allah have mercy on him) said:

    The arrogant one is the one who does not acknowledge Allah outwardly, like Pharaoh. He is in a worse state of kufr than them (meaning the mushrik Arabs). Iblees, who enjoins all of that and loves it and is too arrogant to worship his Lord and obey him, is in a worse state of kufr than them (the mushrikeen), even though he was aware of the existence and might of Allah, just as Pharaoh was also aware of the existence of Allah. End quote.

    Majmoo’ al-Fataawa, 7/633

    He also said:

    The view of the philosophers -- those who say that the universe is eternal and that it is dependent on that which inevitably must exist -- came from the minds and hearts of those who worshipped heavenly bodies and made images of them on Earth, such as Aristotle and his followers. This view is worse kufr and is more misguided than that of the Arab mushrikeen who believed that Allah created the heavens and the earth and everything between them in six days by His will and power, but they attribute falsely without knowledge sons and daughters to Him (cf. al-An’am 6:100) and joined others in worship with Allaah, for which He had sent no authority (cf. Aal ‘Imraan 3:151). Similarly, the permissive people, who do not believe in any command or prohibition at all and refer to the Divine will and decree as an excuse for their evil deeds, are worse off than the Jews, Christians and Arab mushrikeen, because even though the latter are kaafirs, they still believe in some kind of command and prohibition, and the promise and warning (i.e., the Hereafter), but they had partners with Allaah (false gods) who instituted for them a religion which Allaah had not ordained (cf. al-Shoora 42:21), unlike the permissive people who ignore all laws altogether. They are only pleased with whatever suits their whims and desires, and they get angry on the basis of their whims and desires; they do not get pleased for the sake of Allah, or angry for the sake of Allah, or love for the sake of Allah, or hate for the sake of Allah; they do not enjoin that which Allah has enjoined and they do not forbid that which Allah has forbidden, unless that suits their whims and desires, in which case they do it for that purpose and not as an act of obedience to their Lord. Hence they do not denounce what takes place of kufr, evil doing and sin unless it goes against their whims and desires, in which case they will denounce it, prompted by their devilish nature and not prompted by sharee’ah and love of Allah. Hence the devils plunge them deeper into error, and they never stop short (cf. al-A’raaf 7:202), and the devils may show themselves to them and address them and help them with some of their whims and desires, as the devils used to do with the mushrikeen who worshipped idols. End quote.

    Majmoo’ al-Fataawa, 8/457-458.

    Shaykh Ibn Baaz (may Allah be pleased with him) said: It is shirk to worship something other than Allah completely; that may be called shirk or kufr. Whoever turns away from Allah altogether and directs his worship to something other than Allah, such as trees, rocks, idols, the jinn or some of the dead, those whom they call awliya’ (“saints”), worshipping them or praying to them or fasting for them, and forgetting Allah altogether -- and this is the worst kind of kufr and shirk. We ask Allah to keep us safe and sound.

    The same applies to denying the existence of Allah and saying that there is no God and life is material, like the Communists and atheists who deny the existence of Allah. These are the worst disbelievers among mankind, the most astray, the most involved in shirk and the most misguided. We ask Allah to keep us safe and sound. End quote.

    Majmoo’ Fataawa Ibn Baaz, 4/32-33

    He also said (may Allah have mercy on him):

    Meat slaughtered by Communists is haraam and is like the meat of the Magians and idol worshippers; in fact their meat is even more haraam, because their degree of kufr is greater due to their atheism and denial of the Creator (may He be glorified and exalted) and His Messenger, and other kinds of kufr. End quote.

    Majmoo’ Fataawa Ibn Baaz, 23/30

    And Allah knows best.

  • k nazimudeen
    மவனே, ரஹீம் மரைக்காயரே!
    ஜவஹிருல்லா, ஜெயினுலாபுதீன் கூட்டத்தால் நீ ரொம்பவும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. அதற்க்காக இஸ்லாத்தை குறை சொல்வது என்பது அறிவீனம்.

  • Agilan
    The biggest lie sold to innocent Dalits and deprived classess is that Islam & Christianity have no castes. Noting can be a bigger lie than this. Only a dalit who has gone through the orderal of conversion to these Religions and the resulting direct & indirect oppression are aware of this.

    Since Islam & Christianity are dominated by BCs and OBCs this truth never surfaces out. The Ashraf/ajlaf caste divide pointed out in one of the posts is 100% ture. An Ashraf will never marry into a ajlaf caste. Indian muslims are not even accepted as muslims in Pakistan. they are referred to as 'mujahirs', which is only a step above kafirs.

