மானுட விடுதலை...

நேர்பட பேசு! வையத் தலைமைகொள்!


பிரியமுள்ள இளைய ராஜகுமாரன் ராகுல்ஜி அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் நலம் என்று தெரியும் நாங்கள் நலமில்லை. ஆனால் கொஞ்சம் நாளாக தாங்கள் மிகவும் சிரமங்களை அனுபவித்து வருவதை நாடே அறியும். உயர்த்திப் பிடித்த உயர்ந்தரக துப்பாக்கிகளின் பாதுகாப்போடு தாங்கள் கிராமங்களுக்கு செல்வதும், குனிய முடியாத குடிசைகளில் குனிந்து செல்வதும், மூக்கொழுகும் குழந்தைகளை தூக்கி வாஞ்சையுடன் அனைத்துக்கொள்வதும், ஏழைகள் வீட்டில் கிடைக்கின்ற கஞ்சியோ அல்லது கூழோ அவைகளை உண்பதும், பல கரடுமுரடான சாலைகளில் பாதம் நோக அலைந்து திரிவதும், கலாவதியையும் அவளது குழந்தைகளையும் பார்த்து சோகமாய் முகத்தை வைத்துக்கொள்வதும், அப்பா எத்துனை சிரமங்கள் உங்களுக்கு.

ஆனல் இந்த மாயாவதியும் இன்னும் பிற எதிர் கட்சிகளும் இவைகளை நாடகம் என்று சொல்லும் போது தங்கள் கோபப்படுவது மிகவும் நியாயம்தான். அதுவும் இந்த மாயாவதி குடிசைகளில் ஓரிரு நாட்கள் தங்கினால் அவர்களின் சிரமங்கள் புரியாது என்று சொல்வது சுத்த மோசம். நீங்கள் இதுவரை ஏழு தினங்கள் அல்லவா தங்கி இருக்கிறீர்கள். அந்த அம்மையார் விபரம் தெரியாமல் பேசுகிறார். நீங்கள் உங்கள் பயணத்தினை தொடருங்கள் ராசா..

நமது நாட்டின் எதிர்கால பிரதமர் என்று காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். அந்த விபரீதம் நடக்க மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றாலும் உங்களுடன் சில வார்த்தைகள் பேசவேண்டியுள்ளது. அதற்கு முன் ஒரு தகவல் தாங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய சில புத்தகங்களை இக்கடித்தத்தின் இறுதியில் எழுதி இருக்கிறேன். அவசியம் அவைகளை வாங்கி படியுங்கள் ராகுல்ஜி..

சரி விஷயத்திற்கு வருவோம்.... இந்திய தலைநகர் டெல்லியில் உங்கள் கொள்ளு தாத்தாவான மாமா நேருவின், மன்னிக்கவும், அர்த்தம் மாறிவிட்டது. நேரு மாமாவின் இப்போதைய நினைவகம் உள்ள தீன்மூர்த்தி மார்கில் அமைந்துள்ள இடத்தில்தான், அவரது அப்போதைய வீடு இருந்தது. அந்த வீட்டின் நான்கு வாயில் படிகளிலும் விலை உயர்ந்த நான்கு விதமான கார்கள் நிற்குமாம். ஏனெனில், தனது மகன் எந்த படியில் இறங்கினாலும் அங்கு கார் நிற்க வேண்டும் என்பது மோதிலாலின் விருப்பம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த தாங்களுக்கு அவரின் சோசலிச கனவோ, அல்லது முதலாளிகளின் கலப்பு பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டதோ தெரியாது. அதே போல குளிரில் நடுங்கும் ஆனால் இதயம் சூடான எங்கள் குடிசையை உண்மை முகம் உங்களுக்கு தெரியாது.

அதே தலைநகரில் உங்கள் சித்தப்பா, அதாங்க "எடா சிறை மீண்ட, தலைவெட்டி புகழ்" வருண் காந்தியின் தந்தையும், ஆடு, மாடுகள் துன்பப்பட்டால் ஓடிச்சென்று வழக்குப்போடும், ஆனால், தன் மகன் மாற்று மத மனிதர்களை வெட்டச்சொன்னால் சந்தோஷப்படுகிற "புளுகிராஸ் புகழ்" மோகனா காந்தியின் கனவருமான சஞ்சைகாந்தி நகரின் அழகு என்ற பெயரில் புலம் பெயர்ந்து தங்கள் வாழ்க்கையின் தெடல்களுக்காக குடியிருந்த குடிசைகளுக்கு எதிராக நடத்திய நரவேடை நாட்டியம் உங்களுக்கு தெரியாது. இப்போதுள்ள பாலிகா பஜாரின் மேலே உள்ள பசுமையான புற்கள் அந்த கதையை பேசும் ..

