மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


வேலை என்றால் வருமானம், உற் பத்தி, அங்கீகாரம் போன்றவற்றை அடிப் படையாகக்கொண்ட சமூக அலகாக இருந்தாலும் கூட, தமிழகத்தில் உலகமயக் கொள்கையை அமலாக்கிவரும் அரசு, இவைகளை பற்றி கொஞ்சமும் கவலைப் பட்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் அரசுப் பணிகளில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதில்லை என்பது மட்டு மல்ல, வயதானவர்களை அத்துக்கூலி முறையில் நியமனம் செய்ய அரசாணை- 170ஐ போட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒப்படை செய்யப்பட்ட பணியிடங்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப் படாமல் காலியாக உள்ளன. அரசுக்கு தேவையான ஆட்களை தேர்ந்தெடுக்கும் தமிழ்நாடு அரசு தேர் வாணையத்தில் காலிப்பணியிடங்கள் ஏராளமாக இருந்தன. அதனை நிரப்ப வேண்டும் என்பதற்காக ஓய்வூதியர்கள் 170 பேருக்கு தொகுப்பு ஊதியம் நிர்ண யித்து அரசு நியமித்தது. கடந்த டிசம்பர் மாதம் அரசு உதவி பெறும் கள்ளர் சீர்மரபி னர் பள்ளிக்கு 280 ஆசிரியர்களை நியம னம் செய்தபோது, அதில் 90 சதத்தினர் 55 வயதை கடந்தவர்களாக இருந்தனர்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலு வலகங்களில் பதிந்தவர்கள் டிசம்பர் 2008 வரை 55,11,542 பேர் ஆகும். அது தற்போது கிட்டத்தட்ட 62 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதில் 90 சதம் பேர் எந்தவித வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றனர். இந்த இளைஞர்கள் பள்ளி, கல்லூரிகளில் தங்கள் படிப்பை முடித்துவிட்டு, வேலை கிடைக்காமல் வேலை வாய்ப்பகங்களில் பதிந்துவிட்டு காத்திருக்கிறார்கள். இவர் கள் வேலை செய்ய தகுதியற்றவர்கள் என்பதுதான் தமிழக அரசின் கருத்து.

தமிழக அரசு தேர்வாணையத்தில் மட் டும் காலிப்பணியிடங்கள் இருப்பதாக எண்ண வேண்டாம். அனைத்துத் துறை களிலும் காலிப்பணியிடங்கள் உள்ளன. வேலை கிடைக்கும் என்று நினைத்து இளைஞர்கள் பதியும் வேலைவாய்ப்பு அலுவலகமே பிரச்சனையில் உள்ளது. தமிழகத்தில் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள மொத்த இடங் கள் 1115 ஆகும். இதில் கடந்த 2009 மார்ச் வரை 442 இடங்கள் காலியாக இருந்தன. 2009 டிசம்பரில் 46 பேரும், 2010ம் ஆண் டில் 56 பேரும், 2011ம் ஆண்டில் 44 பேரும் ஓய்வு பெறுகின்றனர். ஆக, 2011ல் 558 இடங்கள் காலியாகும். அதாவது 60 சதம் இடம் காலியாகும்.

தமிழக அரசு தேர்வாணையமே பத் தாண்டுகளாக முடங்கிக் கிடந்து இப் போதுதான் சில அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளது. எப்போது இங்கு காலியாக உள்ள இடங்களில் நிரந்தர ஊழியர்கள் வருவார்கள்?

இந்த அரசு பதவி ஏற்றது முதல் அனைத்து அரசுத்துறையிலும் 2 லட்சத்து 80 ஆயிரம் காலியிடங்களுக்கு மேல் நிரப்பியுள்ளதாக முதல்வரும், துணை முதல்வரும் பேசிவருகின்றனர். இந்த வாதம் உண்மையா? அரசுத்துறையில் 2006ஆம் ஆண்டு 12,531 பணியிடங்க ளும், 2007 ஆம் ஆண்டு 30,258 பணி யிடங்களும், 2008 ஆம் ஆண்டு 26,748 பணியிடங்களும் ஆக 69,537 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டது. 2009 ஆம் ஆண்டு விபரம் இன்னும் வெளிவரவில் லை. இருப்பினும் எண்பதாயிரத்தை தாண்ட வாய்ப்பில்லை. இதே நேரத்தில் ஓய்வு பெற்றவர்களை கணக்கிட்டால் எவ்வளவு குறைவான பணி நியமனம் நடைபெற்றுள்ளது எனத் தெரியும்?

கல்வி, மருத்துவம், ஊரகவளர்ச்சி, நெடுஞ்சாலை, வருவாய்த்துறை, நீதித் துறை, உள்ளாட்சி, சமூக நலம், வேளாண் துறை, பொது சுகாதாரம், வேலைவாய்ப்புத் துறை போன்றவற்றில் தற்காலிக முறை யில் இணைக்கப்பட்டவர்கள்தான் அதி கம். ஆனால், இதே நேரத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர் கள் எண்ணிக்கை பிரமிப்பூட்டுவதாய் உள்ளது. 2006ல் 9,90,544 பேரும், 2007ல் 11,21,479 பேரும், 2008ல் 9,60,869 பேரும் என 30,72,892 பேர் பதிவு செய்தனர்.