    I see poeple boldly selling lies here as any Religious believer would do! some moulvi with the name 'Mohamed' in the posts says 'Prophet never wanted castes'...if so how do we explain, Shias, Sunnis, Kurds and the several other divisions in this Religion? and remember when the Kurds were massacared and killed in the worst pogrom of its kind..not a single Indian Muslim organization protested or even verbally condemned it!

    It is the wahabbi funding from Arab to increase muslim numbers in south india, that makes these ppl fool us with such lies. With Arab money a Periyardasan turns Abdullah overnight and Siruttai Tiruma will become cosy with Muslim fanatics...

    As far Christianity the facts are very clear...one has to just read any of the several reserach articles by DACA. Most important being Fr. Anotny Raj's most scientific study of how systematic is the Dalit oppression in Christianity...separate chapels, cemeterys, seats..what not!!

    I'm not trying to say one Religion is superior to another. I condemn all dispensation be it Hindu, Islam or Christianity which doesn't hold it as self-evident that all men are created equal.

    IF there is a God who wants to rank and divide men into higher and lower echelons, then I deny all such gods & religion...infact i'm better than any of those gods, for i love all creatures men or not...so your God should worship me...not other way around...

    All 3 religions Hindu, ISlam & Christianity do not address the plight of Dalits and all of them need to be revised or rejected completely..!!!

  • Agilan
    ரஹீம் மரைக்காயரே!!! arumayana padaippu...vivadam super! vazhtukkal..

  • chellan
    '''All 3 religions Hindu, ISlam & Christianity do not address the plight of Dalits and all of them need to be revised or rejected completely..!!! ""
    Ithu 100il, illai 1000thil sorry 1,00,00il, thappu 1,00,00,000il ore vaarthai. aththanaium unmaiai thavira verondrum illai. "dalithu kaluku madham endra pei(devil) pidikamal irukattum.

  • m.khathiravan
    vazhthugal thozhar miga arumaiyana kaddurai ..thodarnthu ungal pani sirakaddum..




    maa.khathiravan
    mumbai-88
    +91 9321 454425

  • SK
    The title says 'Islamic Fundamentalists'. Every religion has fundamentalists either Hinduism or Islam or Christianity et al. அப்துல் ஹை is also one such fundamentalist. He is angry because he lost the election and he thinks that Dalits are responsible for the loss.

    The article exposes Thirumavalavan who is exposed many time. Uthaouram is another such example. In India, politics of the oppressed has to combine Marx & Ambedkar.

    In my opinion, those who have taken only Ambedkar, start with Dalit politics and wedded to bourgeois parties.

  • alagumukilan
    எந்த மதமானாலும் சரி, அவர்கள் நம்பும் இறைவன் முன்னோ அல்லது அவர்களுக்குள்ளோ எதையும் தீர்மானிப்பது பொருளாதாரம் தான்
    பணம் பணம் பணம் தான். எல்லா மதங்களிலும் பணம் தான் ஒருவனின் நிலையை அல்லது அவன் இடத்தை தீர்மானிக்கிறது
    அதை உணரவிடாமல் மதம்தான் அவன் அறிவை மறைக்கிறது

  • danish
    Im in bangalore.. Caste system in Islam is here... A syed boy loved , shiekh's girl and for that sake syed community people went to kill sheikh boy.
    I know islam try to avoid casteism but still it prevails in northern india. U can google it and read abt it. But in tamil nadu its less and muslims accept Sc people equally once the get converted.

    Here the problem is other not answering properly to maraikkayar... they are trying to stop him he gave some links.. thas right by all means.. then why.


    CAN YOU MUSLIMS TELL ME ANSWER WHY YOU GUYS CANNOT MARRY ARAB GIRL....? IF ALL MUSLIMS ARE EQUAL..(REMEMBER THE STORYY THE GIRL ESCAPED WITH INDIAN BOY AND ORDERED FOR DEATH PENALTY)

  • சீராளன்
    ரஹிம் மரைக்காயரின் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஆனால் ஒரு வகையில் ரஹிம் மரைக்காயருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