வினை விதைத்து, விதைத்த வினைக்கு அறுவடை செய்த காரணத்தால், ஏதோ இரு சீக்கிய மத வெறியர்களின் தோட்டாக்களுக்கு பலியான உங்கள் பாட்டி இந்திராவின் மரனத்தால் வாழ்விழந்த, சீரழிந்த, சிதைக்கப்பட்ட, வெட்டிவீசப்பட்ட, உயிரோடு கொளுத்தப்பட்ட, அண்ணா என்னை விட்டு விடுங்கள் என்று கதரும் போது வன்புனர்ச்சி செய்யப்பட்ட ஆயிரமாயிரம் சீக்கிய சகோதரிகளின், விதவையாக மாற்றப்பட்ட, இன்றுவரை சித்த பிரமை பிடித்து அலையும் அந்த தாய்மார்களின் கண்ணீர் உங்களுக்கு புரியாது ராகுல்...

அந்த கொடூரங்களை தடுக்க வேண்டிய உங்கள் தந்தை ஒரு ஆலமரம் விழும் போது அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று இந்த நரவேட்டைடை நியாயப்படுத்தியது சரியா என யோசியுங்கள் ராகுல்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் இந்தியா முன்னேறும் என்று எந்த நம்பிக்கையில்பேசி வருகிறீர்கள். நாடு விடுதலை அடைந்து 62 ஆண்டுகளில் 6 ஆண்டுகளை தவிர மற்ற ஆண்டுகளெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி செய்தது என்பது தங்கள் அறியாததா? முதல் ஐந்தாண்டு திட்டத்தின் போது அனைவருக்கும் ஆரம்ப இலவச கட்டாய கல்வி என்று உங்கள் கொள்ளு தாத்தா நேரு அறிவித்த இந்த நாட்டில் இன்று வரை கல்வி அறிவு பெறாதவர்கள் 40 கோடிபேர் என தெரியுமா?

காலகாலமாய் உங்கள் கட்சி ஆட்சி செய்ததன் விளைவு என்ன? இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமகங்களில் குடிக்க தண்ணீர் கிடையாது, லட்சம் கிராமங்களில் கழிப்பிடம் கிடையாது, இரத்த சோகை நோய் எங்கள் தாய்மார்களின் தேசிய நோயாக மாறிவிட்டது, எதிர்கால இந்தியா எடைகுறைவோடுதான் பிறக்கிறது, வருங்கால தூண்கள் வேலயற்று விரக்தியில் வீதியில் அலைகிறது, ஆலைகள் மூடுவதுதான் தொழில்துறையின் வேலையாக மாறிவிட்டது, சுதந்திரம் அடையும் போது சில கோடிகளை வைத்திருந்தத சிலர் இன்று லச்சம் கோடிகளை சேர்த்து வத்துள்ளனர். இதற்கும் உங்கள் கட்சியின் கொள்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று சாதிக்கப்போகிறீர்களா ராகுல்.

அந்நியர்களுக்கு எதிராக போராடிய காங்கிரஸ் கட்சியை அந்நிய நாட்டிடம் அடகு வைக்கும் போக்கை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? சிலியில் அலெண்டேவையும், ஆப்கானில் நஜிபுல்லாவையும், ஈராக்கில் சதாம் உசேனையும் போல பல நாட்டு தலைவர்களை படுகொலை செய்த, வியட்நாம், லிபியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் குண்டுகளி வீசிய, நைஜிரிய ஆற்றுப்படுகையில் ஷெல் கம்பெனிகள் எண்ணெயை உறிஞ்சுவதை எதிர்க்கும் அப்பாவி மக்களை ஆயுதம் தாங்கி அழிக்கும் அமெரிகாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? அணுசக்தியை பயன் படுத்த, அதிலிருந்து மின்சரம் தயாரிக்க நமது சொந்த நாட்டு விஞ்ஞானிகளுக்கு வக்கில்லை என்று கேவலப்படுத்துவதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

அதெல்லாம் இருக்கட்டும் எங்கள் தமிழ்நாட்டை தாங்கள் அறிவீர்களா, உத்தபுரம், மேலவளவும், திண்ணியமும் உங்களுக்கு தெரியுமா, சரி இவைகள் தூரத்தில் உள்ளது. கயர்லாஞ்சியாவது தெரியுமா? இந்தியா என்பது உத்திரபிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதி மட்டுமல்ல, கயர்லாஞ்சியும் இந்தியாவின் ஒரு பகுதி என்று உங்கள் இதயம் ஏற்றுக்கொள்கிறதா? அப்படியே எனில் இன்னும் உங்கள் பயணம் அங்கு நீளாதது ஏன் ராகுல், இரண்டு ஏக்கர் நிலம் வைத்து தலைநிமிர்ந்து வாழ ஆசைப்பட்ட காரணத்தால் பையாலால் போட்மாங்கே குடும்பம் சிதைந்த வரலாறு இன்னும் நவீன சமூகத்தின் மீது காரி உமிழ்வது நியாயமா? இந்தியாவில் ஒரு அமெரிக்க மக்கள் தொகை அளவுக்கு தலித் மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் சேரிகள் எனும் தனி நாட்டில் அல்லவா வசித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான வடிவங்களில் இன்னும் தீண்டாமை அவர்கள் மீது திணிக்கப்படுவது குறித்து உங்கள் கட்சிக்கு கோபம் இருக்கிறதா?