2009 டிசம்பர் மாதம் வரை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 50 சதம் பேர் பதிவு செய்து பத்தாண்டுகள் ஆகிறது. 1981-82ல் பதிந்தவர்களுக்குத்தான் தற்போது நேர்காணல் நடக்கிறது. அப்படி எனில், தற்போது பதிவு செய்தால் 28 வரு டம் காத்திருக்க வேண்டும். அதாவது 43 வயதில் நேர்காணல். ஆனால் வேலைக் கான வயது வரம்பு, பொதுப் போட்டியில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 35 வயதும், மிக வும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 37 வயதும், தாழ்த்தப்பட்டோர்க்கு 40 வயது எனவும் உள்ளது. ஆக பணிமூப்பு அடையும் போது வயது இருக்காது, வயது இருக்கும் போது வேலை கிடைக்காது. உதாரணம், கடந்த 17 மாதங்களுக்கு முன் மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட கணக்கீட்டாளர் பணி யிடங்களுக்கு வயது வரம்பு காரணத்தால் 1986க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பதிவுதாரர்கள் புறம்தள்ளப்பட்டு, 1986 லிருந்துதான் நேர்காணல் அனுப்பப்பட் டது. இப்போதும் 10, பிளஸ் 2 படித்தவர் களுக்கு, அவர்கள் தகுதிக்கு ஏற்ப இள நிலை உதவியாளர் போல பத்தாயிரக் கணக்கில் காலிப் பணியிடங்கள் உள்ளது. ஆனால்...?

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆரம்பம் முதல் தமிழகத்தில் வேலையில் லாக்கால நிவாரணம் கேட்டு கடுமையான தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சியில் வேலையில்லாக் கால நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், அது மீண்டும் நிறுத்தப்பட்டது. மீண்டும் வாலிபர் சங்கம் போராடியது. 2006 இல் கலைஞரை சந்தித்து வாலிபர் சங்கத் தலைவர்கள் கோரிக்கை மனு கொடுத் தனர். அதன் காரணமாக 01.10.2006 முதல் தமிழகத்தில் மீண்டும் வேலையில்லாக் கால உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், அது முழுமையாக தகுதி உள்ள அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை.

2009 மார்ச் மாதம் வரை நிலை என்ன? பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களில் ரூ.150 உதவித்தொகை பெறுபவர்கள் 1,18,510 பேர். ஆனால் பதிந்தவர்கள் 20,21,708 பேர். பனிரெண்டாம் வகுப்புவரை படித்தவர்களில் ரூ. 200 உதவித்தொகை பெறுபவர்கள் 1,66,146 பேர். ஆனால் பதிந்த வர்கள் 10,09,195 பேர். கல்லூரி படித்தவர்க ளில் ரூ.300 உதவித்தொகை பெறுபவர்கள் 66,163 பேர். ஆனால் பதிந்தவர்கள் 3,12,070பேர். மொத்தத்தில் பதிவு செய்த வர்களில் 20 லட்சம் பேருக்கு மேல் 10ஆம் வகுப்பும், 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் பிளஸ் 2 வகுப்பும், மூன்று லட் சத்துக்கு மேற்பட்டோர் கல்லூரியும் படித்து பதிந்துள்ளனர். ஆக 33 லட்சத்து 43 ஆயிரம் பேரில், வெறும் 3லட்சத்து 50 பேருக்குத்தான் உதவித்தொகை கிடைப் பது பத்து சதம்.

இந்த உதவித்தொகையும் மூன்றாண் டுகளுக்குத்தான். அதாவது வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை, (அதற்குள் வேலை கிடைத்து விடும் என்பது தமிழகத்தில் மூட நம்பிக் கை). கடந்த 2009 செப்டம்பர் 30ம் தேதியு டன் 2 லட்சம் பேருக்கு நிறுத்தப்பட்டுள் ளது. கடந்த 2009 டிசம்பர் மாதத்துடன் மேலும் ஒரு லட்சம் பேரின் உதவிக் காலம் முடிந்துவிட்டது. 2010 ஆம் ஆண்டில் புதிய பயனாளிகள் இனிதான் தேர்வு செய் யப்படுவர்.

ஆக வேலை வாய்ப்பு தமிழகத்தில் கிடைக்காதது மட்டுமல்ல, இருக்கின்ற தனியார் நிறுவனங்களில்கூட எந்தவித சமூக பாதுகாப்பும் இல்லாமல்தான் இளைஞர்கள் வேலைசெய்து வருகின்ற னர். பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத் தில் அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கி, அரசிடம் பல கோடி ரூபாய் சலு கைகளை பெற்று, அடிமைகள் போல சங் கம் வைக்கும் உரிமைகூட இல்லாமல் வஞ்சிப்பதை எதிர்க்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
-------------------------------------------------------------------------எஸ்.ஜி.ரமேஷ்பாபு
---------------------------------------------------------------  03/02/2010 - புதன் - தீக்கதிர்

0 comments

bookmark
bookmark
bookmark
bookmark
bookmark