    தர்கா வழிபாட்டை ஒழிக்க கிளம்பிய வஹாபிஸ வாதிகளுக்கு பரம்பரை முஸ்லீம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருக்கிறது என்பது லேசுபாசாக தெரிய வந்ததுதான். ஆனால், அதன் சமூக இஸ்லாமிய பின்புலன்கள் தெரியப்படாமல் இருக்கிறது. ரஹிம் மரைக்காயரின் கருத்துக்கள் ஓரளவுக்கு அதனை விளக்குகின்றன. இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இஸ்லாமுக்கு மாறுபவர்கள் சுன்னி பிரிவுக்கு மாறுகிறோமா அல்லது சியா பிரிவுக்கு மாறுகிறோமா என்று கூட தெரியாமல் மாறுகிறார்கள். ஆனால், இன்று ஈராக்கிலும் பாகிஸ்தானிலும் ஷியா பிரிவினரை சுன்னிகளும் சுன்னி பிரிவினரை சியாக்களும் கொன்று தள்ளுகிறார்கள். ஜாதி என்று சொன்னால் என்ன? பிரிவு என்று சொன்னால் என்ன? அடிப்படையில் அது அடுத்தவரை கொல்லவும் அடக்குமுறைக்கும் உபயோகப்படும்போது இவையெல்லாம் ஒன்றுதானே? இஸ்லாமிலோ, ஜாதிவெறியும் இருக்கிறது, பிரிவு வெறியும் இருக்கிறது இனவெறியும் இருக்கிறது. இவை அனைத்தும் படுகொலைகளிலேயே முடிவடைகின்றன.

    இஸ்லாம் ஒரு சமத்துவ மார்க்கம், ஜாதிகளற்ற மார்க்கம் என்பது இங்கே தலித்துகளை ஏமாற்ற உபயோகப்படுத்தப்படுகிறது என்பதையும், தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்குள்ளே ஒரு சாரார் தங்களது ஜாதி மேட்டிமைத்தனத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என்பதையும் விளக்கிவிட்டது.

    அடுக்குகளுக்குள் அடுக்குகளாக அரபி மொழிக்குள் தமிழ் மொழிபெயர்ப்பாக மறைந்திருக்கிற அரபு மேட்டிமை வாதத்தையும், அதற்குள் உறைந்திருக்கும் ஜாதி மேட்டிமை வாதத்தையும் வெளிகொணர்ந்து விளக்கேற்றி புகை மூட்டத்தை ஓட்டியிருக்கிற ரஹிம் மரைக்காயரின் கருத்துக்கள் கசப்பானவையாக இருந்தாலும், நேர்மையானவை. நமக்கு தேவையானவை.

    இன்று வஹாபிஸ்டுகள் மதம் மாற்றியதும், வெளியேறவே முடியாத ஒரு இருட்டுகிடங்குக்கள் தலித்துகள் அடைக்கப்பட்டுவிடுவார்கள். அரபியாவில் இருக்கும் சாதி மேட்டிமைத்தனம் இங்கு வராமல் போய்விடுமா? பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் பெண்கள் மீதும் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீதும் நடைபெறும் வன்கொடுமைகளை மூடி மறைத்து இஸ்லாம் ஒரு புனிதப்பிம்பம் என்று அமார்க்ஸ் போன்றோர்கள் கட்டமைக்கிறார்கள்.

    பகிரங்கமாகவே ஷரியாவில் இப்படித்தான் என்று அப்பட்டமான சாதி வெறியுடனும் அதனை மீறிய அரபிய இனவெறியுடனும் இப்போதே ஆங்கிலத்திலேயே எழுதி வைத்திருப்பதை கண்டும் நம்மால் எப்படி வாளவிருக்கமுடியும்?

    இந்து மதத்திலாவது நம்மால் உரத்த குரலெடுத்து எதிர்ப்புக்குரலை காட்டவாவது முடியும். அங்கோ மதவெறி வன்முறையால் நம் குரல்வளைகள் நெரிக்கப்பட்டுவிடும். பாகிஸ்தானில் தலித்துகள் மட்டுமே இந்து மதத்தை விட்டு இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை என்பதில் நிச்சயம் காரணம் இருக்கிறது. இந்து சாதிக்காக பயந்து இஸ்லாமுக்குள் விழுவது கொதிப்பில் தப்பி நெருப்பில் விழுவது போன்றதாக இருக்கிறது.

  • Agialn
    The repeated lies of this person named 'Mohammed' in this post has to be exposed for Societies benefits..
    1. நபி(ஸல்) அவர்கள் ஜாதிகளை அழித்தார்கள், அடிமைத்தனத்தை ஒழித்தார்க‌ள்!
    Chapter 33 verse 50 of the Koran: Any one familiar with kuran knows this sura allows capture of Slaves during war. They are referred to as 'right hand possessions'. So where was slavery abolished? Slavery is a right granted by koran to anyone winning the war.

    2. அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமிய மார்க்கம், நிறத்தாலும் பணத்தாலும் சாதிகளாலும் பதவிகளாலும் பிரிந்து வாழ்ந்த இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ச‌ம‌த்துவ‌த்தை நிலைநாட்டிய‌து!!
    The 10 yr Iran-Iraq war costing half a million lives was on the fundamental worry of a resurgent Shia that Iraq wanted to suppress. No other Religion has a much more bloody dispute of this magnitude owing to sect differences. We cannot run away from this fact. So where is the united Islamic religion that this statement lays claim to?