மன்னிக்கவும் பல இடங்களில் இவைகளை அமலாக்கம் செய்வதே அவர்கள் தானே.
இதெற்கெல்லாம் உங்களுக்கு பதில் சொல்ல நெரமிருக்காது பாவம் நீங்கள் இன்னும் எத்துனை குடிசைகளுக்குள் நின்று புகைப்படம் எடுக்க வேண்டியுள்ளதோ, ஆனால் இந்த கேள்விகள் உங்களை தொடரும் ராகுல். இந்த கடித்தத்தைப் போல் தெசத்தை நேசிக்கின்ற ஆயிரமாயிரம் இளைஞர்கள் உங்களுக்கு கடிதங்களை தொடர்ந்து எழுதுவார்கள்...
நீங்கள் பதில் சொல்லும் வரை அல்லது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை கேட்காதவரை.

இறுதியாக. . . . தலைப்பில் கொள்ளுவுக்கு கொம்பு போட்டிருப்பது எழுத்துப் பிழை என நினைக்க வேண்டாம். நெல்சோறு கிடைகாத மக்கள் குதிரக்கு வைக்கும் கொள்ளாவது கிடைக்குமா என்று அலைகழியும் தேசமாக இந்த நாடு மாறிக்கொண்டிருக்கிறது. 77 சதமான மக்களின் ஒரு நாள் சராசரி வருமானம் 20 ரூபாய் அதை தங்களுக்கு நினைவூட்டவே கொல்லை ஞாபக படுத்தினேன்.

நன்றி ராகுல். மீண்டும் சந்திப்போம்.

பிறகு நான் தங்களுக்கு பரிந்துரை செய்யும் புத்தகங்கள் 1. ஜான் பெர்கின்ஸ் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" 2. வாங்-க்கு-தியாங்கோவின் " காலனியாதிக்கம் - ஓர்மையகற்றல் 3. நேருவின் "உலக சரித்திரம்" 4. ராகுல்ஜியின் "பொதூடைமைதான் என்ன" 5. அம்பேத்கரின் நூல் திரட்டுகள். இன்னும் சில புத்தகங்கள் அடுத்தக் கடிதத்தில் சொல்கிறேன் ராகுல்.

10 comments

  1. dear comrade Ramesh

    excellent. well drafted. emotional elements are interwoven around gruesome facts of our contemporary lives in the backdrop of a disturbing past.....

    vazhthukkal

    s v venugoapalan

     
  2. Anonymous Says:
  3. நீங்கள் எழுதியது இந்தியாவை பற்றி தானோ எனவும் அங்குதான் வாழுகிறோமா எனவும் ராகுலுக்கு சந்தேகம் வந்துவிடும்...
    அருமையான் மொழி நடை
    இந்தியாவில் ஒரு லட்சம் கிராமங்கள் தான் கழிப்பிடம் இல்லாமல் இருக்கிறதா?
    அதிகம் என நினைக்கிறேன்

    நா.நாராயணன்

     
  4. நன்றி எஸ்.வி.வி, நராயணன் தாங்கள் சொல்வது உண்மைதான் ஒரு லட்சங்களுக்கு மேற்பட்ட கிராமங்களில் கழிப்பிடம் இல்லை. தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

     
  5. Unknown Says:
  6. நல்ல பதிவு.
    பாராட்டுக்கள்!

    ஒரு சிறு திருத்தம்:

    சஞ்சய் காந்தி ராஜீவின் தம்பி! அண்ணனல்ல

     
  7. அருமையான ஒரு பதிவு..நல்ல எழுத்துநடை. உங்கள் கருத்தை அழுத்தமாக ஆணித்தரமாக சொல்லியிருக்கும் விதம் ரசிக்கத்தக்கது. வாழ்த்துக்க்கள்.

     
  8. ப்ரியமுள்ள கரிகாலண் தங்கள் திருத்தம் சரியே தவறுக்கு வருந்துகிறேன், திருத்திவிட்டேன். நிலாப்பிரியன் வருகைக்கு நன்றி

     
  9. நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்..

     
  10. நன்றி தீப்பெட்டி

     
  11. நன்றி தீப்பெட்டி

     
  12. R. Saravanan Says:
  13. Dear comrade ,

    wonderful artical amd also we have to write one more letter to P.C

    Regards,
    Saravanan R and Praburaj N,
    DYFI town, Pondicherry

     
bookmark
bookmark
bookmark
bookmark
bookmark