    If there is no racial discrimination based on color, can our friend tell us why all these Africans are fighting the Sudanese Islamic govt in Darfur. According to UN estimates this is by far the worst human excesses caused by a Govt on its own poeple. All because of Islamic fundamentalism...so where is the racial harmony that our friend calims??

    3. இஸ்லாத்தில் புதிதாக‌ இணைந்த‌வ‌ர்க‌ள், பிற‌ப்பால் இஸ்லாத்தில் இருப்ப‌வ‌ர்க‌ளைக் காட்டிலும் மேன்மையான‌வ‌ர்க‌ள் என்று பரைசாற்றிய, அவர்களோடு தோளோடு தோள் நின்று தொழவேண்டும் என்று பழக்கப்படுத்திய‌ ஒரு உன்ன‌த‌ மார்க்க‌த்தை மாசுப‌டுத்த‌, 'ரஹிம் மரைக்காயர்' என்ற‌ பெய‌ரில் வ‌ந்து தெரிவித்துள்ள‌ க‌ருத்துக்களில் உண்மை உள்ளதா என்று ஆராய்ந்து பதில் சொல்லுங்கள் தோழர்களே!

    All i want to see is one former dalit who converts to Islam, being made into a moulvi or hold a higher post in waqf board or a important post in any of the muslim associations we have. Unfortunately this is not to be seen anywhere in India.!!

    Also one popular mis-conception is, Dalits think if they all join a namaz session then equality is achieved. This is another lie. Unlike in Hinduism or Christianity, a mosque is NOT a place where the God resides for muslims. it is just a place of worship. Something like a prayer hall NOT a temple...they can have namaz anywhere as long as it faces Macca directionally...! so Dalits don't be cheated thinking that because you are allowed inside a mosque you got equality..!

    இல்லாவிட்டால் அவரின் கருத்துக்களை, ஒரு இஸ்லாமிய கருத்து என்று நம்பிவிடாமல் அலட்சியமாவது செய்யுங்கள்! இதுவே நடுநிலையான சிந்தனையாக இருக்கமுடியும்.
    whetehr he is Muslim or not, his points are all factual and expose the fundamental contradictions in Islam.

    As i said before NO religion holds the key for emancipation of Dalits. They have to stand there ground, become economically and socially empowered and get their recognition in society. Converting to another Religion is NOT the answer...!

  • DANISH
    My Friend is Khan muslim and he is proud about... he says we have great look and of original mughals.. It prevails still.. WHERE IS MOHAMED AND OTHERS PLEASE ANSWER NOW.

    WHERE IS MOHAMED AND OTHERS PLEASE ANSWER NOW.

  • இராசேந்திரன்
    //காதும் குத்த‌வில்லை, மூக்கும் குத்த‌வில்லைய்யா...! அறிவுக்கு பொருந்தாத‌ ஆயிர‌ம் கேள்விக‌ளை நீங்க‌ள் அடுக்கினாலும் நாங்க‌ள் த‌டுமாறிப்போகாத‌ உறுதியான‌, நிலையான‌ மார்க்க‌த்தில் பிற‌ந்து, வ‌ள‌ர்ந்த‌வ‌ர்க‌ள்! இத‌ன் ப‌க்க‌ம் வ‌ருப‌வ‌ர்க‌ளை நிம்ம‌தியாக‌ வாழ‌வைக்கும் ஒரு உன்ன‌த‌ மார்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள்!//

    அப்படியா? டார்பரில் உள்ள கருப்பின முஸ்லீம்களை வெள்ளை அரபிய முஸ்லீம்கள் நன்றாக வாழவைக்கிறார்கள் போலிருக்கிறதே! எப்படி?

    கருப்பின முஸ்லீம் பெண்களை கற்பழித்தும், ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றும், அவர்களது வாழ்விடங்களிலிருந்து துரத்தி அந்த நிலங்களை ஆக்கிரமித்தும் அரபிய முஸ்லீம்கள் “வாழ வைக்கிறார்களே” அது போலவா?

    //தெரிந்தே தெரியாத‌ மாதிரி ந‌டிக்காதீர்க‌ள். ஏற்க‌ன‌வே ந‌ண்ப‌ர் ஷேக்ஃப‌ரீத் மேலே தெளிவாக‌ சொல்லியுள்ளார். மரைக்காயர், ராவுத்தர், லெப்பையெல்லாம் அவரவர்கள் செய்த தொழிகளால் ஏற்பட்ட பெயர்களே தவிர, இந்து மதத்தில் உள்ளது போன்ற சாதி சம்பந்தப்பட்ட பிரிவுகள் அல்ல,//

    எந்த இணையப்பக்கத்தை எடுத்தாலும் மரைக்காயர்கள், லெப்பைகள் ஆகியோர் அரபிய முஸ்லீம்கள் என்றுதானே இருக்கிறது. எந்த இடத்தில் அவர்கள் இந்திய முஸ்லீம்கள் என்று இருக்கிறது?

    இந்து மதத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஏன் மூன்று ஜாதிகளாக ஆகவேண்டும்?

    எல்லோரும் ஒரே முஸ்லீம்கள் என்று இருக்கவேண்டியதுதானே?

    நாசுவன் ஜாதி என்று ஏன் தனி முஸ்லீம் ஜாதி இருக்கிறது?

    இதுவரை எத்தனை மரைக்காயர்கள் நாசுவ முஸ்லிம் ஜாதியிலிருந்து திருமணம் செய்திருக்கிறார்கள் என்று காட்டமுடியுமா?

    // இஸ்லாம் மார்க்கத்தில் இறைவன் முன் அனைவரும் சமம், அது யாராக இருந்தாலும் சரியென்று!//

    பட்டாணி முஸ்லீம் பெண்மணி நாசுவன் ஜாதி ஆணுக்கு திருமணம் செய்து வைத்திருப்பதை காட்டுங்கள்.

    அதன் பிறகு இறைவன் முன் மட்டுமல்ல, மனிதர்கள் முன்னும் முஸ்லீம்கள் அனைவரும் சமம் என்று தெரிந்துகொள்வோம்.

    ஆமாம், ஏன் அரபிய பெண் ஒருத்தியை திருமணம் செய்த இந்திய ஆணுக்கு அரபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது?

    சாதாரண அரபியனை திருமணம் செய்த சவூத் அரச குடும்ப பெண்மணி அந்த குடும்பத்தாலேயே கொல்லப்பட்டார்?

    அது இனவெறி ஜாதி வெறி இல்லையா?

    //யார் யாரை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டாலும் அதை இஸ்லாம்தான் கூடாது என்று கூறியிருக்கிறதா என்ற ஆதாரத்தை த‌ருவ‌தை விட்டுவிட்டு இங்கு இவன் செய்கிறான், அங்கு அரேபியன் செய்கிறான், துருக்கியன் செய்கிறான் என்று உளறத்தான் தெரியுமா உங்க‌ளுக்கு?//

    அவர் கிடக்கிறார். அரபியாவிலேயே ஜாதி வெறி தலைவிரித்தாடுகிறது என்று அவர் சொன்னால் அவர் மீது ஏன் கோபப்படுகிறீர்கள்?

    துருக்கியிலும் அரபியாவிலுமே ஜாதி வெறி ஆயிரம் வருடங்களாக போகவில்லை என்றால், எப்படி இஸ்லாமில் சேர்ந்ததும் இந்தியாவில் ஜாதி வெறி போகும்?

    சொல்லுங்களேன்.

    //இறைவன் த‌ந்த வேதமான குர்ஆனும், ஹதீஸ் என்று சொல்லப்படும் ந‌பிமொழியும்தான் இஸ்லாம் என்றுகூட தெரிந்துக்கொள்ளாமல் வாய்க்கு வந்ததை நீங்கள் உளறித்தள்ளுவது இஸ்லாத்தைப் பற்றிய உங்களின் அறியாமையை காட்டுகிறது. அந்த குர்ஆனும், ஹதீஸும் மட்டுமே இஸ்லாமிய‌ர்களின் அனைத்து பிர‌ச்ச‌னைக்கும் தீர்வாக, ஆதாரமாக ஆகுமே த‌விர,எந்த நூலாகட்டும்,இணைய பக்கமாகட்டும் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லாத‌ நீங்கள் காட்டும் குப்பைக‌ளெல்லாம் இஸ்லாத்தின் ஆதாரமில்லை. ஆக, நண்பர் முஹ‌ம்ம‌து அனஸ் மேலே சொல்லியுள்ளதுபோல், இஸ்லாம் என்றால் என்னவென்று தெரிந்து கொண்டு க‌ருத்து தெரிவித்தால் ந‌ன்றாக‌ இருக்கும்.//

    அந்த இணையப்பக்கங்களில் குரானையும் ஹதீஸையும்தானே மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.

    அதனை பார்க்கவில்லையா?

    அந்த ஹதீஸ் குரான் வசனங்களை வைத்துத்தான், அவர்கள் இஸ்லாமில் ஜாதி உண்டு, அடிமைகளை வைத்திருக்கலாம், ஜாதி பார்த்து, குலம் பார்த்துத்தான் பெண்களை கல்யாணம் பண்ணித்தரவேண்டும் என்று சொல்கிறார்கள்?

    //க‌ஃபா என்பது உல‌க‌ இஸ்லாமியர்கள் அனைவரும் முன்னோக்கி தொழுவதற்காக அமைக்கப்பட்ட இறையில்லமாகும். அது என்னய்யா 'கஃபாவை பின்பற்றி திருமணம்'? உளறலே உருவமானவராக இருக்கிறீரே?! இஸ்லாத்தில் சாதிக‌ள் இல்லையென்று (குர்ஆன் மற்றும் ஹதீஸிலிருந்து)என்னுடைய‌ முந்திய‌ ப‌திவில் ஆணித்த‌ர‌மான ஆதார‌ங்க‌ளை நான் காட்டியதற்கு பதில் சொல்வதை விட்டு விட்டு,'காஃபாவை பின்பற்றி திருமணம் செய்துவைத்திருக்கிறார் என்று ஆதாரத்துடன் காட்டியிருக்கிறேன்' என்று நீங்கள் சொல்லிவிட்டால் அது ஒரு ஆதாரமா? நீங்கள் நினைப்பதுபோல் கஃபா என்ப‌து ஒரு சாதிப் பிரிவென்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். இல்லாத‌ ஒன்றை ம‌றுத்துக்கூற ஆதார‌ம் காட்ட‌வேண்டுமென்ப‌து காமெடியாக‌ இல்லையா?//

    கஃபா என்பது இஸ்லாமில் உள்ள ஜாதிமுறை என்றுதான் குரான் ஹதீஸ் வைத்து ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார்களே இணையப்பகத்தில்.

    உங்கள் உலேமாக்களும் இதனைத்தான் சொல்கிறார்கள் என்று ஆரிப் முகமதுகான் சொல்கிறார்

    http://timesofindia.indiatimes.com/home/sunday-toi/special-report/Divorced-from-the-will-of-God/articleshow/5783067.cms

    Section 117 (3) of the AIMPLB compendium differentiates between Muslims of Arab and non-Arab origin. It provides that “regard shall be had in respect of descent among the Arabs especially Quraysh and those non-Arab families who have preserved their descent. People in the rest of the non-Arab world are mutually equal”

    aimplb என்பது ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்டு. இதில் செக்‌ஷன் 117(3) இல் அரபியர்களுக்கு ம்ட்டுமே வம்சாவளி பெருமை உண்டு. மற்றவர்கள் அனைவருக்கும் வம்சாவளி பெருமை கிடையாது என்று இந்தியர்களை கேவலப்படுத்துகிறது.

    இதனைத்தானே ரஹிம் மரைக்காயரும் சொல்கிறார்?

    அரபியர்களான மரைக்காயர்கள் ராவுத்தர்களுக்கு மட்டுமே குலப்பெருமை உண்டு.

    மற்றவர்களெல்லாம் கீழ்ஜாதி ஒரே லெவல் என்று சொல்கிறார்.

    அவரை முஸ்லீம் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்.

    ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்டில் இருப்பவர்களும் இந்துத்துவா ஆட்களா?

    // அதுபோல்தான், சாதியை ஒழித்து சமத்துவத்தை நிலைநாட்டிய நபி(ஸல்)அவர்கள்,//

    இதனைத்தான் ரஹிம் அய்யா அவர்கள் முன்னரே கேட்டிருக்கிறாரே?

    சாதியை ஒழித்தேன். இனிமேல் குரேஷி அன்சாரி எல்லாம் கிடையாது என்று நபி சொல்லியிருக்கிறாரா என்றுதான் ரஹிம் அய்யா கேட்டிருக்கிறாரே?

    அவருக்கு பதில் சொல்லலாமே? அப்படி அவர் சொல்லவில்லை என்றால், அவற்றை ஒழிக்கவில்லை என்றுதானே பொருள்? அதனால்தானே இவ்வளவு காலமாக அன்சாரி, குரேஷி என்று ஆயிரக்கணக்கான ஜாதிப்பெயர்களுடன் அரபியர்கள் அலைகிறார்கள்?

    இஸ்லாம் அவற்றை ஒழித்துவிட்டது என்றால் ஏன் இவ்வளவு பேர்கள் தான் குரேய்ஷி, தான் அன்சாரி, தான் சையிது, தான் இந்த ஜாதி என்று அரபியர்களிலிருந்து துருக்கியர்களிலிருந்து எல்லோரும் அலைகிறார்கள்?

    ஒரு மேல்ஜாதி பெண், கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்தால், அரபியா,துருக்கி, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் அந்த பெண்ணின் குடும்பத்தாலேயே கொல்லப்படுகிறாள்.

    அதற்கு ஹானர் கில்லிங் (அதாவது கௌரவக்கொலை) என்று பெயர்.

    ஜாதியை இஸ்லாம் ஒழித்துவிட்டது என்று நீங்கள் சொல்லும் பொய்யை அந்த அரபியர்கள், துருக்கியர்களிடம் போய் சொல்லுங்கள்.

    அந்த பெண்கள் கொல்லப்படுவது நிற்கும்.

    அரபியாவிலேயே ஜாதி ஒழியவில்லை. இங்கே புழுக வந்துவிட்டார்கள்.

  • K.Easwaran
    "ஒரு மேல்ஜாதி பெண், கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு ஆணை திருமணம் செய்தால், அரபியா,துருக்கி, ஈராக் போன்ற இஸ்லாமிய நாடுகளில் அந்த பெண்ணின் குடும்பத்தாலேயே கொல்லப்படுகிறாள். "

    I do not think Irag was doing this before, during Saddam's period. I have many Iragi friends and I verified from them. What they say is that things are changing now because of the present political situation.
    Easwaran

  • யூசூப் ராவுத்தர்
    ரொம்பவும் மனம் நொந்து இதை சொல்கிறேன். தலித்துகள் மதம் மாறினால், அவர்கள் ஏதோ ஒரு முஸ்லீம் பெயரில் அரபி மொழியில் வைத்துகொண்டு இருக்கலாம். மதமாற்றத்தை நடத்துபவர்கள், இவர்களுக்கு பின்னால் ராவுத்தர் என்று போட்டுக்கொள்ள சொல்கிறார்கள். இதனை செய்வது மரைக்காயர்கள்தான். அவர்களிடம் தான் ஏராளமான பணம் இருக்கிறது. ஆகையால் அவர்களே இப்போது இஸ்லாமிய சமூகத்துக்கு தலைமை தாங்குகிறார்கள். ஆகையால், மதம் மாறும் போது அவர்களுக்கு ராவுத்தர் என்று பட்டப்பெயர் கொடுக்கிறார்கள். இவர்கள் ஏன் மரைக்காயர் என்று கொடுப்பதில்லை?
    ராவுத்தர் எங்களது பட்டப்பெயர். நாங்கள் இங்கே கௌரதையாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், மரைக்காயர்கள் எப்படி லெப்பைகளை தாழ்த்தப்பட்ட சாதியாக ஆக்கினார்களோ அதே போல, இப்போது ராவுத்தர்களையும் தாழ்த்தப்பட்ட சாதியாக ஆக்குவதற்கு மதம் மாறும் தலித்துகளுக்கு ராவுத்தர் பட்டம் கொடுக்கிறார்கள்.

    வடக்கில் எல்லாம் ஒரு சாதி மதம் மாறினால், அந்த ஜாதிபெயரில்தான் இருக்கிறார்கள். அஹ்மது பட்டேல், மோஹ்சீனா கித்வாய் என்று அவரவர் ஜாதிப்பெயர்தான் போடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மதம் மாறினால்கூட முகம்மது சமார் என்று அந்த ஜாதி பெயரைத்தான் போடுகிறார்கள். இங்கே மட்டும் இஸ்லாமுக்குள் வந்ததும் ராவுத்தர் என்று போட்டு எங்கள் பெயரை கெடுக்கிறார்கள். இதனை எல்லாம் வஹாபிஸ்டுகள் என்று கூறிக்கொண்டு எங்களை கெடுக்க மரைக்காயர்கள் செய்யும் சதிதான்.

  • VAIRAKANNAN G
    dr ampathkar entra payaril jathi katchigal varukentrana but enna payan, ennum thlith makkal adimaiyaga erukkerargal, ettanaiyo adakkumuraigal etthanaiyo jathi entra payaril vanmuraigal nadkkentrana
    jathi than eppadi erukkerathu entral, mathumum erukkentrana ennum south mavattangalil matha verupadu erukkentrana etharkku entha thalaivar varuvar.

  • விடுதலை
    தலித் மக்களின் ஏகபிரதிநிதான் தான் என்று காட்டிக்ககொள்ளும் விசி அம்பேத்கார் படங்களைவிட அதிகம் படங்களில் காட்சி அளிக்கும் நவின தலித் கடவுளாக காட்சி அளிக்கிறார் திருமா. தலித் மக்களை ஒருங்கிணைப்பது அவர்களை அரசியல் படுத்துவது நல்ல மாற்றத்தின் அடையாளமாக கருதிதான் நாம் விசியை பார்த்தோம் ஆதரித்தோம் .ஆனால் அது தற்போது செய்துவருவது என்ன? கட்டப்பஞ்சயாத்து குறிப்பாக தலித்துகள் பாதிக்கப்பட்டால் அதிக வசூல் செய்வது அந்த தலித்தை சமதானமாக போக சொல்வதுமுதல் சகலமும் நடைபெறுகிறது. தலித்மக்களிடம் சாதிய ரீதியான உணர்வுகளை மட்டும் துண்டிவிட்டு அதில் அரசியல் கட்சி நடத்தி வரும் திருமா. ஏன் அவர்கள் ,கல்வி, வேலைவாய்ப்பு, இலவச மனைப்பட்டா, இலவச நிலம், ஆலைய நுழைவு போராட்டங்களை நடத்து இல்லை. எல்லாம் சமரசம் தனது தற்போதைய இருப்பை தக்கவைத்து எந்த சமரமும் செய்துகொள்ளும் நிலையில் தான் விடுதலை சிறுத்தை கட்சியும் அதன் தலைவர் திருமாவும் இருப்பதை காட்டும் ஒரு சிறுவிளக்கம்தான் மேற்கண்ட உண்மையாக இருக்கலாம். சிறப்பான பதிவு சிறந்த விவாதங்களை தொடங்கிய தோழர் ரமேஷ்பாபுக்கும் வாலிபர் சங்க தோழர்களுக்கும் எனது வாழ்துகள்

  • Areef
    Unfortuante .... the youth fedrations play dirty poltics as sangparivar do (by name of leaders/religion and cast)
    peacefull Palyapattinam became big issue because of dirty youths these youths should to bring equlaity to respect human value..... instead of playing game with great leader history.

2 comments

  1. கவனமா செயல்படணும் காம்ரேட். காம்ரேட் காரத்துக்கு தெரிஞ்சா அவரும் உங்களுக்கு தெரியாமலே இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடோ ட சேத்து ஊர் பொதுவையும் கொடுத்து லெட்டர் எழுதிருவாரு...இங்குலாப் ஜிந்தாபாத் இஸ்லாமிய அப்பீஸ்மெண்டுக்கு அடங்கின இன்குலாப் ஜிந்தாபத்...வேடிக்கை இருக்கட்டும்...மண்டல் என்கிற தலித் அரசியல் தலைவர் பிரிவினையின் போது இஸ்லாமிய தலித் ஒற்றுமை என்கிற கானல் கனவை நம்பி பாகிஸ்தானுக்கு சென்றார். பிறகு இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் விரட்டப்பட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார். சரி காம்ரேட் அண்ணல் அம்பேத்கர் திபெத்தை சீனா கபளீகரம் பண்ணினதை எதுத்துருக்காரே அதையும் கொஞ்சம் சிந்திச்சு பாருங்க.அடிமட்ட தொண்டர்கள் வேணும்னா இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இத்தனை வீரமா எதிர்க்க முடியும் ஆனால் மேல்மட்ட தலைமை மத அடிப்படையில் இட ஒதுக்கீடே கொடுக்கும். எதுவானாலும் தலித் மக்களுக்காக வீரத்துடன் போராடிய தோழர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்

     
  2. //விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ? புகழ் மைந்தன் தோன்றினானே! கல்வாரி மலையிலே கல் ஒன்று பூப்பூக்க கருணைமகன் தோன்றினானே! நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாக தோன்றின்னே! முட்காடு எங்குமே பூக்காடு தோன்றவே புவிராஜன் தோன்றினானே//

    தப்பா எடுத்துக்காதீங்க இது என்னங்கண்னா பாட்டு? பாகன் மக்கள் கிட்டேருந்து கிறிஸ்தவ ரோமானிய ஏகாதிபத்திய சுட்டெடுத்த நாளுல்லா அது? அதோட அன்னைக்கு தலித்துகளை எரிச்சவரோட பெயரையும் பாருங்க கொஞ்சம் அவரும் இந்த மாதிரி பாட்டு பாடுறவருதான். சவுரிராயன்னு நினைக்கிறேன். இந்த கமெண்ட் பப்ளிஷ் பண்ண கட்டாயம் இல்லீங்கண்ணா. கட்டாயம் சும்மா நீங்க பாக்குறதுக்குதான்.

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark